Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் அதிகாலை வேளையில் வான் தாக்குதல். சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு வானூர்திகள் முல்லைத்தீவுப் பகுதியில் இன்று அதிகாலை குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வந்த இரு மிக் - 27 ரக வானூர்திகள் இத்தாக்குதலை நடத்தி விட்டுச் சென்றன. இதில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. -Puthinam-

  2. ஜனாதிபதியின் வத்திக்கான் விஜயம்: எந்த நோக்கத்தைக் கொண்டது? கொழும்பு, ஏப்.22 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வத்திக்கான் விஜயம் எந்த நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து வாதப் பிரதி வாதங்கள் எழுந்துள்ளன. நாட்டின் இப்போதைய பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சிகளில் ஒன்றாக சர்வதேசத்தின் ஆதரவைத் தேடும் ஓர் அங்கமாகவே, ஜனாதிபதியின் வத்திக்கான் விஜயம் அமைகின்றது என்று இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத் தீர்வைக் காணும் தனது தற்போதைய செயற்பாட்டுக்கு புனித பாப்பரசரின் ஆதரவைத் தேடும் பொருட்டே ஜனாதிபதி வத்திக்கான் சென்றார் என்று கத்தோலிக்கப் பிரமுகர்கள் பலரும் சந்தேகம் எழுப்பி உள்ள…

  3. கிழக்கு அகதிகளும் இந்நாட்டு மக்கள்தானே அவர்களுக்கு ஏன் தனி அடையாள அட்டை? தேவையற்ற வேலை என்று அரியநேத்திரன் சீற்றம் மட்டக்களப்பு அகதிகளை மீளக் குடியமரச் செய்வதற்காக அரசால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடும்ப அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் கடுமையாக எதிர்த்துள்ளார். இத்திட்டம் மூலம் மீள்குடியேற்றத்தை மேலும் தாமதமாக்குவதற்கே அரசு முடிவெடுத்துள் ளது என்று அவர் குற்றஞ்சாட்டியுள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறிய தாவது: ""ஜூலை மாதம் 31ஆம் திகதிக்குள் மட்டக்களப்பு படுவான்கரை அகதிகளை மீளக்குடியமர்த்த அரசு தீர்மானித்துள்ளது. ""இந்தக்கால எல்லை மிக அதிகம். இந் நிலையில் மீள்குடியேற்…

  4. ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய மகிந்த முயற்சி. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 7 முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்ய மகிந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் சி.ஆர்.டீ சில்வா மற்றும் சிறிலங்கா காவல்துறைத் தலைவர் விக்ரர் பெரேரா ஆகியோரிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு செய்துள்ளார். மகிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இத்தகைய எந்த ஒரு நடவடிக்கையும் ஜனநாயகத்தன்மையற்று- சட்டவிரோதமானது. மனித உரிமை மீறலானது என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் பணிகளை மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொ…

    • 2 replies
    • 1.5k views
  5. சிறிலங்காவிற்கான நிதியை முடக்க வேண்டாம்: புஸ்சுக்கு மகிந்த அவசர கடிதம். சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை முடக்க வேண்டாம் என அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை தாம் விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் தனது கடிதத்தில் உறுதியளித்துள்ளார். சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களால் ஏறத்தாழ 300,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். எனவே இதனை கட்டுப்படுத்த அழுத்தங்களை கொண்டு வருமாறு அமெரிக்காவிற்கு அதன் செனட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய அமைப்புக்களிடம் இருந்து அதிக அழுத்தங்கள…

  6. ஐ.நாவின் உதவி அமைப்பை தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவு. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புக்களின் இணைப்பு அமைப்பை சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் உருவாகியுள்ள தமிழர் பகுதிகளான வடக்கு - கிழக்கு மாகாணங்களை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த அமைப்பு அதன் தேவைக்குரிய காலப்பகுதியை விட அதிக காலம் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது ஆழிப்பேரலை நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சிறிலங்காவிற்கு வந்திருந்தது. எனினும் வேறு பல தேவைகளுக்காக இங்கு அது தொடாந்து தங்கி சேவைகளை ஆற்றி வருகின்றது. …

  7. யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா படையினர் கடத்தல். யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா உந்துருளி படையினர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் சரசாலைப்பகுதியில் இரு இளைஞர்களை துரத்திச் சென்ற நான்கு உந்துருளிப்படையினரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. -Pathivu-

