ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
போரியலின் பரிணாம வளர்ச்சியில் சூழ்ச்சிகர நகர்வுத் தந்திரோபாயத்தின் தாக்கம் இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்களினால் பயன்படுத்தப்பட்ட பிலிட்ஸ்ரீக் (Blitzkrieg) என்ற மின்னல் வேகத் தாக்குதல் நடவடிக்கையானது சூழ்ச்சிகர நகர்வுத் தந்திரோபாயத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் பயன்பாடாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பாக படைத்துறை மூலோபாய வல்லுனரும் வரலாற்றாசிரியருமான லிட்டெல் ஹாட் கூறுவதாவது: மின்னல் வேக நடவடிக்கையின் தந்திரோபாயமானது நீரால் நிரம்பிய பாரிய குளத்தின் அணைக்கட்டை நீரானது தள்ளுவது அல்லது அமுக்குவது போன்றது. அதாவது நீரானது குளத்தினது அணைக்கட்டின் எல்லா பகுதிகளுக்கும் அமுக்கத்தை பிரயோகிக்கும். எங்கு சிறிய இடைவெளி அல்லது பலவீனம் இருக்கின்றதோ அங்…
-
- 0 replies
- 955 views
-
-
விடுதலைப் புலிகளின் டிவி, ரேடியோ முடக்கம் ஏப்ரல் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளி பரப்பை அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனம் முடக்கிவிட்டது. படை பலத்துடன் திகழும் விடுதலைப் புலிகள் தங்களுக்கென வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் வைத்துள்ளனர். இவற்றின் மூலம் ஈழம் குறித்த செய்திகளையும், போர் குறித்த செய்திகளையும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர். ஆண்டுதோறும் மாவீரர் தினத்தின்போது பிரபாகரன் உரையாற்றுவதை நேரடியாகவும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர். அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலமாக இந்த ஒளி, ஒலிபரப்பு நடந்து வந்தது. இவற்றை முடக்க வேண்டும் என இலங்கை அரசு…
-
- 10 replies
- 4.7k views
-
-
அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதுகுறித்த
-
- 1 reply
- 1.5k views
-
-
12 தமிழர்கள் கொழும்பில் கைது வெள்ளவத்தை, கொகுவல பொலீஸ் நிலையப் பிரிவுகளில் பொலீஸார் நேற்று மேற்கொண்ட தேடுதலில் 12 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கைச் சேர்ந்த இவர்கள் தமது அடையாளத்தை நிரூபிக்கத்தவறியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர் என்று பொலீஸார் தெரிவித்தனர். (அ1) உதயன்
-
- 0 replies
- 917 views
-
-
தமிழீழக் கொள்கை வலுப்பெறுகிறது அரசுதான் அதற்கு தென்பூட்டுகிறது! ஐக்கிய தேசியக் கட்சி சாடல் ஐக்கிய தேசியக் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தமிழீழக்கொள்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு அந்தக் கொள்கைக்குத் தென்பூட்டி வளர்த்து வருகிறது. விடுதலைப் புலிகள் தொடர்ந்து நடத்திவரும் விமா னத் தாக்குதல்கள் இதனையே தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு நேற்று அரசைச் சாடியிருக்கின்றது எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்த தாவது: புலிகள் தற்போது விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளத் த…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஐந்து மென்ரக விமானங்கள் புலிகளிடம் இருப்பதாக சந்தேகம். தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்து மென்ரக விமானங்கள் இருக்கலாம் என்றும் இவை வெளிநாடுகளிலிருந்து உதிரிப்பாகங்களாக படகுகளில் கொண்டுவரப்பட்டு இங்கு பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.இதேவேளை புலிகளின் விமானத்தாக்குதல்கள் சர்வதேச பயணிகள் விமான சேவையில் ஈடுபட்டிருக்கும் விமானசேவை நிறுவனங்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த விமானசேவைகள், தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
புலிகளின் விமானப்படை நாட்டுக்கு பெரும் தலைவலி எப்போதும் அனர்த்தம் நேரலாம் என்ற அச்சத்தில் மக்கள் வீரகேசரி நாளேடு நாடு மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. தேசிய பாதுகாப்பு மோசமான முறையில் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். கட்டுநாயக்கவை அண்மித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட விமானத் தாக்குதல் அச்சத்தினால் மக்கள் பிரதேசமெங்கும் சிதறி ஓடினர். தமது வீடுகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக அங்குமிங்கும் ஓடினர். வெடிப்புச் சத்தங்களால் கட்டுநாயக்கப் பகுதியே அதிர்ந்தது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தைகொண்டு நடத்தமுடியாவிட்டால் தகுதியானவர்கள…
-
