ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 29 மே 2007, 16:36 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழக…
-
- 3 replies
- 1.5k views
-
-
விமான நிலையம், துறைமுகங்களில் சர்வதேச காப்புறுதியை இலங்கை இழக்கும் சாத்தியம் [29 - May - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்து உலகில் யுத்த அச்சுறுத்தலுக்குள்ளாகிய நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்காவையும் சேர்த்து யுத்த அபாய நாடாகத் தரப்படுத்தி அறிவிப்பதா இல்லையா என்பது பற்றி சர்வதேச காப்புறுதி அமைப்பும் பிரிட்டனில் தலைமையகத்தை உடையதுமான லோயிட்ஸ் சர்வதேச காப்புறுதி நிறுவனம் விரைவில் அறிவிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இவ்வாறு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கிடையில் மேற்படி பிரதான சர்வதேச காப்புறுதி நிறுவனம் ஸ்ரீலங்கா பற்றிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிடவுள்ளது. ஸ்ரீலங்காவில் நிலவும் யுத்த அபாய நிலைமை காரணமாக அதன் விமான நிலைய…
-
- 2 replies
- 1.8k views
-
-
புஷ்ஷை அடியொற்றி யுத்தத்தை முன்னெடுத்தால் `படுகுழிதான்' [29 - May - 2007] * தமிழ் மக்களோடு அதிகாரத்தை பங்கிட்டு அபிவிருத்தியில் அவர்களை பங்காளியாக்கினால் நாட்டுக்கு விடிவு தொலைவில் இல்லை அண்மையில் ஜோர்தானில் இடம்பெற்ற எ11 உலக பொருளாதார மன்ற மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி தொடர்பாக விளக்கமளித்தார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பேணுவதில் தனது அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், இலங்கை ஒரு மிகக் குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடு (LDC) அல்ல என்ற வகையில் சலுகை அடிப்படையில் வெளிநாட்டு நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளும் வசதிவாய்ப்பு கிடையா…
-
- 0 replies
- 1.7k views
-
-
நாம் நாமாக, நாம் தமிழர்களாக இருப்போம் `எங்கள்', `உங்கள்' என்று பிரித்துப் பேசாதீர் [29 - May - 2007] * உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கருணாநிதி வேண்டுகோள் தமிழ் நமது மொழி, அதுவே நமது வழி. எனவே `எங்கள்`, `உங்கள்' என பிரித்துப் பேசாதீர்கள். நாம் நாமாக இருப்போம். நாம் தமிழர்களாக இருப்போமென இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7 ஆவது மகாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்றுவந்தது. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்த…
-
- 0 replies
- 2.6k views
-
-
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் புனரமைப்புகளுக்கும் சேர்த்தே இலங்கைக்கு நிதி வழங்கப்படுகின்றது: ஜப்பான் அரசு. இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை எவையும் வழங்கவில்லை என்கிறது ஜப்பான். மனிதாபிமான நடவடிக்கைகள், புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும். இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டுமென்றே நாம் விரும்புகின்றோம். இராணுவ ரீதியான உதவிகளையோ, ஆயுதங்களையோ இலங்கைக்கு ஒருபோதும் வழங்கவில்லை. எனவே, இலங்கைக்கான நிதியுதவிகளை குறைப்பதில்லை என்ற நிலையில் நாம் உறுதியாக உள்ளோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. சர்வதேச மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்தவாரம் ஜப்…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜப்பான் பிரதம மந்திரிக்கு ஒரு மடல் ஜப்பான் நாடு தான் அதிகளவில் இலங்கை அரசுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. இதனைக் குறைக்க உடனடியாக பின்வரும் கடிதங்களில் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக அனுப்பவும் கடிதம் 1 Subject- Sri Lanka, conflict and foreign aid Body- Dear Prime Minister of Japan Japan provides more than 60% of