Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முப்படைகளும் பாரிய போர்ப் பயிற்சி: வடபகுதியில் மற்றொரு தாக்குதலுருக்கான தயாரிப்பு? Monday, 09 June 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தம்முடைய கடல் மற்றும் தரை ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் சிறிலங்காவின் முப்படையினரும், பாரிய போர் ஒத்திகை ஒன்றையும் மேற்கொண்டிருப்பதாக குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே படையினரின் ஒத்திகை இடம்பெற்றதாகவும், இவை அனைத்தும் மற்றொரு பாரிய நடவடிக்கைக்கு சிறிலங்கா படையினர் தயாராகிவருவதை உறுதிப்படுத்துவதாக அமைத்திருக்கின்றது என யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன. பலாலித் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிலங்கா விமானப்…

    • 2 replies
    • 1.2k views
  2. ரணிலின் இந்தியப் பயணத்தின் பின்னணி என்ன? [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 11:07 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவுக்கு தற்போது சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு அரசின் சிறப்பு அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவின் தென்பகுதியில் அதிகரித்துள்ள தொடர்ச்சியான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகியன, சிறிலங்கா தொடர்பில் மீண்டும் அனைத்துலக கவனத்தை திருப்பியுள்ளதுடன் அதன் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது. அனைத்துலக சமூகத்தின் இந்த கண்டனம் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தேர்தலில் வெளிப்பட்டும் இருக…

    • 2 replies
    • 959 views
  3. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் ஐ,தே.கட்சி பிரசார செயலாளர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தாவது : நீண்டு கொண்டு செல்லும் யுத்தத்தினால் இலங்கையின் எதிர்காலம் அழித்தொழிக்கப்படுவதானால் உடனடியாக இந்த அரசு புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். புலிகளுடன் எமது அரசு போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அரசின் இராணுவ முகாம்கள் பல அழிக்கபட்டிருந்தன. ஆயினும் போர் நிறுத்தின் மூலம் மீண்டும் அவ்விராணுவ முகாம்களையும் இராணுவத்தையும் பலப்படுத்த ஐ.தே.க அரசால் முடிந்தது. எனினும் இன்று மறுபடியும் அம் முகாம்கள் அழிவதையும் அழிவை நோக்கிச் செல்லுதை அவதானிக்க முடிகிறது. இவ்வரசு ஜெனிவாவில் நடைபெற்ற ஆறுமாதகால சமாதான பேச்சு வார்த்தையின் பின் தான்தோன்றித…

    • 1 reply
    • 977 views
  4. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சமர்ப்பணம்

  5. எமன்னார் மருத்துவமனை பெண் பணியாளர்கள் தங்கும் அறைக்குள் உறக்கத்தில் இருந்த பெண்களிடம் முறைகேடாக நடக்கும் நோக்கில் அதிகாலையில் அத்துமீறி புகுந்த படையினரின் செயற்பாட்டைக் கண்டித்து மன்னார் மருத்துவமனையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 634 views
  6. அம்பாறையில் விறகு வெட்டச்சென்றவர்களை ஓடவிட்டு படையினர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி- ஒருவர் காயம் [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 03:53 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை எல்லைக்கிராமமான ஊத்துமடுவின் காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்களை ஓட விட்டு சிறிலங்காப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: அம்பாறை எல்லைக்கிராமங்களான மங்கிக்காடு மற்றும் நாவற்குடாவைச் சேர்ந்த 12 பேர் நேற்று முன்நாள் சனிக்கிழமை ஊத்துமடு காட்டுப் பகுதிக்கு உழவூர்தியில் விறகு வெட்டச் சென்றுள்ளனர். இவர்களில் எட்டு பேர் வி…

    • 0 replies
    • 603 views
  7. மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதலில் காயமடைந்த இரண்டு படையினர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த படையினர் வைத்தியசாலைக்கு தொடர்ந்து அழைத்துவரப்படுவதால் மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிவளாகத்தில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி சங்கதி இணையம்

