Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாரந்தனையில் கைதாகிய 6 இளைஞர்கள் கடும் வதைகளுக்கு உள்ளாகினர் சிறீலங்கா கடற்படையினரால் ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஆறு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடற்படையினருடன் சென்ற துணை இராணுவக்குழுவான ஈபிடிபியினரும் கடற்படையினருடன் இணைந்து குறிப்பிட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள். http://www.pathivu.com/

  2. ஓமந்தைச் சோதனைச் சாவடி மீண்டும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது ஓமந்தைச் சோதனைச் சாவடி மீண்டும் நேற்று மாலை முதல் மூடப்பட்டுள்ளது. இராணுவச் சோதனைச் சாவடியிலிருந்து இலக்கமில்லாத வெள்ளைச் சிற்றூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் முன்னரங்கச் சோதனைச் சாவடியை நெருங்க முற்பட்ட போது விடுதலைப் புலிகளால் வெள்ளைச் சிற்றூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சூனியப் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினரது வாகனம் துப்பாகிச் சன்னம் பாய்ந்து சிறு காயம் ஏற்பட்டதையடுத்து சூனியப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தமக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கிருந்து வ…

    • 0 replies
    • 653 views
  3. யாழ் குடாவுக்கு அனுப்பப்பட்ட 20 பேரூந்துக்களில் 11 பேரூந்துக்கள் படையினரால் கையகப்படுத்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ''லங்கா முடித'' கப்பலில் யாழ் குடாநாட்டுக்கு பொதுமக்களின் பாவனைக்கெனக் கொண்டு செல்லப்பட்ட இருபது பேரூந்துகளில் ஒன்பது பேரூந்தை மட்டும் பொதுமக்கள் பாவனைக்காக வடபிராந்திய போக்குவரத்து சபையிடம் கையளித்து விட்டு மிகுதியை கையகப்படுத்தி தமது பாவனைக்கு பயன்படுத்திவருகின்றனர். சிறீலங்கா படையினர் தற்போது மாத்திரமல்லாது பொதுமக்களது போக்குவரத்து பேரூந்துக்களை பலதடவைகள் தமது பாவனைகளுக்காக உபயோகித்து வருவது சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/

  4. புதன் 23-05-2007 04:15 மணி தமிழீழம் [சிறீதரன்] நாரந்தனையில் கைதாகிய 6 இளைஞர்கள் கடும் வதைகளுக்கு உள்ளாகினர் சிறீலங்கா கடற்படையினரால் ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஆறு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடற்படையினருடன் சென்ற துணை இராணுவக்குழுவான ஈபிடிபியினரும் கடற்படையினருடன் இணைந்து குறிப்பிட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள். நன்றி பதிவு

  5. வான்புலிகளின் வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்? -கேசவன்- விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்…

    • 0 replies
    • 1.2k views
  6. ஜே.வி.பியின் ஆதரவுடன் அரசுக்கு எதிராக பணிப் புறக்கணிப்பு ஜே.வி.பி பிரதான அங்கம் வகிக்கும் தேசிய வர்த்தக சங்கம் சிறீலங்கா அரசைக் கண்டித்து, நாடு தழுவிய ரீதியில் பொதுப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் தேர்தலில், தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றத் தவறி இருப்பதைக் கண்டித்து, இந்தப் பணிப் புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது. தேசிய வர்த்தக சங்கத்தின் நிறைவேற்றுக் குழு அடுத்த மாதம் 24ஆம் திகதி கூடும்போது பணிப் புறக்கணிப்பிற்கான திகதி முடிவு செய்யப்படவுள்ளது. தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி தாம் தெரிவித்த கருத்துக்களை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் கவனத்தில்கொள்ள தவறி…

    • 2 replies
    • 1.1k views
  7. அநுராதபுரத்தில் பறப்பில் ஈடுபட்ட விமானங்கள் - விசாரணை ஆரம்பம் அநுராதபுரத்தில் பறப்பில் ஈடுபட்ட இரண்டு இலகுரக விமானங்கள் பற்றிய விhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறீலங்கா வான் படை அறிவித்துள்ளது. இன்று காலை அநுராதபுரம் வான் பரப்பில் நுழைந்த இந்த விமானங்கள் பற்றிய தகவலை பொதுமக்களும், சிறீலங்காப் படையினரும் கொழும்புக்கு உடனடியாகத் தெரியப்படுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விமான எதிர்ப்பு ஏவகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் வன்னிப் பக்கம் இருந்து சென்ற இரண்டு இலகுரக விமானங்களும், வன்னிப் பக்கமாகவே திரும்பி சென்றுவிட்டதாக நேரில் பார்த்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். http://www.p…

