Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை: ஜாதிக ஹெல உறுமய [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளது. எமது கட்சியின் யோசனைகள் அடுத்தவாரம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போது தீர்வுயோசனைகள் சட்ட நிபுணர்களின் ஆராய்வுக்குட்பட்டு வருகின்றன. எமது யோசனைகளின்படி ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பின் கீழேயே நாட்டின் ஆட்சிமுறைமை இருக்கவேண்டும். இந்த நாட்…

  2. மாணவர் கடத்தலும், கொலை அச்சுறுத்தலும் இராணுவத்துக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பித்து மாவை உரை கொழும்பு,மே 23 யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம். அங்கு நடைபெற்ற மாணவர்கள் கடத்தலும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினருக்கு எதிரான கொலை அச்சுறுத்தலும் இராணுவத்திற்குத் தெரியாமல் நடை பெற்றிருக்கவே முடியாது. இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராசா. மாணவர் கடத்தல், பல்கலைக்கழக சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக நேற்றுப் பிற்பகல் சபையில் ஒத்திவைப்புப் பிரேர ணையை சமர்ப்பித்து பேசுகையிலேயே அ…

  3. கருணா குழு மோதலின் பின்னணியில் ஈ.பி.டி.பி. தொடர்புகள் வெளிப்படுத்தப்படுகிறது. பிள்ளையான் குழுவுடன் நின்று தீவிரமாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி. கிருபன், ராஜன் ஆகிய இருவரும் டக்ளசுடன் முரண்பட்டு வெளியில் நிற்கிறார்கள். ராஜன், பிள்ளையானைத் தொடர்பு கொண்டுள்ளான். பிள்ளையான் திருகோணமலையில் இராணுவத்துடன் நிற்பதும், ராஜனின் சொந்த இடம் திரு கோணமலை என்பதும். ராஜன் - பிள்ளையான் தொடர்புக்கு வழி ஏற்படக் காரணமாக அமைந்தது. ராஜன் இணைந்து செயற்படுவதாயின் திருமலையில் உள்ள ஈ.பி.டி.பி. கிளையின் செல்வாக்கை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை ராஜனுக்குப் பிள்ளையான் வைத்துள்ளான். இதற்கு அமைய முதற்கட்டமாக ஈ.பி.டி.பி.யில் இராணுவத்துடன் நின்று செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கசிய விடும்…

  4. இலங்கை அரசைப் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் இப்போது சொல்கின்றன! நாடாளுமன்றில் ஐ.தே.கவின் கிரியெல்ல கொழும்பு, மே 23 முன்னர் விடுதலைப் புலிகளைத்தான் சர்வதேசம் பயங்கரவாதிகள் என்று கூறியது. இப்போது இலங்கை அரசாங்கத்தையும் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் சொல்கின்றன. இவ்வாறு தெரிவித்தார் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்றுச் சபையில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரே ரணை மீது பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். லஷ்மன் கிரியெல்ல தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெறும் கடத்தல்களுக்கு அரசும் இராணுவமுமே பதில் சொல்ல வே…

  5. தந்தைக்குச் சாப்பாடு கொண்டுசென்ற இளைஞன் சுன்னாகத்தில் வெட்டிக்கொலை யாழ்ப்பாணம், மே 23 சுன்னாகம் ஸ்ரேசன் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இளை ஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த திருச்செல்வம் திருபரன் (வயது 19) என்பவரே கொல் லப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிவான் திருமதி ச. இளங்கோவன் சம்பவ இடத்தில் விசாரணை களை நடத்தினார். மின்சார சபையில் பணிபுரியும் தமது தந்தைக்கு இரவு உணவை கொடுத்து விட்டு வீடு திரும்பியவேளை வழிமறித்த இனந்தெரியாத நபர்களால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் உதயன்

  6. திருச்சி 17 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த விடுதலைப் புலிகள் ஆதரவான, தமிழர் பாசறை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் குமார் என்கிற ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மன்னார்குடி அருகே உள்ள மேலப்பாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்கிற ராஜா (42). விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளிக்கும் தமிழர் பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த 1990ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குமார் என்கிற ராஜா முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தமிழர் பாசறை அமைப்புக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து நிதியுதவி கிடைத்து வந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு இலங்கையில் வைத்து புலிகள் ஆயுதப…

