ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
அண்மையில் சிறிலங்காவிற்கான பிரித்தானித் தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர்தான் எனினும் பயங்கரவாதிகள் அனைவரும் தமிழர்களே என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும், பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-
-
வியாழன் 13-12-2007 20:00 மணி தமிழீழம் [தாயகன்] மணலாற்றில் மோதல் - படைத்தரப்பில் ஒருவர் பலி, இருவர் படுகாயம் சிறீலங்காப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மணலாறு ஜானகபுரத்தில் இன்று மாலை நேரடி மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளுடனான மோதலில் படுகாயமடைந்த மூன்று படையினரில் ஒருவர் பின்னர் மருத்துவமனையில் உயிழந்திருப்பதாக, சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 770 views
-
-
சிறிலங்காப் படையினரின் நோயாளர் வாகனங்களில் பயணிப்பதற்கு நோயாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்று கிளிநொச்சி பொது மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
அனைத்துலக முஸ்லிம்களுக்காக் குரல் கொடுக்கிறவராக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டு வருகிறார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 609 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் விலகியுள்ளதால் மகிந்த அரசாங்கமானது பெரும்பான்மையை இழக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான யுனிசெஃப்பின் புதிய பிரதிநிதி பிலிப்பி நிமாலி இன்று சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 808 views
-
-
வியாழன் 13-12-2007 14:40 மணி தமிழீழம் [சிறீதரன்] ரத்மலானவில் உள்ளுர் விமானம் அவசரமாக தரையிறங்கியுள்ளது இன்று பயணிகள் விமானம் ஒன்று ரத்மலான விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் விமானத்தின் தன்னியங்கி தரையிறங்கும் பொறி செயற்பட தவறியதே இவ்வாறு அவசர தரையிறக்கத்திற்கு காரணம் எனத்தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.1k views
-
-
வியாழன் 13-12-2007 12:47 மணி தமிழீழம் [சிறீதரன்] பருத்தித்துறை வியாபாரிமூலையில் வீடு ஒன்றினுள் குண்டு வெடிப்பு: இருவர் பலி! ஆறு பேர் படுகாயம் வடமராட்சி பருத்தித்துறையில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை 5 மணியளவில் பருத்தித்துறை வியாபாரிமூலையில் உள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்து வீட்டினுள் நுழைவதற்கு படையினர் முயற்சித்தபோது குண்டு வீட்டினுள் வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் வீட்டில் இருந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாமடைந்தவர்களில் 54 அகவையுடை பெண், இரு ஆண்கள், மூன்று பெண்களும் உள்ளடக்குகின்றனர். http://www.pathivu.com/index.php?subaction...amp…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜப்பானின் விஷேட தூதுவர் அகாஸி அடுத்த வாரம் இலங்கை வருகிறார் [29 - November - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- இலங்கைக்கான ஜப்பானிய விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஸி அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். யசூசி அகாஸி இலங்கைக்கு அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதை அரசதரப்பும் உறுதிப்படுத்தியது. 15 ஆவது தடவையாக இலங்கை வரும் யசூசி அகாஸி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை விஜயத்தின் போது அவர் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர்தின உரையில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டை கடும…
-
- 8 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஜே.வி.பி.யின் உண்மை முகம் ஜப்பானில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
வியாழன் 13-12-2007 17:01 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] கிழக்கில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் மட்டக்களப்பு தமிழ்த் தேசிய கூட்ட அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்களின் இரண்டு உறவினர்கள், சிறீ லங்கா இராணுவத்தின் துணையுடன் இயங்கி வரும், துணை ஆயுதக்குழுவான பிள்ளையான் அணி கடத்தியிருக்கின்றது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் பிள்ளையான் அணியால் கடத்தப்பட்டுள்ளார். ஆள்கடத்தல் என்பது பாரதூரமான பயங்கரவாத செயற்பாடாகும் என ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது. கடத்தியவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாமல் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. ஐனநாயக கோட்பாடுகள் சட்டத்…
-
- 0 replies
- 824 views
-
-
Posted on : 2007-12-13 விதைத்த வினையை மறந்து விளக்கம் கூறும் வித்தகர்கள் கொழும்பில் தனது பணியை முடித்து, அமெரிக்காவின் வாஷிங்ரனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதித் தூது வர் மட்டப் பதவியை ஜனவரியில் ஏற்றுக் கொள்வதற்காக அங்கு புறப்பட முன்னர், கடந்த திங்களன்று சர்வதேச மனித உரிமைகள் நாளில் இங்கு தலைநகரில் இடம்பெற்ற முக் கிய ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார் கொழும்புக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமி னிக் சில்க்கொட். அவரது உரையில் முக்கிய கருத்து ஒன்றே பலராலும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது. ""ஈழம் என்ற தனிநாட்டுக்கான அரசியல் அபிலாசை சட்டமுறையற்றது என நான் கூறவில்லை. ஆனால் அதற் காகப் பயன்படுத்தப்படும் முறைதான் முக்கியமானது. புலிகள் அத…
-
- 2 replies
- 1.7k views
-
-
