ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
இராணுவ இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.Army point at Thalgasmankada comes under LTTE attack Media Centre for National Security (MCNS) said, an army point at Thalgasmankada, South of Paanama has come under a terrorist' attack this evening. The sources said that the attack has started around 6 p.m. More information will follow...புதினம் இணையத்தளத்திலும் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது
-
- 14 replies
- 5.5k views
-
-
பயங்கரவாத்தை எதிர்ப்பதற்கான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. வெளிவிவகார அமைச்சர் ரோஹிதா தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பங்களதேஷ், பெல்ஜியம், சீனா, செக்கஸ்லோவோக்கியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இஸ்ரேல், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, வியட்னாம், அமெரிக்கா, உட்பட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித இதனை நேற்றுத் தெரிவித்தார். "பயங்கரவாதம், ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படட்ட அரசுகளுக்கு ஒரு சவால்" என்ற தலைப்பிலேயே இந்த சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ரோஹித்த ஊடகங…
-
- 2 replies
- 1.4k views
-
-
மனித உரிமை ஆணையாளரின் வருகையால் விளைந்த, மனித உரிமை மீறல்கள்! -சபேசன் - அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அவர்களின் இலங்கை விஜயம், மிக நெருக்கடியான சூழ்நிலைகளை உருவாக்கிப் பரபரப்புடன் நடந்து முடிந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்து, முறையிட்டு, தமது கவலைகளைத் தெரிவிக்க முயன்ற பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், லூயிஸ் ஆர்பர் அம்மையாரை முறையாகச் சந்திக்க முடியாதவாறு பல தடைகளைச் சிறிலங்கா அரசு உருவாக்கியது. கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் லூயிஸ் ஆர்பர் அம்மையார் மேற்கொண்ட விஜயங்களின்போது, பாரிய கெடுபிடி நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது. ஓர் இரா…
-
- 0 replies
- 960 views
-
-
மன்னாரில் பலவந்தமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்: நிமல்கா பெர்னாண்டோ குற்றச்சாட்டு மன்னாரில் பலவந்தமாக தமிழர்களை சிறிலங்கா இராணுவம் வெளியேற்றி, உள்ளக இடம்பெயர்ந்தோர்-களாக்கியது என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சரின் அழைப்பின் பேரில் அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவில் நாங்கள் இடம்பெற்றோம். இந்த நாட்டில் நிகழ்கின்ற மனித உரிமை மீறல்களானது மக்களினது நாளாந்த வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. சிறிலங்காவில் இதுவரை தடுத்து வைக்கப்பட்டோரின் பட்டியலை சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர் மகிந்த ச…
-
- 0 replies
- 936 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0e71943adc8015c
-
- 0 replies
- 1.6k views
-
-
எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார் வீரகேசரி இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாக பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவயிலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: தமிழீழத்தை விரைவில் பிரகடணப்படுத்த வேண்டிய தேவையில் புலிகள் இருக்கின்றனர். இதனடிப்படையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி, தமீழழம் பிரகடனம் தொடர்பான அறிவித்தல…
-
- 8 replies
- 2.2k views
-
-
புதன் 17-10-2007 19:01 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] போரே மகிந்தவிற்கு இலாபம் தரும் முதலீடாகிவிட்டது இதற்கான பிரதான காரணம் அவருக்கு உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் ஆதரவுத்தளம் வரவரக்குறைந்து வருகிறது. பதிலாக நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் உள்ளூரில் அவருக்கு எதிரான தரப்புகள் அதிகரித்தும் பலம் பெற்றும் வருகின்றன. இதற்கெல்லாம் பிரதான காரணம், அவரது அரசாங்கத்தின் அணுகுமுறையும் போக்குமே ஆகும். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏறியுள்ள விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வுக்குக்காரணம் அரசாங்கத்திடம் பொருளாதாரம் இல்லை. கிடைக்கின்ற சகல உதவிகளையும் அரசாங்கம் போருக்கு செலவு செய்கிறது. இலங்கை பொருளாதார வளர்ச்சியைப்…
