Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா நாவற்குளத்தில் படையினரின் முன் நகர்வு முறியடிப்பு. வவுனியா நாவற்குளத்தில் சிறிலங்காப் படையினர் முன் நகர முற்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளனர். ஓமந்தைக்கு மேற்காக உள்ள நாவற்குளம், நெல்லிக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிமுதல் எறிகணை, பல்குழல் வெடிகணைகளின் செறிவான சூட்டாதரவோடு படையினர் முன் நகர்வை மேற்கொண்டனர். முன் நகர முற்பட்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களுடன் படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர். விடுதலைப் புலிகளால் படைத்தரப்பினர் கைவிட்டுச் சென்ற ஆயுதத் தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. -Put…

  2. இந்தியாவுக்கு மகிந்தவின் தூதுவர் பயணம் இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விளக்கம் அளிக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க புதுடில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளின் 4 வான் தாக்குதல்கள் உள்ளிட்டவை குறித்து இந்தியப் பிரதமருக்கு மகிந்த கொடுத்தனுப்பிய தகவல்களை லலித் வீரதுங்க கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் புதுடில்லியில் லலித் வீரதுங்க முகாமிட்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பண்டாரநாயக்க அனைத்துல வானூர்தி நிலையத்து சிறப்பு இந்திய வான்படை வானூர்தி மூலம் ஒரு குழுவினர் வந்துள்ளனர். இந்திய …

  3. வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா ரஸ்யாவில் இருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சிறிலங்கா வான்படையின் விசாரணைக்குழு விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக்களை தேடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது. ரஸ்யாவிலிருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. இது விடுதலைப் புலிகளின் வான்படைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இந்த வா…

  4. லண்டன் முத்தரப்பு உச்சி மாநாடு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை அமைச்சர் ரம்புக்வெல லண்டனில் எதிர்வரும் ஜூலையில் நடைபெறவிருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளஅரசு விடுதலைப் புலிகள் நோர்வே அரசு உச்சி மாநாடு குறித்து உத்தியோகபூர்வ மான தகவல் எதுவும் அரசுக்குக் கிடைக்கவில்லை. பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான பேச் சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல இத னைத் தெரிவித்தார். பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, அரசு விடுதலைப் புலிகள் நோர்வே தரப்பு ஆகிய முத்தரப்புகளையும் கொண்ட உச்சி மாநாட்டை ஜூலை மாதம் நடத்தப்போவதாக பிரிட் டிஷ் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது. இது குறித்து கேட்டபோது இதுவரை உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் அரசுக்கு கிட…

  5. கிழக்கு படையினரின் முழுக் கட்டுப்பாட்டில்; வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விவரிக்கப்படும் அமைச்சர் போகொல்லாகம சொல்கிறார் கிழக்கில் திருகோணமலை, மட்டக் களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங் கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல் லாகம தெரிவித்தார். மல்வத்தை பீடாதிபதியை நேற்றுச் சந் தித்துக் கலந்துரையாடுகையில் அவர் இப்படிக் கூறினார். கிழக்கை முழுமையாகக் கைப்பற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அதனை வெளிநாட்டுத் தூதர்களுக்கு நாளை விளக்கிக் கூற உள்ளதாகவும் அமைச் சர் மேலும் தெரிவித் தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள ஏனைய பிரதேசங்களையும் மீட்கவேண்டும் என்று மல்வத்தை மகா நாயக்கர் அமைச்சருக்கு எடுத் துரைத்தார். மாகாண சபைத்திட்டம்…

    • 6 replies
    • 2.7k views
  6. வான்பாதுகாப்பு சாதனங்களைக் கொள்வனவு செய்ய மூவர் குழு விரைவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு விடுதலைப் புலிகளின் வான்தாக்கு தல் அச்சுறுத்தலை தவிர்க்கும் பொருட்டு வான் பாதுகாப்புச் சாதனங்கள் மற்றும் நவீன ரக ராடர்களை கொள்வனவு செய் வதற்காக உயர் மட்டக் குழு ஒன்று வெளி நாடு செல்ல இருக்கிறது. மூவர் அடங்கிய இக்குழு ஆகப்பிந் திய தொழில்நுட்பத்துடன் கூடிய வான் பாதுகாப்புச் சாதனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக ஆராய உள்ளது. அத்துடன் மிக் 29 ரக விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வது தொடர்பாகவும் இக்குழு ஆராயவிருக்கின்றது. வான்பாதுகாப்புமுறைச் சாதனங்கள், ராடர்களை இந்தியாவிலிருந்து அல்லது பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய் வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இக்குழு அந்த இரண்டு நாடுகளுக்கும…

