ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
Posted on : 2007-07-28 யுத்தத் தீவிரக் கொள்கை நீடித்துத் தாக்குப் பிடிக்குமா? விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்த் தீவிரத்தை முன் னிலைப்படுத்துவதன் மூலம், தென்னிலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதச் சக்திகளைத் தமக்கு ஆத ரவாக வளைத்துப் போடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தந்திரோபாயம் நீண்ட காலத்துக்குப் பயன்தரப் போவ தில்லை என்பது போலவே தோற்றுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை வடக்குக் கிழக்கைத் தள மாகக் கொண்ட தமிழர் தாயகம் ஒட்டுமொத்தமாகப் புறக் கணித்த பின்னணியில், தமிழர் விரோத இனவாதம் அத்தேர் தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அவ ருக்கு வாய்ப்பளித்தது என்னவோ உண்மைதான். ஆனால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சிங்களப் பேரெ ழுச்சி என்ற இனவாத மாயைமூலம் தென…
-
- 0 replies
- 929 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகர் பதிவியிலிருந்து சந்திரிகாவை நீக்கும் நோக்கமில்லை - அனுர பிரியதர்சன யாப்பா [Friday July 27 2007 09:28:40 PM GMT] [யாழ் வாணன்] ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகர் பதிவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கான நோக்கம் எதுவும் கட்சியிடம் இல்லை. என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; சுதந்திர கட்சி ஆலோசகர் பத…
-
- 0 replies
- 935 views
-
-
கிழக்கில் மக்கள் மீது கட்டுப்பாடு கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பில்லை சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. [Friday July 27 2007 09:29:58 PM GMT] [யாழ் வாணன்] கிழக்கில் மக்கள் மீது கட்டுபாடுகள் விதிக்கப்படுவதாகவும் தகவல்களை வெளியிடவும் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள சகல பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த அமைப்பு கோரியுள்ளது. இது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மகாணத்தில் சமீபத்தில் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்…
-
- 0 replies
- 800 views
-
-
செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை விசாரணைகள் நிறைவு: காவல்துறையினர். இலங்கை செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொலிசார் தெரிவித்துள்ளனர். கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன்பாக வைத்து கடத்திச் செல்லப்பட்ட செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவரும் குருவிட்ட பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் இந்த கொலைச் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹெகல…
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.நா பொது சபை கூட்டத்தொடருக்கு உபதலைமையாக இலங்கை தெரிவு வீரகேசரி நாளேடு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 62 ஆவது கூட்டத் தொடருக்கு உபதலைமையாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நியூயோர்க்கில் 2007 யூலை 24 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாட்டு பொதுச் சபையின் 105 ஆவது மகா சபைக்கூட்டத்தில் இலங்கை ஓர் உபதலைமை நாடாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது, இத் தெரிவானது 2007 செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடங்கவுள்ள பொதுச் சபையின் 62 ஆவது கூட்டத் தொடருக்காகும். இலங்கை இப் பதவியை 15 வருடங்களுக்கு முன் அதாவது 1992 இல் நடைபெற்ற பொதுச் சபையின் நாற்பத்தேழாவது கூட்டத் தொடரில் வகித்தது ஆகும்.பொ…
-
- 3 replies
- 1.4k views
-
-
பிரபாகரனின் தேவையை ஈடுசெய்வதற்கு ரணில், மங்கள, ஸ்ரீபதி இணைந்து முயற்சி வீரகேசரி நாளேடு கிழக்கை கைப்பற்றிய இராணுவம் வடக்கிற்கு நகர்வதற்கு தயாராகின்ற போது ஐக்கிய தேசிய கட்சியும் இதர குழுக்களும் தெற்கில் மாற்று சிந்தனைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன என்று பிரதி கல்வியமைச்சர் நிர்மல கொத்தலாவல குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் இணைந்து பிரபாகரனின் தேவைகளை ஈடு செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பில் ரணில் மற்றும் மங்கள சமர வீர