Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய நோர்வே தூதுவர் ஹட்றீம் இலங்கை வருகை ஜனாதிபதி நாடு திரும்பியதும் நியமன பத்திரம் கையளிப்பு இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவராக ரொறி ஹட்றீம் விரைவில் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். பதவிக்காலம் முடிவடைந்து நோர்வே திரும்பிய முன்னாள் தூதுவர் ஹான்ஸ் பிராஸ்கரின் இடத்திற்கே ரொறி ஹட்றீம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கொழும்பை வந்தடைந்துள்ள ஹட்றீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க்கிலிருந்து நாடு திரும்பியதும், தனது நியமனப்பத்திரத்தை ஜனாதிபதியிடம் சமர்பித்து, ஜனாதிபதி முன்னிலையில் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளதாக கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் அரசியல் பிரிவு தலைவராகவும் ஆராச்சியாளராகவும் உதவிச் செயலாளர், மற்…

  2. சர்வதேசம் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது: ஐ.நாவில் மகிந்த குற்றச்சாட்டு சர்வதேச நாடுகள் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். அந்த மாநாட்டில் உரையாற்றிய மகிந்த ராஜபக்சவின் முக்கிய பகுதிகள்: http://www.eelampage.com/?cn=33567

    • 10 replies
    • 2.3k views
  3. சுன்னாகம் கிளேமோர் தாக்குதலில் இரு பொதுமக்கள் பலி (மேலதிக இணைப்பு) வீரகேசரி இணையம் யாழ் சுன்னாகம் சந்தையில் இன்று காலை 9.50 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரு பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவ

    • 8 replies
    • 2.7k views
  4. சுண்டைக் காய் நாடுகள் அய்யன்னாவில் உறுப்புரிமை வகிக்கின்றன! "குட்டி நாடுகள், சரியாகச் சொன்னால் சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் அய்யன்னா அவையில் இருக்கின்றன. தற்போது அய்யன்னாவில் 192 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. தமிழீழம் 195 ஆவது நாடாக அய்யன்னாவில் விரைவில் இடம் பிடிக்கும். யாழ்ப்பாணத்திலும் குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் ஒரு பலமுள்ள நாடாக விளங்குகிறது. பத்தாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட தமிழீழம் விடுதலை பெற்ற பின்னர் அது சிங்கப்பூரை விடப் பலமுள்ள நாடாக விளங்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை " இவ்வாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தனக்கு அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய தமிழேந்தல் மா.க. ஈழவேந்தன் பலத்த கைதட்டலுக்கு இடைய…

  5. கிழக்கின் உதயம் அபிவிருத்திக்கு ஜ.நா நிதியுதவி வழங்கும் - பான் கீ மூன் சிறீலங்காவின் கிழக்கின் உதயம் எனும் அபிவிருத்திக்கு ஜக்கிய நாடுகள் சபை நிதியுதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூனுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பான் கி மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிதி ஜக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புக்கள் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -பதிவு

  6. போர் நிறுத்த உடன்படிக்கை எமது நாட்டுக்குத் தேவையற்றது - ரோகித போகல்லாகம போர் நிறுத்த உடன்படிக்கை வெறும் ஆவணத்தில் மட்டும் தான் உள்ளது என சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். ஜக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடருக்கு சென்றிருந்த ரோகித போகல்லாகம அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் உரையின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கை வெறுமனவே ஆவணத்தில் மட்டும் தான் உள்ளது. இது நாட்டுக்கு அவசியமற்றது. நீடித்து நிற்கக்கூடிய சமாதானமே எமக்குத் தேவையானது. 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் 780 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி…

