Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் பலி- 4 பேர் காயம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வான்படையின் இரு மிக் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் ஒரு பிள்ளையின் தந்தையான மூங்கிலாறு உடையார்கட்டைச் சேர்ந்த பே.பிரதீப் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வள்ளிபுனத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இலட்சுமணன் குணரத்தினம் …

  2. அனைத்துலக ஊடகங்கள் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலக ஊடக நிறுவனங்கள் சில தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படுவதாக மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையில் உள்ள வான்படைத் தளத்தின் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது வான்தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை தாக்கியதாக ஆரம்பத்தில் சில ஊடகங்கள் செய்தி வெள…

  3. [Wednesday April 04 2007 07:59:52 AM GMT] [uthayan.com] பிராந்தியம் முழுவதுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயங்கரவாத எதிர்ப்புத் தந்திரோபாயத்தில், கூட்டாகச்செயற்பட முன்வருமாறு சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. புதுடில்லியில் நேற்று ஆரம்பமாகிய சார்க் நாடுகளின் தலைவர்களது உச்சிமாநாட்டில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தார். புதுடில்லியில் இருதினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலைதீவு ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் எட்டாவது நாடாக சார்க் அமைப்பில் சேர்ந்து கொண்ட ஆப்கானிஸ்தானின் அதிபரும் இந்த மாநா…

  4. செவ்வாய் 03-04-2007 23:06 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த 3 மாதங்களில் 67 பேர் சுட்டுக்கொலை, 29 ஆட்கடத்தல், 68 பேர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதியில் யாழ்பாணத்தில் 67 பேர் கொல்லப்பட்டும் 29 பேர் கடத்தப்பட்டும் 68 பேர் காணாமல் போகடிக்கப்பட்டும் உள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனம் தெரியாத ஆயுததாரிகளால் ஜனவரி 20 பேரும் பெப்ரவரி காலப்பகுதியில் 8 பேரும் மார்ச் காலப்பகுதியில் 39 பேரும் மொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் 67 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இனம் தெரியாத வெள்ளைவான்கள், சிறீலங்கா இராணுவத்தினர், சிறீலங்கா படைப்புலனாய்வாரள்கள் ஆகியோரால் ஜகவரி மாதம் 10 பொதுமக்களும் மார்ச் மாதம் 19 ப…

  5. வியாழன் 05-04-2007 00:58 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் 14வது மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இப்பதிலை முகர்ஜி தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் அமைதிவழியில் தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பபாடு என முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை எனவும் சிறீலங்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா சகல உதவிகளையும் வழங்…

  6. கிழக்கு திமோர், நேபாளம் போன்று இலங்கை விவகாரத்திலும் சர்வதேசம் தலையிட வேண்டும் பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்பாக ஒரு தரப்பை குற்றஞ்சாட்டுவதும், அதற்கு மறுப்பு தெரிவிப்பதும் நாளாந்த நிகழ்வாகிவிட்டமை கவலையளிப்பதாகவுள்ளது. எனவே கிழக்கு தீமோர் மற்றும் நேபா ளத்தில் செயற்பட்டதைப்போன்று சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்திலும் தலையிட வேண்டும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலை முயற்சிகள், எறிகணை வீச்சுக்கள், பகடைக்காய்களாக பயன்படுத்தல் போன்ற அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் போன்ற அனைத்து உரிமைகளைய…

    • 0 replies
    • 730 views
  7. பஞ்சாயத்து முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு அபத்தம் ` தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ("சார்க்') மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றார். அவர் களுள் ஒருவர் அவரது நெருங்கிய நண்பரும் பஞ் சாயத்துத் துறைக்கான இந்திய மத்திய அமைச்சரு மான மணிசங்கர ஐயர் என்று தெரிவிக்கப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாக முறையை குறித்து இந்திய அமைச்சரிடம், இலங்கை ஜனாதிபதி கேட்டுத் தெரிந்துகொண்டார் என்றும் கூறப்படுகின்றது. இலங்கையின் தேசியச் சிக்கலாக உருவெடுத் திருக்கும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான தெற்கின் முன் யோசனைகளை சிபாரிசு செய்யும் நோக்குடன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒ…