தலைமையில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் இலட்சம் (100,000) மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மகிந்தவனின் கிழக்கின் உதயம் வெற்றி முழக்கத்துடன் இப்பேரணி நடத்தப்பட்டுள்ளதானது மகிந்தவனின் செல்வாக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதுமட்டுமன்றி பேரணியாளர்கள்.. மகிந்தவை படத்தில் உள்ளது போல சித்தரித்துள்ளதானது.. சிங்கள அரசியல் என்பது பிரபாகரன் என்ற கதாநாயகன் இல்லாமல் நடக்காது என்பதை கோடிகாட்டி நிற்கிறது. படம் தமிழ் நெற். Thousands march against Rajapaksa govt. in Colombo [TamilNet, Thursday, 26 July 2007, 09:25 GMT] Around 100,000 people marched in Colombo Thursday in the first main rally jointly organised by S…
-
- 1 reply
- 1.2k views
-
-
சனி 28-07-2007 00:26 மணி தமிழீழம் [மயூரன்] அரசாங்கத்தின் தீவிர விசுவாசிகள் யார் என்பதில் துணை ஆயுதக்குழுகளிடையே போட்டி அரசாங்கத்தின் தீவிர விசுவாசிகள் யார் என்பதில் துணை ஆயுதக் குழுக்களிடையில் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக ஆளும் தரப்புடன் நெருக்கமான உறவுகளை பேணி அமைச்சு பதவிகளை வகித்து வரும் ஈ.பி.டி.பியை தற்போதைய அரசாங்கம் ஓரம்கட்டி வருவதாகவும் மற்று மெடாரு துணை ஆயுதக் குழுவான கருணா குழுவிற்கு சார்பாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் ஈ.பி.டி.பி துணை ஆயுதக் குழுவின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாணத்தில் செயல்படும் கருணா குழுவிடம் இருந்து ஆயுதங்களை அரசாங்கம் களைய வேண்டும் என்றும் கருணா…
-
- 0 replies
- 974 views
-
-
சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கை வருகை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் ஆளும் சுதந்திரக் கட்சி சார்பில் தீர்வுத் திட்டம் முன்வைத்தமை, விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆகியனவை நடந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கூறியுள்ளது. …
-
- 3 replies
- 1.7k views
-
-
பிரதமர் பதவி என்ற கனவுடன் தமிழர்களின் துயரில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குளிர் காய்கின்றார். ஜ வெள்ளிக்கிழமைஇ 27 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ விடுதலைப் புலிகளை அழித்து வெற்றி கொள்வோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பிரதமர் பதவி என்ற கனவுடன் தமிழ் மக்களின் துயரத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந. குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் பேசும் மக்களை துன்பத்தினுள் மேலும் மேலும் தள்ளுவதை தனது அரசியல் அஸ்திரமாக இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மகிந்த ராஜபக்ஷவை ஜன…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இன்று காலை வடமராட்சி மாலுசந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரால் வீதியில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதலில் கலைப்பீட மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். ராஜரட்ணம் பிரியன், பாலசுந்தரம் செல்வா ஆகிய இருவருமே தாக்குதலுக்கு உள்ளானவர்களாவர். -Sankathi-
-
- 0 replies
- 1.1k views
-
-
அளுத்கம பொலிஸ் காவலரனை சேர்ந்த இரு ஊர்காவற்படை வீரர்கள் காணமற்போயுள்ளனர். தந்திரி மலையருகே இரு ஊர்காவற்படை வீரர்கள் நேற்று இரவு முதல் காணமற் போயுள்ளனர் . தந்திரிமலை அளுத்கமை பொலிஸ் காவலரனைச் சேர்ந்த இரு ஊர்காவற்படை வீரர்களும் கடமையின் நிமித்தம் சைகிளில் வெளியே சென்றுள்ளனர் . என வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் . இவர்கள் இருவரும் இதுவைரை பொலிஸ் காவலரணிற்கு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஒருவரது சைக்கிள் பொலிஸ் காவலரணிற்கு அருகேயிருந்து மீட்கப்பட்டுள்ளது -Tamilwin-
-
- 1 reply
- 1.1k views
-
-
