ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142836 topics in this forum
-
மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் பாரிய இராணுவ முகாம் 10.04.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவான கருணாகுழு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவுப் பிரதேசத்தில் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படத் தொடங்குவார்கள் எனத் தெரிவித்திருக்கும் அவர், அரசாங்கம் ஏன் அவர்களுக்கு இராணுவ பயிற்சி முகாமை அமைக்க அனுமதி வழங்கியது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். அதேவேளை அரசாங்கம் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பைக் குறைத்துள்ளமையைக் கண்டித்துள்ள அவர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரான்சில் நடைபெறவுள்ள நாட்டுப்பற்றாளர்கள் நினைவெழுச்சி நாள் - 2008 நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 820 views
-
-
தேசியத்தலைவரின் சிறந்த வழிநடத்தலால் ஓருவருடமாக மன்னாரில் திணறும் சிங்களம்-சி.எழிலன் தேசியத்தலைவரின் சிறந்த வழிநடத்தலால் மன்னாரில் எமது போராளிகளிடம் கடந்த ஒராண்டு காலமாக சிங்கள இராணுவம் திணறிக் கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். உலகின் பல வல்லரசுகளால் ஒழுங்குபடுத்தப்பட்டும் பெரும் ஆயுதங்களை பெற்றுக்குவித்தும் போர் ஒத்திகைகள் மற்றும் புதிய நுட்பங்கள் என்றெல்லாம் தயார்படுத்தியும் களமிறங்கிய சிங்கள இராணுவம் இன்று திணறுகிறது. எமது விடுதலைப் போராட்டம் பலம் பொருந்திய நிலையில் இன்று வந்திருக்கின்றது. எமது போராளிகள் சிறிலங்கா தேசத்தின் பெருந்தொகையான படைகளுடன் மோதிக்கொண்டிருக்கின்ற…
-
- 5 replies
- 1.3k views
-
-
நல்லூரில் படையினர் மீது சூடு - ஒருவர் படுகாயம் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 10, 2008 - 07:13 AM - GMT ] யாழ். நல்லூர் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது இன்று காலை 8.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு படையினன் படுகாயமடைந்துள்ளார். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது உந்துருளியில் வந்த விடுதலைப் புலிகளின் "பிஸ்ரல் குழு"வைச் சேர்ந்த இருவர் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது படையாள் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலாலி படைத்தள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள…
-
- 1 reply
- 1k views
-
-
வன்னிக்களமுனையில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களில் 8 படையினர் காயமடைந்துள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 681 views
-
-
இலங்கையில் பிரபாகரன் பிறந்த பூர்வீக வீட்டுக்கு எந்த சேதமும் ஏற்பட்டுவிடாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீடு, இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை கடலோர கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்துதான் தனி ஈழப் போராட்டத்தை பிரபாகரன் தொடங்கினார். சிங்கள ராணுவத் தாக்குதலுக்கு பயந்து பெரும்பாலான மக்கள் இந்த கிராமத்தைவிட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறிவிட்டனர். பிரபாகரன் உறவினர்கள் உள்ளிட்ட சில குடும்பங்கள் மட்டுமே அங்கு தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரபாகரனின் வீடு உள்பட வல்வெட்டித்துறை பகுதி முழுவதும் இப்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள…
-
- 4 replies
- 1.9k views
-
-
வட போர் அரங்கிலிருந்து மார்ச் மாதத்தில் மட்டும் 93 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டும் 688 படையினர் படுகாயமடைந்துமாக மொத்தம் 781 படையினர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
கண்கள் கட்டப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட சடலங்கள் மீண்டும்? Thursday, 10 April 2008 குருணாகலை மாவட்டத்தின் கலுகமுவ – வாரியபொல வீதியின் வீரம்புகெதர பதின்வத்த பிரதேசத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எரிகாயங்களுக்கு உள்ளான சடலமொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1760/1/
-
- 0 replies
- 931 views
-
-