தென்னிலங்கை தேசப்பற்றின் முகங்கள் மாறுமா?. போரே முழுமுச்சு என மனிதவர்க்கத்தின் இரத்தம் காணத்துடிக்கிறதுஇ அரசியற் கதிரை ஏறத்துடிக்கும் சிவப்பு சட்டை போர்த்தியசக்தி. தேசிய நாடாளுமன்றம் அமைக்கப்போவதாக கூறி மீண்டும் முருங்கைமரம் ஏறத்தொடங்குகிறது அன்னிய வலை பின்னும் பச்சைச் சிலந்தி. நாடாளுமன்றைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவோம் என்கிறது மங்கள அதிருப்திக்குழு. புதிது பதிதாக மக்களைக் கொள்வது மன்னிக்கமுடியாது என்கிறது ஜப்பானில் நின்று பொய்மைஆட்சிக்குரல். எப்படிப்பட்ட தேசப் பற்று முகங்கள். தென்னிலங்கை தேசப்பற்றுக்காக பல புதிய கதைகளை கூறுகிறவர்கள் அனைவருமே தமிழ்மக்களின் வாழ்வை போர் என்னும் மாபெரும் இரத்த கடலுக்குள் தள்ளி அவர்களின் மரண ஒலத்தில் கட்சிவாழ்வு நடத்துபவர்களாகவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறுபான்மையினர் உரிமைகளை பயங்கரவாதம் எனக்கூறி ஒடுக்கும் சக்திகளுக்கு துணை போகிறது அனைத்துலகம் என்று அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையின் தலைவர் எஸ்.ஜெயநேசன் அடிகளார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 640 views
-
-
சுண்டிக்குளம் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் மீன்பிடிப்படகு ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 697 views
-
-
கிழக்கில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் துணை இராணுவக் குழு இயங்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 706 views
-
-
ஐஸ்கிரீம் வியாபாரிகள்போல் குண்டு தாக்குதலை நடத்த புலிகள் திட்டம் பிரிகேடியர் நாணயக்கார எச்சரிக்கை வீரகேசரி நாளேடு துவிச்சக்கரவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்பவர்கள் போன்று குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கும் வெடிபொருட்களை இடமாற்றம் செய்வதற்கும் விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களில் பெண் புலி உறுப்பினர்களே தலைமை தாங்குவதாகவும் புலிகள் இயக்கத்திற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவச் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில், ஒர…
-
- 4 replies
- 1.6k views
-
-
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 12 டிசம்பர் 2007 தமிழக காவல்துறையில் உளவுத்துறை என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் உதவியால் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த நபரும் தஞ்சாவூரில், அதுவும் போலீஸ்காரர் ஒருவரின் வீட்டிலேயே 8 மாதங்கள் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் இங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அவர்கள் பல வகையிலும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் எனக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
தனது அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் குழுநிலை விவாதத்தின் போது கூறியவை : இதுவரை கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களில் ஒருவரையாவது அரச தரப்பு கொன்றொழித்திருக்கின்றதா? அப்படி அரசுத் தரப்பினால கொல்லப்பட்ட ஒரு தமிழ்த் தலைவரின் பெயரை உங்களால் கூறமுடியமா? இவ்வாறு த.தே.கூடடமைப்பு எம்.பிக்ளைப் பாhத்து நாடாளுமன்றில சாவால் விடுத்தா.. ஈபிடிபி கட்சியின் செயலாளனர் நாய்கமும் அமைச்சருமான டக்ளசு. 'உங்களால் இக் கேள்விக்குப் பதில் தரமுடியாது. ஏனேன்றால் எல்லாத் தமிழ்த் தலைவர்களையும் புலித்தலைமையே கொன்றொழித்தது," தமிழ் பேசும மக்களின் அரசியல அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமாதானத்தின் குரலாகவும் ஒலிக்கும் ஈபிடிபியின்???? சார்பாகவும், இலங்கைத்தீவில் வாழுகின்ற அனை…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீனைக் காணவில்லை என்று அக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழன் 13-12-2007 12:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீ லங்காவில் அனைத்துலக தலையீடு அவசியம்: வலியுறுத்தல் (வெற்றித் திருமகள்) சிறீ லங்காவில் சாதாரண பொதுமக்கள் மீது பாரிய மனிதஉரிமை மீறல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Thu Dec 13 10:15:00 2007 முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பு முல்லைத்தீவுக் கடலில் கடந்த இரண்டு நாள்களாக கடும் கொந்தளிப்பு நிலை தொடர்கிறது. கடுமையான கடற்கொத்தளிப்பினால் நேற்று மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் வெளியிணைப்பு இயந்திரம் சேதமடைந் துள்ளது. படகில் சென்றவர்களைக் காப்பாற் றச் சென்றோர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைச் சேர்ந்த றஞ்சித் என்பவர் நேற்றுமுன் தினம் கடலில் போட்ட நண்டு வலையை எடுக்கச்சென்றபோது பெரிய அலை பட கைக் கவிழ்த்தது. (அ) http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாழன் 13-12-2007 04:29 மணி தமிழீழம் [மயூரன்] நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும்போது இறைமையும் பாதிக்கின்றது - இரா.சம்பந்தன் அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்கள் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று புதன்கிழமை சிறீலங்கா பாராளுமன்றில் மனித உரிமைகள் அமைச்சுக்கான வரவு - செலவு திட்ட விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப் படாதமையே சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் பாரியளவு தொடர்வதற்கு காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் க…
-
- 0 replies
- 794 views
-
-
`தமிழர், சிங்களவரிடையேயான பிரச்சினையாகவே இலங்கை விடயத்தை சர்வதேசம் பார்க்க வேண்டும்' [13 - December - 2007] * தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆற்றிய உரை தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறுமிடத்து எனது சிந்தனைக்கு சில விடயங்கள் வருகின்றன. ஒரு நாடு உலக நாடுகளால் மதிக்கப்படுவது என்பது வெறும் பொருளாதார அளவீடுகளாலோ, தொழில்நுட்பத்திறன்களாலோ, அல்ல. அந்த நாட்டின் நாகரிக வளர்ச்சியால், தேசிய மரபுகளால், கலாசாரத்தால் மட்டுமே ஒரு நிலையான கௌர…
-
- 0 replies
- 778 views
-