Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில தீர்மானங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு இடையூறாக அமைகின்றது – நோர்வே வெளிநாட்டமைச்சர் “நோர்வேயின் வெளிவிவகாரக் கொள்கையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையுடனான ஒத்துழைப்பும்” என்ற தொனிப்பொருளிலான வருடாந்த ஐரோப்பிய மாநாடு நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் ஹகஹர் ஸ்ரோ (Jonas Gahr Støre) சிறிலங்காவின் சமாதானப் பேச்சுவார்தைகள் குறித்தும் உரையாற்றியிருந்தார். நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் பல செயற்பாடுகளில் கருத்து ஒற்றுமையைக் கொண்டுள்ளபோதிலும் சிலவற்றில் வேறுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த …

  2. புலிகளின் இலகுரக விமானங்களை அழிக்க அதிசக்திவாய்ந்த மிக்-29 ரக விமானங்கள் தேவையா? அரசாங்கம் இந்தியாவுடனா யுத்தம் செய்யப்போகின்றது? - ஐ.தே.க. அதி சக்திவாய்ந்த மிக்-29 ரக விமானங் கள் நான்கை கொள்வனவு செய்வதற்கு அர சாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை அழிப்பதற்கு இவ்வாறான அதிசக்தி வாய்ந்த விமானங்கள் தேவையா? ஒரு விமானம் 160 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.இவ்வாறான அதி சக்திவாய்ந்த விமானங்களை கொண்டு அரசாங்கம் இந்தியாவுடனா யுத்தம் செய்யப்போகிறது? இந்தியாவுடன் யுத்தம் செய்வதற்கு இவ்வாறான விமானங்கள் போதுமானதல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெவித்தார். அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொண்ட…

  3. வியாழன் 24-05-2007 02:05 மணி தமிழீழம் [மயூரன்] ஏறாவூர் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் தளவை சவுக்கங்காடு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற மோதல்சம்பவத்தில் விடுதலைப்புலிகளில் மூவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் சிறீலங்கா படையினர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் ஒரு விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம்மோதல் சம்பவமானது புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது இறந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்…

    • 1 reply
    • 1.2k views
  4. நெதர்லாந்தில் இருந்து வந்த தாயையும் மகளையும் காணவில்லை [Wednesday May 23 2007 08:18:29 AM GMT] [யாழ் வாணன்] நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினமிரவு உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து செத்சிறிபாய பிரதேசத்திற்கு சென்ற இவர்கள் தொடர்பாக பின்னர் தகவல்கள் கிடைக்கவில்லை என உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செத்சிறிபாய பிரதேசத்தில் இறுதியாக ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் என ஆட்டோ சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். tamilwin.com

  5. பொலிஸ் நிலையத்தை படம் பிடித்ததாக 6 தமிழ் இளைஞர்கள் அனுராதபுரத்தில் கைது வீரகேசரி நாளேடு அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தினை செல்லிட தொலைபேசி மூலம் படம் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு தமிழ் இளைஞர்கள்க நேற்று காலை அனுராதபுரம் பொலிசாரினால் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதம இன்ஸ் பெக்டர் சரத்பிரேம கேசரிக்கு தெரிவித்தார். சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, வாகரை மற்றும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அனுராதபுரம் பொலிசார் மேலும் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்தினை செல்லிட தொலைபேசி மூலம் படம் பிடிப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதனையடுத்தே இவர்கள் பொலிசாரினால் சந்தேகத்த…

  6. யசூசி அகாசி யூன் மாதம் சிறீலங்கா பயணம் [புதன்கிழமை, 23 மே 2007, 22:28 ஈழம்] [காவலூர் கவிதன்] யப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி வருகிற மாதம் இலங்கைக்கு வரவிருக்கிறார். கொழும்பிலுள்ள யப்பானிய தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில், முறிவடைந்து போயுள்ள பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வதற்கான பயணமாக இது அமையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சமாதான செயலக அதிகாரிகள் உட்பட, பலரையும் சந்திக்கவுள்ள அகாசி, பின்னர் கிளிநொச்சி செல்வதற்கும் அனுமதி கோரியுள்ளார். எனினும், கிளிநொச்சி செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா வெளிநாட்டமைச்சு இதுவரை அவருக்கு வழங்கவில்லை என்றும் யப்பானிய தூ…