- 4 replies
- 1.7k views
-
-
வான்வெளியில் நான்கு விதமான நடவடிக்கையை மேற்கொள்ளும் ஆற்றலை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர் - பி.ராமன் சரியான இலக்குகளை தேர்வு செய்து நேர்த்தியான வான்தாக்குதல்களை நடத்தும் ஆற்றல்களை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர் என முன்னாள் றோ அதிகாரியான பி.ராமன் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத் தளம் மீதான வான்புலிகளின் குண்டுவீச்சுகள் வானோடிகளின் ஆற்றலைப் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இலகு விமானங்களை யுத்த விமானங்களாக மாற்றி குண்டுவீச்சுக்களை நடத்தும் வல்லமையும் நேர்த்தியான குண்டு வீச்சுகளை நடத்தும் அனுபவம் உள்ள வானோடிகளை புலிகள் பெற்றுள்ளனர் என பி.ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேநேரம் வான் காப்பு, வான் தாக்குத…
-
- 2 replies
- 2.1k views
-
-
சனி 28-04-2007 02:03 மணி தமிழீழம் [தாயகன்] பிரித்தானியத் தூதுவரின் குத்துக்கரணம் சிறீலங்கா அரசின் அச்சுறுத்தலுக்கு பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் அடிபணிந்து, அரசிற்கு சார்பு நிலை எடுக்க முனைவதாக, கொழும்பிலுள்ள ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் சிறீலங்கா அணிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், 'சிங்கங்களே சீறி எழுங்கள்" என சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதர் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். அத்துடன், தூதரக பணியாளர்களுடன் இணைந்து பிரித்தானிய, மற்றும் சிறீலங்கா கொடிகளைத் தாங்கியவாறும், சிறீலங்கா கிறிக்கட் அணியின் உடையை அணிந்து, துடுப்பாட்ட மட்டை…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெள்ளி 27-04-2007 23:32 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காப் படைகள் வான் தாக்குதலை முறியடிக்கும் சுடுதிறணை இழந்துள்ளது சிறீலங்காப் படையினரிடம் வான்புலிகளின் விமானங்களைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகள் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வான்புலிகளின் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள 14 MM கனோன் ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் 23 MM கனோன் ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகளே பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இத்தகைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை வைத்து வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழத்த முடியாது. அத்துடன் யுத்த விமானங்களைப் பயன்படுத்தி விமானங்களைத் தாக்கியழிக்கும் அனுபவமும் சிறீலங்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆயுதம் தாங்கிய குழுவினர் பதுங்கியிருந்து தாக்கியதில் 3 கடற்படையினர் பலி. வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய குழுவொன்று பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் 3 கடற்படைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 3 SLN troopers killed in gunfire ambush in East A group of armed men waiting in ambush Friday morning shot and killed three Sri Lanka Navy (SLN) troopers who were on a road patrol in Kuchchaveli in Trincomalee, according to Sri Lankan military officials in Colombo. Further details are not available. -Tamilnet-
-
- 7 replies
- 1.8k views
-
-
திமுக அரசால் தான் விடுதலைப்புலிகள் வளர்கிறார்கள் : ஜெயலலிதா சென்னை : தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடப்பதால்தான், இலங்கையில் விமான தாக்குதல் நடத்தும் அளவிற்கு விடுதலைப்புலிகள் வளர்ந்துள்ளார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு தேவையான ராணுவ தளவாட பொருட்களை இங்கிருந்து கடத்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது தான் இதற்கு காரணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் தவிர மருந்துகள், உணவு மற்றும் பொருட்களும் இங்கிருந்து கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் தினமலர்
-
- 63 replies
- 7.5k views
-
-