    • 7 replies
    • 2.2k views
  8. காணாமல்போனோரை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் விளம்பரத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு தமிழ் மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் "புனித போர்" என்ற போர்வையில் முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான ஷ்ரீதுங்க ஜயசூரிய காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை பயங்கரவாதிகளாக சித்திரித்து "டெய்லி நியூஸ்" ஆங்கில பத்திரிகையில் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஐக்கிய சோசலிச கட்சியின் சோசலிச மே தின ஊர்வலம் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவ…

  9. இலங்கையரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்கள் * பாப்பரசரிடம் கஜேந்திரன் எம்.பி. வேண்டுகோள் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக அரசாங்கமும் அதனோடு சேர்ந்தியங்கும் குழுக்களும் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுமாறு புனித பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக புனித பாப்பரசருக்கு கஜேந்திரன் எம்.பி. அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் இனப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்காக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் …

  10. மோட்டார் சைக்கிள்கள் பறிக்கப்படுவதால் பாவனையாளர்கள் கடும் விசனம் அம்பாறை மத்திய முகாம் பகுதியில் விஷேட அதிரடிப் படையினரால் பொதுமக்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படுவது குறித்து கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய முகாம் பகுதியில் அதிரடிப்படையினர் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரை வழிமறித்து மோட்டார் சைக்கிளை பறித்து தமது தேவைகளுக்கு கொண்டு செல்வதனால் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளில் பயணிப்போரை வழிமறித்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை இறக்கிவிட்டு, மோட்டார் சைக்கிள்கள…

  11. ஆங்கிலத்தில் இருப்பது அவர்கள் உண்மையில் எழுதியது அத்ஹு வெட்ட்டி ஒட்டப்பட்டு உள்லது.தமிழில் இருப்பது சிங்களம்ம் கலந்த ஆங்கிலத்தில் அவர்கள் எழுதியதன் மொழி பெயர்ப்பு. இந்த தகவல் எடுக்கப்பட்ட தளம் முக்கியம் இல்லை என கருதுவதனால் மறைகப்பட்டுள்ளது BUA Senior Member-Machan the latest one- WELLAWATTE = WELLAWATTEY மச்சான் கடைசிய்யா வந்தது வெள்ளவத்த=வெள்ளவத்தை deffa Senior Member-aiyo mama inne wallawatte..thama ehema wela nahe....there are a loto of ltte ppl aroun ma place... நான் வெள்ளவத்தையில் தான் இருகிறன் இன்னும் அந்த நிலமை வரவில்லை என்னை சூறி கனக்க ltte ஆக்கள் இருகிராங்கள் BUA Senior Member-Quote: No machan I have said that bec…

  12. வெள்ளி 20-04-2007 20:08 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் புத்தாண்டு பலகாரம் கொடுத்து படம் எடுக்கும் இராணுவம். யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம் அதிகாரிகள் அரச அலுவலகங்கள் மற்றும் வீதியால் செல்லும் பொது மக்களுக்கு புத்தாண்டையொட்டி பலகாரங்கள் கொடுத்து புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அரச அலுவலகங்களுக்குச் செல்லும் இராணுவ உயர் அதிகாரிகள் பலகாரங்கள் மற்றும் உணவுப் பாசல்களைக் கொடுத்து உண்ணச் செய்து புகைப்படங்களை எடுத்து வருகின்றார்கள். அரச அதிகாரிகளும் தற்போதைய யாழ் குடா நாட்டின் நிலமையைக் கருத்தில் கொண்டு இதனை மறுக்க முடியாது ஏற்று வருகின்ற நிலமை காணப்படுகின்றது. …

  13. கட்டுநாயக்க வான்படைத் தளத்தை அண்டிய பகுதியில் பதுங்குகுழி. தமிழருக்கு சொந்தமான நீர்கொழும்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் பாதுகாப்பான பதுங்குகுழி ஒன்று இரகசியமாக அமைக்கப்பட்டு வந்ததை நீர்கொழும்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அயலவர்களின் தகவலை அடுத்து, கந்தானைப் பிரிவில் உள்ள டெல்கசன்டியாப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சோதனையிட்ட காவல்துறையினர் வீட்டின் அறை ஒன்றினுள் பதுங்குகுழி அமைக்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த வீட்டின் உரிமையாளர் வவுனியாவைச் சேர்ந்த தமிழர் எனவும், அவர் தனது மனைவி பிள்ளைகளுடன் அருகில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் காவல்துறை…