  7. படையினரின் வன்முறைகளை அரசு கண்டுகொள்வதில்லை: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு. சிறிலங்கா அரச படையினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அரசு விரும்புவதில்லை என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள சட்டவிதிளை பல வருடங்களாக நாம் அவதானித்து வந்ததில் இருந்து அங்கு ஒரு சமநீதியான சட்டவிதிகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. அங்கு நடைபெற்று வரும் கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் என்பன சட்ட ஒழுங்கின் குறைபாட்டிற்கான க…

    • 2 replies
    • 1.2k views
  8. அவுஸ்திரேலியா அரசு 5.25 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்களின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு தமது அரசு 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டெளணர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த நிதியானது சுய சேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும். முதற்கட்டமாக உலக உணவுத் திட்ட அமைப்பினுடாக நாம் 3 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளோம். இது அங்குள்ள 400,000 இடம்பெயர்ந்த மக்களின் அவசர உணவுத் தேவைகளுக்கும் வடக்கு - கிழக்கில் உள்ள 390,000 மக்களி…

  9. புதன் 23-05-2007 18:25 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தகளத்தில் புலிகளின் கைகள் மேலோங்கும் போதே ஆக்கபூவமான சமாதான நடவடிக்கைக்கு அரசாங்கம் முன்வரும் - கஜேந்திரகுமார் யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகள் மேலோங்கும் போதுதான் சமாதான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமான முன்னெடுக்க சிறீலங்கா அரசாங்கம் முன்வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி சிறீலங்காவுக்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தியுள்ள சர்வதே சமூகம் மறுபுறத்தில் சிறீலங்காவுக்கான யுத்த தளபாடங்களை வழங்கி அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருத முடியும் எனத் குறிப்பி…

    • 3 replies
    • 1.6k views
  10. புதன் 23-05-2007 17:37 மணி தமிழீழம் [தாயகன்] நாகர்கோவில் முன்னரங்கில் மோதல் யாழ் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிறிய மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலில், விடுதலைப் புலிகள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக படைத் தரப்பு அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. pathivu

  11. இலங்கை: மனிதாபிமான உதவிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி [புதன்கிழமை, 23 மே 2007, 15:22 ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்களின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு அவுஸ்திரேலியா அரசு 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதியானது சுய சேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டெளணர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: உலக உணவுத் திட்ட அமைப்பினுடாக நாம் 3 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளோம். இது அங்குள்ள 400,000 இடம்பெயர்ந்த மக்களின் அவசர உணவுத் தேவைகளுக்கும் வடக்க…

  12. ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து மீண்டும் செஞ்சிலுவைச் சங்க கண்காணிப்பாளர்கள் வெளியேறினர் Wednesday, 23 May 2007 இலங்கையின் வடக்கே கடந்த நான்கு நாட்களாக மூடிக்கிடந்தபின், நேற்றுக் காலை திறக்கப்பட்ட ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடிப் பகுதியில் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றினையடுத்து, அங்கு பொதுப் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் தமது பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை…

  13. கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் பூட்டு. Wednesday, 23 May 2007 கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதான வாயில் பூட்டுபோட்டு பூட்டப்பட்டு கிடப்பதாக தெரியவருகின்றது மாணவர்களின் பதிஸ்கரிப்பு போராட்டத்தில் தொடர்ச்சியாக இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று காலை பாடசாலை வந்துள்ள பள்ளி நிர்வாகத்தினர் பாடசாலையின் பிரதான நுளைவாயில் பெரிய பூட்டு ஒன்றினால் பூட்டப்பட்டு கிடப்பதை கண்டுள்ளனர். படையினரின் அதிஉச்ச பாதுகாப்புக்கு மத்தியில் மாணவர்கள் துணிந்து சென்று நள்ளிரவு கதவுகளை பூட்டி தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாக தெரியவருகின்றது தமிழ் ஒசை