  7. தளபதி சூசை அவர்களின் பேச்சு( குரலில்) http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23385 சிறகு விரித்த புலிகள்"- பாடல் குறுவட்டு வெளியீடு: கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை பங்கேற்பு [புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007, 21:44 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறகு விரித்த புலிகள் பாடல் குறுவட்டினை தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை இன்று வெளியிட்டார். புதுக்குடியிருப்பில் மாவீரர் மண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை தொடங்கிய நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல் பொறுப்பாளர் இளம்பருதி தலைமை தாங்கினர். பொதுச்சுடரை லெப்டினன்ட் கேணல் கிட்ட அவர்களின் துணைவியார் ஏற்ற ஈகச்சுடர் திலீபனின் திருவுருவப்படத்துக்கு லெப்.கேணல் குஞ…

  8. 'அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்". இவ்வாறு ஐ.வி.மு தலைவன் ஆனந்த சங்கரி கேட்டுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :- அரசு, கிழக்கு மாகாணத்தில் வெற்றி கண்ட பின் வடக்கு மாகாணத்திலும் அதே போன்று வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதுஅனைவருக்கும் தெரிந்த விடயம்.ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெற்றியைப் போல் வடக்கு மாகாணத்தில் அவ்வளவு இலகுவாக அமைதியைக் கொண்டுவர முடியாது. அரசு இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், யுத்தத்ததை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்.நான் விடுதலைப்புலிகளுக்கு பணிவாக விடக்கூடிய வேண்டுகோள் இதுதான். இப்போது நாங்கள் இழந்த இழப்புக்கள் போதும்,இச்சந்தர்ப்பத்தில் பிடிவாதத்தைக் கைவிட்டு ஏன…

  9. கடத்தப்பட்டோர் குடும்பங்களை யாழ். கொழும்பில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் சந்திப்பார் மனோ கணேசன் எம்.பி. அறிவிப்பு மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் தூதுவர் லுயிஸ்ஆர்பர் அம்மையார் அடுத்த மாதம் இலங்கை வருகின்றார்.இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமற் போனோரின் குடும்பத்தவர்களை அவர் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் சந்திப்பார். அதேசமயம் தமது உயிருக்கு அஞ்சி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் தஞ்சமடைந்து, தற்சமயம் பாதுகாப்புக்காக யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருப்போரையும் அவர் நேரில் சந்தித்துப் பேசுவார். மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளரும், ஆட்கடத்தல்கள், காணாமற் போகச் செய…

  10. கிழக்கில் குறுங்களச் செயற்பாடுகளுக்கான எதிர்கால வாய்ப்புக்கள் -சேனாதி- அம்பாறை மாவட்டத்தில் செப்ரெம்பரின் 12ம், 13ம் 14ம் திகதிகளில் வக்குமுட்டியா, கஞ்சிகுடிச்சாறு ஆகிய இடங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு ஊடகங்களால் கவனமாகத் தவிர்க்கப்பட்ட அந்தத் தாக்குதல்கள் மூன்றிலும் குறைந்தது 10 அதிரடிப் படையினர் கொல்லப்பட்டார்கள். அதேபோன்று இன்னொரு மடங்கினர் காயமடைந்திருந்தார்கள். பின்னர் 17ம் திகதியன்றும் வக்குமுட்டியாவில் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதிலும் இரு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படைத்துறையின் சார்பில் இந்தச் செ…

    • 0 replies
    • 1.2k views
  11. சுயத்தின் எல்லை கடந்த திலீபன் சமூக உலகில் சங்கமித்துக்கொள்ளும் தனி மனிதனிடம் மனிதத்துவம் எப்போது நிறைவு பெறுகிறது? மனித சிந்தனையை மிக ஆழமாகத் தூண்டி விடும் வினா இது. தத்துவ வித்தகரும், அரசியற் சிந்தனையாளரும், சிறந்த மார்க்சியவாதியுமான ஜோன் போல் சாத்தரின் ஆழமான சிந்தனையூடாக அழகு தமிழிலே அதை நமக்கு விளக்குகின்றார் "தேசத்தின் குரல்' மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம். மனிதன் தனக்காக வாழாமல், தன் நலனுக்காக வாழாமல், தன் குடும்பம் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழாமல், தனது சுயத்திற்கு அப்பால், மற்றவர்களுக்காக, மற்றவர்களின் நலனுக்காக, மானுடத்தின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் மாண்பே மகத்துவம். சுயத்தின் எல்லை கடந்து, தனி மனித நலனுக்கு அப்பால் மற்றவர்களுக்கா…

