ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
Posted on : 2007-07-21 அம்பலமாகிறது அணுகுமுறை தொப்பிகலவைக் கைப்பற்றி, கிழக்கை முழுதாக மீட்டுவிட்டோம் என்ற வீரச் செருக்கோடு நேற்று முன் தினம் நாட்டு மக்களின் முன் மார்தட்டிப் பேசினார் இலங் கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினை விடயத் தில் தமது அரசு என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள் ளது என்பதைத் துலாம்பரமாக அவர் வெளிப்படுத்தி யிருக்கின்றார். அவரது வார்த்தைகளுக்கு இடையில் வாசகங் களுக்கு மத்தியில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அவரது கருத்தியல் நிலைப்பாட் டையும் சிந்தனைப் போக்கையும் துல்லியமாக உணர்ந்து அறிந்து கொள்ள முடியும். இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண…
-
- 2 replies
- 2.3k views
-
-
சர்வதேசம் இலங்கையை மறந்துவிடும் அபாயம்' [21 - July - 2007] ஏ.ரஜீவன், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான பொது இணக்கப்பாட்டை எட்டாவிட்டால் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்தால் நாடு மறக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளதாக தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். கொழும்பில் சுதந்திரசதுக்கத்தில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் மோதல் போக்கு தென்பட்டதாகவும் நாட்டின் தலைவர் ஒருவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனங்கள், தொழிற்துறையின் சங்கம், கொழும்பு ஜெய் ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத…
-
- 0 replies
- 1.7k views
-
-
மினிமுகாம் மீது தாக்குதல் பத்துப்படையினர் பலி. மன்னார் நீலச்சேனைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00மணியளவில் சிறிலங்காப் படையினரின் மினிமுகாம் ஒன்றை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். இத் தாக்குதலில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நான்குக்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் முழுவிபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை - சங்கதி
-
- 5 replies
- 3.3k views
-
-
"கிழக்கின் உதயம்" தமிழ்மக்களின் துன்பத்தில் இனவெறி கொண்டாட்டம்: த.தே.கூ. அரியநேத்திரன் கண்டனம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மக்களை இடம்பெயர்த்தி விட்டு தமிழ் மக்களின் துன்பத்தில் இனவெறி கொண்டாட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் மீளக் குடியமர்த்திவிட்டதாக கூறி "கிழக்கின் உதயம்" நிகழ்வைக் கொண்டாடிவிடுகின்ற செய்தியானது அப்பிரதேச மக்களின் மனதைப் பாதிக்கின்ற செயலாக அமைகின்றது. உண்மையில் மட்டக்களப்பு படுவ…
-
- 0 replies
- 993 views
-
-
வன்னியில் போர் மேகம் தயாராகிறது - ரொய்ட்டர் வீரகேசரி இணையத்தளம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இளைஞர்கள் பலவந்தமாக படைகளில் இணைக்கப்படுவதால் இளைஞர்கள் ஒளிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களிடம் அப்பிரதேசவாசிகள் பலர் உரையாடியுள்ளனர் . அமெரிக்கா , பிரித்தானியா , ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்யபட்ட விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு குடும்பத்தில் ஒருவரை வழங்க வேண்டுமென புலிகள் வலியுறுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார். உங்கள் குடும்பத்தில் விடுதலைப்புலி போராளிகள் யாரும் இல்லை எனவே நீ கட்டாயமாக அமைப்பில் இணை…
-
- 4 replies
- 2.9k views
-
-
மங்களவுக்கு "ஆசீர்வாதம்": சந்திரிகா [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 20:43 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மக்கள் பிரிவை உருவாக்கி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் மங்கள சமரவீரவுக்கு சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமரதுங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில் உள்ள சந்திரிகா, மங்களவுக்கு அனுப்பிய கடிததத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேசப்பற்றுள்ளவர்கள் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வைக்க முடியும் என்பது எனது நீண்டகால கருத்தாகும். என்னுடைய ஆட்சிக்காலத்தில் சிறுபான்மைக் கட்சிகளினதும் ஆதரவைப்பெற்று பெருமளவு வெற்றி கண்டிருந்தேன். அப்போது கூட ஐக்கிய தேசியக் கட்சியை …