    • 0 replies
    • 1.1k views
  8. இலங்கை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனிக் கொடிகள் உருவாக்கப்பட்டு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுனர் பணிமனையில் அவை ஏற்றிவைக்கப்பட்டன. புதிய கொடிகளின் பின்னணியில் பழைய கொடி இலங்கையின் 35 வது குடியரசு தினமான இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுனரும் வடக்கு மாகாணத்துக்கான பதில் ஆளுனருமான மொஹான் விஜேவிக்கிரம அவர்களின் அலுவலகத்தில் நடந்த சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே இந்தக் கொடிகள் தனித்தனியாக ஏற்றிவைக்கப்பட்டன. வட மாகாணக் கொடி முன்னைய இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் கொடியில் யாழ் மற்றும் மீன் சின்னம் ஆகியன இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது வடமாகாணத்துக்கான கொடியில் சூரியன…

  9. மெல்பேனில் பாராளுமன்றம் முன்பாக இன்று ஈழத் தமிழர்கள் ஒன்றுகூடி தங்கள் உரிமைப்போரின் நியாயப்பாட்டை ஆஸ்த்திரேலிய மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செவிகளுக்கு கொண்டு சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்த்துகொண்ட இந்த நிகழ்வில் தமிழ்ழர்களின் ஒன்றுபட்ட வேண்டுகோள் ஒரு விளிப்புனர்வை ஆஸ்த்திரேலிய நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. http://www.mandaitivu.com/index.php?option...1&Itemid=50 நன்றி-மண்டைதீவு.கொம்

  10. சிறிலங்கா தூதுவரின் குற்றச்சாட்டுக்கு நோர்வே உத்தியோகப்பூர்வ மறுப்பு [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 18:08 ஈழம்] [ப.தயாளினி] நோர்வே கடவுச்சீட்டுகள் பெருந்தொகையில் திருடப்பட்டதாகவும் அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அல்குவைதாவுக்குத் தொடர்பிருப்பதாகவும் அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பேர்னார்ட் குணதிலக்க குற்றம்சாட்டியுள்ளதை நோர்வே உத்தியோகப்பூர்வமாக மறுத்துள்ளது. நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: நோர்வே கடவுச்சீட்டுகள் 1,30,000 திருடப்பட்டதாகவும் 700 நிரப்பப்படாத நோர்வே கடவுச் சீட்டுகள் தாய்லாந்தில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா மற்றும் இதர ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும் இதில் தமி…

    • 1 reply
    • 1.3k views
  11. செவ்வாய் 22-05-2007 17:16 மணி தமிழீழம் [தாயகன்] மன்னார் எண்ணை வள ஆராய்ச்சிக்கு குவைத் உதவி சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஜோர்தான் பயணத்தை முடித்துக்கொண்டு குவைத் சென்று, அந்த நாட்டுத் அரசுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றார். இந்தப் பேச்சுக்களின்போது மன்னாரில் எண்ணை அகழ்வாராச்சிக்கு உதவி புரிவதற்கு குவைத் அரசாங்கம் முன்வந்திருப்பதாக, சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. அத்துடன், குறைந்த விலையில் மசகு எண்ணை, மற்றும் பெற்றோல் என்பவற்றை சிறீலங்காவிற்கு வழங்குவதற்கும் குவைத் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை, குவைத்திலுள்ள சிறீலங்கா நாட்டவரை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ குவைத் சிற்றியில் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். …

  12. உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக குரல் கொடுங்களேன்...: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:14 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக அனைத்துலக மாணவர்களுக்கு யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை: யாழ்ப்பாணத்தில் உயர்பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எந்நேரமும் பாரிய உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் ஏ-9 வீதி மூடப்பட்டது முதல் - யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள் - பாடசா…

  13. மாங்குளத்தில் புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் வீரகேசரி இணையத்தளம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீது விமானப்படையினர் இன்று காலை வான் தாக்குதல் நடார்த்தியுள்ளனர். மாங்குளத்திலுள்ள புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று காலை 6.45 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடார்த்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின் போதான சேதவிபரங்கள் இது வரை தெரியவரவில்லை, எனினும் விமான படையினர் இவ் வான் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

  14. இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை: ஜாதிக ஹெல உறுமய [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளது. எமது கட்சியின் யோசனைகள் அடுத்தவாரம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போது தீர்வுயோசனைகள் சட்ட நிபுணர்களின் ஆராய்வுக்குட்பட்டு வருகின்றன. எமது யோசனைகளின்படி ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பின் கீழேயே நாட்டின் ஆட்சிமுறைமை இருக்கவேண்டும். இந்த நாட்…