  14. புதன் 23-05-2007 13:39 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பில் தமிழர் ஒருவர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார் முன்னாள் யாழ் செயலக ஊழியரும் தற்போது கொழும்பு ராஜகிரியவில் வசித்து வருபவருமாகிய 30 அகவையுடைய கணேசன் உசாநாத் கடந்த ஞாயிறு முதல் காணாமல் போகடிகக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தைக்கு பால்மா வாங்குவதற்காக கடைக்கு சென்றபின் காணவில்லை என இவரது மனைவியால் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணம் சங்கரப்பிள்ளை வீதி ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் எனவும் ராஜகரியவில் சேர்ச் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் தெரியவருகிறது. pathivu

  15. திருச்சி 17 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த விடுதலைப் புலிகள் ஆதரவான, தமிழர் பாசறை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் குமார் என்கிற ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மன்னார்குடி அருகே உள்ள மேலப்பாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்கிற ராஜா (42). விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளிக்கும் தமிழர் பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த 1990ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குமார் என்கிற ராஜா முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தமிழர் பாசறை அமைப்புக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து நிதியுதவி கிடைத்து வந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு இலங்கையில் வைத்து புலிகள் ஆயுதப…

  16. ஏவி.எம். பேரனுக்கு புலிகள் பெயரில் மிரட்டல் மே 23, 2007 காரைக்குடி: மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் கொள்ளுப் பேரனுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஏவி.எம்மின் கொள்ளுப் பேரன் பழனியப்பன். இவர் காரைக்குடி சூடாமணி புரத்தில் வசித்து வருகிறார். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் பழனியப்பன். 2 நாட்களுக்கு முன்பு பழனியப்பன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், உங்களுக்கு ஒரு தபால் வரும் அதைப் பிரித்துப் பார், நான் காரைக்குடி முத்துப்பட்டணத்திலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அத…

    • 3 replies
    • 2.1k views
  17. தந்தைக்குச் சாப்பாடு கொண்டுசென்ற இளைஞன் சுன்னாகத்தில் வெட்டிக்கொலை யாழ்ப்பாணம், மே 23 சுன்னாகம் ஸ்ரேசன் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இளை ஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த திருச்செல்வம் திருபரன் (வயது 19) என்பவரே கொல் லப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிவான் திருமதி ச. இளங்கோவன் சம்பவ இடத்தில் விசாரணை களை நடத்தினார். மின்சார சபையில் பணிபுரியும் தமது தந்தைக்கு இரவு உணவை கொடுத்து விட்டு வீடு திரும்பியவேளை வழிமறித்த இனந்தெரியாத நபர்களால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் உதயன்

  18. சிங்களக் காற்று திசை மாறுகிறது! - சோலை ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா? உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவ…

  19. இலங்கை அரசைப் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் இப்போது சொல்கின்றன! நாடாளுமன்றில் ஐ.தே.கவின் கிரியெல்ல கொழும்பு, மே 23 முன்னர் விடுதலைப் புலிகளைத்தான் சர்வதேசம் பயங்கரவாதிகள் என்று கூறியது. இப்போது இலங்கை அரசாங்கத்தையும் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் சொல்கின்றன. இவ்வாறு தெரிவித்தார் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்றுச் சபையில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரே ரணை மீது பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். லஷ்மன் கிரியெல்ல தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெறும் கடத்தல்களுக்கு அரசும் இராணுவமுமே பதில் சொல்ல வே…

  20. மாணவர் கடத்தலும், கொலை அச்சுறுத்தலும் இராணுவத்துக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பித்து மாவை உரை கொழும்பு,மே 23 யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம். அங்கு நடைபெற்ற மாணவர்கள் கடத்தலும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினருக்கு எதிரான கொலை அச்சுறுத்தலும் இராணுவத்திற்குத் தெரியாமல் நடை பெற்றிருக்கவே முடியாது. இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராசா. மாணவர் கடத்தல், பல்கலைக்கழக சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக நேற்றுப் பிற்பகல் சபையில் ஒத்திவைப்புப் பிரேர ணையை சமர்ப்பித்து பேசுகையிலேயே அ…