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம்; மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு சிபார்சு யாழ்.பல்கலைக் கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நேற்றுக் கூடி ஆராய்ந்தது. பல்கலைக்கழக பேரவை சிபார்சு செய்த மூவரின் பெயர்களை அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், வரிசைக் கிரமப்படி ஜனாதிபதிக்கு அனுப்புவது என மானிய ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. பதில் துணைவேந்தர் பேராசிரியர் இ.குமாரவடிவேல், பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் க.கந்தசாமி, சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசி ரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு நேற்று மானிய ஆணைக்குழுவால் அனுப்பப்பட்டுள் ளன. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி துணைவேந்தராக விரைவில் நியமனம் செய்வா…
-
- 1 reply
- 1.7k views
-
-
மூன்று மொழிகளில் புதிய பத்திரிகைகள் வெளியிடப்போவதாக ஐ.தே.க அறிவிப்பு. சிறீலங்காவில் ஊடகத்துறை, அரசினால் அடக்கப்பட்டுவரும் நிலையில், மூன்று மொழிகளில் புதிய பத்திரிகைகள் வெளியிடப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிங்கள மொழிப் பத்திரிகை "குஞ்சநாத" என்ற பெயரிலும், தமிழ்ப் பத்திரிகை "நம் தேஸம்" என்ற பெயரிலும், ஆங்கிலப் பத்திரிகை "த ஜேர்னல்" என்ற பெயரிலும் வெளிவர இருப்பதாகக் கூறினார். பத்திரிகை ஆரம்பிப்பதற்கான பதிவுகளை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாவட்ட நீதியாளர் அனுரசிறீ ராஜசங்க முன்னிலையில் நேற்று மேற்கொண்டிருந்தார். -Pathivu-
-
- 0 replies
- 976 views
-
-
கொழும்பில் சிங்களவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மூவர் கொண்ட வெள்ளை சிற்றூந்துக் குழுவினரால் சிங்கள இனத்தவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஜோர்ஜ் ஆர். டி. சில்வா வீதியைச் சேர்ந்த றங்கா இந்திக பெரேரா என்பவரே நேற்று மாலை 4.50 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக றங்கா இந்திக பெரேராவின் மனைவி கிறிஸ்ரீனா பெரேரா கொட்டாஞ்சேனை காவல்துறை நிலையத்தில் நேற்று மாலை முறையிட்டுள்ளார். -Pathivu-
-
- 1 reply
- 1.1k views
-
-
"18 இராணுவத்தினர் பலியாகி 78 பேர் படுகாயமடைந்த மன்னார் சமரில் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன?: கொழும்பு ஆங்கில ஊடகம் [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 21:41 ஈழம்] [சி.கனகரத்தினம்] மன்னாரில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன? என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிலையை கைப்பற்றியதைத் தொடர்ந்து வடபகுதியில் சிறிலங்கா இராணுவ முன்னரங்க நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்துவார்கள் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. இந்தத் தகவல் இராணுவத்தினரை சென்றடையும் போது முன்னரங்க நிலைகளில் பாரிய எண்ணிக்கையிலான தமிழீழ விடு…
-
- 3 replies
- 2k views
-
-
தேர்தலில் வெற்றி பெற்றால் ரணில் பிரதமர்;மங்கள உதவிப்பிரதமர் இனப்பிரச்சினைக்கு 9 மாத காலத்திற்குள் தீர்வு காண இணக்கப்பாடு ஐ.தே.க. - சு.க. (மக்கள் பிரிவு) உடன்படிக்கை கைச்சாத்து -டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்- இன நெருக்கடிக்கு பிளவு படுத்தப்படாத நாட்டிற்குள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை 9 மாத காலத்திற்குள் முன்வைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் உடன்பாடு கண்டுள்ளன. பாராளுமன்ற கட்டிட தொகுதியில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சு.க. மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீரவும் நேற்று வியாழக்கிழமை விரிவான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர். இலங்கை வாழ் …
-
- 2 replies
- 1.9k views
-
-
பணிக்காலம் முடிந்தும் நீடிப்பா? ஓய்வா? என தவிக்கும் 7 மேஜர் ஜெனரல்கள் [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 21:20 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் 7 மேஜர் ஜெனரல்கள் தங்களது மேலதிக பணிக்காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து உயர்நிலைப் பொறுப்புகளிலே நீடித்து வருகின்றனர். மேஜர் ஜெனரல்களான என். ரணசிங்க- இராணுவப் பயிற்சிக் கல்லூரி கட்டளையதிகாரி உபுல் பெரேரா- மாஸ்டர் ஜெனரல் நிமல் ஜயசூர்ய- வெலிஓயா பிரதேச கட்டளைத் தளபதி சனத் கருணாரட்ண- பனாகொட 2 ஆம் பிரதேச கட்டளையதிகாரி அசோக தொரதெனிய- இராணுவ மாஸ்ரர் ஜெனரல் எல்.பி. அலுவிகார- அட்ஜண்ட் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய- கிழக்கு கட்டளைத் தளபதி ஆகியோர் கடந்த ஏப்ரல் 31 ஆம் நாள்…
-
- 1 reply
- 947 views
-
-
சனி 21-07-2007 01:13 மணி தமிழீழம் [தாயகன்] தமிழீழத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு உதவுவதாக ஜப்பான் அறிவிப்பு தமிழீழப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 32 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக, ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த நிதி வழங்கப்பட இருக்கின்றது. டென்மார்க்கின் டெனிஸ், த ஹலோ ட்றஸ்ட், மக், நோர்வேயின் என்.பி.ஏ, சுவிஸின் எப்.எஸ்.டி போன்ற தொண்டர் அமைப்புக்களே ஜப்பானின் இந்த நிதியுதவியினைப் பெறவுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் கொழும்பிற்கான ஜப்பான் தூதுவர் கியோசி அறாகியும், சிறீலங்கா அரச அ…
