Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்குளி உயர்தொழில் நுட்பப் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் நான்கு தமிழ் மாணவர்கள் கைது தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் மாணவர்கள் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை கடற்கரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களும், நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்கள். மட்டக்குளி ""உயர் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில்' கல்வி பயிலும் கரவெட்டியைச் சேர்ந்த எஸ்.ராஜரட்ணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா விசாகன், அம்பாறையைச் சேர்ந்த ஏ.அசோகதீபன், பாசையூரைச் சேர்ந்த மத்தியூ சகாயதாஸ் ஆகிய நான்கு தொழில்நுட்பவியல் மாணவர்களே கடந்த 5 ஆம் திகதி இரவு தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது கடற்கரை பொலிஸ் ந…

    • 0 replies
    • 608 views
  2. மணலாறு, மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 634 views
  3. ஜூன் மாதம் 2ம் திகதி முதல் 11ம் திகதி வரையான காலப்பகுதியில் 11 ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிவில் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட நபர்களில் ஒருவர் மாத்திரம் கடந்த 11ம் திகதி விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலசிங்கம் அரியதீபன் என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டதாகவும், கொழும்பு 12 சென்றல் வீதியில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். ராதகிருஸ்ணன் சனாதன்(24), நவரத்னம் வேனுகன்(24), பரசாமி கமலநாதன்(23), கதிரேசன் சிவபாலன்(31), சிவஞாரத்னம் முகுந்தன்(32), ஜோசப் பெட்ரிக் பெர்னாண்டோ(71), தம்பிராசா சுதாகரன்(27), பியதாஸ அஜித்குமார(42), நடராசமூர்த்தி கேதீ…

    • 0 replies
    • 577 views
  4. இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்ளவதற்கு விலைமனுக் கோரிய கெயான் இந்திய என்ற இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் குறித்த நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் 3ம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது. எண்ணெய் அகழ்வு தொடர்பாக ஆரம்பகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்ட மன்னார் பிரதேசத்தில் மூன்று பகுதிகள் குறித்த இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட மூன்று தொகுதியும் இந்திய நிறுவனங்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 3400 சதுர கிலோ மீற்றர் பரப்பில் கெயன் இந்தியா நிறுவனத்திற்கு 200 முதல் 1800 சதுரகிலோ மீற்றர் வழங்கப்பட்டுள்ளது.

    • 0 replies
    • 721 views
  5. கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத்தாக்குதலில் முதியவரான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 10 வீடுகளும் பொதுநோக்கு மண்டபமும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 569 views
  6. இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது - எழிலன் Saturday, 14 June 2008 09.57 hrs (Swiss Time) இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை இன்று அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது. எமது பலம் முன்பிருந்ததைப் போல் அல்லாது தற்போது மேலோங்கி காணப்படுகிறது என்று விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரந்தனில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். யாழ்ப்பாணத்தில் தற்போது விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடுத்து தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வில் யாழ் குடா கடல்தொழிலாளர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. அத்துடன் ஊர…

    • 2 replies
    • 2k views
  7. இலங்கையிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்துவருபவர்களிடம் விடுதலைப் புலிகள் பணம் சேகரிப்பதற்கு அனுமதித்திருப்பதானது பிரித்தானியா பயங்கரவாதத்துக்கு எதிரான விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதை தெளிவுபடுத்துவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். விபரம்: http://www.swissmurasam.info/

  8. புலம்பெயர் தமிழர்கள் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் - சீமான் ( 6/13/2008 11:52:26 AM ) புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பெருமளவில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என, தமிழின உணர்வாளரும், இயக்குனருமான சீமான் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் ஜேர்மனி சென்றிருந்த சீமான், அங்கு வழங்கிய செவ்வியில் இதனை வலியுறுத்தினார். டென்மார்க், நோர்வே, நியூசிலாந்து நாடுகளில் நாளை 14ஆம் நாளும், நெதர்லாந்தில் இம்மாதம் 22ஆம் நாளும், யேர்மனியில் இம்மாதம் 28ஆம் நாளும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஈழத்தமிழ் மக்களின் த…

