ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
ஓமந்தை மேற்கு மோதலில் 8 புலிகள் பலி- ஊடக மத்திய நிலையம் நிஷாந்தி வவுனியா ஓமந்தை மேற்கே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரகேசரி
-
- 2 replies
- 1.9k views
-
-
Posted on : 2007-08-20 தமிழர் அபிலாஷையை உள்வாங்கி தீர்வுத் திட்டத்தை தயாரியுங்கள்! திடீரென காலவரையறை குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தை மீண்டும் நாளை கூட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகக் கொழும்பில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுத் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த இணக்கம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் உத்தேச யோசனைத் திட்டம், பௌத்த - சிங்களக் கடும்போக்காளர்களான பேரின வாதத் தலைவர்களைத் திருப்திப்படுத்…
-
- 0 replies
- 968 views
-
-
பட்டப்பகலில் கடத்தல்கள் வடக்கில் தொடர்கின்றன! பாதுகாப்பு இல்லையென்ற உணர்வுடன் கிழக்கு மக்கள் வடக்கில் தொடர்ந்தும் பட்டப் பகலில் ஆள்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக மூன்று முறைப்பாடுகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடைத்துள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் மன்னாரில் கப் பம் பெறுதல், இடையூறு செய்தல் தொடர்பாக 9 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் வாராந்த அறிக்கையில் (ஓகஸ்ட் 6 ஓகஸ்ட் 12) இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை ஆவன கண்காணிப்புக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் படி, வடக்கில் ஆட்கடத்தல்கள் பட்டப் பகல் வேளைகளில் ஒழுங்கு முறையாக நடைபெற்று வரு கின…
-
- 0 replies
- 709 views
-
-
அரசியல் தீர்வு யோசனையை ஜனாதிபதி ஐ.நாவில் முன்வைத்து உரையாற்றுவார் சர்வதேச ஆதரவைக் கோரும் நோக்குடன் அடுத்த மாதம் 23ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 62ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமது அரசு முன்வைக்கும் திட்டம் குறித்து சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைப்பார் எனக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த யோசனைத் திட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்புகளை பேச்சு மேசைக்குக் கூட்டி வருவதற்கு ஒத்துழைக்குமாறு சர்வதேச சமூகத்தை அவர் கோருவார் என்றும் கூறப்படுகின்றது. மாகாண மட்டத்துக்கு அதிகாரப்பகிர்வு உட்பட …
-
- 0 replies
- 737 views
-
-
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குஅரசாங்கம் என்றுமே தயாராக இருக்கிறது வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் என்றுமே தயாராக இருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார். ஆறாவது தெற்காசிய பிராந்திய ஊடக (சப்மா) மாநாடு கடந்த இரு தினங்களாக கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அம்மாநாட்டின் இறுதி அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நேற்றுமாலை உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.. ஊடகம், சமாதானமும் வறுமை ஒழிப்பும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோரின் உரையை கவனமாக அவதானித்த பின்னர் அமைச்சர் உரையாற்றினார். அந்த உரைய…
-
- 2 replies
- 982 views
-
-
புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்க்குஅமைச்சர் திஸ்ஸ வித்தாரண முயற்சி வீரகேசரி நாளேடு ஹெல உறுமய குற்றச்சாட்டு; மன்னிப்பு கோரவும் வலியுறுத்தல் சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை. மாவட்ட ரீதியாக அதிகாரங்களை பகிர்வதற்கு சர்வ கட்சி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக திஸ்ஸ விதாரண வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையில் புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்கு அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் அவர் பின்னணியில் செயற்படும் வெளிநாட்டு சக்தியி…
-
- 1 reply
- 995 views
-
-
மனித உரிமைகளை மதிக்க வேண்டுமாம்- பெருமளவு மக்களை செம்மணியில் புதைத்த முன்னாள் இராணுவத் தளபதி ஜனக பெரேரா சொல்கிறார் மனித உரிமைகளை கருத்தில் கொள்ளாது, மக்களின் ஆதரவுகள் இன்றிப் போரை வெல்ல முடியாது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றின் முன்னாள் தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். இவரது காலப் பகுதியில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், செம்மணியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய…