-
- 0 replies
- 829 views
-
-
வெள்ளி 20-07-2007 14:55 மணி தமிழீழம் [சிறீதரன்] புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைத்து பேச்சுக்கு இழுக்கும் மேற்குலகின் திட்டம் மிகவும் கடினமானது - புலனாய்வு இணைத்தளம் மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்களை பணிய வைத்து மீண்டும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் அமைதி பேச்சுவார்தைகளில் ஈடுபடுத்தலாம் என்று கருதுவதாகவும் புலனாய்வு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் பிரான்ஸ், பிரித்தானிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இதன் வெளிப்பாடே என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
குடும்பிமலைக் களிம்பு -சேனாதி- ஒப்பீட்டளவில் விடுதலைப் புலிகளின் செறிவான கட்டமைப்புக்கள் இல்லாத கிழக்கிலே தன் படைகளைப் பரவலாக விரித்து வைத்திருக்கிறது சிறிலங்கா. அதைப் பாரிய படையச் சாதனையாக் காட்டும் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் அதே நேரம், வடக்கையும் கைப்பற்றுவோம் என்று தன் நப்பாசையை வெளியிட்டிருக்கிறார் மகிந்தர். அரச படையினரினதும் விடுதலைப் புலிகளினதும் கொள்கை மற்றும் மூலோபாயங்கள் சார்ந்து அடிக்கடி கைமாறும் இடங்கள் கிழக்கில் பல உள்ளன. அவ்வாறான சம்பவம் ஒன்று இம்முறை மட்டும் ஊதிப்; பெருப்பிக்கப்படுவதன் பின்னணியும் அதைத் தொடர்ந்து கொழும்பு செய்யவிருக்கின்ற நகர்வுகளும் ஆய்வுக்குரியவை. சமர்க்கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது பெரும்பாலான …
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு விரிவடையும் யுத்தம் ---அமந்தபெரேரா- நாட்டின் கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டதை அரசாங்கம் கொண்டாடும் இவ்வேளையில் தமிழ்ப் புலிகளின் வடபிரதேச கோட்டையான யாழ்ப்பாணத்திலும் பாரிய அளவிலான யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. அரசாங்க துருப்புகள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான தொப்பிகலவை கைப்பற்றிவிட்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் அறிவித்து 5 நாட்களின் பின்னர் வடபிரதேச கட்டுப்பாட்டு எல்லையில் இடம்பெற்ற மோதல்களில் அரச படைகள், புலிகள் ஆகிய இரு தரப்பிலுமாக 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். வரப்போவதை புதிய மோதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. 2002 ஆம் ஆண்டு நோர்வே மத்தியஸ்தத்தில் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை ரத்…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஆயுதக் கொள்வனவுக்கு ஆண்டுக்கு 200௩00 மில்லியன் டொலர் செலவிடும் புலிகள்: "ஜேன்ஸ்" அறிக்கை [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 19:31 ஈழம்] [ப.தயாளினி] ஆயுதக் கொள்வனவுக்காக ஆண்டுக்கு 200 முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் செலவிடுவதாக "ஜேன்ஸ்" புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்தில் அதிநவீன ஆயுதங்களுடன் அனைத்துலக நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு வலைப்பின்னலுடன் கூடிய போராட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளது. அதன் நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு கட்டமைப்பு உலகம் முழுமைக்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டதாக உள்ளது. ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் டொலர் வரை ஆயுதக் கொள்வ…
-
- 7 replies
- 2.7k views
-
-
சிங்கக்கொடிக்கு துரோகம் இழைக்கவேண்டாம் ஜனாதிபதி மஹிந்தவிடம் ரணில் வேண்டுகோள் வீரகேசரி நாளேடு நாட்டின் தேசிய சிங்கக்கொடிக்கு துரோகமிழைக்கவேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மஹிந்த புலி உடன்படிக்கை தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத்துக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். யுத்தத்தை விற்று பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் மறைந்திருக்கவேண்டாம் என்றும் ஜனாதிபதியை கோருகின்றேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க திராணியற்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப இன்று முதல் திடசங்கற்பம் பூணுவோம். ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தை வீட்டுக்கு அ…
-