-
- 0 replies
- 949 views
-
-
புலிகள் மற்றும் கருணா குழுவினர் கட்சியாக பதிவு செய்து உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடலாம் அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி நாளேடு வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்களை மீண்டும் கோருவதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்தன் பின்னர் விடுதலைப்புலிள் மற்றும் கருணா குழுவினர் கட்சிகளாக பதிவு செய்துகொண்டு தேர்தல்களில் போட்டியிடலாம் என்று அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபை தேர்தல் நடத்துவதற்கான வேட்பு மனுக்கள் ஏற்கவே கோரப்பட்டிருந்த நிலையில் புதிய கட்சிகளை பதிவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வடக்கில் உள்ளுராட்சி ச…
-
- 1 reply
- 1k views
-
-
புதன் 17-10-2007 21:15 மணி தமிழீழம் [தாயகன்] ஜால சரணாலயத்தில் மற்றொரு குண்டுவெடிப்பு - மூவர் காயமடைந்தனர் ஜால சரணாலயப் பகுதியில் சிறீலங்காப் படையினர் தேடுதல் நடத்திவரும் நிலையில் மற்றொரு குண்டு வெடித்து சரணாலய அலுவலர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்றைய குண்டுவெடிப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை என அரச தரப்பு கூறுகின்றது. ஜால சரணாலயப் பகுதியில் அமைந்திருந்த சிறீலங்காப் படையினரின் முகாமொன்று கடந்த திங்கட்கிழமை விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டதில் 6 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட படையினரின் உடலங்களை மீட்கச்சென்ற அணியினரின் வாகனம் நேற்று அம…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன் 17-10-2007 14:27 மணி தமிழீழம் [மகான்] படுவான்கரை மக்கள் அதிரடிப்படை முகாமில் கையெழுத்திடுமாறு தெரிவிப்பு சிறீலங்காப் படையினரால் ஆக்கிமிக்கப்பட்ட படுவான்கரைப் பகுதியில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் இராணுவ நெருக்கடியினால் மிகவும் பாதிப்புக்குள் உள்ளாகியுள்ளனர். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிரடிப் படைமுகாம் சென்று தமது காவல்துறையினரால் வழங்கப்படும் அடையாள அட்டையைக் காண்பித்து கையெழுத்து இட வேண்டும் என தெரிவித்துள்ளனர். படுவான்கரையில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களை அழைத்து பொதுக்கூட்டத்தை நடத்தி இவ்வறிவித்தலை படையினர் விடுத்துள்ளனர். இங்குள்ள ஆண்களின் அடையாள அடைகளைப் பறித்துச் செல்லும் படையினர் சிறீலங்கா…
-
- 0 replies
- 729 views
-
-
புதன் 17-10-2007 18:10 மணி தமிழீழம் [தாயகன்] திருகோணமலையில் படையினரும், விடுதலைப் புலிகளும் மோதல் திருகோணமலை, பாலம்பாட்டாறு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று நேரடி மோதல் இடம்பெற்றுள்ளது. காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலிலால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
அதிசய மனிதர் பிரபாகரன்(Pirabakaran phenomenon) என்கின்ற ஆக்கத்தின் சுருக்க மொழியாக்கம் இதுவாகும். ராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன. புலிகள் அல்லாதோர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் இந்தியாவின் விசாரனைக் குழுவும், இந்தியாவின் உளவுத்துறையும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தட்டிக்கழித்துவிட்டன அல்லது வேணும் என்று ஒதுக்கிவிட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவது. அதன் விளைவாகப் பொய்யான ஆதாரங்களை எல்லாம் அவர்கள் சமர்ப்பிக்கத் தொடங்கினார்கள்! தடயங்களும் ஆதாரங்களும் சாட்சிகளும் புலிகளுக்கு எதிராகத் திசைதிருப்பப்பட்டன. அண்மையில் மீனவர்கள் கடத்தப்பட்ட விடயத்தில்கூட பல இல்ல…
-
- 2 replies
- 3.1k views
-
-
Posted on : Wed Oct 17 11:45:00 2007 ஆயுதம் தரித்த குழுக்களின் நடமாட்டம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த வண்ணமுள்ளது கண்காணிப்புக்குழு அறிக்கையில் தெரிவிப்பு கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் தரித்த குழுக்களின் நடமாட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளதுடன் கருணா குழுவினரால் ஆள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பான முறைப் பாடுகளும் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடைத்துள்ளன. கண்காணிப்புக் குழுவின் ஆகப்பிந்திய வாராந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மட்டக்களப்புக்கு வடமேற்கில் 12 கிலேõ மீற்றர் தொலைவில் உள்ள விநா யகபுரத்தில் ஒக்ரோபர் 4ஆம் திகதி படைத்தரப்பினர் இரண்டு மனித சடலங்களைக் கண்டெடுத்தனர். கண்கள் கட்டப…