  12. நாசீசம் இறந்துவிடவில்லை. சிறிலங்காவில் அது தத்துவ ரீதியாக உயிர் வாழ்ந்து வருகிறது என்று அமெரிக்காவின் "தி என்குயரர்" பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  13. தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், தியாகதீபம் லெப். கேணல் திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் "நல தீபம்" மருத்துவ காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு விழாவும் நடைபெற்றன. மேலும் வாசிக்க

  14. மன்னாரில் தமிழீழ புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்றும் மேற்கொண்ட கடும் எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர். கிபிர் வானூர்திகளும் இன்று தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. மேலும் வாசிக்க

  15. அனைத்துலகத்தின் முன் வலிய அம்பலப்படும் சிறிலங்கா சுவிஸ் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 6 ஆவது கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஐ.நா. உறுப்பு நாடுகளால் பாரிய அழுத்தங்களுக்கு சிறிலங்கா உள்ளாக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உள்ள சிறிலங்காவின் பிரதிநிதி, தனியான சந்திப்புக்களையும் அரங்கக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ஐ.நா. உறுப்பு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அவர் தனியே சந்தித்து வருகிறார். இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பல்வேறு தரப்பினரது அழுத்தங்களினால் இப்போது ஏதேனும் ஒரு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையை இலங்கையில் ஏற்படுத்துவது குற…

  16. இவ்வருட இறுதிக்குள் தீர்வு: இந்தியாவிடம் மகிந்த உறுதி இனப்பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவிடம் உறுதியளித்துள்ளார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஆராயந்து வருவதாகவும், இக்குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று மகிந்த கூறியிருக்கின்றார். நியூயோர்க்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் சந்தித்தபோது, இவ்வாறான உறுதிமொழியை வழங்கியிருப்பதாக, சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித போகொல்லகம கொழும்பின் பத்திரிகை ஒன்றிற்கு இன்று தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில…

  17. கொழும்பு பல்கலைக்கழக மாணவர் மத்தியில் மோதல்; விஞ்ஞானபீடம் மூடப்பட்டது வீரகேசரி நாளேடு கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடமும் கணினி தொழில்நுட்பப் பிரிவும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதலையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியினையடுத்து இரு மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே விஞ்ஞான பீடமும் கணினி தொழில் நுட்பப் பிரிவும் மூடப்பட்டுள்ளன. மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  18. லெப். கேணல் சுபனின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்னார் கள்ளியடி பாடசாலை அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க

  19. மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமைக்கு ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜயரத்ன, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க

  20. புதன் 26-09-2007 00:46 மணி தமிழீழம் [மயூரன்] அம்பாறையில் எறிகணை வீச்சு பரிமாற்றம் சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் செவ்வாய்கிழமை மதியம் 2.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு பகுதி முகாமிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிநோக்கி எறிகணைவீச்சு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து விடுதலைப்புலிகளும் பதில் எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதலானது மதியம் 3 மணிவரை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகள் தரப்பில் எதுவித இழப்புகளும் ஏற்படவில்லை எனத்தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 3 replies
    • 1.2k views
  21. மக்கள் மீது ஏவப்படும் எழுத்து வன்முறை -சி.இதயச்சந்திரன்- பற்றைக்குள் பாம்பு இருக்கிற நேரம் இல்லையோ, தொடர்ந்து தடியால் பற்றையை அடித்தவண்ணம் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். வெற்றுப் பற்றைக்கு தடியால் அடிக்கும் திருப்பணியை ஊடகவியலாளர் கூட்டமொன்று இந்தியாவிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஏற்றுக்கொண்டுள்ளது. பேரினவாதத்தால் அழிக்க இயலாத விடுதலைப் புலிகள் தமக்குள் முட்டி மோதியாவது அழிந்து போக வேண்டுமென சாபமிடுவதே சிலரின் எழுத்தாகி விட்டது. தமக்குப் பொருத்தமான வாரிசு அரசியலை புலிகள் மீது பொருந்திப் பார்ப்பது அவர்களின் எண்ணப்பாட்டிற்கு இசைவானதுதான். இலங்கையில் நடக்கும் குடும்ப அரசியல் இதற்கு ஒரு நல்ல சான்று பகர்கிறது. சேறு பூசும் ஊடகச் சமரின் பிதாம…