  14. காணாமல்போனோரை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் விளம்பரத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு [21 - April - 2007] *ஷ்ரீதுங்க ஜெயசூரிய தெரிவிப்பு -த.தர்மேந்திரா- தமிழ் மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் "புனித போர்" என்ற போர்வையில் முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான ஷ்ரீதுங்க ஜயசூரிய காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை பயங்கரவாதிகளாக சித்திரித்து "டெய்லி நியூஸ்" ஆங்கில பத்திரிகையில் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஐக்கிய சோசலிச கட்சியி…

  15. இரட்டைச் சுமையுடன் மக்கள் [21 - April - 2007] [Font Size * மனித உரிமைகள் சிக்கலில் அரசு கடந்த வாரம் தமிழ், சிங்கள புத்தாண்டு பிறந்தது. பெரிய இடங்களின் மனிதர்கள் எனப்படுவோருக்கும் வசதிகள் வாய்ப்புகள் உடையோருக்கும் புத்தாண்டு அர்த்தமுடையதாகவும் முழுமை கொண்டதாகவும் அமைந்திருந்தது. ஆனால், வாழ்க்கை நெருக்கடிகளையும் துன்பங்களையும் சோகங்களாகவும் சுமைகளாகவும் தாங்கி நிற்கும் ஏகப்பெருவாரியான மக்களுக்கு புத்தாண்டு வெறுமை கொண்டதாகவே அமைந்திருந்தது. ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சொற்சிலம்பம் நிறைந்த வாழ்த்துச் செய்திகள் வெளியிட்டிருந்தனர். புத்தாண்டில் மக்களுக்கு புதிய ஒளி பிறக்கட்டும் சமாதானம் மலரட்டும். மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும் என்றெல்…

  16. உள்ளுர் படையதிகாரிகளுடன் யாழ்மாவட்ட கட்டளையதிகாரி இரகசியச் சந்திப்பு. யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள அச்சநிலை காரணமாக உள்ளுர்மட்ட அரிகாரிகளுடனான சந்திப்பொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரகசியமாக பலாலி படைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் குடாநாட்டில் சிறிலங்காப் படையினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனரீதியான பாதிப்புக்கள் மற்றும் படையதிகாரிகளின் கட்டுப்பாடுகளை படையினர் ஏற்கமறுப்பதுடன் சில இடங்களில் படையினருக்கும் அதிகாரிகளுக்கிடையேயும் முரண்பாடுகள் தோன்றி துப்பாக்கிசூட்டில் முடிந்திருப்பதால் ஏற்பட்டுள்ள படைப்பிளவை அடுத்து உள்ளுர்மட்டஅதிகாரிகளை யாழ்மாவட்ட கட்டளை அதிகாரி சந்திரசிறி சந்தித்து படை…

  17. அவர்கள் சிங்கள கடற்படையா? இலங்கை தமிழரா? - மரியா படகின் மர்மம் விலகிய கதை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள்தான். அவர்கள்தான் குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றவர்கள்!’ என்று பகீர் செய்தியைக் கசிய விட்ட போலீஸ், மறுநாளே ‘அவர்கள் சிங்களர்கள் இல்லை. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்!’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. இதனால் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்களர்களும் திடீர் திடீரென்று காக்காய் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக்கொல்வது வாடிக்…

  18. Pope Benedict XVI மேலே மகிந்துவுடன் படங்களில் காணப்படுகின்றார். படங்கள் மூலம்: Reuters, நன்றி!

    • 14 replies
    • 2.7k views
  19. சர்வதேசத்தின் கணிப்பு தடம் மாறிச் செல்கிறதா? ` இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இதனால்தான் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலை உருவாக வழிவகுத்தது இலங்கை அரசுதான். இப்படி அரசு மீது குற்றம் சுமத்தியிருக்கின்றது பிரதான எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி. நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாட்டு இராஜதந்திரிகள் வரம்பு மீறித் தலையிடுகிறார்கள் எனத் துள்ளிக் குதித்துச் சீறுகின்றது அரசு. ஆனால் அவ்வாறு அவர்கள் தலையிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்கு அடிப்படையே அரசின் குளறுபடிப் போக்கும் செயற்பாடும்தான். இலங்கையில் அரசின் பின்புல நடவடிக்கைகளாக அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்கள…

