Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கின் வெற்றியால் அரசுக்கு எந்தவொரு நன்மையுமில்லை வீரகேசரி நாளேடு மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க மஹிந்த அரசாங்கம் தயாராக இல்லை. தீர்வை முன்வைக்குமாறு பன்னாட்டு சமூகமும் அழுத்தங்களைக் கொடுக்கத்தவறிவிட்டது. மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு…

  2. கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாடும் அரச அதிகாரிகளும் கிழக்கு மாகாண சபையின் ஆளுநரான றியல் அட்மிறல் றொகான் விஜயவிக்கிரமவுக்கு அடுத்த அதிகாரம் கொண்ட சக்தி மிக்க பதவியை வகித்தவர் மட்டுமன்றி, நுவரெலியா மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் அரச அதிபராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர். அம்பாறை அரச அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அங்கு சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலும் தீவிரமாக உழைத்தவர். தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய நிலங்களை சிங்களவர்கள் பலவந்தமாக ஆக்கிரமிப்பதற்குத் துணை நின்றவர். சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்த தமிழ், முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்தவர்களை சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்களில் குடியேற்றுவதன் மூலம், அவர்களைக் கிராமிய அள…

  3. மகிந்தவின் நிகழ்ச்சி நிரல் தமிழின அழிப்புத்தான் நாய்களின் விடயத்தில் தாம் பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதாக காட்டும் மகிந்தரின் ஆட்சியில், தமிழர்களின் உயிர்கள் நாயிலும் கேவலமாகிவிட்டது. தமிழர்களைக் கொள்வதற்காக தன்னினத்தின் உயிர்களையும் பலி கொடுக்க மகிந்த தயாராகவே உள்ளார். கொலைகள் இன்றேல் ஆட்சி இல்லை என்ற தற்போது நிலையே நாட்டில் நிலவுகிறது. மகிந்தர் அணியைப் பொறுத்தவரை தமிழின அழிப்பே முதன்மையானதாக இருக்கின்றது. இலங்கையில் மாறி மாறி ஆட்சிப்பீடத்தில் இருந்த அரசுளும், சிங்களத் தலைவர்களும் செய்ததையே மகிந்தரும் செய்தாலும், மகிந்தர் இப்போது முன்னணி வகிக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனைய ஆட்சியாளர்கள் உலகை ஏமாற்றும் விதத்தில் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழ…

  4. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முயற்சிகளில் பங்கு பற்றிய தரப்பினரும் அக்கறையுடைய தரப்பினரும் சற்றுப்பின்னகர்ந்துள்ள ஒரு நிலை காணப்படுகிறது. போர் எல்லாக்கட்டுகளையும் மீறி தன்பாட்டில் விரிவடைந்து செல்லும்போது அதனை வெளியே நின்று பார்க்கும் ஒரு நிலைக்கு இந்தத்தரப்பினர் இப்போது தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழு

  5. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அயல்நாடு எனும் வகையில் தனது பிரசன்னத்தை ஆழமாகவே பதிக்க வேண்டிய தேவைகள் ஏற்பட்டமையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் பலன்களும் இலங்கையின் தமிழர் உரிமைப் போராட்டத்தினை மிக மிக ஆழமாகவேம் பாதித்துள்ளன என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அண்மைக்கால வரலாற்றில் 1987 இல் இலங்கை - இந்திய இணைவு ஆவணம் உண்மையில் அதன் பின் வந்துள்ள அரசியற் போக்குகளை தீர்மானித்துள்ளது. அதன் மிகப்பெரிய சாதனைகளிலொன்று வடக்கு - கிழக்கை ஒரு அலகாகக் கொண்டமையாகும். இதனோடு, இணைந்த முக்கியத்துவமுடையது தமிழை இலங்கையின் தேசிய மொழிகளிலொன்றாக பிரகடனப்படுத்தியமை. இந்த இணைவு ஆவணத்துக்கு பிரேமதாஸ உட்பட பல சிங்கள அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் அடியாகவே சமாதானக்கா…