கறுப்பு யூலைத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய வர்கள் மீது ஜ.தே.க ஆதரவாளர்கள் தாக்குதல் 83ம் ஆண்டு ஆடிக்கலவரத்தின் நினைவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்த வாழ்வதற்கான மன்றத்தின் செயற்பாட்டாள்கள் மீது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று கொழும்பு ஹைட் பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் அலை பேரணியில் கலந்து கொண்டவர்களாலேயே தமது செயற்பாட்டாளர்கள் தாக்கப்பட்டதாக வாழ்வதற்கான மன்றத்தினர் அறிவித்துள்ளனர். 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அப்போது ஆட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து வாழ்வதற்கான மன்றத்தின் செயற்பாட்டாளர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்த போதே இந்த தசம்பவம் இடம்பெற்றுள்ளது…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெள்ளி 27-07-2007 16:34 மணி தமிழீழம் [மயூரன்] ஆழிப்பேரலை வீடமைப்புத் திட்டத்தில் வடக்கு கிழக்கு புறக்கணிப்பு - அக்சன் ஏய்ட் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக அக்சன் ஏய்ட என்ற மனிதாபிமான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தென் பகுதி சிங்கள மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் 86 சதவீதம் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் வடக்கில் 12 வீதமான திட்டங்களும் கிழக்கில் 26 வீதமான வீடமைப்பு பணிகளுமே நிறைவடைந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கமும் மனிதாபிமான தொண்டர் அமைப்புகளும் ஆழிப்பேரலையின் பின்னர் வெள…
-
- 0 replies
- 771 views
-
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல். அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பயணித்த உழு ஊர்தி மீது நேற்று விடுதலைப்புலிகளால் பதுங்கித்தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. -Puthinam-
-
- 3 replies
- 2.1k views
-
-
மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்து ஒரு இலட்சம் பேர் பேரணியில் பங்கேற்பு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக இன்று கொழும்பில் ''மக்கள் அலை'' எனும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி மக்கள் அணியினரும் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்துள்ளனர். பேரணில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு கொழும்பு கெம்பல் மைதானத்திலிருந்து ஆரம்பமாகியது. புறளைச் சந்தி, மருதானை வீதீ, சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சதுக்கம் ஊடாக கைப்பார்க் பூங்கா நோக்கி பேரணி நகர்ந்து சென்றடைந்தது. பேரணியில் கொழும்பின் புறநகர்ப் பகுதியிலிருந்து வந்த ஜக்கிய தேசியக் கட்சி, சுதந…
-
- 6 replies
- 1.8k views
-
-
ரணில்-மங்கள ஒப்பந்தம் செல்லாது: ஐ.தே.க. சனநாயக குழு [வெள்ளிக்கிழமை, 27 யூலை 2007, 11:55 ஈழம்] [ப.தயாளினி] ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லாது என்று மகிந்த அரசாங்கத்தில் இணைந்திருக்கும் ஐ.தே.க.அதிருப்தியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் குழுவான ஐ.தே.க. சனநாயக குழுவைச் சேர்ந்த அமைச்சர் காமினி லொகுகெ நேற்று ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்த போது அது கட்சியின் அனைத்து நிலைகளிலும் முன்வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ரணில்-மங்கள ஒப்ப…
-
- 0 replies
- 787 views
-
-
வெளிநாடுகளுக்கு `கோள்' சொல்லும் தேவை ரணிலுக்கு இல்லை [27 - July - 2007] * அநுராதபுரம் மாவட்ட ஐ.தே.க. எம்.பி.- பி.ஹரிசன் பேட்டி - ரொஷான் நாகலிங்கம்- நாட்டின் இன்றைய நெருக்கடி மிக்க அவல நிலைக்கு அரசின் நிர்வாகம் சீரற்றிருப்பதே காரணம். இதனை மறைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மீது சேறுபூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களை சுதந்திரமாக வாழ வைப்பதே எமது கட்சியின் நோக்கமென ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்தார். இந்த அவல நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இன்று போராட்டத்தை முன்னெடுக்கும் இத் தருணத்தில் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத…
-
- 0 replies
- 877 views
-
-
காலி பொலிஸ் நிலையம் அருகில் வெள்ளை வான் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால் குண்டுப்புரளி காலி நகரில் புதன்கிழமை ஏற்பட்ட குண்டுப்புரளியால் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களும் அச்சத்துடன் நகரைவிட்டு வெளியேறினார்கள். காலி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வெள்ளை வான் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. அந்த வெள்ளை வான் பழுதடைந்ததால் அதன் சாரதி அதனைச் செலுத்த முடியாமல் பொலிஸ் நிலையம் அருகில் நிறுத்திவிட்டு, கராஜ் ஒன்றுக்கு சென்றுவிட்டார். அவர் திரும்பிவரத் தாமதமானது. அதனை அறியாத சிலர் அந்த வான் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருப்பதை அவதானித்து, அதனுள் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பிவிட்டனர். இது நகர் எங்கும் பரவியதால…