-
- 2 replies
- 890 views
-
-
கடற்படையின் பலம் அதிகரிக்கப்படுகிறதா? -விதுரன்- வடக்கே களமுனையில் சற்று மந்த நிலையே காணப்படுகிறது. எவ்வேளையிலும் பெரும் போர் வெடிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட பகுதி கடந்த வாரம் முழுவதும் மிகவும் அமைதியாகவேயிருந்தது. பாரிய மோதல்களோ, சிறுசிறு நகர்வுகளோ கூட இடம்பெறவில்லை. வடக்கு - கிழக்கில் பருவ மழை பொழியத் தொடங்கப் போகிறது. கடும் மழைபெய்யும் பட்சத்தில் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. அத்துடன், கிழக்கில் பெரும் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதால் அங்கு ஆளணியை முடக்க வேண்டிய கட்டாய நிலை படையினருக்கேற்பட்டுள்ளது. பருவமழையும் ஆளணிப் பற்றாக்குறையும் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாததொரு சூழ்நிலையை அரசுக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
"யார் பயங்கரவாதிகள் என்பதை இனியாவது உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்"விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அவர் பயங்கரவாதி எனவும் சிறீலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க அவர் முயல்கிறார் எனவும், விடுதலைப் புலிகளிடமிருந்து ஹோம்ஸ் கையூட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மிகக்காட்டமாக இந்த ஐ.நா அதிகாரியை திட்டியிருக்கிறார். ஜோன் ஹோம்ஸ் சிறீலங்காவிற்கு வருகை தருவதற்கு முன்பாகவே அவர் தனது பயணங்களின் முடிவில் கூறப்போகும் கருத்துக்கள் குறித்து அரசதரப்பு கவலை கொள்ளத் தொடாடங்கி விட்டது. அவர் செல்லும் இடங்களில் யார் யாரைச் சந்திக்கவேண்டும் யார் யாரைச்சந்திக்கூடாது என்பதில் ஒரு திட்டமிடலை அரச தரப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். ஊடங்களுக்கு அவர் தெரிவிக…
-
- 0 replies
- 996 views
-
-
வாழ்வுரிமை மறுக்கப்பட்ட யாழ்குடா மக்கள் - வே.தவச்செல்வம் - யாழ்ப்பாணத்தில் கடந்த 13ம் திகதி மட்டும் ஐந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எட்டுப்பேர் காணாமல் போயுள்ளார்கள். இதை விட மூன்று பேர் உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமை கள் ஆணைக்குழுவில் சரணடைந்திருக்கிறார்கள். இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் ஒட்டுக்குழுவினரும், படையினரும் இருக்கின்றனர் என்பதை விட நேரடியாக இவர்கள் சம்பந்தப்பட்டு ள்ளார்கள் என்பதே உண்மையாகும். யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு கொலையும் படையினரால் பட்டியல் தயாரிக்கப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன. பட்டியலின் கொலை செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிலும் தமக்கு உள்ள கொல…
-
- 0 replies
- 713 views
-
-
புலிகளின் விமானம் குறித்து திருவனந்தபுரத்தில் முக்கிய கூட்டம் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து விமானப் படையின் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏழு "கமாண்ட்' பிரிவுகளின் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள் தகவல் தருகையில், புலிகளின் வான்வழித் தாக்குதல் இலங்கை இராணுவத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது. புலிகளின் விமானப் படை குறித்து இந்திய விமானப் படை முதல் முதலில் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளது. திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏ…
-
- 2 replies
- 1.8k views
-
-
திங்கள் 20-08-2007 00:14 மணி தமிழீழம் [செந்தமிழ்] மாதகல் கடலில் சிறீலங்கா படையினரின் போர்ப்பயிற்சி சிறீலங்கா கடற்படையினர் காரைநகர் மற்றும் கே.கே.எஸ் முதல் மாதகல் கடல்கரை வரையான பகுதிகளில் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை பெருமளவில் கடற்கலங்கள் கடற்படையினர் சகிதம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து மீனவர்களை கடலில் இருந்து கரைக்கு திரும்புபம்படி படையினர் கேட்டுக்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். படையினரது போர் ஒத்திகையையடுத்து பொன்னாலை வரதராசப்பெருமாள் கோவில் வருடாந்த தேர்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் பதற்றமடைந்து காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா படையினர் யாழ்நகரசபைக்கு உட்பட்ட எல…
-
- 1 reply
- 866 views
-
-