  6. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை நிகழ்ந்து நேற்றுடன் இரண்டு தசாப்தங்கள் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றன. இலங்கைத் தீவின் அயல் தேசமான இந்திய வல்லாதிக்கம், தனது புவியியல், அரசியல் கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் வகுத்த உருப்படியற்ற அரைகுறை தீர்வுத்திட்டம் ஒன்றை, இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் முடிவாக இத்தீவின்மீது வலிந்து திணித்த செயற்பாட்டின் இருபது ஆண்டுகளே இப்போது பூர்த்தியாகியிருக்கின்றன. இந்திய மேலாதிக்கத்தின் நெருக்குவாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமது இலட்சியங்களைக் கூடக் கைவிடத் தயாரான ஈழத் தமிழ்த் தலைவர்களின் அரைகுறை ஒப்புதலோடும் கொள்கையிலும், இலட்சியத்திலும் பற்றுறுதி மிக்க ஈழத் தமிழ்த் தலைமையைப்…

    • 0 replies
    • 877 views
  7. இலங்கையின் சமா தான முன்னெடுப்புகளில் காத்திரமான பங்கு வகிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் தட்டிக்கழித்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட மத்திய கிழக்குச் சமாதானத் தூதுவராகப் பதவி வகிப்பது பெரிதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ரொனி பிளேயரின் கணிப்பீடு என்று தெரிவிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் பிளேயர் பிரதமராக இருந்தபோது இலங்கை நிலைவரத்தில் அதீத அக்கறை செலுத்தி வந்துள்ளார். தற்போது அவர் மத்திய கிழக்குச் சமாதானத் தூதுவராகப் பதவியேற்றிருப்பதால் இலங்கை தொடர்பாக பிரிட்டன் மேற்கொள்ளும் முயற்சிகளில் அவர் தீவிர பங்கேற்பார் என எதிர்பார்க்க இயலாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு தசாப்த காலங்களாக, இலங்கை இன…

    • 0 replies
    • 1.1k views
  8. இராணுவத்தில் பாரிய மாற்றம் வீரகேசரி நாளேடு இராணுவ கட்டளை தளபதிகள் பலரும் இடம் மாற்றப்பட்ட நிலையில் இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு; வன்னிப்பகுதிக்கான புதிய பாதுகாப்பு தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார். வன்னிப் பகுதியின் தற்போதைய கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளராக பதவியேற்றுள்ளார். இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளர் பிரிவையும் கண்காணித்து வந்த இராணுவத்தின் பிரதம அதிகாரியான மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜெயசூரிய…

    • 1 reply
    • 1.2k views
  9. சீன அபாயத்தைத் தடுக்க சிங்களருக்கு ஆயுதமா? தமிழரைக் கொன்று குவிக்கத் துணைபோகாதீர்! -பழ.நெடுமாறன் இந்திய அரசில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் இலங்கை இனப்பிரச்சினை குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அப்பிரச்சினையின் உண்மையான வடிவத்தினை அவர்கள் முற்றிலுமாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே. அந்தோணி தில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகளின் மாநாட்டினைத் தொடங்கி வைக்கும்போது (19-06-07) பின்வருமாறு கூறினார்: "விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். அதே வேளையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வைவிட அரசியல் ரீதிய…

  10. கிழிக்காமல் பிரிக்கும் அரசாங்கம் - சிதைக்காமல் பிரிக்கும் சர்வதேசம் - இதயச்சந்திரன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கிழக்கை மீட்ட வெற்றிப் பெருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. "கிழக்கின் விடியல்' என்கிற பெயர் சூட்டி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் ஜனாதிபதி. மரக் கதைகள் கூறும் எதிரிகளை மௌனமாக்கியுள்ளார். இவ்விழாவில் குளிர்காயும் இனவாத சக்திகள், சுவரொட்டிச் செய்திகளூடாக தமது இருப்பையும் நிலை நிறுத்தியுள்ளனர். வடக்கையும் விடுவியுங்களென்று ஜனாதிபதிக்கு பொறி வைக்கவும் அவர்கள் தவறவில்லை. உள்ளூர மகிழ்ச்சியடைந்தாலும், களநிலைமை மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிப்பதால், விழாவில் முகங்காட்டி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தினைக் கிழித்தெறிய சர்வதேசம் விரும்பவில்லை. …