  7. சிங்களக் காற்று திசை மாறுகிறது! - சோலை ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா? உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவ…

  8. நாரந்தனையில் கைதாகிய 6 இளைஞர்கள் கடும் வதைகளுக்கு உள்ளாகினர் சிறீலங்கா கடற்படையினரால் ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஆறு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடற்படையினருடன் சென்ற துணை இராணுவக்குழுவான ஈபிடிபியினரும் கடற்படையினருடன் இணைந்து குறிப்பிட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள். http://www.pathivu.com/

  9. தமிழக மீனவர்கள் கடத்தல்- சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. மீனவர் கடத்தல் தொடர்பான ஒரு செய்தி ஆய்வு: 4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம் 29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி (தினமணி மார்ச் 30: சிறிலங்கா கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி களியக்காவிளை, மார்ச் 30: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மீனவர்கள் உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்த…

  10. இனப் பன்மைத்துவத்தின் சிறப்பை உணராத தென்னிலங்கை நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியினரான பேராசிரியர் அமர்ட்டியா சென், இலங்கையின் இன்றைய இழி நிலைமைக்கான காரணத்தை குறைந்த சொற்களில் நிறைவாக வெளிப்படுத்தி படம் பிடித்து காட்டியிருக்கின்றார். ஒஸ்லோ நோபல் நிறுவகத்தில் நேற்று முன்தினம் மாலையில் "வறுமை, யுத்தம் மற்றும் சமாதானம்' என்ற தலைப்பில் இளவேனில் கால உரை ஒன்றை அவர் நிகழ்த்தினார். நோர்வேயின் இளவரசர் மற்றும் கல்விமான்களினால் நிரம்பி வழிந்த அந்தச் சபையில், புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் மற்றும் ஹவார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான அமர்ட்டியா சென்னிடம் இலங்கை விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பொருளாதார அபிவிருத்திக்காக 1998இல் நோபல் பரிசு பெற்ற சென், இலங்கையின் இன்றைய ம…

  11. இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து மன்னிப்புச் சபை இன்று அறிக்கை வெளியிடும் லண்டன், மே 23 இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை இன்று அறிக்கை ஒன்றை வெளியிடும். அந்த அமைப்பு இன்று லண்டனில் நடத்தவுள்ள செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப் படும். இலங்கை உட்பட உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து இந்த அறிக்கை வெளியாகவிருக்கின்றது. குறிப்பாக இலங்கையில் மிக மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நிறுத்த இலங்கை அர சுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சிபார்சு செய்யும் விதத்தில் இந்த அறிக்கை அமையும் என்று அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவர் லண்டனில் தெரிவித்தார். உதயன்

  12. மாணவர் பகிஷ்கரிப்பு நேற்றும் தொடர்ந்தது யாழ்ப்பாணம், மே 23 குடாநாட்டுப் பாடசாலைகளில் பதினொராவது நாளாக நேற்றும் மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்தனர். மூன்று மாணவர்கள் கடத்தப்பட்டமை, மாணவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை ஆகியன தொடர்பாக மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. கிராமப்புறப் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு சுமாராக இருந்த போதிலும் நகரத்தையும்,நகரத்தை அண்டியும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வீழ்ச்சி கண்டிருந்தது. உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய வகுப்பு மாணவர்களும் நேற்று அதிக எண்ணிக்கையில் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நேற் றுத் தற்கா…

  13. சிறிலங்கா தூதுவரின் குற்றச்சாட்டுக்கு நோர்வே உத்தியோகப்பூர்வ மறுப்பு [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 18:08 ஈழம்] [ப.தயாளினி] நோர்வே கடவுச்சீட்டுகள் பெருந்தொகையில் திருடப்பட்டதாகவும் அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அல்குவைதாவுக்குத் தொடர்பிருப்பதாகவும் அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பேர்னார்ட் குணதிலக்க குற்றம்சாட்டியுள்ளதை நோர்வே உத்தியோகப்பூர்வமாக மறுத்துள்ளது. நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: நோர்வே கடவுச்சீட்டுகள் 1,30,000 திருடப்பட்டதாகவும் 700 நிரப்பப்படாத நோர்வே கடவுச் சீட்டுகள் தாய்லாந்தில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா மற்றும் இதர ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும் இதில் தமி…