foreign aid to Sri Lanka. Sri Lanka is the most militarised country in South Asia- a 'democracy' more militarised than military-ruled Pakistan! Northeast Sri Lanka has been devastated by 30-year war. Sri Lanka has been more under Emergency rule than under democracy rule since 'independence'. Sri Lanka will need a lot of foreign ai…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஸ்பைன் அரசின் நிதியுதவியுடன் மூன்று பாலங்கள் புனரமைப்பு வீரகேசரி நாளேடு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று முக்கிய பாலங்களைப் புனரமைப்புச்செய்வது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் திருகோணமலை கச்சேரி ஆளுநர் விடுதியில் இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் டீ.டீ.ஆர்.டி. சில்வா தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சர் நஜீப்.ஏ.மஜீத், வீதி அபிவிருத்திச்சபை உயர்அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். யான்ஓயா, புல்மோட்டை, புடைவைக்கட்டு ஆகிய பாலங்கள் புனரமைப்பு செய்வது சம்பந்தமாகவே இவ் ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றது. இப்பாலங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் வேலைத்திட்டக்காரியாலயம் (யுனொப்ஸ்) அமுல்படுத்தவுள் ளது. இதற்கான நிதிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் ரணில் வீரகேசரி நாளேடு இலங்கையின் அரசியல் வரலாற்றில் நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் அரசியல்வாதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என்று ரணில் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி பொறுப்புடன் செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். நாட்டை அழித்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்க்ணடவாறு கூறினார். இவ்விடயம் குறித…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Tue May 29 5:59:54 EEST 2007 நாட்டைப் பாதுகாப்பதற்காக "இறைவனிடம் வேண்டுதல்' வழிபாடு நாடு முழுவதும் ஐ. தே. கவின் சமய வழிபாடுகள் மனித உரிமை மீறல்கள் உட்பட அர சின் செயற்பாடுகளில் இருந்து நாட்டைக் காக்கும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சி "இறைவனிடம் வேண்டுதல்' என்ற பெயரில் நாடு முழுவதும் சமய வழிபாடுகளை நடத்தவுள்ளது. நாட்டில் இடம்பெற்றுவரும் ஆட்கடத் தல்கள், கொலைகள், கப்பங்கோரல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள், விலைவாசி அதிகரிப்பு, யுத்தம், அரசில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் ஊழல் மோச டிகள் போன்றவற்றை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் நடத்திவரும் எதிர்ப்பு நிகழ்வுகளில் ஒன்றாக "இறைவனிடம் வேண்டுதல்' என்ற தலைப் பில் சமய வழிபாட்டுப் போராட்டத்தைத்…
-
- 1 reply
- 1k views
-
-
Posted on : Tue May 29 5:55:01 EEST 2007 மட்டு. விமானப்படைத் தளத்தினுள் நுழைய முயன்ற பெண் மீது சூடு! மட்டக்களப்பில் உள்ள விமானப்படையினரின் முகா முக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானப்படைத்தளத் தின் பாதுகாப்பு வேலியைக் கடந்து குறிப்பிட்ட பெண் உள்ளே நுழைய முற்பட்ட வேளை யிலேயே படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதுடைய இந்தப் பெண் எதற்காக முகாமுக்குள் நுழைய முற்பட்டார் என்பதுகுறித்து எதுவித தகவல் களும் வெளிவரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் படையினர் விசாரணை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