  11. அரசாங்கம் தனக்கான சவக்குழியை மிக ஆழமாக வெட்டிக்கொண்டிருக்கிறது வீரகேசரி நாளேடு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் எரிபொருட்களின் விலை மீண்டும் ஒரு தடவை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு பாரிய அமைச்சரவையே பொறுப்பு கூற வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் ரொட்டி தகரத்திலிருந்து அடுப்பிற்குள் இழுத்து வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கம் பொருட்களின் விலைகளை மாதம் மாதம் அதிகரித்து தனக்கான புதைகுழியை மிக ஆழமாக வெட்டிக்கொண்…

  12. மணலாறு மீது பாரிய தாக்குதலை நடத்தப் போகும் புலிகள்: கொழும்பு ஆங்கில ஊடகம் ஜஞாயிற்றுக்கிழமைஇ 29 யூலை 2007இ 09:01 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மணலாற்றில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடான "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்கா வான்படையினர் இந்த வாரம் வன்னியில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் ஒன்றான ஒட்டிசுட்டானில் இருந்து வடமேற்காக உள்ள முதலியார்குளமும் ஒன்றாகும். மணலாற்றுப்பகுதியில…

  13. "சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போன சிறிலங்கா": வோசிங்ரன் போஸ்ட் ஏடு சாடல் சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என்று அமெரிக்காவின் வோசிங்ரன் போஸ்ட் சாடியுள்ளது. சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக வோசிங்ரன் போஸ்ட் இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் 7 ஆம் நாள் ஒரு கடைக்குச் சென்ற சிலர் குற்றப் புலனாய்வுத் திணைகளத்திலிருந்து வந்துள்ள காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இலங்கை தமிழ்ச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கடையின் உரிமையாளரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு தம்மோடு வருமாறு கூறி ஒரு வானில் ஏற்றினர். ஆனால் அவர் கடத்தப்பட்டுவிட்டார். 5 இலட்சம் டொலர் கப்பப் பணம் கோர…

  14. பிக்குமார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? [29 - July - 2007] ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான போராட்டத்தின் துவக்கமாக கடந்த வாரம் தலைநகர் கொழும்பில் `மக்கள் அலை' பேரணியை நடத்திய அதேதினத்தில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது. கிழக்கில் தொப்பிகல பிரதேசத்தில் இராணுவத்தினர் அடைந்த வெற்றியை சிறுமைப்படுத்திக் கருத்துத் தெரிவித்து படையினரை அவமதித்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பௌத்த பிக்குமாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த தீர்வையின்றி வாகனங்களை இறக்…

    • 10 replies
    • 1.9k views
  15. இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு இருபது ஆண்டுகள் தற்போதைய நிலை என்ன? [29 - July - 2007] [Font Size - A - A - A] -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி அப்பொழுது இந்தியப் பிரதமராயிருந்த ராஜீவ்காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோருக்கிடையில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இன்று இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், நிச்சயமாகப் புலப்படுவது யாதெனில், அது தோல்வியடைந்த ஒரு உடன்படிக்கை என்பதாகும். உள்ளூரில் சிலர் இன்னும் இவ்வுடன்படிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளது போல் நடந்துகொண்ட போதிலும் உண்மை என்னவெனில்,அது செயல் இழந்துவிட்ட ஒரு ஆவணம் என்பதாகும். எனவே, ஒப்பந்தத்தின் இருபதாவத…

    • 2 replies
    • 1.1k views
  16. கிழக்கு தேர்தலில் கருணா குழு போட்டியிட முடியாது. கிழக்கு மாகாணத்தில் இவ்வருட முடிவிற்கு முன் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கருணா குழுவினர் போட்டியிடமுடியாது எனத்தெரியவருகிறது. கருணா குழுவினர் 20 அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்திலும் மற்றயவை பொல்கென்கொட கொழும்பிலும் அமைந்துள்ளபோதிலும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயக்காவினால் அரசியல்கட்சியாக 2007 யூலை 10 வெளியிட்ட அரசியல் கட்சிகளின் வரிசையில் இடம்பெறவில்லை எனத்தெரியவருகிறது. 2004 ஒக்ரோபர் மாதம் 12 ம் திகதி கருணாகுழுவின் செயலாளர் ஜி.ஆர்.கணராஜா அவர்களால் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்கள் கையளிக்கப்பட்ட போதும் இறுதியாக தேர்தல் திணைக்களத்தால் யூலை 10 , 2007 வெளியிடப்பட்ட அரசியல் கட்சி வரிசையில் கருணாகுழுவிற…