  7. சிறிலங்கா அமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் மறுப்பு. சிறிலங்கா அமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளதாக தெரிகிறது. அண்மையில் சிறிலங்கா அமைச்சர் பி. சந்திரசேகரன், முதல்வர் கருணாநிதியை சந்திக்க அனுமதி கேட்டிருந்ததாகவும் ஆனால் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழாவை சுட்டிக்காட்டி சந்திரசேகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒருவரை சந்திக்க விரும்பாததால்தான் மலையக கட்சியைச் சேர்ந்த சந்திரசேகரனுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. -Puthinam-

  8. காலத்தின் தேவையே உண்மையான சேவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கற்பதற் குத் தேவையான சகல வளங்களும் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகப் பேரவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது கல்விச் செயற் பாடுகள் சீராக நடைபெறமுடியவில்லை என்ற நிலை யைப் பேரவையின் அறிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது. பல்கலைக்கழகக் கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பினால் இத்தகைய நிலை தோன்றியுள்ளது என்றும் பேரவையின் அறிக்கை எடுத்துரைக்கிறது. தாய்ச் சங்கத்தின் வேலைநிறுத்த நடவடிக்கை களுக்கு ஆதரவு தெரிவித்துத் தாம் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், கல்விச் செயற்பாடுகள் பாதிப்புறாதிருக் கும் வகையில் தாம் தொண்டர் சேவையில் ஈடுபடுவர் எ…

  9. காரைநகர் படைமுகாமில் இருந்து பாரிய குண்டு வெடிப்புச்சத்தம். காரைநகர் படையினரின் முகாமிற்குள் இரவு பாரிய குண்டுச்சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளது. முகாமினுள் இருந்த ஆயுதக் களஞ்சியம் வெடித்திருக்காலாம் என பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10.00 மணியளவில் காரைநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள படைமுகாமில் ஒரு மணித்தியாலயம் வரை கேட்ட பாரிய குண்டுச்சத்தங்கள் யாழில் பல பிரதேசங்களிலும் கேட்டதுடன் பாரிய அளவில் வெளிச்சம் தென்பட்டதாகவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதனால் மக்களிடையே பெரும் பதட்டம் நிலவியதாகவும் படைமுகாமில் உள்ள ஆயுதக்களஞ்சியங்களில் ஒன்று வெடித்துச் சிதறியிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் இப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். சம்பவதினம்…

  10. கடுமையான செய்தியுடன் கொழும்பு செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர். சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கொழும்பிற்கு செல்லவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.05.07) செல்லும் இவர், இதன் போது சிறிலங்கா அரசாங்கத்தை பேச்சு மேசைக்கு திரும்பும் படியாக கடுமையான ஒரு செய்தியை அவர் எடுத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகளை ரிச்சர்ட் பெளச்சர் சந்திப்பதுடன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள்…

    • 8 replies
    • 2.8k views
  11. [02 - Mஅய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஷ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான உத்தேச தீர்வுத் திட்ட யோசனைகளை விடுதலைப்புலிகள் முழுமையாக நிராகரித்துள்ள அதே சமயம், அரசியல் ஆய்வாளர்கள் இந்த தீர்வுத் திட்ட யோசனைகள் வெற்றியளிப்பனவாக இல்லையென்று கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சியில் இருக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மட்டத்தில் அதிகளவு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் சிவில் யுத்தத்துக்கு தீர்வு காணும் யோசனைகளை முன்வைத்துள்ளதுடன் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் இவ்வுத்தேச தீர்வுத் திட்ட யோசனைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால…

    • 0 replies
    • 669 views
  12. லண்டன் கோயிலுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு பிரிட்டனில் அறக்கட்டளைகளுக்காகத் திரட்டப்படும் நிதி விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் அனுப்பப்படுவதாக பிபிசிக்கு கிடைத்த கசியவிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பிபிசிக்கு கசிந்த ஆவணம் ஒன்றின் மூலம், இங்கு லண்டனில் டூட்டிங் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்த விசாரணைக்காக, இந்த ஆலயத்தின் வங்கிக் கணக்குகளை பிரிட்டனின் அறக்கட்டளைகளை ஒருங்கிணைக்கும் ஆணைக்குழு முடக்கியுள்ளது. அத்துடன் அந்த ஆலயத்தின் ஸ்தாபகரான நாகேந்திரம் சீவர…