-
- 1 reply
- 896 views
-
-
கடந்த கால வரலாற்று தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுக்கும் மகிந்த அரசு -புரட்சி (தாயகம்)- பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 19 ஆம் நாள் மகிந்த அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ?குடும்பி மலை வெற்றிவிழா? நிகழ்வானது எந்தவிதமான களிப் பேருவகையோ அல்லது எதிர்பார்ப்புக்களோ இன்றி சப்பென்று நிறைவடைந்துவிட்டது. பௌத்த பேரினவாதத்தினை மாணவர்கள் உள்ளடங்கலாக அனைத்து சிங்கள மக்களின் மனங்களிலும் ஊட்டி தனது தொடர்ச்சியான போர் முயற்சிகளுக்கு ஆதரவு தேடுவதற்காகவும் மக்களின் வாழ்க்கைச் செலவுச்சுமை மற்றும் ஏனைய பொருளாதார நெருக்கடிகளையும் மறைப்பதற்காகவும் மிகவும் சிறந்த வழியாக இவ்விழா அமையும் என்று மகிந்த அரசினால் பெரிதும் நம்பப்பட்டபோதிலும் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறாக ச…
-
- 1 reply
- 1k views
-
-
வெள்ளி 27-07-2007 03:22 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் - அமெரிக்கா மீண்டும் அக்கறை சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி பேணப்பட வேண்டும் எனஇ அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய அமெரிக்காவின் மனித உரிமைகள்இ ஜனநாயகம்இ மற்றும் தொழிலாளர்களுக்கான அமைச்சின் உதவிச் செயலாளர் ஜெஃப்றி கிரில்லாஇ புஸ் அரசாங்கம் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். அத்துடன்இ கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தில் பணியாளர்களை அதிகரித்துஇ மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாகவும் ஜெஃப்றி கிரில்லா கூறியிருக்கின்றார். …
-
- 1 reply
- 929 views
-
-
Posted on : 2007-07-27 அரசியல் விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் ஊடகவியலாளன் மனித வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. ஆனால் போராட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டால்.....? ஆயுதம் தாங்கிய போராளிகளினது மட்டுமல்ல, எழுது கோல் எடுத்த எழுத்தாளர்களின் ஊடகவியலாளர்களின் வாழ்க்கையும் உலகில் இன்று போராட்டம் என்றாகிவிட்டது. அதுவும் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களின் நிலையோ மிக மோசம். இருப்பு என்ற வாழ்வியலுக்குள் இருந்து இல்லாமை என்ற சூனியத்துக்குள் சாவுக்குள் எக்கணமும் வல்வந்தமாகத் தூக்கி வீசப்படலாம் என்ற பேராபத்து நிலைக்குள்தான் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களின் அன்றாடப் பணி இன்று கட்ட விழ்கின்றது. இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தாம் நேசிக்கும் ஊட கப் பணியை விட்டொழிந்தவர்கள் விட்டொளித்தவர்கள் பல…
-
- 0 replies
- 783 views
-
-
மனோ கணேசன் சூளுரை தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் உயிருக்குப் பயப்படாது நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இந்த அரசை கூண்டோடு அழித்தெறிய வேண்டும். இவ்வாறு மேலக மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சூளுரைத்தார். நேற்று மாலை ஐ.தே.க வும் சு.க மக்கள் பிரிவினறும்; இணைந்து ஏற்பாடு செய்திருந்த அரசுக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது : இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு விலைவாசிப் பிரகச்சினை,சுகாதராப் பிரச்சிலை,மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை விடவும் அவர்களுக்…
-
- 1 reply
- 1.7k views
-
-
தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்தனர்: நீதிமன்றில் சிறிலங்கா அரசாங்கம். சிறிலங்காவில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கொழும்பு விடுதிகளிலே தங்கியிருந்தனர் என்று சிறிலங்கா தலைமை நீதிமன்றில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை சிறிலங்கா தலைமை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விசாரணைகளின் போது சிறிலங்கா அரச தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி பாலித பெர்னாண்டோ, தமிழர்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். கொ…
-
- 2 replies
- 1.1k views
-