  17. கிழக்கைப் பிரிப்பது ஒரு அரசியல் சதி இதனை சவாலாக கூட்டமைப்பு சந்திக்கும் [29 - July - 2007] [Font Size - A - A - A] * கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா -பி.ரவிவர்மன்- உயிருக்கு அஞ்சினால் இன்றைய அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது. படுகொலைக் கலாசாரம் ஜனநாயக அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் அரச சார்பற்ற சக்திகளும் அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குறிவைத்துக் கொண்டேயிருக்கும். ஆனால், ஒன்று படுகொலைகளாலோ அல்லது விசாரணை என்ற போர்வையினாலோ அச்சுறுத்தல்களாலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையோ அடிபணிய வைக்க முடியும் என்று அரசு கருதுமானால் அதுவொரு வெறும் பகற்கனவாகும் என்று தமிழ்த் தேசிய…

    • 1 reply
    • 773 views
  18. தமிழின அழிப்பை அம்பலப்படுத்திய `சாவிலும் வாழ்வோம்' நினைவு நாள் கறுப்பு ஜூலையின் ஆறாவடுக்களுடன் உலககெங்கிலும் `கூடு கலைந்து' வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், தாம் தங்கியுள்ள நாடுகளில் அந்தக் கரி நாட்களை உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர். பேரினவாத மமதைகளின் தமிழின அழிப்புத் தாண்டவத்துக்குள் அகப்பட்டு அநியாயமாக பலியெடுக்கப்பட்ட தமது உறவுகளை மாத்திரமன்றி இற்றைத் திகதி வரை தொடரும் அரச பயங்கரவாதத்தினால் தாயகத்தில் மடிந்துகொண்டிருக்கும் தமது சொந்தங்களையும் நினைவு கூர்ந்தனர். கடந்த புதன்கிழமை (25-07-07) நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் தமிழர்கள் மாத்திரமன்றி பிற இனத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர். `சாவிலும் வாழ்வோம்' என்ற அடிப்படைக் கோஷத்துடன் இடம்பெற்ற இந் நிக…

    • 1 reply
    • 985 views
  19. பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 50 ஆண்டுகள் பூர்த்தி வாழ்வியல் உரிமைகளுக்காகவும், நீதி, நியாயம், சமத்துவம் வேண்டியும் ஈழத் தமிழர்கள் கடந்த ஆறு தசாப்த காலமாக நடத்திவரும் பல்பரிமாணப் போராட்டங்களை நோக்குபவர்கள் அவை இரண்டு தடங்களில் விரிந்து செல்வதைக் காண்பர். ஒருபுறம் அஹிம்சை வழியிலும், பின்னர் ஆயுத முனையி லும் வெடித்த போராட்டக் களங்களாகவும், மறுபுறம் அமைதி முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற சமாதான அரங் குகளாகவும் இரு முனைகளில் அந்த வரலாற்றுத்தடம் நகர்ந்து சென்றிருக்கின்றது. அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகளோடு தமிழர் நடத்திய அமைதிப் பேச்சுகள், சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் நம்ப வைத்து ஏமாற்றிய நம்பிக்கைத்துரோக நாட…

