ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
மன்னார் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 770 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திற்கு சிறிலங்கா அரசின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமையால் பல பணிகள் முடங்கியுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 561 views
-
-
முல்லைத்தீவு விசுவமடு புன்னைநீராவி பிரதேசத்தில் லெப். கேணல் புலேந்திரன் நினைவான முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 709 views
-
-
கருணா வெளிநாட்டு வங்கியில் வைப்பிட்டுள்ளார் என்று கூறப்படும் 80 கோடி ரூபா, தமிழ் வர்ததகர்களைக் கடத்தி அவர்களிடம் கப்பமாக கறக்கப்பட்டது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் கூறினார். அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், இந்த யுத்தம் மூலம் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், என்பதை சர்வதேச நாடுகள் விளங்கிக கொண்டுள்ளன. ஒரு தேசிய இனத்தை இந்த அரசு கொன்றொழிப்பதானலேயே சர்வதேச பிரதிநிதிகள் இங்கு வந்து போகின்றனர். அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். இது வரை 75ஆயிரம் மக்கள் சிங்கள அரசுக்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றும் கொல்லப்படுகின்றனர். நீங்கள் பெரும்பான்மையினர் என்பதற்காக தொட…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னாரில் மாந்தை மேற்கு மடுப்பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பலத்த இடர்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 544 views
-
-
சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளினால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகள் இடம்பெயர்ந்து இணைப்பு பாடசாலைகளாக இயங்கி வருகின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
மன்னார் மாவட்டம் பாலம்பிட்டிப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக 46 குடும்பங்கள் தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 878 views
-
-
கிளிநொச்சி மற்றும் மல்லாவியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 675 views
-
-
யுத்தம் நடைபெறும் ஒரு நாட்டில் மனித உரிமை மீறல்கள் என்பது தவிர்க்க முடியாததுதான் என்று சிறிலங்கா அமைச்சர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 941 views
-
-
கடந்த வாரம் 24 பேரை குடாநாட்டில் காணவில்லை யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் 24 பேர் காணாமல்போயுள்ளதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் திகதி வடமராட்சி கரணவாய் தெற்குப் பதியைச்சேர்ந்த தியாகராஜா கணேஸ் என்பவரை காணவில்லையென்று மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை, உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக நேற்று 3 பேர் யாழ். “மனித உரிமை ஆணைக்குழு அலுவலத்தில் சரணடைந்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் 75 பேர் இவ்வாறு சரணடைந்துள்ளனர். -வீரகேசரி
-
- 0 replies
- 668 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சிறிலாங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் குடும்பங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் சந்திக்க உள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
வெளிநாட்டு பிணை முறி விற்பனை ஆரம்பிக்கிறது இலங்கை அரசு சர்வதேச ரீதியில் கடன் பத்திர சந்தை நிலைவரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் எத்தகைய நிலைமையில் இருக்கின்றார்கள் என்பதை சோதிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தனது முதலாவது வெளிநாட்டு பிணைமுறி விற்பனையை ஆரம்பிக்கவுள்ளது. பார்கிளேஸ் கப்பிற்றல், எச்.எஸ்.பி.சி. ஹோல்டிங்ஸ், ஜே.பி.மோர்கன் சேஸ் அன்கோ ஆகியவை ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் இந்த பிணைமுறிகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவிருப்பதாகவும் பின்னர் விற்பனையை இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும் மத்தியவங்கியின் பிரதி ஆளுநர் டபிள்யூ கே.விஜயவர்த்தன தெரிவித்திருக்கிறார். திரட்டப்படும் நிதியத்தின் இலக்குக் குறித்த…
-
- 0 replies
- 736 views
-
-
சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 192 ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ரவிராஜ் எம்.பி.யின் படுகொலை அது தொடர்பில் நடைபெறும் விசாரணைகள் குறித்து ஆராயப்படவுள்ளன. சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் அமர்வு திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. நான்கு தினங்கள் நடைபெறவுள்ள இவ்வமர்வில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழு ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவைச் சென்றடைந்தது. இக் குழுவில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தன, ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மற்றும் சந்திராணி பண்டார எம்.பி.ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். சர்வதேச பாராள…