  13. இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கையில் அமைதி திரும்பும்: சென்னையில் ரணில். இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கையில் அமைதி திரும்பும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த 18 நாட்களாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரணில் இன்று சனிக்கிழமை காலை துபாயில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் சென்னை வந்தார். இன்று காலை வானூர்தி நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சென்னை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: சிறிலங்காவில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்குள்ள பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தற்போது ஆட்சி…

    • 4 replies
    • 1.3k views
  14. திருமலையில் 3 குடியேற்றவாசிகள் சுட்டுப் படுகொலை. திருமலை வடக்கு திரியாய் கல்லாறு, சலப்பையாறு ஆகிய பகுதிகளில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று தென்னிலங்கை குடியேற்றவாசிகள் தலத்தில் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு குடியேற்றவாசிகள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் தமிழிலும் சிங்களத்திலும் சரளமாக உரையாடக் கூடியவர்கள் என்றும் அண்மையில் திரியாய் பகுதியில் அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டவர்கள் என்றும் தெரியவருகின்றது -Pathivu-

  15. அதி காலை உட்புகுந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் யாழ் பல்கலைக்கழக காவலர் தாக்கப்பட்டார். அதி காலை1-00 மணியளவில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த குழுவினர் பல்கலைக்கழக காவலரை ஆயுத முனையில் இருத்தி விட்டு பல்கலைக்கழகத்துக்குள் சென்று பல மணி நேரம் தேடுதல் நடத்தியுள்ளனர். பத்துக்கு மேற்பட்டவர்களை கொண்ட இந்த ஆயுதக் குழுவினரால் பல்கலைக்கழக காவலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். Armed men in civil, attack JU security officer A gang of more than ten armed men in civil clothes, forcibly entered and searched Jaffna University (JU) campus, holding the security officer at gun point, Saturday around 1:00 a.m, sources in Jaffna said. Th…

    • 4 replies
    • 1.7k views
  16. மட்டு, படுவான்கரையில் 21 புதிய படை முகாம்கள் மட்டக்களப்பு படுவான்கரையை அண்மையில் ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படையினர், அங்குள்ள பொதுமக்களின் காணிகளை அபகரித்து படை முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்தப் பிரதேசங்களில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இவ்வாறான முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இதேபோன்ற ஆக்கிரமிப்பு கடந்த காலங்களிலும் நிகழ்ந்து முகாம்கள் அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன், இதனால் மக்களிற்குப் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனக் கூறினார். பதிவு

  17. சிறீலங்கா விமானப் போக்குவரத்து வருமானமும் வீழ்ச்சி வான் புலிகளின் தாக்குதலின் எதிரொலி காரணமாக சிறீலங்கா அரசு விமானப் போக்குவரத்து மூலம் பெற்றுவந்த வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று மாலை விமான நிறுவன அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணிவரை விமான சேவையை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வான் புலிகளின் தாக்குதல் காரணமாக விமான நிலையத்தை இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை மூடுவதற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் முடிவு செய்திருந்தது. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை மூலமும் பெற்றுவந்த நிதிகள் தடைப்படுவதால், சிறீலங்காவின் பொருளாதார…

  18. கருணா ஒட்டுக் குழு சிறுவர் கடத்தலை நிறுத்தவில்லை - யுனிசெப் கிழக்கில் கருணா குழு நாளாந்தம் சிறுவர்களை தமது ஆயுதக் குழுவில் இணைத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய ஐ-நா சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் பேச்சாளர் கோர்டன் வீஸ், கருணா குழுவுடன் தாம் மேற்கொண்டுவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாகக் கூறினார். சிறுவர்களை படையில் இணைப்பதை நிறுத்துவதாகவும், ஏற்கனவே இணைத்த சிறுவர்களை விடுதலை செய்வதாகவும் ஒப்புக்கொண்ட கருணா ஒட்டுக்குழு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி இருப்பதாகவும், நாளாந்தம் மேலும் சிறுவர்களைப் படையில் இணைத்து வருவதாகவும் கோர்டன் மேலும் கண்டித்தார். கர…

  19. மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட முகத்துவாரம் வீதியில் உள்ள தொட்டி தவெர்ன் சந்திக்கு அருகே துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரின் முகாம் உள்ளது. இம்முகாமில் உள்ளோரிடையே நேற்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மோதல் வெடித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துணை இராணுவக் குழுவினர் இருவரும் இம்மோதலின் போது அப்பகுதியைக் கடந்து சென்ற முச்சக்கர வாகன சாரதியான நஸ்ரூதின் (வயது 55) என்பவரும் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடிக்கு நஸ்ரூதின் திரும்பிக் கொண்டிருந்த போது இம்மோதலில் சிக்கிக் கொண்டார் …