    • 10 replies
    • 1.8k views
  20. கிழக்கில் என்ன நடக்கப் போகின்றது? [29 - July - 2007] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- ஜனாதிபதி மகிந்தவின் தொப்பிகல திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது.இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள் மாறியுள்ள நிலையில் இவ்விழவின் மூலம் பொலிஸ் அலுவலர்களும் அரசியல்வாதிகளாக மாறியிருந்தனர். கொழும்பு வடக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பொலிஸ் அலுவலர்களே வெற்றிக் கொடியேற்றி பாற்சோறு வழங்கினர். பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்கனவே அச்சடித்து வழங்கப்பட்ட அறிக்கையையும் வாசித்தனர். கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளே அவ்வறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. படையினர் மேற்கொண்ட கூட்டுக்கொலைகள் பற்றி மூச்சே விடப்படவில்லை. அதிபர்களும் ஆசிரியர்களும் தாங்கள் எதுவும் உரையாற…

    • 1 reply
    • 1.4k views
  21. கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் இரண்டாவது மாநாடு [29 - July - 2007] [Font Size - A - A - A] கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள உறவுகள் தொடர்பிலான போராட்டம் இன்று தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டார்கள் அல்லது விடுவிக்கப்பட்டுவிட்டார்கள

    • 1 reply
    • 603 views
  22. கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணி அபகரிக்கப்படும் ஆபத்து கிழக்கில் இனச்சுத்திகரிப்பை நடத்தி தமிழ் பேசும் மக்களின் நிலத்தை பலாத்காரமாக ஆக்கிரமிக்கும் முயற்சிகள் திட்டமிட்ட வகையில் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன் இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனவும் அவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் அவசரமாக குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கும் அரசாங்கம் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, தென்பகுதியிலிருந்து சிங்கள மக்களைக் கொண்டு சென்று கிழக்கி…

    • 1 reply
    • 753 views
  23. பண்டாரநாயக்க சமாதியை அரசியல் அரங்கமாக மாற்றினால் கை-காலை உடைத்துவிடுவேன்: அமைச்சர் லசந்தவுக்கு அனுரா எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை 29 யூலை 2007 06:55 ஈழம் சி.கனகரத்தினம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு தாவியோரை மிகக் கடுமையான வார்த்தைகளால் தேசிய பாம்பரியத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்த அரசாங்கத்துக்கு தாவியோருக்கு சுதந்திரக் கட்சியினர் யாரும் வாக்களிக்கப் போவதில்லை. எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துக்குத் தாவிய 17 பேரும் தோல்வியைத்தான் சந்திக்க உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். ஹொரகொலவில் உள்ள பண்டாரநாயக்க சமாதியில் போக்குவரவு அமைச்சர் லசந்த அழகியவன்ன நீலக் கொடியே…

  24. Posted on : Sun Jul 29 8:03:05 EEST 2007 கிழக்கில் 3 மாதத்தில் தேர்தல் நடத்த ரூ. 650 கோடி செலவில் எழுச்சித் திட்டம் திருமலையில் செவ்வாயன்று அங்குரார்ப்பணம் கிழக்கு மாகாணத்தில் இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல்களை நடத்தும் இலக்குடன், அதற்கு இசைவாக, "கிழக்கு எழுச்சி' என்ற புனரமைப்பு புனர்வாழ்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்த உள்ளது. "கிழக்கு எழுச்சி'த் திட்டத்துக்கு மொத்தம் 650 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் பழுதடைந்த மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றின் புனர மைப்பு வேலைகளை நாளைமறுதினம் ஆரம்பிப்பதுடன் "கிழக்கு எழுச்சி' புனரமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. கிழக்கில் போர் மற்றும் ஆழிப்பேர…

    • 1 reply
    • 800 views
  25. எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் நேற்று இரவு விடுக்கப்பட்ட அறிவித்தலின்படி எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதுதொடர்பில் சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன நிதி விவகாரங்களுக்கு பொறுப்பான லலித் கருணாரட்ண கொழும்பு ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில் பெற்றோலின் விலை ரூ6 ஆலும் டீசல் ரூ4 ஆலும் மண்ணெய் ரூ1 ஆலும் ஓயில் ரூ4 ஆலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி பெற்றோல் ரூ 117 ஆகவும் டீசல் ரூபா 75 ஆகவும் மண்ணெய் ரூ68 ஆகவும் விற்கப்படும் என இலங்கை இந்திய ஓயில் கூட்டுத்தாபன அதிபர் கே.ராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பதிவு

    • 1 reply
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.