  15. இன வேறுபாட்டை சிறிலங்கா உணரவில்லை: அமட்யா சென் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:33 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா மக்கள் அதிகரித்துள்ள இனப்பாகுபாட்டை உணரத்தவறிவிட்டனர், அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளுக்கு தமது பங்களிப்பை நல்கவேண்டும் என்று நோபல் பரிசில் பெற்ற பேராசிரியர் அமர்த்யா சென் தெரிவித்துள்ளார். நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற விரிவுரை ஒன்றின் போதான கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில்: சிறிலங்காவில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்தது. எனவே அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளிலும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஆனால் புத்தமதம், சிங்கள இனம் போன்றவற்றை முதன்மைப்படுத்துவதால் அதன் தேசிய அடையாளப்படுத்துத…

  16. கருணா குழு மோதலின் பின்னணியில் ஈ.பி.டி.பி. தொடர்புகள் வெளிப்படுத்தப்படுகிறது. பிள்ளையான் குழுவுடன் நின்று தீவிரமாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி. கிருபன், ராஜன் ஆகிய இருவரும் டக்ளசுடன் முரண்பட்டு வெளியில் நிற்கிறார்கள். ராஜன், பிள்ளையானைத் தொடர்பு கொண்டுள்ளான். பிள்ளையான் திருகோணமலையில் இராணுவத்துடன் நிற்பதும், ராஜனின் சொந்த இடம் திரு கோணமலை என்பதும். ராஜன் - பிள்ளையான் தொடர்புக்கு வழி ஏற்படக் காரணமாக அமைந்தது. ராஜன் இணைந்து செயற்படுவதாயின் திருமலையில் உள்ள ஈ.பி.டி.பி. கிளையின் செல்வாக்கை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை ராஜனுக்குப் பிள்ளையான் வைத்துள்ளான். இதற்கு அமைய முதற்கட்டமாக ஈ.பி.டி.பி.யில் இராணுவத்துடன் நின்று செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கசிய விடும்…

  17. 4 மாதங்களில் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை ராணுவம் கொக்கரிப்பு கொழும்பு, மே. 22- இலங்கையில் 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக் கும் சிங்கள ராணுவத்துக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறி ராணுவம் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதும் தமிழர்கள் குடியிருப்பு கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 15 மாதங்களில் மட்டும் பொதுமக்கள், ராணு வத்தினர், விடுதலைப்புலிகள் உள்பட 4000 பேர் இந்த மோதல்களில் பலியாகி விட்டனர். இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறும்போது, "கடந்த 4 மாதங்களில் மட்டும் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம். புலிகளின் ஆ…

  18. தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் கிளைமோரில் சிக்கியதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தமிழ் செல்வன் அண்னா வாகனத்தில் இல்லாததால் தப்பித்ததாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருகின்றது வழமையான பொய்களை சிங்கள பத்திரிகைகள் அவிழ்துவிடுவதால் உறுதிப்படுத்த கேட்கின்றேன் http://www.elakiri.com/forum/showthread.php?t=30732

  19. கடத்தப்பட்ட யாழ்.மாணவர் விவகாரம்; நாடாளுமன்றில் இன்று விசேட விவாதம் கூட்டமைப்பு எம்.பியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி யாழ்ப்பாணம்,மே22 யாழ்ப்பாணத்தில், மாணவர்கள் மூவர், ஊரடங்கு நேரத்தில் அவர்களது வீடுகளில் வைத்துப் பெற் றோர்கள் பார்த்திருக்கக் கடத்திச் செல்லப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாத விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட மரணதண்டனை அச்சுறுத்தல் குறித்தும் அங்கு பிரஸ்தாபிக்கப்படும். குடாநாட்டில் மாணவர்கள், பெற்றோர் கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கிய இவ்விகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணை …

  20. சர்வதேச சமூகத்தின் சமுகத்துக்கு! இலங்கை இனப்பிரச்சினை மிக மோசமான போராக வெடிக்கும் ஆபத்து நிலை ஏற்பட்டிருப்பது குறித்து சர்வ தேச சமூகம் கவலை வெளியிட்டு வருகின்றது. 2002இல் தொடங்கப்பட்ட அமைதி முயற்சிகள் செயலி ழந்து போனமை குறித்தும் சர்வதேச சமூகம் விசனம் தெரி வித்து வருகின்றது. ஆனால் இவ்வாறு சமாதான முயற்சிகள் குழம்பி, பெரும் போர் வெடிக்கும் ஏது நிலை உருவானமைக்கு பின்புலத் தில் பிரதான காரணியாக அமைந்ததே சர்வதேச சமூகம் தான் அதன் பொறுப்பற்ற போக்குத்தான் என்பதை இப் பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தி வந்துள்ளோம். இங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான வாழ்வியல் இருப்புக்கான கௌரவ வாழ்வுக்கான போராட் டம், அறுபது ஆண்டுகளைக் கடந்து செல்லும் நீண்…