    • 1 reply
    • 1.3k views
  14. ஜே.வி.பியின் ஆதரவுடன் அரசுக்கு எதிராக பணிப் புறக்கணிப்பு ஜே.வி.பி பிரதான அங்கம் வகிக்கும் தேசிய வர்த்தக சங்கம் சிறீலங்கா அரசைக் கண்டித்து, நாடு தழுவிய ரீதியில் பொதுப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் தேர்தலில், தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றத் தவறி இருப்பதைக் கண்டித்து, இந்தப் பணிப் புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது. தேசிய வர்த்தக சங்கத்தின் நிறைவேற்றுக் குழு அடுத்த மாதம் 24ஆம் திகதி கூடும்போது பணிப் புறக்கணிப்பிற்கான திகதி முடிவு செய்யப்படவுள்ளது. தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி தாம் தெரிவித்த கருத்துக்களை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் கவனத்தில்கொள்ள தவறி…

    • 2 replies
    • 1.1k views
  15. ஓமந்தைச் சோதனைச் சாவடி மீண்டும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது ஓமந்தைச் சோதனைச் சாவடி மீண்டும் நேற்று மாலை முதல் மூடப்பட்டுள்ளது. இராணுவச் சோதனைச் சாவடியிலிருந்து இலக்கமில்லாத வெள்ளைச் சிற்றூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் முன்னரங்கச் சோதனைச் சாவடியை நெருங்க முற்பட்ட போது விடுதலைப் புலிகளால் வெள்ளைச் சிற்றூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சூனியப் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினரது வாகனம் துப்பாகிச் சன்னம் பாய்ந்து சிறு காயம் ஏற்பட்டதையடுத்து சூனியப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தமக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கிருந்து வ…

    • 0 replies
    • 652 views
  16. புதன் 23-05-2007 04:15 மணி தமிழீழம் [சிறீதரன்] நாரந்தனையில் கைதாகிய 6 இளைஞர்கள் கடும் வதைகளுக்கு உள்ளாகினர் சிறீலங்கா கடற்படையினரால் ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஆறு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடற்படையினருடன் சென்ற துணை இராணுவக்குழுவான ஈபிடிபியினரும் கடற்படையினருடன் இணைந்து குறிப்பிட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள். நன்றி பதிவு

  17. தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் கிளைமோரில் சிக்கியதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தமிழ் செல்வன் அண்னா வாகனத்தில் இல்லாததால் தப்பித்ததாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருகின்றது வழமையான பொய்களை சிங்கள பத்திரிகைகள் அவிழ்துவிடுவதால் உறுதிப்படுத்த கேட்கின்றேன் http://www.elakiri.com/forum/showthread.php?t=30732

  18. வான்புலிகளின் வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்? -கேசவன்- விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்…

    • 0 replies
    • 1.2k views
  19. அநுராதபுரத்தில் பறப்பில் ஈடுபட்ட விமானங்கள் - விசாரணை ஆரம்பம் அநுராதபுரத்தில் பறப்பில் ஈடுபட்ட இரண்டு இலகுரக விமானங்கள் பற்றிய விhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறீலங்கா வான் படை அறிவித்துள்ளது. இன்று காலை அநுராதபுரம் வான் பரப்பில் நுழைந்த இந்த விமானங்கள் பற்றிய தகவலை பொதுமக்களும், சிறீலங்காப் படையினரும் கொழும்புக்கு உடனடியாகத் தெரியப்படுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விமான எதிர்ப்பு ஏவகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் வன்னிப் பக்கம் இருந்து சென்ற இரண்டு இலகுரக விமானங்களும், வன்னிப் பக்கமாகவே திரும்பி சென்றுவிட்டதாக நேரில் பார்த்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். http://www.p…