    • 5 replies
    • 2k views
  8. ''அரசின் இராணுவ மூலோபாயம் தோல்வியடைகிறது'' -ச.சங்கரன்- விடுதலைப் புலிப்படைகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் பலப்பரீட்சை ஒன்றக்கான போர் ஆரம்பித்திருக்கின்றது. இதன் வெற்றி தோல்வி பூடகமாக உள்ளது. வெளித்தோற்றத்தில் ஒன்றாகவும், யதார்த்தத்தில் வேறு ஒன்றாகவுமேயுள்ளது. உண்மையிலேயே மகிந்த அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. அரசு எதிர்பார்த்த இராணுவத் திட்டமிடலின்படி எதுவும் நடைபெறவில்லை. அரசுக்கு நில மீட்பு என்ற பலகோணத்திட்டத்தின் கீழ் ஒரு கோணத்தில் தான் வெற்றிபோல் காட்டிக்கொள்ள முடிந்துள்ளது. இராணுவ ரீதியில் எதுவித நலன்களையும் சாதிக்க முடியவில்லை. புலிகளைப் பலவீனப்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கத்தின் பிரதான திட்டம் புலிகளின் வன்…

    • 3 replies
    • 1.9k views
  9. ஜி.சீ.ஈ. பரீட்சை முடிவுகளை இணையத்தில் பார்ப்பதில் நெருக்கடி வேம்படி, யாழ். இந்து முன்னிலையில் யாழ்ப்பாணம்,ஏப்.4 கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சை முடிவுகள் இணைத்தளம் மூலம் திங்கள் இரவு வெளியாகின. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில், சாதாரண தர பரீட்சை முடிவுகளை திங்கள் இரவே பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நேற்றுக் காலையிலிருந்தே நகரப் பாடசாலைகள், தனிப்பட்ட மாணவர்கள் என்று எல்லோரும் பரீட்சை முடிவுகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்ததால் நெருக்கடி காரணமாக இணையத்தளத்தின் வேகம் குறைந்து காணப்பட்டது. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளும், மாணவர்களும் பரீட்சை முடிவுகளை அறிவதற்காக இணையத்தளத்தைப் பார்க்க முண்டியடித்தமையும் அதன் வேகம் குறைந்ததற…

  10. [Wednesday April 04 2007 08:33:49 AM GMT] [யாழ் வாணன்] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து அரசு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் என வெளியான செய்தியில் உண்மையில்லை. அரசு இது குறித்து ஆராயவில்லை என்று பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான செய்தி யாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பு கிராமோதய நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் அங்கு தொடர்ந்து தகவல் தருகை யில் கூறியதாவது: இந்தச் செய்தி எவ்வாறு வெளியிடப்பட் டது என்பது குறித்து அரசு விசாரணை நடத் தும். சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இச்செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றார் செய்தியாள…

  11. வடமராட்சி இன்பருட்டி கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய கடல் ஒத்திகை வடமராட்சி இன்பருட்டி கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய கடல் ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடற்படையினர் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ஒருவர் தாக்கவர மற்றவர்கள் அத்தாக்குதலை முறியடிப்பது போன்ற இவ் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இன்றை ஒத்திகைப் பயிற்சியில் 3 உலங்கு வானூர்த்திகள், 16 டோரா பீரங்கிப் படகுகள், 20 நீருந்து விசைப் படகுகளும் ஈடுபட்டுள்ளன. pathivu.com

    • 2 replies
    • 1.1k views
  12. திருமலையில் தன்னார்வப் பணியாளர்கள் இருவர் படையினரால் கைது திருமலை உப்புவெளியில் தன்னார்வப் பணியாளர்கள் இருவர்கள் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர். NPPF எனப்படும் தன்னார்வ நிறுவன பணியாளர்கள் இருவரும் தன்னார்வ நிறுவனத்தின் வாகனத்தில் சென்று கொண்டுடிருந்த போது அவர்களை வழமறித்து சோதனையிட்டனர். இன்று மதியம் 1.30 மணியளவில் உப்புவெளிச் சந்தியில் வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது அவர்கள் வானத்தில் கைக்குண்டு இருந்ததாகத் தெரிவித்து இவர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தனபாலசிங்கம் சுவீந்திரன், முகதீன் சுகைதீன் ஆகியோரோ கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவருகின்றது. pathivu.com