    • 26 replies
    • 9.8k views
  20. வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் படுகாயமடைந்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுக்கு வேட்டையாடச் சென்றவர்கள் மீதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும், உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர் பான விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர் உதயன்

  21. தென்மராட்சியில் வியாழன் இரவும் மினி சூறாவளி; பெரும் சேதங்கள் தென்மராட்சிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் வியாழன் இரவும் மினி சூறாவளி வீசி பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. பனை மரம் ஒன்று வீட்டின் மீது வீழ்ந்ததில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். பெரும்மளவு பயன்தரு மரங்கள் முறிந்து நாசமாகின. பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 8.15 மணி தொடக்கம் 9.15 மணி வரை இடைவிடாது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் திடீரென மினி சூறாவளி வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தன. மட்டுவில் தெற்குப் பகுதியில் பனை மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் அதே இடத்தைச் சேர்ந்த பத்மநாதன் கமலேஸ்வரி (வயது 48) என்பவருக்கு விலா எலும்பு முறிந…

  22. இலங்கைக்கான உதவிகளை உலகநாடுகள் பிரிட்டனைப் பின்பற்றி முடக்க வேண்டும்! ஆசிய மனித உரிமைகள் மையம் வலியுறுத்து புதுடில்லி, மே 5 திட்டமிட்ட வகையில் மனித உரிமை களை மோசமாக மீறிவரும் இலங்கை அரசை சரியான வழிக்குக் கொண்டுவரு வதற்காக, அந்நாட்டுக்கான உதவிகளை பிரிட்டனைப் பின்பற்றி உலக நாடுகள் அனைத்தும் முடக்கவேண்டும். புதுடில்லியை யைமாகக் கொண்டி யங்கும் மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் இவ்வாறு கோரியிருக்கின்றது. மனித உரிமைகளைப் பேணுவது தொடர் பான அடிப்படை நிலைமைகளை நிறைவு செய்யத் தவறியமைக்காக இலங்கைக்கான உதவிகளை முடக்குவதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கின்றது. மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பான இலங்கை அரசின் செயற்பாட்டில் அதிருப்தியுற்று, அதனடிப்படை யில் பிரிட்டன் எடுத்த…

  23. மனித உரிமைகளைப் பேணத் தவறியதால் இலங்கைக்குக் கிடைத்த முதல் தண்டனை பிரிட்டன் நிதி முடக்கம் கொழும்பு, மே 5 ""இலங்கைத் தமிழர்களினதும் ஏனைய இன மக்களின தும் அடிப்படை உரிமைகளை இலங்கை அரசு மீறிவரு வதன் காரணமாகவே பிரிட்டன் இலங்கைக்கான அதன் நிதி உதவியை முடக்கியுள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைக்காக சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு வழங்கவிருக்கும் தண்டனையின் முதல் கட்டமே இந்த நிதி உதவி முடக்கம்.'' இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான நிதியுதவியை பிரிட்டன் முடக்கியமை தொடர்பாக நேற்றுக் கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள் ளன என்பதையும் இலங்கை அரசே…

  24. முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று இரவு மோதல் முல்லைத்தீவு கடற்ப்ரப்பில் நேற்று வெள்ளி இரவு 11:30 மணியளவில் கடற்புலிகளிற்கும் கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல்லில் 10 கடற்புலிகள் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு புல்மோட்டையிலிருந்து முல்லைதீவு நாயாறு நோக்கி புலிகளின் படகுகள் முன்னகர்வதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 4 தற்கொலை தாக்குதல் படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ

  25. பிரிட்டனின் முடிவு: இலங்கை கவலை அதன் பின்னணி குறித்து அரசு ஆராயுமாம் கொழும்பு, மே 5 இலங்கைக்கான நிதி உதவியை பிரிட்டன் முடக்கி யமை தொடர்பாக இலங்கை அரசு ஆராயவுள்ளதாக அர சின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கை யில் அரசு மனித உரிமை மீறல் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. நாட்டில் பயங்கரவாதம் நிலவுகின்றபோது, அப்பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். அதைத்தான் அரசு தற்போது செய்துகொண்டிருக்கின்றது. நாம் முன்னெடுத்துச்செல்லும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்குப் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.