  8. விளக்கில் ஊற்றப்பட்டுள்ள மண்ணெய்யின் அளவு குறைவடையும்போது மெதுமெதுவாக மங்கிக்கொண்டு செல்லும் சுவாலையானது இறுதியில் எவ்வாறு முற்றாக அணைந்து விடுகின்றதோ அதேபோன்றே, போதியளவு பலமோ வல்லமையையோ இல்லாத நிலையில் படைகளை பாரியளவிற்கு நீட்டி அகட்டியிருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளும் பாரிய தோல்வியினை இறுதியில் சந்திப்பார்கள் - போரியல் மேதை கால் வொன் குளோஸ்விச் அண்மைக்காலங்களாக விடுதலைப் புலிகள் புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி எதிரியைத் திகைக்க வைக்கும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிரிகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். அத்துடன் இவ்வாறான வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளில் படையினரின் ஆயுதத் தளபாடங்களையும் ஏனைய நவீன போரியல் உபகரணங…

    • 0 replies
    • 1.5k views
  9. மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பெண்கள் பிரிவுப் பகுதிக்குள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஆயுதங்களுடன் சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவர் உள்நுழைந்துள்ளார். இதற்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.படைச்சிப்பாயின் இந்த நடவடிக்கையினால் நோயாளர்கள் மற்றும் தாதியர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை அறிந்துகொண்ட மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தள்ளாடி படைமுகாம் படைத்தளபதி மற்றும் வைத்திய அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிவரும் காலங்களில் இப்படியான செயற்பாடுகளில் படையினர் ஈடுபடமாட்டார்கள் என இராணுவத் தளபதி வாக்குற…

    • 0 replies
    • 707 views
  10. மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகத் தென்பகுதிகளுக்குச் செல்வதற்குத் தமிழ்ப்பிரயாணிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை முதல் நீக்கப்பட்டு, தமிழ்ப்பயணிகள் தமது பிரயாணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு பொலிசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதனையடுத்து பல பிரயாணிகள் இன்று தென்பகுதிகளுக்கான தமது பிரயாணத்தை மேற்கொண்டுள்ளனர். மொரட்டுவை, கண்டி பொல்கொல்ல ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, மதவாச்சி சோதனைச்சாவடியில் தமிழ் பயணிகள் தென்பகுதிக்கு;ச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து சனிக்கிழமை மாலை வரையில் இவ்வாறான பிரயாண அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பதும், குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து தென்பகுதி நகரங்களில் நிலவிய பதட்…

    • 0 replies
    • 543 views
  11. இலங்கையில் சுமார் அறுபது ஆண்டுகால ஆறு தசாப்த கால ஜனநாயக ஆட்சியின் பெறுபேறாக உள்நாட்டு யுத்தம் உக்கிரம் பெற்று, இன்று இலங்கைத் தீவு எங்கும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. வன்முறைப் புயல் என்றுமில்லாதவாறு மோசமாக வீசுகின்றது. எங்கும் அழிவு. எங்கும் சாவு. எங்கும் நாசம். எங்கும் ரணகளம். இதுவே இலங்கையின் வாழ்வியல் நியதி என்றாகி விட்டது. இது ஏன்? எதனால் வந்தது? எதற்காக வந்தது? உலகில் உன்னத ஆட்சிமுறை வடிவமாகப் போற்றப்படும் ஜனநாயகம் இலங்கையில் தோற்றுப்போய் வறிதாகி நிற்பதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் என்ன? முடியாட்சி முறை முடிந்து உலகில் குடியாட்சி பரவிய காலத்திலேயே ஜனநாயகக் கட்டமைப்பு முறை நன்கு காலூன்றத் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்சிமுறை உருவாக்கிக் கொட…

    • 0 replies
    • 2.6k views
  12. சிலாபத்தில் 10 ஜே.வி.பி உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் திங்கள், 09 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இன்று காலை அரைச்சிக்கட்டுவ சிலாபம் பகுதியில் ஜே.வி.பி யினர் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் இதனை ஜே.வி.பியின் வடமத்திய மாகாண கவுன்சிலர் சித்தார நொனிஸ் ஒழுங்கடைத்ததாகவும் தெரியவருகிறது. இவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்தப