  21. பல்கலை. மாணவர் இன்று விரிவுரைகளுக்குத் திரும்புவர் யாழ்ப்பாணம்,மே22 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பகிஷ்கரிப் புப் போராட்டத்தைக் கைவிட்டு இன்று விரிவுரை களுக்குச் சமுகமளிப்பர். கடத்தப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று நாள்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். எனினும் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டு அவர் கள் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டனர். பல்கலைக் கழக சமூகத்துக்கு மரணதண்டனை அச்சுறுத்தல் விடுத்து துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து கடந்த 14ஆம் திகதி தொடக்கம் அவர்கள் மீண்டும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். பகிஷ்கரிப்பைக் கைவிட்டு மாணவர்கள் இன்று விரிவுரைகளுக்குத் திரும்புவர் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றி…

  22. குடாநாட்டில் "சி.டி.எம்.ஏ' இணைப்புகள் அடுத்தவாரம் முதல் வழங்கப்படும் பிரதிப் பொதுமுகாமையாளர் தகவல் யாழ்ப்பாணம்,மே22 குடாநாட்டில் அடுத்தவாரம் தொடக் கம் "சி.டி.எம். ஏ.' தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக ரெலிக் கொம் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையா ளர் (வடமாகாணம்) வி.யோகேந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இணைப்புச் செய்வதற்கான "சிற்றிலிங் சி.டி.எம்.ஏ. தொலைபேசிகள் உடனடியாக யாழ்ப்பாணம் எடுத்துவருவதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும

  23. வவுனியா, மணலாறில் கிளைமோர் தாக்குதல்கள் நான்கு படையினர் பலி; மூவர் காயம் கொழும்பு,மே 22 வவுனியா, மணலாறு (வெலிஓயா) பகுதிகளில் நேற்று இடம்பெற்ற இரு கிளைமோர் தாக்குதல்களில் நான்கு படையினர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். வவுனியா இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று படையினர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். நேற்றுக்காலை 8.15 மணியளவில் படையினர் பயணம் செய்த உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மணலாறு பகுதியில் வீதிச்சோதனை நடவடிக்கை யில…

  24. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விப் புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் நிலைமையை விளக்கி மாணவர் ஒன்றியம் அறிக்கை ] யாழ்ப்பாணம்,மே 22 இதுவரை கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் தொடர்பாக சாதகமான பதில்கள் விரைவில் கிடைக்கும் என்று பல்வேறு தரப்புகளும் தமக்குத் தெரி யப்படுத்தியதை அடுத்து பல்கலைக் கழக மாணவர்கள் தமது கல்விப் புறக் கணிப்பைத் தற்காலிகமாக இன்று தொடக்கம் கைவிடுவதாக யாழ். பல் கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறி வித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றி யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: மாணவர்கள் மீதான கடத்தல்கள், கொலைகள், அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பாக தாம் உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் அவை தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக் கப்படுமென உறுதியளிக்க…

  25. அனலைதீவு மீனவர்கள் மூவரும் திரும்பினர் யாழ்ப்பாணம்,மே22 அனலைதீவில் இருந்து கடந்த 15ஆம் திகதி தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமற்போன மூன்று மீனவர்களும் வீடு திரும்பியுள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த ஜெகநாதன் ஜெயந்தன், வேலாயுதம் ஸ்ரீதேவன், தவ ராசா ஜெகன் ஆகியோரே காணாமற்போயி ருந்தனர். இவர்கள் சென்ற கட்டுமரம் வேகமாக வீசிய காற்றினால் அள்ளுண்டு தொண்டை மானறு கடற்கரையில் ஒதுங்கியது. அப் பகுதியில் உள்ள படையினர் மீனவர்கள் மூவரையும் கரைநகர் கடற் படையினரிடம் கைய ளித்தனர். பின்னர் அனலைதீவு கடற்படைப் பொறுப்பதிகாரி ஊடாக மூவரும் உறவின ரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று நேற் றிரவு கிடைத்த பிந்திய தகவல்கள் தெரி வித்தன. அத்துடன் அவர்களுடன் மற்றொரு கட்டுமரத்தில் சென்ற நால்வர் கட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.