- 4 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தின் யுத்தத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுப்பு. சிறீலங்கா அரசாங்கத்தின் யுதத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுத்துள்ளது. இன்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வினை மேற்குலக நாடுகளின் முக்கிய தூதுவர்கள் எவரும் கலந்து கொள்ளாதமை இதனை தெளிவு படுத்தியுள்தாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா நோர்வே போன்ற மேற்குலக நாடுகளின் முக்கிய தூதவர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. தூதரகத்தின் சார்பில் பாதுகாப்பு அதிகாரிக…
-
- 4 replies
- 1.3k views
-
-
பதுங்கு குழிகள் அமைப்பதற்கு சிங்கள மக்களுக்கு அரசு நிதி உதவி வெலிஓயாவின் எல்லைக் கிராம மக்கள் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளை அமைப்பதற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது. வெலி ஓயா பாதுகாப்புத் திட்டத்தில் எத்தவெற்றுணவெல எல்லைக் கிராம மக்கள் தமது வீடுகளுக்கு அருகே பதுங்கு குழிகளை அமைப்பதற்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைப்பு நிதி உதவியை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுங்கு குழிக்கு அடித்தளம் இட 10 ஆயிரம் ரூபாவும் அதனைக் கட்டி முடிக்க 75 ஆயிரம் ரூபாவரையும் நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் எல்லைக் கிராமங்களை நோக்கி மோட்டார் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதனை அடுத்தே எல்லைக் கிராம மக்கள் பதுங்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்னும் அமுலில் உள்ளதா? இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தனக்குறிய பொறுப்பை நிறைவேற்ற இந்தியா தவறியதன் விளைவாகவே இப்போது கிழக்கு தனிமாகானமாகப்பிரிக்கப்பட்ட
-
- 0 replies
- 1.5k views
-
-
மிக் கொள்வனவில் அரசுக்கு பாரிய நஷ்டம் : லக்ஷ்மன் கிரியெல்ல மிக் 27 ரக விமான கொள்வனவில் 10.8 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். உணவுகள் பொதியிடல் தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்: மிக் 27 ரக விமான கொள்வனவில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. திட்டமிடப்படாத ஆயுதக்கொள்வனவினால் பல நஷ்டம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவலை லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஊழல் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து அறிவதற்குக்கூட விசாரணைகள் எவையும் இடம் பெறவில்லை. இந்த ஊழல் தொடர்பாக பலர் எடுத்துக…
-
- 0 replies
- 1.2k views
-
-
விமான ராடர் செயலிழந்துள்ளதால் பாதுகாப்பு தரப்பில் அச்சம். இலங்கையின் பிரதான விமானப் போக்குவரத்து ராடர் செயலிழந்துள்ளதனால் கடந்த இரு வாரங்களாக கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இதனால் இலங்கைக்கு வரும் விமானங்களின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் அச்சம் தோன்றியுள்ளது. இந்த நிலைமையை இருட்டடிப்பு செய்வதற்கு அதிகாரிகள் முயல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பீதுருதாலகால மலையில் நிறுவப்பட்டிருந்த ராடரானது, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்துள்ளது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விமானப் போக்குவரத்துகளை கண்காணிப்பதற்கு வேறு ராடர்கள் இல்லாததனால் அவர்கள் தற்போது விமானங்களை கையாள்வதற்கு ஹசெய்முறை கட்டுப்பாடு' என அழைக்கப்படு…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்திய, சிறிலங்கா கடற்படையினர் கூட்டு ரோந்திற்கு தமிழக அரசு ஆதரவு இந்திய, சிறிலங்கா கடற்படையினர் கூட்டு ரோந்தில் ஈடுபடுவதில் எவ்வித சிக்கலுமில்லை. அது மிகவும் சாத்தியமானதொன்றென இந்திய கடலோர கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி அட்மிரல் ராமன் பிரேம் சுதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை முதல் இராமேஸ்வரம் வரையுள்ள 7 கடற்படைத் தளங்களிலும் ஆய்வுகளை நடத்திவரும் அட்மிரல் ராமன் பிரேம்சுதன் நாகை துறைமுக கடற்படைத் தளத்தில் வைத்தே இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; இதற்கு தமிழக அரசு எமக்கு முழு ஒத்துழைப்பும் தருகின்றது. அதனால் எமது பணியை நாம் சிறப்பாக செய்து வருகின்றோம். இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டுரோந்தில் ஈடுபடுவதில் எவ்வித சிக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
'இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஈடுபடுத்தும் சதி' - இலங்கையுடன் தகவல் தொடர்பு இணைப்பா? இந்தியஇலங்கை கடற்படைகளுக்கு இடையே மேற்கொள்ளப் படவிருப்பதாக கூறப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை அரசுக்கு இந்தியா எந்த வகையிலும் உதவக்கூடாது என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியக் கடற்படையும், இலங்கை கடற்படையும் தகவல் பரிமாற்றத்திற்குத் தொலை தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும், கடந்த 13 ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்ற இந்தி…
-
- 4 replies
- 1.7k views
-