-
- 1 reply
- 873 views
-
-
தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச்சாசனம் போராட்டம் என்கிறார் அமைச்சர் சந்திரசேகரன் வீரகேசரி நாளேடு தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தினை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் கூறி ஒப்பந்தத்தினை மேற்கொண்டதன் மூலம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. மூன்று தொழிற்சங்கங்கள் இந்த அடிமைச் சாசனத்தை எழுதியுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்கள் 300 ரூபா அடிப்படை சம்பளம் கோரி ஒரு வருடத்துக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். வாழ்க்கை செலவு மலைபோல் உயர்ந்துள்ள நிலையில் இன்று 200 ரூபாவாக சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுவது வேடிக்கை. இதனை ந…
-
- 3 replies
- 1.1k views
-
-
அரச அதிபர் அவமதிப்பு Written by Seran - Oct 17, 2007 at 12:11 PM முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் ஓமந்தை ஸ்ரீலங்காப்படை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் அவமதிக்கப்பட்டுள்ளார் ஓமந்தை படை சோதனைச்சாவடியில் நின்ற படையினர் சுமார் ஒன்றரை மணிநேரங்களாக அவரைத்தடுத்துவைத்ததுடன் அவர் தனது சொந்தப்பாவனைக்காக எடுத்துவந்த பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். படைத்தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து கவலைதெரிவித்துள்ள அரச அதிபர் அவர்கள் தான் அரசஅதிபர் எனத்தெரிந்தும் படையினர் தன்னை வேண்டுமென்றே அவமதித்ததாகவும். படையினரின் இவ்வாறான நடவடிக்கையால் தம்மால் முல்லைமாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப்பணிகளையும் மக்களுக்கான சேவைகளையும் ஆற…
-
- 0 replies
- 1.7k views
-
-
தாயக விடுதலைக்காய் வித்தாகிய மூன்று போராளிகளின் விபரங்கள் அறிவிப்பு [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 17, 2007 - 01:12 AM - GMT ] மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய மூன்று போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். லெப். ஈழவன் என்று அழைக்கப்படும் வேலாயுதபிள்ளை சரவணபவ (யாழ். மாவட்டம்) லெப். புவியரசன் என்று அழைக்கப்படும் ஆனந் வினோஜன் (நிலையான முகவரி: மன்னார் மாவட்டம், 17 ஆம் வீதி, சாந்தபுரம், கிளிநொச்சி) 2 ஆம் லெப். நீரருவி என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகர் மகிந்தன் (பழையகாமம், முரசுமோட்டை)ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.லெப்.ஈழவன் என்ற ம…
-
- 0 replies
- 897 views
-
-
2 ஆம் லெப். முகிலவன் வித்துடல் தூய விதைகுழியில் விதைப்பு [ புதினம் ] - [ ஓக்ரோபர் 17, 2007 - 01:04 AM - GMT ] முகமாலைப் பகுதியில் 13.10.07 அன்று சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். முகிலவன் என்ற போராளியின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்தில் நடைபெற்ற இரணைப்பாலை வட்டப் பொறுப்பாளர் செம்பருதி தலைமையில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் பொதுச்சுடரினை வடபோர் முனைக்கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான வேந்தன் ஏற்றினார். ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையை பெற்றோர் சூட்டினர். வட போர்முனைக் கட்டளைப் பணியகத் தளபதி…
-
- 2 replies
- 1k views
-
-
Posted on : 2007-10-17 தொடரும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்தின் பதில்தான் என்ன? இலங்கையில் அரசுப் படைகளின் பின்புலத்தில் அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசுக்கு நேர்மையான ஈடுபாடு கிடையாது என்பது தொடர் பான அரசின் "பொட்டுக்கேடு' மீண்டும் ஒரு தடவை அம்பலமாகி யிருக்கின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்ட தரப்புகளே இது விடயத் தில் அரசின் உள்ளார்த்தங்களை அம்பலமாக்கும் விவகாரம் மீண் டும் அரங்கேறியிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் இலங்கையில் மனித உரிமை மீறல் கள் மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கின்றன. இது தொடர்பாகத் தேசிய ரீதியிலும்,…
-
- 0 replies