  9. அக்கரைப்பற்று காவல்துறை பொறுப்பதிகாரியின் துணையுடன் விபச்சாரத் தொழில் முன்னெடுப்பு அம்பாறை அக்கரைப்பற்று காவல்நிலையப் பொறுப்பதிகாரி முஹமட் இஷாட் (O.I.C சொந்த இடம் கொழும்பு இரு வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் கடமையாற்றுகின்றார்) உதவியுடன் விபச்சார தொழில் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொத்துவில், வாங்காமம், ஆலங்கேணி, போன்ற பின்தங்கிய பகுதியில் உள்ள முஸ்ஸிம் யுவதிகளும் திருக்கோவில், கோமாரி, விநாயகபுரம், தம்பிலிவில், போன்ற பகுதி தமிழ் யுவதிகளையும் இத்தொழிலுக்கு ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளுக்கு கையூட்டாகப் பணமும் பெண்களையும் கொடுத்து விபச்சாரத் தொழிலை அக்கரைப்பற்று நகரில் முதன்மை இடத்தைப் பெ…

    • 2 replies
    • 1.8k views
  10. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர் பிள்ளையானைச் சந்திக்க மறுப்பு தெரிவித்தனைத் தொடர்ந்து அவர்களின் கிழக்கு மாகாணத்திற்கான பயணத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  11. மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஜூலை மாத திருவிழாவானது நடைபெறுவது சாத்தியமற்றது என்று கத்தோலிக்க மதகுருமார் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  12. வடபகுதி தமிழர்கள் தென்பகுதிக்கு வருவது தொடர்பில் மே.ம.முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கை தமிழ் மக்களின் நிலையினை சர்வதேசத்திகுக்கு பறைசாற்றியுள்ளது. இந்த அறிக்கை தமிழ் மக்களின் நிலையினை சர்வதேசத்துக்கு பறைசாற்றியுள்ளது. இந்த அறிக்கை வரவேற்கத்தக்கதாகும். என தமிழ் தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் தேசிய பணிக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : தலைநகரில் ஒவ்வொரு தமிழனும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது. பிரதேசப் பொலிஸாருக்கே தெரியாது தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்படுகின்ற ஒரு துயரமான காலகட்டத்தில் தலைநகரின் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தமிழ் மக்களின் துயரங்க…

    • 0 replies
    • 857 views
  13. இலங்கை போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக பாதுகாப்பு கருதி இந்திய கடல் எல்லையில் போர் கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த போர் பாதிப்பு அயல் நாடான இந்தியாவில் குறிப்பபாக தமிழகத்தில் ஏற்படாத வகையில் மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அகதிகள் என்ற போர்வையில் போரளிகள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து 18 கிலோ மீற்றர் தூரம் தலைமன்னார் உள்ளது. இந்தப் பகுதியில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதன் காரணாக இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மத்தி அரசு உடத்தரவ…

  14. தமிழீழத் தேசியத் தலைவரின் காலத்திலேயே எமது தேசத்தை வெல்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைய தொடக்கப் பயிற்சி கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  15. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்றால் விடுதலைப் புலிகள் அதற்கு முன்னர் தமது ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வெளிவரும் டைம்ஸ் தினசரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: பயங்கரவாதத்தை அணுகும் விடயத்தில் இருவேறுபட்ட நிலைப்பாட்டினை கொண்டிருக்க முடியாது. நல்ல பயங்கரவாதிகள், கெட்டபயங்கரவாதிகள் என்று இருவகையினர் இருக்கின்றனர் என்ற விடயத்திலும் எனக…