  13. வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு கலைஞன் தமிழக மீனவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை கடற்படை உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களின் உயிரற்ற உடல்கள் கரை சேர்வதை வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளமை குறித்து கடும் கண்டனங்களும் விசனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் வேட்டையாடப்படுகின்றனர். வயிற்றுப் பசிக்காக மீனுக்கு வலைவீசச் செல்லும் இந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை வலைவீசிப்பிடித்து சுட்டுக் கொல்கிறது. காயப்படுத்துகிறது. கைது செய்து தமது முகாம்களுக்குக் கொண்டு சென்று கொடூர சித்திரவதைகளைச் செய்கிறது. கடலு…

  14. விதுரன் வடக்கில் பெரும் போர் நடக்கிறது. கிழக்கில் இனமோதல்கள் தொடர்கிறது. தெற்கில் தினமும் குண்டுகள் வெடிக்கிறது. மொத்தத்தில் இந்த நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையென்பது கேள்விக்குறியாகிவிட்டது. இது இலங்கையின் இன்றைய நிலை குறித்த சிறு மதிப்பீடுதான். இந்த நிலைமை மேலும் தொடருமானால் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துவிடும் நிலையேற்படலாம். தமிழ் மக்களுக்கெதிரான போர் மேலும் மேலும் மோசமடையும் போது அதன் எதிரொலி நாட்டையே அதிரச் செய்கிறது. தெற்கை பாதுகாத்தவாறு வடக்கு கிழக்கில் எதனையும் செய்யலாமென்ற அணுகுமுறையால் இன்று தென்பகுதி பேரச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு யுத்தம் மூலமே தீர்வு காண அரசு முனைகிறது. இதுவரை காலமும் ஏற்பட்ட அழிவுகள் குறித்து சிந்திக்காது …

  15. கொழும்பும் தென்பகுதியும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகளென்பதால் வடகிழக்கு மக்கள் கொழும்புக்கும் தென்பகுதிக்கும் பயணம் செய்வதை தவிர்க்குமாறு மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் மாவட்ட பா.உ.மான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டின தற்போதைய நிலை குறித்து அவர் மேலும் கூறுகையில் : கொழும்பிலும் தெற்கிலு;ம அண்மைக் காலங்களில் இடம் பெற்று வரும் குண்டு வெடிப்புகள் மற்றும் சம்பவங்களால் தமிழ் மக்களை வெறுப்பானவர்களாவும் சந்தேகத்துக்குரியவர்களாகவு

    • 0 replies
    • 630 views
  16. மணலாறுப் பகுதியில் நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 686 views
  17. மொறட்டுவை, கட்டுபெத்த பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் விரிவுரைகள் இன்று மீண்டும் ஆரம்பாமாகின்றன. எனினும், இதில் தமிழ் மாணவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அறிவிக்கபட்டிருக்கிறது. சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக வாளாகத்துக்குள் தற்போது தமிழ் மாணவர்கள் போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கினறது. சிங்கள மாணவர்கள் வழமை போல தமது செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அறிய முடிகிறது. இதானால் சிங்கள மாணவர்கள் இன்று மீண்டும் ஆரம்பமாகும் விரிவுரைகளில் வழமை போல் கலந்து கொள்வார்கள் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. தமிழ் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவர்களை இரண்டு, மூன்று…

    • 0 replies
    • 842 views
  18. கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம் [08 - June - 2008] கதிர்காமம் புனித பிரதேசத்தில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் 42 கடைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர்த் தீயினால் எரிந்துள்ளன. இவற்றில் 22 கடைகள் முற்றாகவே எரிந்துள்ளன. 20 கடைகள் பகுதி அளவிலான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இச்சம்பவம் இடம்பெற்றதும் கதிர்காமம் பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து எவரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை எனவும் கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களும் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து பலத்த சிரம்தின் மத்தியில் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். கதிர்காமம் கடைத்தொகுத…