- 727 views
-
-
தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவில்லை: இந்திய ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை எவரும் ஆதரிக்கவில்லை என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். புதுடில்லி ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை அவர் கூறியுள்ளதாவது: லூய்ஸ் ஆர்பரின் இலங்கைப் பயணம் குறித்து நாங்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தோம். மனித உரிமைகள் தொடர்பாக அங்குள்ள நிலைமைகளை அவர் ஓரளவிற்கு சிறப்பாக ஆய்வு செய்துள்ளார். அனைத்துலகத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக் கால தாமதமாவதனை வைத்து மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறிலங்காவின் சட்டத்துறை…
-
- 0 replies
- 1.1k views
-
-
நோர்வேயின் விஷேட சமாதான தூதுவர் பௌயர் விரைவில் இந்தியா விஜயம் தடைப்பட்டுள்ள இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்த வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வேயின் விஷேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விஜயத்தின் போது பௌயர், இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளார். இச்சந்திப்புக்களின் போது தேக்கமடைந்துள்ள சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உள்ள சாத்தியமான வழிகள், அவை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகின்றது. இதேவேளை இலங…
-
- 0 replies
- 716 views
-
-
திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதி: "டெய்லி நியூஸ்" திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான "டெய்லி நியூஸ்" செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:விபரங்களுக்கு
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையிலுள்ள ஐ.நா தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்படுகிறது- விமல் வீரவன்ச வீரகேசரி இணையம் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: பலவீனமடைந்துள்ள புலிகள் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையில் இலங்கையிலுள்ள ஐ.நா. தூதகரம் ஈடுப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வெளியிட்டுள்ள கருத்து புலிகளுக்கு சார்பானதாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக …
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted on : Tue Oct 16 11:05:00 2007 தீர்வுத் திட்டம் டிசெம்பரில் முன்வைக்கப்படும் வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற் கான அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர் வரும் டிசெம்பரில் முன்வைக்க திட்டமிட் டிருக்கிறோம் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம புதுடில்லியில் நேற்றுச் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தக வலை வெளியிட்டார். தீவிரவாதத்தை அடக்குவது மட்டுமன்றி பேச்சுவார்தை மூலமாகத் தீர்வு காணும் வகையில் இந்தத் தீர்வுத் திட்ட அணுகு முறை இருக்கும். நாட்டில் அரசியல் பன் முகத் தன்மையும் ஜனநாயகமும் இருக்க வேண்டும். இவை கிளிநொச்சியிலும் முல் லைத்தீவிலும் இல்லை. நாங்கள் முன்வைக்கவுள்ள தீர்வுத் திட் டத்துக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்ற…
-
- 4 replies
- 1k views
-
-
குடாநாட்டில் பரவிவரும் புதுவித காய்ச்சல் வீரகேசரி நாளேடு யாழ் குடாநாட்டில் தற்பொழுது ஒரு வித காய்ச்சல் பரவி வருவதனால் மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் பீடித்து வரும் இக்காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிலர் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாடச
-
- 0 replies
- 1k views
-
-
செவ்வாய் 16-10-2007 16:24 மணி தமிழீழம் [தாயகன்] வன்னியில் வான் தாக்குதல் - மூன்று சிறுவர்கள் படுகாயம் சிறீலங்கா வான் படையின் குண்டுவீச்சு விமானங்கள் இன்றும் வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நேசன் குடியிருப்பில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 5 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், குண்டு வீச்சில் இரண்டு வீடுகள் தரைமட்டமாகி இருப்பதுடன், மேலும் மூன்று வீடுகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்தப் பிரதேச பொதுமக்கள் தெரிவித்தனர். இரண்டு கிஃபீர் விமானங்கள் நான்கு குண்டுகளை வீசி த…
-
- 2 replies
- 823 views
-