  13. விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகள் [04 - April - 2007] விடுதலைப்புலிகளின் இலகு விமானம் 26.03.07 இல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்திய தாக்குதலானது உள்நாட்டு மற்றும் சர்வதேசளவில் அதிர்ச்சியளித்திருப்பதைக் காணலாம். இது இத்தகைய அமைப்பொன்றினால் உலகில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என்ற வகையில் பல்வேறுபட்ட உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதலானது இலங்கைக்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேடமாக கூட்டப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் கூறியுள்ளார். பயங்கரவாதம் முற்றாகக் களையப்பட வேண்டுமென்பதை இச்சம்பவம் மேலும் உணர்த்தியுள்ளதாகவும், அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பு அவசியமெனவ…

    • 2 replies
    • 1.7k views
  14. எட்வேர்ட் குணசேகரவை தொடர்ந்து மீண்டும் ஐ.தே.க.வுக்கு சிலர் திரும்பிச்செல்லும் சாத்தியம் ஐ.தே.க.விலிருந்து விலகி ஆளும் தரப்பில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட சிலர் மீண்டும் அக்கட்சியில் இணையவிருப்பதாக அறிய வருகிறது. ஐ.தே.க.விலிருந்து விலகி அர சாங்கத்தில் பிரதி ரயில்வே அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட எட்வேர்ட் குணசேகர நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இந்நிலையில் ஐ.தே.க. விலிருந்து விலகி ஆளும் தரப்புடன் இணைந்து கொண்ட மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அக்கட்சியிலேயே இணையவுள்ளனர். தமக்கு அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், அவை பெயரளவில் மாத்திரமே…

  15. [சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 15:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்துலக மட்டத்தில் ஆதரவு திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச்சபை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காப் படைகளினதும், விடுதலைப் புலிகளினதும் உண்மையான பங்களிப்புக்கள் இல்லாமல் மனித உரிமை மீறல்களில் ஒரு செயற்திறன் மிக்க மாற்றம் வரப்போவதில்லை என நம்புகின்றோம். இந்த பங்களிப்புக்களில் மேலும் தாமதங்கள் ஏற்படுத்தாது ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளுதல், செயற்திறனுள்ள அனைத்துலக கண்காணிப்புக் குழுவை நியமித்தல் போன்றன அடங்கும். க…

  16. 'மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமையும்' -சபேசன் 'கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் திரு ஜெயக்குமார் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். இந்த நல்ல மனிதரை இழந்து எமது தேசம் இன்று சோகக் கடலிலே மூழ்கிக் கிடக்கின்றது.' தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்: 'அடி தாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா?' என்று ஒரு பாடலின் வரிகள் கூறும். அடிகளை மட்டுமல்ல, இடிகளையும் தாங்கி நிமிர்ந்து நின்றவர்தான் எங்கள் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, அவுஸ்திரேலியாவில் பேரினவாதச் சார்புச் சக்திகள் கொடு…

  17. அம்பாறை கல்முனையில் படையினர் மீது தாக்குதல் : நான்கு பேர் பலி. அம்பாறை மாவட்டம் கல்முனையில் வீதிரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் அதிரடிப்படை சார்ஜண்ட் ஒருவர் உட்பட நான்கு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது வீதிரோந்தில் அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதினால் அதிரடிப் படையின் சார்ஜண்ட் உட்பட நான்கு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. . - சூரியன்

  18. [செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2007, 13:35 ஈழம்] [புதினம் நிருபர்] பொடா வழக்கிலிருந்து பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோரை விடுதலை செய்து இன்று செவ்வாய்க்கிழமை பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13 ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத…

    • 2 replies
    • 1.1k views
  19. மனித உரிமை மீறல்கள் தொடர்பான உலகின் கவனத்தை சிறிலங்கா அரசு மாற்ற முயல்கின்றது: சு.ப.தமிழ்ச்செல்வன். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் அனைத்துலக சமூகம் எடுத்துள்ள கவனத்தை சிறிலங்கா அரசாங்கம் திசை திருப்ப முனைகின்றது. இதன் பொருட்டு தமிழ் மக்களின் உரிமைப் போருக்கு எதிராக பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தொடரை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்த முனைகின்றது. தமிழ்நெட் இணையத்தளத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "சார்க் போன்ற மாநாடுகள் நடைபெறும் போத…

  20. சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி. சிறிலங்காப் படையினரின் அழ ஊடுருவும் அணியினர் வவுனியா வடக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடத்திய தாக்குதலில் ஆண், பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சேமமடுவுக்கும், ஆனந்தப்புளியங்குளத்திற்கும