  22. களுத்துறை சிறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுரங்கம் அமைத்து தப்பிக்க முயன்றனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

  23. புலம் பெயர் தமிழர்களின் பலமும், பலவீனமும் “தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரத்திற்கான தமது இலட்சியத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளார்கள். சிங்கள அரசுகள் தம்முடைய சிங்கள பௌத்தப் பேரினவாதக் கொள்கையிலும், செயல்களிலும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளார்கள். மேற்குலகமும் உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டு, உள்ளுரத் தெளிவாகத்தான் உள்ளது. ஆனால், புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் எமது நாட்டின் விடுதலைக்கான இலட்சியத்தில் ஒட்டுமொத்தமாகத் தெளிவாகவும், விழிப்பாகவும், சஞ்சலம் எதுவும் இல்லாமலும் இருக்கிறோமா என்ற மிக முக்கியமான கேள்விக்கு நாம் இதயசுத்தியுடன் பதில் அளிக்க வேண்டிய நேரம் இது! இந்தச் சுய விமர்சனத்தின் ஊடாக, எமது குறைகளைக் களைந்து, தமிழீழத் தேசியத் தலைமையின் கர…

  24. புலிகளை பாதுகாப்பதாக அமையும் நோர்வேயின் புதிய சட்டமூலம் அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் நீதி அமைச்சினால் பயங்கரவாத அமைப்புகளையும் செயற்பாடுகளையும் தடை செய்வதற்காகத் தயாரித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (Anti-Terrow Laws) சம்பந்தமாக ஷ்ரீலங்கா அரசும் ஐக்கிய அமெரிக்க அரசும் அவற்றின் எதிர்ப்பை நோர்வே அரசுக்குத் தெரிவித்துள்ளன. இதற்குக் காரணம் நோர்வே நீதி அமைச்சின் மேற்படி சட்டமூலத்தில் கூறப்பட்டிருக்கும் சட்டவிதிகளும் சட்ட நடைமுறைகளும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் அங்கத்தவராக இருந்து செயற்படுவது நோர்வேயில் சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் அவ்வாறே பயங்கரவாத நடவடிக்கையில் குறித்த பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஈடுபட்ட…

  25. எடுத்துச் செல்லுங்கள் எங்கள் உபதேசமிது - க.வே.பாலகுமாரன் வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றியும் பல வேளைகளில் மீட்டல்களாக அமைவதை வாசகர்கள் அவதானித்திருப்பர். எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். இவ்வாசகத்தைக்கூட இப் பத்தியில் மீண்டும் எழுதவேண்டியுள்ளது. "நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊர்க்கின் உணர்க்கு இறுதியாகிவிடும்" இக்குறளைக்கூட சந்திரிக்கா + ரத்வத்தைக் குழுமம் ஆட்டம்போட்ட பொழுது 1998களில் தலைப்பாக இட்டோம். இப்போது அதே வார்த்தைக்கு மீளவும் உயிர் கொடுத்து அவரையும் இணைத்து "அவர் ஏறி விழுந்த அதே மரத்தின் நுனிக்கொம்பர்" ஏறும் இராசபக்ச சோதரர் பற்றி எழுதவும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.