மன்னாரில் மக்கள் குடியிருப்புகள் மீது வான்குண்டு வீச்சு- எறிகணைத் தாக்குதல்கள் [வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2007, 17:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் பரப்புக்கடந்தான் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள், இன்று தாக்குதலை நடத்தியுள்ளன. இரண்டு கிபீர் வானூர்திகள், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் மூன்று முறை மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் மக்களின் பயன்தரு மரங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதமடைந்துள்ளன. மன்னார் முள்ளிக்குளம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடர் எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டன. சிறிலங்கா இராணுவத்தினரின் பின்தளங்களில் இருந்து இன்று காலை 8.30 …
-
- 1 reply
- 900 views
-
-
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தவும்: அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் [வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2007, 16:32 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்காவைப் போல் 20 நாடுகளும் சிறார்களை படையில் பயன்படுத்துவதால் அந்த நாடுகளுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்தும் படி நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்காவை கேட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டுக்கான சிறார் …
-
- 0 replies
- 773 views
-
-
வெள்ளி 27-04-2007 15:22 மணி தமிழீழம் [சிறீதரன்] பல்கலைக்கழக மாணவர்களை இராணுவப் புலனாய்வாளர்களினால் விசாரணை. வெளி மாவட்டங்களில் இருந்த யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்திற்கு கப்பலில் வரும் மாணவர்களை தெல்லிப்பளையில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர். இராணுவப் புலனாய்வாளர்களின் விசாரணையின் பின்னரே இவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர் கப்பலில் வரும் மாணவ, மாணவிகள் காங்கேசன்துறையில் இருந்து கப்பலில் இருந்து இறங்கி தெல்லிப்பளைக்கு கொண்டுவரப்பட்டதும், அங்குவைத்து யாழ்ப்பாணத்திற்கு வந்தமைக்கான காரணம் கேட்டுப் பதியப்படுகின்றது. இதன்போது பல்கலைக்கழக கல்விக்காக வந்ததாக தெரிவித்ததும் குறிப்பிட்டவர்கள் தனிமைப்படு…
-
- 0 replies
- 753 views
-
-
வெள்ளி 27-04-2007 14:44 மணி தமிழீழம் [முகிலன்] புலிகளின் வான்படையை தாக்கியழிக்க உடன் நடவடிக்கை எடுங்கள் - ஜாதிக ஹெல உறுமய விடுதலைப் புலிகளின் வான்படையை உடன் அழித்திட சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுதுள்ளது. இதுகுறித்து ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஷ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில் ..... விடுதலைப் புலிகள் வான்படையை கட்டியெழுப்ப உதவியது ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரபாகரன் இடையே செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையே. எனவே தேசத்திற்கு துரோகமிழைத்து ரணில் தனது பதவியைத் துறந்து நாட்டுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.…
-
- 9 replies
- 1.9k views
-
-
பாதுகாப்பு செயலாளரின் செயற்பாடுகள் வரையறையை மீறுவதாக வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு பாதுகாப்பு செயலாளரின் செயற்பாடுகள் சகல வரையறைகளையும் மீறிச் சென்று கொண்டிருப்பதாக கடுமையாக சாடியுள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரான வாசுதேவ நாணயக்கார, பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஜனாதிபதி ஒரு போதும் பின்னிற்க கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பாதுகாப்பு செயலாளருக்கும், "டெய்லி மிரர்" நாளிதழ் ஆசிரியருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கை எமக்கு வாசிக்க கிடைத்தது. மக்களின் நலனுக்காக உண்மையை வெளியிடவுள்ள உரிமையை பாதுகா…
-
- 1 reply
- 1.3k views
-
-
மாதகல் பகுதியில் குடும்பஸ்தர் கடத்தல் பண்டத்தரிப்பு மாதகல் பகுதியில் ஆயுதாரிகளால் குடும்பஸ்தர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கேணியடி மாதகலைச் சேர்ந்த செல்லத்துரை தவரட்ணம் (வயது-48) என்பவரே கடத்திச்செல்லப்பட்டதாக அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தினகுரல்
-
- 0 replies
- 943 views
-
-