உளுத்துப் போன திட்டங்கள் தீர்வு யோசனை வடிவத்தில்! இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசுப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருமே தத்தமக்கு இராணுவ வெற்றி கிட்டும் என்பதில் அதீத நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றார்கள். அதனால் இலங்கையில் வரும் வாரங்களில் வன்முறை கட்டவிழ்ந்து, போர் வெடித்து, இரத்த ஆறு ஓடுவது நிச்சயம். இலங்கை நிலைவரம் குறித்து இராஜதந்திரிகள் இவ்வாறு கணிப்பீடு செய்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. ஒரு பக்கத்தில் போர் முரசம் அறையப்படுகையில், மறுபக்கத்தில், அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சர்வதேச சமூகத்துக்குக் காட்டும் ஏமாற்று நாடகமும் அரங்கேறுகின்றது. இந்த அபத்த நாடகத்தின் ஓர் அங்க…
-
- 0 replies
- 865 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி உண்மையானது என்று கருணாவுடன் முரண்பட்டுத் தனிக்குழுவாக இயங்கத் தொடங்கியிருக்கும் பிள்ளையான் அணி உறுதி செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணா, தமது குழுவுக்குள் மோதல்கள் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார். எனினும் சில நிமிடங்களில் எமது அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிள்ளையான் தமது குழுவுக்குள் மோதல்கள் தீவிரமடைந்திருப்பது உண்மையே என தெரிவித்துள்ளார். சிலர் கருணா குழுவை பிரிக்…
-
- 0 replies
- 1k views
-
-
கொடிகாமம் ஏ-9 பாதையில் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல். ஏ-9 பாதையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா படையினர் மீது திங்கட்கிழமை மாலை 4.30ற்கும் 5.30 ற்கும் இடையில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த படையினரை நோயாளர் காவு வண்டியில் கொண்டு சென்றதை பார்வையிட்ட அவ்வூர் பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து படையினர் ஏ-9 வீதியை கொடிகாமத்திற்கும் சாவகச்சேரிக்கும் இடையில் மாலை 4.30 மணியில் இருந்து மூடியுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஐந்து நாட்களில் நிகழ்ந்த மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 1 reply
- 1.3k views
-
-
எனது கணவரை சுடப்போகின்றனர்: இராணுவ கப்டனின் மனைவி தடுப்புக்காவலில் உள்ள சிறிலங்கா இராணுவ கப்டன் தர அதிகாரியான தனது கணவரை தடுப்பு முகாம் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப் போவதாக அவரது மனைவி அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடமும், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக கப்டன் சரத் புஸ்பகுமார குணவர்த்தனவின் மனைவியான சித்ரா குணவர்த்தன தெரிவித்துள்ளதாவது: எனது கணவர் இரகசியங்களை கூற மறுத்தால் அவரை சுட்டுவிடப்போவதாக தடுப்புக்காவல் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். 7 ஆவது கஜபாகு றெஜிமென்டில் பணியாற்றிய எனது கணவர் விடுதலைப் புலிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் மட்டக்களப்பில…
-
- 0 replies
- 1.3k views
-
-
அருஸ் (வேல்ஸ்)- அதிக படைவலு கொண்டு கிழக்கை கைப்பற்றுதல், கடுமையான வான் தாக்குதல் மூலம் வடக்கில் உள்ள விடுதலைப் புலிகளை ஒரு நெருக்கடிக்குள் தள்ளுதல், அனைத்துலக சமூகத்தின் முன் அனைத்துக்கட்சி, குழுவைக் கூட்டுதல் என்ற அரசின் நிகழ்சி நிரல்கள் வான்புலிகளின் தாக்குதலுடன் குழம்பிப் போய் உள்ளன. தனது அனைத்து போர்நிகழ்ச்சி நிரல்களையும் ஒதுக்கிவிட்டு வான்பரப்பின் பாதுகாப்பிற்கான ஆயுதக் கொள்வனவுகள், நிபுணர்களின் தேவை என கடுகதியில் செயலாற்றிவரும் அரசுக்கு தற்போது முதன்மையாக இருப்பது வான்பரப்பின் பாதுகாப்பே. விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதல் நிகழ்ந்து இரு மாதங்கள் கடந்த நிலையிலும் அரசு தனது வான் பாதுகாப்பு பொறிமுறைகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈ.பி.டி.பி.யினரை இராணுவத்தில் சேர்த்தோம் என்பது உண்மை. சீருடையும் உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. - முன்னாள்இராணுவ தளபதி சரத் முனசிங்க! ஜ திங்கட்கிழமைஇ 28 மே 2007 ஸ ஜ ஜெயராசா ஸ பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது மிக மிக கடினமான நடவடிக்கை. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞனிடம் உளவியள் ரீதியாகவும், அதன் பின்னர் அரசியல் தீர்வையும் முன்வைக்கும் போது பயங்கரவாதம் ஒருநாள் இல்லாமல் போகும். ஆனால் இது இரண்டாம் நிலைதான். முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழி வலுவைத் தோற்கடிக்க வேண்டும். எதிரியை வீழ்த்துவதற்காக எது கிடைக்கிறதோ அதனை அரசாங்கங்கள் பயன்படுத்துகின்றன. கருணாவை அரசாங்கம் பயன்படுத்துகிறது எனில் நாம் நல்ல முடிவை எட்டுவோம். புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம் இர…
-
- 1 reply
- 922 views
-
-
கருணா குழுவிடமிருந்து விடுபட்டுச் செல்ல முனையும் சிறுவர்கள் கொல்லப்படுகிறார்கள். (மறைக்கப்படும் சங்கதிகள்.) ஜ திங்கட்கிழமைஇ 28 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ கருணா குழுவின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்காக அல்லாமல் தன் குடும்பத்திற்கே உள்ளன என்பதை உணர்ந்து கொண்ட வயது குறைந்த சிறுவர்கள் சிலர் கருணாவை விட்டு விலகிச் செல்ல முனைகிறார்கள். இவ்வாறு விலகிச் செல்ல முனையும் சிறுவர்கள் தன் குடும்பத்திற்காக வாழ்வதல்ல வாழ்க்கை, ஒட்டுமொத்தத் தமிழினத்துக்காக வாழ்வதே வாழ்க்கையென்று உணர்ந்து கருணா குழுவை வி;ட்டு விலக முனைகிறார்கள். வெறும் தண்டச் சோறுகளாக தங்கி வெறும் கூலிப்படையாக இருப்பதை விட்டு, எந்தவிதத்திலாவது தமிழ் மக்களுக்காக உதவ வேண்டும் என்னும் உணர்வுகளுடன் விலகிச் செல்ல முற்படும் ச…
-
- 0 replies
- 744 views
-
-
நீண்ட காலமாக ஒரு விடுதலை அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை என்றால் தோல்வி அரசிற்கே: விடுதலைப் புலிகள் ஏட்டின் முதன்மை ஆசிரியர் [திங்கட்கிழமை, 28 மே 2007, 20:09 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலமாக ஒரு விடுதலை அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை என்றால் அங்கே தோல்வி போரிட்ட அரசிற்கே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எமது விடுதலைப் போராட்டம் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கின்றது. எனவே இப்போராட்டத்தில் நாம் வெற்றிபெற்ற நிலையிலேயே உள்ளோம் என்று விடுதலைப் புலிகள் ஏட்டின் முதன்மை ஆசிரியர் சு.ரவி தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற புலிகளின்குரலின் மாதாந்த முத்தமிழ் கலையரங்கில் கலந்து கொண்டு சிறப்புரைய…
-
- 0 replies
- 1k views
-
-
ஏ.கேயை மிரட்டும் இலங்கை மாபியாக்கள். ஜ திங்கட்கிழமைஇ 28 மே 2007 ஸ ஜ ஜெயராசா ஸ உலகநாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்தும் வார்த்தர்களின் வரிசையில் மலேசியாவில் ஏ.கே என்று செல்லமாக அழைக்கபடும் ஆனந்த கிருஷ்ணன் முக்கியஸ்தராக இருந்து வருகிறார். மலேசியா நாட்டின் பொருளாதரத்தில் முதன்மைபெறும் ஏ.கே அந்த நாட்டின் தந்தையாக பொருளியல் சமுகத்தால் அழைக்கப்படும் பெரு மதிப்புக்குரியவர். யாழ்ப்பாணம் சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்மீது சேறடிக்கும் வேலையில் பஞ்சிகாவத்தை வீதியில் துண்டுபிரசுரம் ஒட்டும் ஜே.வி.பி கும்பல் சேறடிக்க முற்படுகின்றது. அண்மையில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை இவர் கொள்வனவு செய்தமைக்காக இவரை மிகவும் இழிவாகவும் சூதாட்டத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 1.7k views
-
-