  21. இனப் பன்மைத்துவத்தின் சிறப்பை உணராத தென்னிலங்கை நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியினரான பேராசிரியர் அமர்ட்டியா சென், இலங்கையின் இன்றைய இழி நிலைமைக்கான காரணத்தை குறைந்த சொற்களில் நிறைவாக வெளிப்படுத்தி படம் பிடித்து காட்டியிருக்கின்றார். ஒஸ்லோ நோபல் நிறுவகத்தில் நேற்று முன்தினம் மாலையில் "வறுமை, யுத்தம் மற்றும் சமாதானம்' என்ற தலைப்பில் இளவேனில் கால உரை ஒன்றை அவர் நிகழ்த்தினார். நோர்வேயின் இளவரசர் மற்றும் கல்விமான்களினால் நிரம்பி வழிந்த அந்தச் சபையில், புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் மற்றும் ஹவார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான அமர்ட்டியா சென்னிடம் இலங்கை விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பொருளாதார அபிவிருத்திக்காக 1998இல் நோபல் பரிசு பெற்ற சென், இலங்கையின் இன்றைய ம…

  22. இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து மன்னிப்புச் சபை இன்று அறிக்கை வெளியிடும் லண்டன், மே 23 இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை இன்று அறிக்கை ஒன்றை வெளியிடும். அந்த அமைப்பு இன்று லண்டனில் நடத்தவுள்ள செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப் படும். இலங்கை உட்பட உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து இந்த அறிக்கை வெளியாகவிருக்கின்றது. குறிப்பாக இலங்கையில் மிக மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நிறுத்த இலங்கை அர சுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சிபார்சு செய்யும் விதத்தில் இந்த அறிக்கை அமையும் என்று அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவர் லண்டனில் தெரிவித்தார். உதயன்

  23. மாணவர் பகிஷ்கரிப்பு நேற்றும் தொடர்ந்தது யாழ்ப்பாணம், மே 23 குடாநாட்டுப் பாடசாலைகளில் பதினொராவது நாளாக நேற்றும் மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்தனர். மூன்று மாணவர்கள் கடத்தப்பட்டமை, மாணவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை ஆகியன தொடர்பாக மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. கிராமப்புறப் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு சுமாராக இருந்த போதிலும் நகரத்தையும்,நகரத்தை அண்டியும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வீழ்ச்சி கண்டிருந்தது. உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய வகுப்பு மாணவர்களும் நேற்று அதிக எண்ணிக்கையில் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நேற் றுத் தற்கா…

  24. தமிழர்களுக்குரிய நியாயமான உரிமைகள் கிடைக்க உதவுமாறு புதிய பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை லண்டன் தமிழர் குழு கோடன் பிறவுணுடன் சந்திப்பு லண்டனில் இருந்து குமரன் லண்டன், மே 23 ஈழத்தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும், அவர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறவும் உதவுமாறு பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள, ஆளுங்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கோடன் பிறவுணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடன் பிறவுணை அவரது (நிதி அமைச்சு) அலுவலகத்தில் லண்டனில் வாழும் தமிழ்ப் பிரமுகர்கள் குழு ஒன்று நேற் றுச் சந்தித்தது. அப்போதே மேற்கண்ட வேண்டுகோள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு கிடைப…

  25. பாகிஸ்தானிடம் இருந்து எஃப்-7 ரக வானூர்திகளை கடனாக பெற சிறிலங்கா முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக எஃப்-7 ரக இடைமறிப்பு தாக்குதல் வானூர்திகளை கடனாகப் பெறுவதற்கு சிறிலங்கா அரசு எடுத்த முயற்சியை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசிடம் வான் எதிர்ப்பு ஆளுமை குறைவாக உள்ளதனால் சோவியத்தின் மிக்-21 ரக வானூர்தியின் பிரதி வடிவமாக சீனாவினால் தயாரிக்கப்பட்ட எஃப்-7 ரக வானூர்திகளை பாகிஸ்தானிடம் இருந்து கடன் அடிப்படையில் பெறுவதற்கு சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருந்தது. எனினும் தாக்குதல் வானூர்திகளை வழங்க மறுத்த பாகிஸ்தான், 22 அல் சாரார் வகை டாங்கிகளை சிறிலங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.