வவுணதீவில் குண்டுகளுடன் தமிழ் இளைஞன் கைது வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் வைத்து குண்டுகளுடன் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நாவற்காடு, ஈச்சன்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜயசீலன் (24 வயது) என்றழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மட்டக்களப்பு கதிரவெளி, பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துப் பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
-
- 1 reply
- 1.1k views
-
-
ஞாயிறு 19-08-2007 13:58 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் காவல்துறைக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம் மட்டக்களப்பில் சிறீலங்கா காவல்துறையினருக்கு ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இந்த ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் 150 பொதுமக்களும், ஏறாவூரில் 250 பொதுமக்களும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் கொடுத்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏனைய பகுதிகளிலும் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு
-
- 0 replies
- 875 views
-
-
ஞாயிறு 19-08-2007 13:51 மணி தமிழீழம் [மயூரன்] பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை நிலைநாட்ட பாகிஸ்தான் உதவும் - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை நிலைநாட்ட இலங்கை மற்றும சர்வதேச சமூகத்திற்கும் பாகிஸ்தான் உதவும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தானுடைய சுதந்திரதின நிழக்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் முன்னகர்வுகள் மற்றும் ஒருமைப்பாடு ஊடாக சமாதானத்தை ஏற்படுத்த அனைத்து வகையிலான உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமான இரு தரப்பு உறவுகளும் சுமூகமாக முன்னெடுக்கப்படும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித…
-
- 0 replies
- 768 views
-
-
மன்னாரில் படையினர் முன்னேற முயற்சி: விடுதலைப் புலிகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007, 18:19 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கைக்கான முயற்சிகளை எடுத்தனர். கடந்த இரு நாட்களாக படையினர் முள்ளிக்குளம், விளாத்திகுளம் பிரேதசங்கள் மீது தொடர் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். நேற்று சனிக்கிழமையும், இன்றும் இரு தடவைகள் சிறு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். படையினரின் தொடரான எறிகணைத் தாக்குதல்களால் முள்ளிக்குளம், விளாத்திகுளம், வலயன்கட்டு, பரிசங்குளம் ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களின் வீடுகள் மு…
-
- 0 replies
- 1.2k views
-
-
19-08-2007 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சலசலப்புக்கள் மக்களின் எதிர்பார்ப்பைப் போல் சத்தமின்றி அடங்கிவிட இந்த வார அரசியலில் ஆவலை அதிகரிக்கும் திருப்பங்களாக ரணில் - மங்கள கூட்டணியின் பேரணிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வரவு என்பவற்றை குறிப்பிடலாம். அதாவது அரசிற்கு எதிரான அணியினது பலம் விரிவடைகின்றதா? என்ற ஒரு தோற்றப்பாடு தென்னிலங்கையில் வலுப்பெற்றுக்கொண்டு செல்கின்றது. இந்த சலசலப்புக்களுக்கு மத்தியில் மனிதநேய பணியாளர்கள் பணியாற்றுவதற்கு இலங்கை உகந்த இடம் அல்ல, அங்கு மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான…
-
- 0 replies
- 669 views
-
-
எந்தவொரு நாட்டிலும் யுத்தத்தை நடத்திக்கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. யுத்தத்தின் மூலம் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மாறாக இழப்புக்களையே அதிகமாக காணக் கூடியதாக இருக்கும். சமாதானத்தின் வழியை பின்பற்றுவதன் மூலம் அபிவிருத்தியின் இலக்கை அடைய முடியும் ஈடுப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள், கணவனை இழந்த பெண்கள், பிச்சையெடுப்பவர்கள் என அனைவருக்கும் கடன் வழங்கினேன். இந்த கடனை வழங்குவதற்காக, பெரியளவிலான ஆவணங்களையும், பிணையாளர்களையும் நாங்கள் கோரவில்லை. முடிந்தளவுக்கு கேட்போருக்கெல்லாம் கடன் வழங்கினோம். இந்த கடனில் 99 வீதமானவை வட்டியுடன் மீளச் செலுத்தப்பட்டுள்ளது. பிச்சையெடுப்பவர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கினோம். அந்த கடனைக்கொண்டு, அவர்கள் தொழில் தொடங்கியுள்ளதால்…
-
- 0 replies
- 621 views
-
-