~இது அல்ல போர் தர்மம், ஆமாம் ஊடக தர்மமும் இதுவல்ல| -பரணி கிருஸ்ணரஜனி- கன்னியாகுமரி மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரமும் பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமும் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் தமிழ்த்திரைப்படங்களில் வரும் திரைக்கதையை விஞ்சும் அளவிற்கு திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. ஏற்கனவே ஐந்து மீனவர்கள் படுகொலை, 'மரியா" என்ற படகில் வைத்து ஐந்து புலிகள் கைது செய்யப்பட்டமை, கடத்தப்பட்ட ஒரு மீனவர் மாலைதீவிற்கு அருகில் ஒரு மர்மக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டமை என்று பல உதிரிக்கதைகளாலும் கிளைக்கதைகளாலும் பல திருப்புக் காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைக்கதையின் சிருஸ்டிகர்த்தாக்களான சிங்கள அரச புலனாய்வுத்துறையினருக்கும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையினருக்கும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகளின் விமானப்படையால் இந்தியாவுக்கு ஆபத்த இல்லை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்..எம் கே நாராயணன் கூறி இருக்கின்றார்...புலிகளிடம் தற்போது வான்பலமும் சேர்நத இரப்பதால் இந்தியாவுக்கு எந்த வித அச்சுறுத்தலமு; இல்லை..இருப்பினும் இது தொடர்பாக போதுமான பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு இருக்கின்றன.. தகவல் சுண்டல் 24 மணிநேர செய்திச்சேவை...
-
- 0 replies
- 673 views
-
-
இரத்மலானையில் குண்டு வெடிப்பு ஒன்று நடைபெற்றதாக செய்திகள் வருகின்றன. மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
-
- 21 replies
- 5.3k views
-
-
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக படையினரும் பொலிஸாரும் குவிப்பு. Written by Ellalan - May 28, 2007 at 03:58 PM யாழ். பல்கலைக்கழகம் இன்று வழமை போன்று இயங்கத் தொடங்கியுள்ளது கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவாகள் கடத்தப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைப்பயமுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து வகுப்புக்களைப் பகிஸ்கரித்து வந்தார்கள் யாழ்ப்பாணத்தின் கல்விமான்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் வழங்கிய உறுதி மொழிகளைத தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள் இதே நேரம் பல் கலைக்கழக சுற்றாடலில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் வழமைக்கு மாறாக அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தாh…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கள் 28-05-2007 15:25 மணி தமிழீழம் [சிறீதரன்] உண்மையைக் கூற மறுத்துவரும் அதிகாரிகள் யாழ் குடா நாட்டில் கடமையாற்றும் பல உயர் அதிகாரிகள் உண்மையைப் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தாது ஏமாற்றிவருகின்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் மீது கட்டுப்பாட்டு விலையை கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும் எந்த வகையான நடவடிக்கையையும் இந்த அதிகாரிகள் தொடர்ந்து மேற் கொள்வதில்லை. வர்த்தகர்கள் குறிப்பிடும் விலையை இவர்கள் சட்டப்படி பொது மக்களுக்கு ஏற்று வெளிப்படுத்தும் நடவடிக்கையே இடம் பெற்று வருகின்றது. விலைப்பட்டியல் வர்த்தக நிலையங்களில் வைக்கப்படுவதும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலின் முக்கியத்துவம்! கடலிலும் தரையிலும் சண்டை செய்கின்ற வலிமை வாய்ந்த விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவு கடற்படைத் தளத்தை நேற்று (24.05.07) தாக்கி அழித்த சம்பவம் சிறிலங்கா அரச தரப்பில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதிகாலை 1 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவின் தென்பகுதியில் தரையிறங்கி, கடற்படைத் தளம் மீது தாக்குதலை தொடுத்தது. இரண்டு மணி நேர கடும் சமரின் பின்னர் கடற்படைத் தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அதே வேளை சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகுகளும், நீருந்து விசைப்படகுகளும் நெடுந்தீவுக்கு விரைந்து வந்தன. அந்தப் படகுகள் மீதும் கடற்புலிகள் தாக்குதல் …
-
- 0 replies
- 2.2k views
-