    • 4 replies
    • 1.4k views
  16. கொழும்பில் வாகனங்கள் அனைத்து சோதனை: பயணிகள் விசனம் தெரிவிப்பு வெள்ளி, 13 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொழும்பு பகுதிகளில் வாகனங்கள் அனைத்தும் சிறீலங்காப் படையினரால் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு பல்வேறு பகுதிகளுக்கும் வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தவே இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை கொழும்பு நகரசபை மண்டபத்திலிருந்து கோட்டை தொடரூந்து நிலையம் வரை செல்ல இரண்டு மணிநேரம் தேவைப்பட்டதாக பயணி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/?p=1150

  17. பின்வரும் முகவரிகளில் நேரடி ஒளிபரப்பினைப் பார்வையிடலாம் TVI – canada Eurotv - Europe

    • 7 replies
    • 2.1k views
  18. பிரித்தானிய அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ கண்டித்துள்ளார்.பிரித்தானிய

    • 3 replies
    • 2.5k views
  19. உறக்க நிலையில் உள்ள உலகத் தமிழினமே விழித்திடுவீர்: "நிலவரம்" [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 09:49 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] உறக்க நிலையில் உள்ள உலகத் தமிழினமே விழித்திடுவீர் என்று சுவிசில் இருந்து வெளிவரும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (13.06.08) வெளிவந்த "நிலவரம்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கு கொள்ளும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானியா வாழ் ஈழத தமிழர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அனைத்துலகத்தின் கவனத்தை ஈழத…

  20. மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் புலி முத்திரையும் தேசத்துரோக பட்டமும் வழங்கப்படுகிறது - மனோ கணேசன் எம்.பி. கவலை வீரகேசரி நாளேடு 6/13/2008 6:50:07 PM - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் புலி முத்திரை குத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கு பிரச்சினைகளை எடுத்துக்கூறினால் தேசத்துரோக பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சிக்காலங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்றைய ஜனாதிபதி ஜெனீவா சென்று முறையிட்டார். அவரது செயற்பாட்டினை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகை…

  21. சிறிய படைகளிடம் பெரும் படைகள் தோற்றதே வரலாறு: க.வே.பாலகுமாரன் [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 08:10 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பெரும் படையை வைத்திருந்தவர்கள் கூட சிறிய படைகளிடம் தோற்ற வரலாறுகள் இருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தமிழ்ச் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய திருக்குறள் மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர்கள் நல்ல கருத்துக்களையும் பாடங்களையும் கற்றுக்கொள்கின்ற அல்லது அறிந்து கொள்வதற்கு திருக்குறளை பயன்படுத்தலாம். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய அற்புதமான கருத்துக்கள் திருக்குறளில் உள்ளன. தற்போதைய எமது நிகழ்காலத…

    • 0 replies
    • 992 views
  22. ஆப்பிழுக்கத் தயாராகும் பொன்சேகா -ப.தெய்வீகன்- எல்லோரும் ஏறிவிழுந்த கழுதையில் சக்கடத்தாரும் எறி சறுக்கி விழுந்தாராம் என்ற நக்கல் மொழி ஒன்று எம் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. பிரபாகரனை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு வடக்கில், மேல்வெடி வைத்துக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அண்மைக்கால அறிக்கைகளைப் பார்த்தால் இவர் இராணுவத்தளபதிகள் வரிசையில் அடுத்த சக்கடத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சிங்கள தேசமும் அதன் படைகளும் எதனை எல்லாம் புரிந்து வைத்திருக்கின்றன என்பதனை நோக்குவதை விட எவற்றை எல்லாம் இன்னமும் புரியாமல் இருக்கிறது என்பதனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. தற்போது விடுதலைப் புலிகளின் பெர…

    • 9 replies
    • 2.5k views
  23. வவுனியா மாவட்டத்தில் உள்ள கனகராயன்குளம் காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 700 views
  24. வவுனியா - மதவாச்சி வீதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது இன்று முற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 660 views
  25. யாழில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 02:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்தார். சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் சனநடமாட்டம் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இத்துணிகரச் சம்பவம் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் ஒன்றான புன்னாலைக்கட்டுவனுக்குள் ஓடித் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அச்சுறுத்தல் காரணமாக மனித…

    • 4 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.