  20. விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்க கிறீஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை. கிறீஸ் நாட்டுக்கு சென்றுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, கடந்த புதன்கிழமை கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது விடுதலைப் புலிகள் மீது தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் அனைத்துலக நாடுகள் தமது மக்களுக்கு சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கைகளை விடுக்கும் போது வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் பாதுகாப்பானவை என சுட்டிக்காட்ட வேண்டும் எனவும், ரோகித போகல்லாகம இந்த சந்திப்பின் போது கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த கிறீஸ் வெளிவிவகார அமைச்சர் மடம் டோரா போகயானீஸ் சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் முழு அளவில் ஒத்துழைப்பத…

  21. முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது [வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007, 15:13 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது. முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு …

  22. இராணுவத் தீர்விலேயே அரசுக்கு அதிக கவனம் பேச்சு சாத்தியமில்லை என்கிறார் இளந்திரையன் கிளிநொச்சி, ஏப். 21 ஸ்ரீலங்கா அரசு இராணுவத் தீர்வில் அதிக கவனம் செலுத்தும்போது சமாதானப் பேச் சுகள் என்பது சாத்தியமற்றது என விடுதலைப் புலிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ""பேச்சுக்கள் மூலம் சமாதான ரீதியில் தீர்வை எட்டக்கூடிய நிலையில் ஸ்ரீலங்கா அரசு இராணுவத் தீர்விலேயே அதிக அக்கறை காட்டி தமது நடவடிக்கைகளைத் தொடர்கின்றது'' என்று கூறினார். ""அரசு யுத்த அணுகுமுறையில் நாட்டம் கொண்டுள்ளபோது உடனடியான பேச் சுக்கள் மூலம் தீர்வு எட்டுவது சாத்தியமற்றது'' எனவும் இளந…

  23. புலிகள் மீதான ஐரோப்பியத் தடையை உடன் நடைமுறைப்படுத்துக: இத்தாலியிடம் அதிபரிடம் மகிந்த ராஜபக்ச வலியுறுத்து. புனித பாப்பரசரின் அழைப்பின் பெயரில் இத்தாலிக்கு மூன்றுநாள் அரச பயணமாகச் சென்றிருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இத்தாலிய அதிபர் சில்வியோ பெலுஸ்கோனியைச் (Silvio Berlusconi) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் விடுதலைப் புலிகள் மீது இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வில்லை எனவும் அவற்றை உடனடியா நடைமுறைக்கு கொண்டுவருமாறு இத்தாலி அதிபரிடம் வலியுறுத்தியுள்ளளார். நாளை புனித பாப்பரசரை மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடவுள்ளார். -Pathivu-

  24. பேச்சு நடத்த நோர்வேத் தூதுவர் வன்னிக்கு விஜயம்: புலிகள் நடத்திய வான் தாக்குதலின் பின்னர் அங்கு வரும் முதலாவது முக்கிய ராஜதந்திரி. * வடக்கு கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களைத் தணிப்பது. * கடந்த வருடம் ஒக்ரோபருக்குப் பின்னர் ஒரேயடியாகத் தேக்கநிலை அடைந்திருக்கும் சமாதானப் பேச்சுக்களின் எதிர்காலக் கதி. இவை இரண்டு குறித்தும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், எதிர்வரும் திங்கட்கிழமை வன்னிக்கு முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் இப்போது இங்கு வருகைதரும் நோர்வேத் தூதுவர், விடுதலைப் புலிகள் கடந்த மாதம் 26ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானத்தளம் மீது தாக்குதல் நடத்திய பின்னர் வன்னி…

  25. சர்வதேச சமூகத்தை கையாளும் இராஜதந்திரம் ` "கெடுவான் கேடு நினைப்பான்.' என்பார் கள். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்பவர்களின் நடவடிக்கைகளை நோக்கும் போது இந்தக்கூற்று கனகச்சிதமாகப் பொருந்துகின்றது என்றே தோன்றுகின்றது. நாட்டில் கொடூர மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக இடம்பெறுவதால் நாட்டுக்கும் அரசுக்கும் அரசுத் தலைமைக்கும் கெட்டபெயர். அதை மேலும் கெடுப்பது போல, மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மை நிலையை அம்பலப் படுத்தும் ஊடகங்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முயல்வது, மனித உரிமை மீறல்கள் குறித்து சிரத்தை எடுக்கும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுடன் பகி ரங்கமாக முரண்படுவது என்று விரும்பத்தகாத காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம் என வெளிப் பேச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.