தென்னிலங்கை அரசியல் முறுக்கேறுகின்றதா? சிக்கல்படுகின்றதா? [19 - August - 2007] -பீஷ்மர்- கடந்த வாரம் இலங்கை அரசு சர்வதேச நிலையில் மேலும் சில `அடி'களைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையின் மனிதாபிமானப் பணி நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக வந்த ஹோம்ஸின் அறிக்கை அரசாங்கத்துக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடம் மூதூரையடுத்து கொல்லப்பட்ட பிரஞ்சு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி சட்ட நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லையென்ற ஹோம்ஸின் குறிப்பு இலங்கையின் பெயரை பெரிதும் பாதித்துள்ளது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை தவிர மற்றைய அமைச்சர்கள் இந்த வாக்குவாதத்தில் அதிகம் ஈடுபட்டதாக தெரியவில்லை. இவையெல்லாவற்றுக்கும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
வாழ முடியாத இடமாகிவிட்ட யாழ்ப்பாணக் குடாநாடு! [19 - August - 2007] * இரு வாரத்தில் 18 கடத்தல்கள் 21 கொலைகள், 17 பேர் அடைக்கலம் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை நிலை மிகவும் மோசமடைந்து வருவதை மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தியிருக்கின்றத
-
- 1 reply
- 1.2k views
-
-
10 வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் வாடும் 33 இந்தியர்கள் [19 - August - 2007] தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 இந்தியர்கள் செய்யாத குற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடுவதாக பொன்னானியைச் சேர்ந்த அஷ்ரப் இலங்கையில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பொன்னானியை அடுத்து மரக்கடவையைச் சேர்ந்த பி.அஷ்ரப், ஆன்டனி சுதி (கேரளா), மரியா ஜான் (தூத்துக்குடி) உள்ளிட்ட பலர் இலங்கைச் சிறைகளில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று இலங்கை நீதிமன்றம் அறிவித்த எம்.சண்முக சுந்தரம் (கேரளா), எஸ்.எம்.புகாரி (திருச்சி) , என்.தங்கவேல் (மதுரை) உள்ளிட்ட பலருக்கு இலங்கை நீதிமன்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும் [19 - August - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் பேட்டி -வன்னியூரான்- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டால் இலங்கைப் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் `தினக்குரல்'க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கே : யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த மாவட்டத்தில் தமது மக்களோடு நின்று பணியாற்ற முடியாதுள்ள நிலைமை பற்றி? ப : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை குவித்து துணை இராணுவக் குழுக்களை சுதந்திரமாக நடமாடவிட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கிமூன் மீதும் தனது கீழ்த்தரமான தாக்குதலை சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெனார்ண்டோப் புள்ளே தொடுத்துள்ளார். இது தொடர்பாக த நேசன் இதழுக்கு வழங்கிய நேர்காணல் Jeyaraj slams Ban Ki-moon By: Rathindra Kuruwita Courtesy: The Nation - August 19, 2007 Senior government Minister Jeyaraj Fernandopulle yesterday launched a scathing attack against United Nation’s Secretary General Ban Ki-moon, declaring that he did not give a ‘damn’ about whatever that ‘foreigner’ (Ki-moon) had to say. In yet another of his regular verbal harangues, Fernandopulle, who is also the Chief Government Whip, told The Nation, “I don’t give a…
-
- 4 replies
- 1.6k views
-
-
பொருளாதார நெருக்கடியால் சிறிலங்கா அரசின் படை நடவடிக்கை பாதிப்பு: "லக்பிம" வார ஏடு பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மூத்த படை அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம் போன்ற காரணிகள் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமற்ற போர் நிறுத்தத்திற்கு இணங்கியதனால் கடந்த வாரம் வன்னி களமுனை அமைதியாக இருந்தது. எனினும் இந்த அமைதி ஆபத்தானதாக இருக்கலாம். இரு தரப்பும் தாக்குதலுக்கு தயாராக உள்ளபோதும் யார் முதலில் தாக்குதலை ஆரம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆவணி 18,2007 இலங்கை அரசாங்கத்துக்கு கிழக்கின் மீது ஏற்பட்டிருக்கும் `திடீர்காதல்' தமக்கு பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான மக்கள் ஆணை இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் `சமாதானத்துக்கான வணிகம்' (Business for peace Forum) எனும் கருத்தமர்வு நேற்று முன் தினம் வியாழக்கிழமை ஜெய் கில்டன் ஹோட்டலில் நடைபெற்றபொழுது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இதனை தெரிவித்தார். கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள அரசாங்கம், அப்பகுதி மக்களின் பிரதிநிதிகளென்ற வகைய…
-
- 0 replies
- 545 views
-