-
- 0 replies
- 624 views
-
-
சிறிலங்கா அரசங்க தலைவர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் செப்ரம்பர் 26 இல் ஆற்றிய உரை, பொய் மற்றும் மோசடிகளின் இன்னுமொரு வெளிப்பாடு என்று www.wsws.org என்ற இணைய தளம் சாடியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 821 views
-
-
வடபோர் முனையில் கடந்த வாரம் நிகழ்ந்த மோதல்கள் பற்றிய செய்திகளை கொழும்பிலிருந்து வெளியாகும் "லக்பிம" வார ஏடு தொகுத்து வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
அழுத்தங்களைத் தவிருங்கள் - சிறீலங்கா அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கடிதம் மக்களின் துயர் துடைக்கும் மனிதாபிமான பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நாவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் விஜயத்தின் போது அவரது நிகழ்ச்சி நிரலுக்கு அழுத்தங்களைக் கொடுக்காது, அவரை காணாமல் போனோரின் உறவினர்கள் தத்தமது ஆதங்கங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்து, இன்னமும் வெளிச்சத்திற்கு வராத மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தப்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச. சந்திரநேரு இலங்கையின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்…
-
- 0 replies
- 595 views
-
-
புலிகளை யுத்தத்தில் தோற்கடிப்பதுடன் சர்வதேச ரீதியிலும் தோல்வியுறச் செய்ய வேண்டும் சபையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வீரகேசரி நாளேடு விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடிப்பதுடன் சர்வதேச ரீதியிலும் தோல்வியுறச் செய்ய வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு நாம் பலியாக நேரிடும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். கடந்த ஒரு மாத காலத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளினால் 30 படையினரும் 36 பொதுமக்களும் கொல்லப்பட்டதுடன் 356 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையினை சபையில் நேற்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கடந்த மாதம் இடம்பெற்ற பயங்கரவ…
-
- 1 reply
- 882 views
-
-
கப்பம் பெற முயன்ற நால்வர் கொட்டாஞ்சேனையில் கைது வீரகேசரி நாளேடு கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் வசிக்கும் கணனி பொறியியலாளர் ஒருவரிடம் 25 இலட்சம் ரூபாவை கப்பமாகப்பெற முயன்ற நால்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் என தம்மை அடையாளப்படுத்திய சந்தேகநபர்கள் மரண அச்சுறுத்தல் விடுத்து 25 இலட்சம் ரூபாவை வழங்குமாறு குறித்த பொறியியலாளரிடம் கோரியுள்ளனர். புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கடிதம் ஒன்றையும் சந்தேகநபர்கள் பொறியியலாளரிடம் காட்டியுள்ளனர். கப்பமாகக் கோரப்பட்ட பணத்தை கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள வங்கியொன்றில் அருகில் வைத்து தருவதாக சந்தேகநபர்களிடம் கூறியுள்ள பொறியியலாளர், இத…
-
- 0 replies
- 790 views
-
-
கொட்டேகொட புத்த கோவிலிலிருந்து புனித யானைத் தந்தங்களை ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறீ மனகே திருட முயற்சித்ததாக அக்கோவிலின் தலைமை பிக்கு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 761 views
-
-
சிறிலங்காவின் வானூர்தித் தாக்குதல்களால் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிறார்களின் உளவுறன் எத்தகைய பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் அனைத்துலக உளநல நாள் இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 768 views
-
-
மன்னாரின் மடு மாந்தை மேற்குப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்த 267 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 531 views
-
-
யாழ். வடமராட்சியில் இருவரைக் காணவில்லை என்று யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 593 views
-
-
வட்டக்கச்சிப் பிரதேசத்தில் மேஜர் ஜொனி நினைவுத்தூபியும் கப்டன் திலகன் நினைவுப் பூங்காவும் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வட்டக்கச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 896 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் அரசியல் கருத்தூட்டல் நிகழ்வு நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1k views
-