  21. கனடாவிலிருந்து புலிகளுக்கு `ஸ்லின்' விமானங்கள் புலிகள் இயக்கத்திடம் இவ்வாறான விமானங்கள் இருப்பதாக உறுதியான தகவல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க இராணுவ செய்மதி மூலமாக புகைப்படம் பிடிக்கப்பட்ட இரணைமடு பிரதேசத்திலுள்ள புலிகள் இயக்கத்தினரின் விமான ஓடுபாதை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்களைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்களிலிருந்து வெளியாகி விட்டது. இந்தச் செய்மதிப் படங்களை ஆராய்ந்து தெரிவிக்கப்பட்ட தகவல்களில் அந்த இரண்டு விமானங்களும் ஸ்லின் வகை விமானங்கள் என்பதைப் பாதுகாப்புத் துறையினர் அறிந்து கொண்டனர். மேலும் மேற்படி" ஸ்லின்", விமானங்களின் உற்பத்தி மற்றும் சர்வதேச ரீதியிலான விற்பனைகள் என்பவற்றை செக்கோஸ்செலவாக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள…

  22. 'மாமனிதர்' ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு: கிழக்குத் தீமோர் தூதரகம் இரங்கல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு, இன்று மாலை மெல்பேல்பேண் ஸ்பிறிங்க்வேலில் உள்ள நகர மண்டபத்தில் நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 2.25 மணியளவில் அவருடைய புகழுடல் அடங்கிய பேழை ஊர்தியில் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. வாயிலில் இருந்து மேடை வரை, செங்கம்பளம் விரிக்கப்பட்ட, மண்டபத்தின் பிரதான வாயிலில் 'மாமனிதர்' ஜெயக்குமாரின் தமிழ்ப் பாராம்பரிய உடையணிந்த உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உருவப்படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்ததோடு, படத்தின் அருகாமையில் தமிழீழத்தின் தே…

    • 1 reply
    • 948 views
  23. செவ்வாய் 03-04-2007 22:13 மணி தமிழீழம் [மகான்] கடற்படையினரால் ஆறு தரைப்படையினர் சுட்டுக்கொலை வலிகாமம் அராலி கொட்டைக்காடு பகுதியில் கடந்த செவ்வாய் அதிகாலை 5 மணியளவில் சில வீடுகளுக்குள் புகுந்த சிறீலங்கா தரைப்படையினர் அங்கு உறங்கிக்கொண்டிருந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டனர். எனினும் இளம் பெண்கள் கூக்குரலிட்ட அயலவர்களை கூட்டியதை அடுத்து அவர்கள் அவசர அவசரமாக பனங்காட்டின் ஊடாக ஓடியுள்ளனர். இதனை அவதானித்த கடற்படையினர் அரைகாற்சட்டையுடன் ஓடிய தரைப்படையினரை சரமாரியாக சுட்டுள்ளார்கள். இதன்போது ஆறுபேரும் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. pathivu.com

    • 6 replies
    • 2.9k views
  24. யாழ் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களை கண்காணிக்கும் சிறீலங்காப் படையினர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி முன்னால் இராணுவத்தினர் வார இறுதி நாட்களான சனி ஞாயிறுகளில் வகுப்புகள் இடம்பெறும் போது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கை கடந்த வாரம் முதல் இடம் பெறத் தொடங்கியுள்ளது. தொழில் நுட்ப நிறுவனத்தின் வளாகத்தை நோக்கி துப்பாக்கிகளை சுடு நிலையில் ஏந்திய வண்ணம் இராணுவத்தினர் நிற்பதினால் வார இறுதி நாட்களில் வகுப்புக்கு வரும் மாணவ மாணவிகள் பெரும் பதட்டமான நிலையில் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். பிறவுன் வீதிச் சந்தியில் கடுமையான சோதனைகள் நெருக்கடிக்குள் உள்ளாகி வகுப்புகளுக்கு…

  25. உன்னிச்சைப் பகுதியில் மோதல்கள் - இரு இராணுவத்தினர் காயம் மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையில் சிறுமோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று பின்னிரவு வேளையில் உன்னிச்சை பகுதியில் இருந்து வலிந்த படைநகர்வு முயற்சியில் சிறீலங்கா படைகள் ஈடுபட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மோதல்களில் இருபடையினர் காயமடைந்திருப்பதாக படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

    • 0 replies
    • 742 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.