    • 0 replies
    • 721 views
  19. குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்! [08 - June - 2008] யாழ். குடா நாட்டில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பயங்கரக் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியிலிருந்து செயற்படும் மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி "ஏ9' நெடுஞ்சாலைக்கு மூடுவிழா நடந்ததன் பின், யாழ். குடாநாட்டில் பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. எனினும், 2007 ஆம் ஆண்டுகளின் பின் ஆறு மாதங்களில் அவை படிப்படியாக வீழ்ச்சி கண்டு 2008 முற்பகுதிகளில் முற்றாக இல்லாதிருந்ததென்றே கூறலாம். எனினும், 2008 ஆம் ஆண்டில் முதல் அரை ஆண்டு உருண்டோடி விட்ட நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலை தூக்கி வருகின்…

    • 0 replies
    • 891 views
  20. வீரவங்ச வின் வீரவசனம் ஆதாரம்: வீரகேசரி

    • 1 reply
    • 1.3k views
  21. புலிகளுக்கு வாக்கிடாக்கி Sunday, 08 June, 2008 02:44 PM . சென்னை, ஜூன் 8: விடுதலைப்புலிகளுக்கு அனுப்பு வதற்காக சென்னை பர்மா பஜாரில் இருந்து 44 வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட்டதாக போலீசில் சிக்கிய புலிகளின் முகவர்கள் இருவர் தெரிவித்தனர். இவர்கள் இதுவரை என்னென்ன பொருட்களை புலிகளுக்கு வாங்கி அனுப்பியுள்ளனர் என்ற விவரத்தையும் போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறினர். . கடந்த மாதம் 18-ந் தேதி இலங்கை பசலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற பி.விஜி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மராசா என்ற டி. சின்னவன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு 44 வாக்கி-டாக்கிகளை கடத்திச் சென்றபோது மதுரையில் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற …

    • 0 replies
    • 1.2k views
  22. மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையிலான படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 611 views
  23. ஊடகத்துறைக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையேயான முறுகல் [08 - June - 2008] பாதுகாப்பு அமைச்சுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் ஆரம்பித்திருக்கும் முறுகல் அல்லது நெருக்கடி நிலை, தீர்வு ஏற்படுவதற்குப் பதிலாக விரிவடையக் கூடிய விபரீதத்தையே காணக்கூடியதாகவுள்ளது. பாதுகாப்புச் செயலாளரின் நேரடி அச்சுறுத்தல் ஊடகவியலாளர்களின் மன நிலையை மோசமான விதத்தில் பாதிப்படையச் செய்துள்ளது. அதுமட்டுமன்றி, ஊடகவியலாளரின் உயிர் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக, சுயாதீனமாக செயற்படும் உரிமையுடையவர்கள். அவர்களுக்குரிய கருத்து, எழுத்துச் சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் பறித்தெடுக்க முடியாது. ஆனால், இன்று ஊடகவியலாளர…

    • 0 replies
    • 548 views
  24. சிங்கள மக்களின் பிரச்சினை என்ன? [08 - June - 2008] தாரகா நாங்கள் பசியுடன் இருக்கின்றோம், எங்கள் வாழ்க்கை மிகவும் செலவு மிகுந்ததாக ஆகி விட்டது, நீங்கள் எங்களை கொல்லவா பார்க்கின்றீர்கள், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜவரிக் கோஸ்டில் மக்கள் கோசமிட்ட வார்த்தைகள். இன்று மூன்றாமுலக நாடுகள் எங்கும் அதிகரித்துச் செல்லும் பொருள் விலையேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றனர். இன்றைய உலக அரசியல் போக்கில்; பசித்தவர்களின் புரட்சி குறித்து அச்சங்கள் நிலவுவதாகச் சொல்லப்படுகின்றன. சரி இந்த பின்புலத்தில் கொழும்பின் அரசியலை பார்ப்போம். அங்கு என்ன நிகழ்கின்றது? தற்போது அதிகரித்துச் செல்லும் விலையேற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாத சாதாரண சிங்…

    • 0 replies
    • 745 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.