    • 0 replies
    • 1.1k views
  20. செவ்வாய் 22-05-2007 00:58 மணி தமிழீழம் [செந்தமிழ்] கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது தென்னிலங்கையில் பௌத்த பிக்கு ஒருவர் வெலிவத்தை பகுதியில் அமைந்திருக்கும் விகாரையில் தங்கியிருந்த வணிகர் ஒருவரின் கடன் அட்டையை திருடி மூன்று இலட்சம் ரூபா பணத்தை களவாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மோசடிக்கு வெலிவத்தை விகாரையின் பணியாளரான பாதாள உலகக் குழுவொன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக தெரியவருகிறது. பதிவு

    • 3 replies
    • 1.4k views
  21. மெல்பேனில் பாராளுமன்றம் முன்பாக இன்று ஈழத் தமிழர்கள் ஒன்றுகூடி தங்கள் உரிமைப்போரின் நியாயப்பாட்டை ஆஸ்த்திரேலிய மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செவிகளுக்கு கொண்டு சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்த்துகொண்ட இந்த நிகழ்வில் தமிழ்ழர்களின் ஒன்றுபட்ட வேண்டுகோள் ஒரு விளிப்புனர்வை ஆஸ்த்திரேலிய நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. http://www.mandaitivu.com/index.php?option...1&Itemid=50 நன்றி-மண்டைதீவு.கொம்

  22. 4 மாதங்களில் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை ராணுவம் கொக்கரிப்பு கொழும்பு, மே. 22- இலங்கையில் 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக் கும் சிங்கள ராணுவத்துக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறி ராணுவம் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதும் தமிழர்கள் குடியிருப்பு கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 15 மாதங்களில் மட்டும் பொதுமக்கள், ராணு வத்தினர், விடுதலைப்புலிகள் உள்பட 4000 பேர் இந்த மோதல்களில் பலியாகி விட்டனர். இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறும்போது, "கடந்த 4 மாதங்களில் மட்டும் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம். புலிகளின் ஆ…

  23. உறுப்பினர் படுகொலையை ஈ.பி.டி.பி. கண்டிக்கிறது யாழ்ப்பாணம்,மே 22 ஊர்காவற்றுறையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் படுகொலை செய்யப்பட் டதை அந்த அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. படுகொலை குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: எமது கட்சியின் மூத்த உறுப்பினர் களில் ஒருவரான தோழர் பஸ்டீன் சித் திரவேல் சாந்தகுமார் நேற்று அதிகாலை வேலணை நாரந்தனையில் புலிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் சேவர்களான எம்மீது புலிப் பயங்கர வாதம் நடத்தியிருக்கும் இக்கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின் றோம். புலிகள் ஊருக்குள் பதுங்கியிருந்து கொண்டு கொலை, கொள்ளைகள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டுவருகின்றர் என்பதை பஸ்டீன் மீதான இப்படுகொலை உறுதிப் ப…

  24. செவ்வாய் 22-05-2007 00:52 மணி தமிழீழம் [செந்தமிழ்] போராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் வவுனியா – மணலாறு களமுனைகளில் இரு வேறு வேறுநேரடிமோதல்களில் இருபோராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 19ம் திகதி புளியங்குளப்பகுதியில் நிகழ்ந்தமோதலில் 2ம் லெப்ரினன் தீபன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சொந்த இடமாகவும் கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த கந்தசாமி தவரூபன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். மணலாறு களமுனையில் கடந்த 12ம் நாளன்று இடம்பெற்ற மோதலில் வீரவேங்கை வேந்தன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சொந்த இடமாகவும் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியை பிந்திய முகவரியாகவும் கொண்ட பரமநாதன் எழில்வே…

  25. இன வேறுபாட்டை சிறிலங்கா உணரவில்லை: அமட்யா சென் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:33 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா மக்கள் அதிகரித்துள்ள இனப்பாகுபாட்டை உணரத்தவறிவிட்டனர், அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளுக்கு தமது பங்களிப்பை நல்கவேண்டும் என்று நோபல் பரிசில் பெற்ற பேராசிரியர் அமர்த்யா சென் தெரிவித்துள்ளார். நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற விரிவுரை ஒன்றின் போதான கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில்: சிறிலங்காவில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்தது. எனவே அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளிலும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஆனால் புத்தமதம், சிங்கள இனம் போன்றவற்றை முதன்மைப்படுத்துவதால் அதன் தேசிய அடையாளப்படுத்துத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.