சிறீலங்காவுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அவதானிப்பு அமைப்பு கோரியுள்ளது. சிறீலங்காவில் சிறுவர் படை சேர்ப்பு மற்றும் சிறுவர் மற்றும் மனித உரிமைகள் மோசமாக சிறீலங்காவால் மீறப்பட்டு வருவதை அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வன்மையாக சாடி வரும் நிலையில் அமெரிக்க நியோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் Human Rights Watch (HRW) சர்வதேச சமூகத்திடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. Citing child soldiers, HRW urges cut in military aid to Sri Lanka [TamilNet, Friday, 27 April 2007, 03:18 GMT] Human Rights Watch (HRW) this week called on the United States to curtail military assistance to Sri Lanka,…
-
- 2 replies
- 1.3k views
-
-
படையினருக்கு மலர் தூவி கோதாபயவை பாதுகாப்போம்' கோட்டை ரயில் நிலைய ஆர்ப்பாட்டத்தில் கோஷம் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அமைச்சு செயலாளர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, உண்மையான சமாதானம் நாட்டுக்குத் தேவை, அதைக் கொண்டுவர கோதாபய தேவை!, ஐ.தே.க.நாட்டை நாசமாக்கியது, மகிந்த நாட்டை சரி செய்தார்! நாட்டை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கவே கோதாபய மீது குற்றஞ் சுமத்துகிறார்கள்! நாடு, மக்கள், முப்படையினர், பொலிஸா…
-
- 3 replies
- 1.8k views
-
-
புலிகளின் வான் பலத்தை அழிக்க அரசு துரித நடவடிக்கையிலீடுபட வேண்டும் அரசாங்கம் காலம் தாழ்த்தாது விடுதலைப்புலிகளின் விமான பலத்தை அழித்தொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென அறிவுரை வழங்கும் ஜாதிக ஹெல உறுமய இந்த நிலைக்கு புலிகள் வளரக் காரணமாக அமைந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தமது கட்சியை விட்டு வெளியேற வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஷ்ரீ வர்ணசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்; புலிகளுக்கு விமான பலமிருந்த போதும் பலாலி இராணுவ முகாமின் முக்கியமான இடங்களை அழிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்ற போதும் இ…
-
- 8 replies
- 2k views
-
-
மட்டக்களப்பில் மூடப்பட்ட நிலையில் 58 பாடசாலைகள் 17 ஆயிரம் மாணவரின் கல்வி நடவடிக்கை பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக 58 பாடசாலைகள் இயங்காது மூடப்பட்டுள்ளன. இதனால் 17 ஆயிரம் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 38 பாடசாலைகள் இயங்கவில்லை. 8,500 மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 6 ஆயிரம் மாணவர்கள் பாடசாலை செல்லாது இருப்பதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் தெரிவித்துள்ளார். மூதூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள…
-
- 0 replies
- 798 views
-
-
சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை ஏப். 30 இல் மக்களுக்கு சமர்ப்பிப்பு தேசிய பிரச்சினைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மே தினக் கொண்டாட்டத்தின்போது சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுவிட்டத
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ். ரயில் நிலையப் பகுதியில் இரவில் வேட்டுச் சத்தங்கள் யாழ். ரயில் நிலையப் பகுதி யில் நேற்றுமுன்தினம் கேட்ட துப் பாக்கி வேட்டுச் சத்தத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. யாழ். ரயில் நிலையப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணி யளவில் முதலில் ஒரு வெடிச் சத் தம் கேட்டது என்றும் அதன் பின்னர் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேவேளை இந்தத் துப்பாக்கி வேட்டுக்கள் எதற்காக தீர்க்கப்பட் டன என்பது குறித்த தகவல் எதுவும் தெரிய வரவில்லை. உதயன்
-
- 1 reply
- 1.1k views
-
-
""நாங்கள் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர்) என்ன தும்புத் தடிகளா, கூட்டிவிட்டு தூக்கி எறிந்து விடுவதற்கு? நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. எங்களது உரிமைகளைத்தான் கேட்கிறோம்.'' இவ்வாறு அரசின் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார் இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான். நேற்று ஜனாதிபதியின் அலரி மாளிகையில் இடம்பெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசுகையி லேயே அவரது இந்தச் சீற்றம் வெளிப்பட்டது. மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் முதல் முறை யாக அதிக எண்ணிக்கையில், 3 ஆயிரத்து 179 ஆசி ரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான முதல் கட்ட வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே இ.தொ.கா. தலைவர் கோபம் கொப்புளிக்க இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல…
-
- 4 replies
- 1.2k views
-