விரிவடைந்து வரும் போர்க்கள முனைகள் [10 - April - 2008] மடுவை கைப்பற்றுவதிலும் தக்க வைப்பதிலும் இரு தரப்பும் கடும் பிரயத்தனம் ஆர். ஹரிகரன் பாகிஸ்தானிடம் இலங்கை பெருமளவிலான ஆயுதங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளவுள்ளது என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி கேணல் ஆர். ஹரிகரன் தெரிவித்துள்ளார். தென் ஆசிய ஆய்வு இணையத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்: இலங்கையின் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் (வயது 55) கொலைச் சம்பவம் மகிந்த ராஜபக்ஷவை வெகுவாக பாதித்துள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பிப்பதற்காக சமிக்ஞையை காட்டியபோது அமை…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடமராட்சியில் களவாக மண் அகன்ற குழு மீது சரமாரியாக துப்பாக்கி சூடு. இளைஞன் காயம். இனந் தெரியாதோரால் யாழ்-வடமராட்சியில் களவாக பார ஊர்தியில் மண் எடுக்க சென்ற குழு மீது சரமாரியன துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வடமராட்சி வல்லிபுரக் கோவில் பகுதியில் கன்றர் ரக பாரஊர்தியில் சென்றோரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். பருத்தித்துறை நீதி மன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இராணுவத்தினரின் அனுசரணையுடன் சிலர் சூழல் அழிவைப் பொருட் படுத்தாமல் களவாக மண் ஏற்றும் செயலில் ஈடுபட்ட வந்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கு வேளைகளில் இவர்கள் இச்சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக் குழு பற்றி பத்திரிகைகளில் எழுதிய இராமச்சந்திரன் என்ற பத்திரிகை நிருபர் முன்னர் காணாமல் போயி…
-
- 0 replies
- 822 views
-
-
ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 9. ஏப்ரல் 2008 22:18 வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் நாலாபுறமும் திறக்கப்பட்டுள்ள களமுனைகளில் கடந்த இருவாரங்களாக கொட்டும் மழையால் மோதல்களின் தீவிரம் குறைவடைந்திருந்த போதும் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மழை ஓரளவுக்கு தணியத் தொடங்கியதும் மீண்டும் குண்டுச் சத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. மன்னாரில் 58 ஆவது டிவிசன் நிலைகொண்டுள்ள பகுதிகளிலேயே மோதல்கள் மீண்டும் தீவிரம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மன்னார் களமுனையில் இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சியை சுமார் ஒரு வருடகாலமாகப் புலிகள் முடக்கியுள்ளனர். இந்தக் களமுனையில் அவர்கள் வலிந்த தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாமல் தற்காப்பு தாக்குதல் நிலையிலேயே இன்னமும் உள்ளனர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஓரங்குல நிலத்தை தானும் விட்டுக்கொடாது ஓர்மத்துடன் போராடிவருகின்றோம். கேணல் தீபன். 09.04.2008 / நிருபர் எல்லாளன் வடபோர் முனையில் கடந்த ஒன்றரைவருட காலத்தில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னேற்ற முயற்சிகளையும் முறியடித்து எமது எல்லைக்கோட்டில் ஒரு அங்குலத்தைக்கூட எதிரியிடம் விட்டுக்கொடுக்காது ஓர்மத்துடன் போராடி வருகின்றோம் என வடபோர்முனைக் கட்டளைத்தளபதி கேணல் தீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். வடபோர்முனையில் நடந்த சண்டைகளில் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு போராளிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்…
-
- 3 replies
- 1.7k views
-
-
'அரசு இப்போது தலையில் தூக்கி வைத்து ஆடும் பிள்ளiயான் எதிர்காலத்தில் அரசிற்கு எதிரான புல்லுருவியாக மாறப்போகிறார். அரசு இதை விரைவில் உணர்ந்து துன்பப்படப் போகிறது.' நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் மற்றும் பொருளாதார விழ்ச்சி காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். கடந்த வருடம் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கின் போது இந்தச் சபையில் அரசால் மலர்வளையம் ஒன்று வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதன் விளைவாக நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் இதுவரை ஆறு எம்.பிக்கள் இறந்துள்ளனர். இது மலர்வலயத்தின் சாபக்கேடாகும். வடக்கில் ஒரு பொய்யா நன்கு திட்டமிடப்படாத யுத்தமொன்று இடம் பெறுகின்றது. மடுவைப் பிடிக்கும் …
-
- 0 replies
- 975 views
-
-
'பிள்ளையான் குழுவின் ஆதரவோடு கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குக்களைப் பறித்து, அவற்றைத் தமிழ் மக்கள் இந்த அரசுக்கு அளித்த ஆதரவாக சர்வதேசத்திற்கு காட்ட அரசு முற்படுகிறது. இந்த உண்மை தெரியாமல் பிள்ளையான் பலிக்கடாவாகப் போகிறார். கருணாவைப் பயன்படுத்தி விட்டு வீசியதைப் போல் பிள்ளையானையும் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திவிட்டு வீசிவிடாப் போகின்றது இந்த அரசு. ஆயுதக் குழுவை இத்தகைய பிழையான நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதை அரசு உடன் நிறுத்த வேண்டும்'. இவ்வாறு நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு இரா.சம்பந்தன் உரையாற்றினார். மேலும் : இந்தச் சபையில் இருந்த ஜெயராஜ், ரவிராஜ், மகேஸ்வரன், சிவநேசன், ஜோஸப் பரராஜசிங்கம் உட்ப…
-
- 0 replies
- 972 views
-
-
ஜனதா விமுக்தி பெரமுனை அல்லது ஜே.வீ.பீ என்று அழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவடைந்துள்ளது. இலங்கை அரசியலில் மூன்றாவது பெரும் சக்த்தி எனவும், எதிர்கால ஆளும் கட்சி எனவும் பரவலாக சிலாகிக்கப்பட்ட ஜே.வீ.பீயின் நீண்டகால உள் முரண்பாடு இப்போ வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இடது சாரிக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு கியூபா, பொலீவியப் புரட்சிகளின் நாயகர்களில் ஒருவரான சேகுவராவை தனது மாதிரியாக் ................. தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4990.html
