ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
18.11.2007 விடுதலை கோரி தமிழ்க்கைதிகள் சிறைகளில் உண்ணாவிரதம். மட்டக்களப்பு மற்றும் வெலிக்கடைச்சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 38 தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணா நிலைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 29பேர் சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தாம் வருடக்கணக்காக சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தம் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து விடுதலை செய்யுமாறும் கோரியே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நேற்றுமாலை (செவ்வாய்) நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணிவரையில் கோயம்புத்தூh,; வேலாண்டிப்பாளையத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குவதனைக்கண்டித்து புரவலர் க.ப. அப்பாவு அவர்கள் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கோ. இராமகிருட்டினன், ஆட்சிக்குழு உப்பினர் வே.ஆறுச்சாமி, கோவை பொரியார் திராவிடர் மாவட்டத்தலைவர் இராச்குமார் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். --மின்னஞ்சலில் வந்த செய்தி
-
- 4 replies
- 1.5k views
-
-
மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது விரைந்து நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவுக்கு இந்தியா பாரிய அளவில் உதவிகளை வழங்குகிறது: "த நேசன்" சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ ரீதியாக பாரிய அளவில் உதவிகளை அளித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மேலும்
-
- 3 replies
- 1.3k views
-
-
எமது மக்களின் நீண்டகால விடுதலைப் போரின் நியாயங்களைப் புரிந்துகொண்டு, ஈழ மக்களின் தாயகக் கனவுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.5k views
-
-
புலிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஜே.வி.பி. ""மஹிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகின்றது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிட எண்ணுகின்றது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய்க் கிடக்கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி, உருக்குலைந்து கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மஹிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியைகளையும் நடத்தி முடித்திருக்கின்றது.'' இது கடந்த வருடம் மாவீரர் தின உரையில் தலைவர் பி…
-
- 0 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் பாரியார் எலீனாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற போதும் ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான "பேரம்" குறித்து விவாதித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கும் குண்டுகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்திருப்பதாகவும் 10 நாட்களில் அவை சிறிலங்காவுக்கு வந்தடையும் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
"கட்டற்ற பெரும் போருக்கான வாசலை சிறீலங்கா திறந்துவிட்டிருக்கிறது" மனோகரன் அமைதி, சமாதானம் என்பதெல்லாம் தொலைதுாரத்துக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. போர் தீவிரமாகக் கூடிய நிலைமைகள் அதியுச்சத்துக்குப் போய்விட்டன. அதாவது இனிப் போர்தான் என்ற நிலைமை, கட்டாயமாகிய நிலைமை உருவாகிவிட்டது. ஆனால் யதார்த்தத்தில் போரைத் தாங்கக்கூடிய நிலையில் நாடும் இல்லை, சனங்களும் இல்லை. :மேலும்
-
- 0 replies
- 2.2k views
-
-
"சிறீலங்கா அரசின் போர் முழக்கமும் விடுதலைப் புலிகளின் பதிலும் " நா.யோகேந்திரநாதன் அண்மைக்காலமாக சிறீலங்கா அரச தரப்பிலிருந்து ஒரு பெரும் போரைத் தொடங்கப் போவது போன்ற ஒரு தோற்றப்பாடு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. கிழக்கிலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டு விட்டார்கள் எனவும், வெகுவிரைவில் வடக்கையும் தாங்கள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடப்போவதாகவும், சிறீலங்கா அரசு தொப்பிகல வெற்றியை அடுத்துப் பெரும் பிரச்சாரத்தை நடத்தியது. அது மட்டுமன்றி மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை பகுதி அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட பின்பு இப்பிரச்சாரம் மேலும் வலுப்பெற்றது. :மேலும்
-
- 0 replies
- 3k views
-
-
"எல்லாளன் நடவடிக்கை ஓர் எதிர்கால முன்னறிவுப்பு" ஜெயராஜ் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து பல ஆய்வாளர்களும் விமர்கசர்களும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருக்கும் நிலையில், அரசியல்வாதிகளும் தமது பங்கிற்குத் தமது கருத்துக்களைத் அபிப்பிராயங்களையும் வெளியிட்டுள்ளனர். :மேலும்
-
- 0 replies
- 2.9k views
-
-
"அநுராதபுரம் போன்ற அதிரடித் தாக்குதல்கள் தொடரலாம்" - மனோகரன் புலிகளைத் தோற்கடிக்க முடியாதென கடந்தவாரம் கொழும்பில் வைத்து ஐரோப்பாவைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் யெரால்ட் சாலியன்ட் தெரிவித்தபோது களநிலவரம் தெரியாமல் அவர் இப்படிச் சொல்கிறார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ச கேலியாகச் சொன்னார்.:மேலும்
-
- 0 replies
- 2.2k views
-
-
புலிகளின் தமிழீழ பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவு? தமிழீழ விடுதலைப் புலிகளின் "தமிழீழ" சுதந்திரப் பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவளிக்கக் கூடும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்லதாக தெரிகிறது. எரித்திரியா ஆதரவளித்துவிடக் கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென கடந்த புதன்கிழமை எரித்திரியாவுக்கான சிறிலங்கா தூதரகம் அமைக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எரித்திரியாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக சிறிலங்கா கருதி வருகிறது. எத்தியோப்பியாவிலிருந்த் 1990-களின் மத்தியில் எரித்திரியா சுதந்திரப் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது. புதினம்
-
- 1 reply
- 1.7k views
-
-
தாக்குதலை தடுப்பதற்காக நடத்தப்படும் தாக்குதல்கள் -விதுரன்- மாவீரர் தினத்துக்கு முன் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குதல் எதுவும் நடத்தலாமென அரசு கருதுகிறது. அவ்வாறானதொரு தாக்குதல் மூலம் புலிகள் பாரிய வெற்றிகள் எதனையும் பெற்றுவிடக் கூடாதென்பதில் அரசு மிகவும் அக்கறையாக உள்ளது. வடக்கில் புலிகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் தெற்கில் அரசின் எதிர்காலத்திற்கு ஆபத்தாகி விடுமென்பதால் இந்த அரசின் இன்றைய மூலதனம் யுத்தத்திலேயே உள்ளது. வடபோர் முனையில் படையினர் தற்போது இரு பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்த வாரம் வரப்போகும் புலிகளின் மாவீரர் தினத்திற்கும் வடக்கே பெய்துவரும் மழைக்கும் படையினர் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. மாவீரர் வாரத்தில் புலிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அரசில் அங்கம் வகிக்கும் மூன்று சிறிய அரசியல் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டாக அறிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.2k views
-
-
மன்னாரில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொள்ளும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களையடுத்து 22,000-க்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்ளின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 535 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் கொழும்பில் உள்ள வீட்டில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் இருபதுக்கும் அதிகமான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
வடபோர் முனையில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறிலங்காப் படையணிகளில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
http://youtube.com/watch?v=-WTPjTcFmjI
-
- 1 reply
- 1.7k views
-
-
-
ஸிங்கள கனவுகள் வீடியோவை பார்ப்பதுக்கு மொழி தேவையில்லை. ;-)
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின்குரலின் வானோசை-17 கலை இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 761 views
-
-
யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களினால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 961 views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து "மகா நெகுமா" திட்டத்தின் பணிப்பாளரான கீத்சிறீ அபயகுணவர்த்தனவிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
சனி, 17 நவம்பர் 2007(13:30) அமைதி பேரணி நடத்திய எங்களை அடக்குமுறை மூலம் கைது செய்து விட்டு சுப.தமிழ்ச்செல்வனுக்கா
-
- 5 replies
- 1.7k views
-