-
- 0 replies
- 936 views
-
-
துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி-புத்தளம் வீரகேசரி இணையம் 4/7/2008 10:36:19 AM - புத்தளம் பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ள துப்பாக்க்கி சூட்டுச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த நால்வர் புத்தளம் மாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சிறுவர்களும் அடங்குகின்றனர். இத்துப்பாகி சூட்டு சம்பவத்துடன் சிவில் பாதுகாப்பு படை அணி அதிகாரி ஒருவர் தொடர்பு பட்டிருப்பதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
- 4 replies
- 1.7k views
-
-
அரசாங்க அமைச்சர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தாக்குதலை அடுத்து மேலும் தாக்குதல்கள்................ தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5708.html
-
- 2 replies
- 1.2k views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயைக் கொலைசெய்யவந்த தற்கொலைக் குண்டுதாரி முஸ்லிம் நபர் ஒருவர் போலவே அந்த இடத்துக்கு வருகைதந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்த நபரிடமிருந்த தேசிய அடையாள அட்டையும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளைத்தம்பி மொஹம்மது அமீன் என்ற பெயர் அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரந்துருன்சேனை, வாழைச்சேனை என்ற முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அடையாள அட்டையில் காணப்பட்ட அனைத்து விவரங்களும் பொய்யானவை எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் பிறவுண் நிற "சேட்' அணிந்திருந்தார் என்றும் அமைச்சருக்கு சில அடி தூரம் பின்னாலிருந்து குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்…
-
- 5 replies
- 2.7k views
-
-
மடு புனித தலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிது அங்கு மோதலில் ஈடுபடும் அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாகும் என்று நோர்வே தெரிவித்துள்ளது. புலிகளின் அரசியல் துறைப் பெர்றுப்பாளர் பா.நடேசன் மடுவிவகாரம் தொடர்பாக அனுப்பியுள்ள கடிதத்தை அரசின் பரிசீலனைக்காக ஒஸ்லோவிற்கு அனுப்பியுள்ளதாக கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். மடு புனித பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதலை தடுத்து நிறுத்த நோர்வே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நோர்வேக்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதம் தொடர்பாக 'கேசரி'க்கு கருத்துத் தெரிவிக்கையிலே நோர்வே துதரக பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 3 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா கடற்படை நடத்திய தாக்குதலில் யாழ். குருநகர் கடற்பரப்பில் கடல் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 704 views
-
-
நான் கூறிய அனைத்தையும் பதிவு செய்திருப்பார்கள் என்று எண்ணியே அதன்கீழ் கையெழுத்திட்டேன் வீரகேசரி நாளேடு 4/9/2008 8:53:49 AM - இரகசிய பொலிஸாரால் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில், நான் கூறிய அனைத்தையும் பதிவு செய்திருப்பார்கள் என எண்ணியே அதில் கையெழுத்திட்டேன். ஆனால், அந்த வாக்குமூலம் எனக்கு வாசித்து காட்டப்படவில்லை என மூதூரில் கொல்லப்பட்ட அக்ஷன் பெய்ம் ஊழியரான ஜயசீலனின் உறவினர் ஒருவர் நேற்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொய் எதனையும் கூறவில்லை என்று கூறிய அவர், தான் கூறுவது அனைத்தும் உண்மைத் தகவல்களே என்றும் கூறினார். அக்ஷன் கொன்ராலா பெய்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னாரில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தான் இப்போது மடு மாதா சென்றிருக்கின்றார் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 616 views
-
-
கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் படையினருக்கு சிறிலங்கா அரசாங்கம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 493 views
-
-
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது படையினர் நல்லூர் கோவில் பக்கத்துக்கே செல்லவில்லை. இன்று கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு எதற்காக மடுவிற்குச் செல்ல வேண்டும் என்று சிறிலங்காப் படையினரில் உள்ள கத்தோலிக்கர்கள் கேள்வி எழுப்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 850 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் வத்தளையில் உள்ள வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்ற அடையாளம் தெரியாத குழு ஒன்று அங்கிருந்தவரை கடுமையாக மிரட்டிவிட்டு, அங்கு கடும் தேடுதலை நடத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 831 views
-