ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
பார்வையாளராகமட்டுமில்லாது பங்காளிகளாவோம் www.gopetition.com/petitions/international-donors-take-action-with-sri-lanka.html
-
- 0 replies
- 1.1k views
-
-
இராணுவ தளங்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல் தென்மராட்சியிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து நேற்று முன்தினம் அதிகாலை விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்களில் படைத்தரப்பு பாரிய சேதங்களை சந்தித்துள்ளது. காயமடைந்த படையினரை சனிக்கிழமை முழுநாளும் இராணுவ நோயாளர் காவுவண்டிகள் மூலம் மீட்டெடுத்ததாக சாவக்கச்சேரி தகவல்கள் தெரிவிக்கின்றன. துல்லியமாக முகாம்களை இலக்குவைத்து எறிகணைத்தாக்குதல்கள் இடம் பெற்றதால் பொதுமக்களுக்கு சேதமேதும் ஏற்ப்பட்டிருக்கவில்லை. இதனிடையே நேற்று மாலையும் இம் முகாம்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilr.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இந்தியாவை ஓரம் கட்ட சீனா எடுக்கும் முயற்சி - பி.இராமன் - பாகிஸ்தானிலுள்ள க்வாதார் துறைமுகம் இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மியன்மாரிலுள்ள சிட்வீ துறைமுகம் ஆகியன குறித்து 2002 ஆம் ஆண்டிற்கு முன்னர் உலக மக்கள் அதிக அளவில் அறிந்திருக்கவில்லை. மீனவர்களின் நடவடிக்கைகளுக்கான மீன்பிடித் துறைமுகங்களாக மட்டுமே இந்தத் துறைமுகங்கள் விளங்கின. இந்தத் துறைமுகங்களால் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என எந்தவொரு ஆய்விலும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. 2002 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவின் கடற் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் பின்னர் இந்த மூன்று துறைமுகங்களின் பெயர்கள் அடிபட ஆரம்ப…
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய கடற்படை பயம்! கடலில் குதித்து அகதி பலி ராமேஸ்வரம் - மார்ச் 19, 2007 : இந்திய கடற்படையினரைப் பார்த்து விட்டதால் கடலில் குதித்த இலங்கை அகதி பரிதாபமாக பலியானார். இலங்கையிலிருந்து அதிக அளவில் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இதுபோல அகதிகளாக படகுகளில் வருபவர்கள், ஒரு படகுக்கு 30 பேர் மட்டுமே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் இதற்கும் அதிக அளவில் சில நேரங்களில் அகதிகளை அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையிலிருந்து ஒரு படகில் 32 பேர் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கடலில் அந்தப் படகு வந்தபோது தொலைவில் இந்திய கடற்படை ரோந்துப் படகு வந்துள்ளது. இதைப் பார்த்த படகை ஓட்டி வந்த மீனவர்கள், அகதி…
-
- 2 replies
- 1k views
-
-
குடுமியைத் தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும்? கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அதைப் பிடிக்க நினைத்த புத்திசாலி போல தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை தாக்கிக் கொல்வதில் இருந்து காப்பாற்ற தமிழ்நாட்டில் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ஸ்ரீலங்கா தூதுவரது அலுவலகத்துக்கு முன்பாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஆளும் கட்சியான திமுக மார்ச்சு 12 ஆம் நாள் ஒரு கண்டன ஊர்வலத்தை நடத்தியது. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் கொ…
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு அகதிகளுக்கு உடனடியாக உதவிகள் தேவை என பிஷப் கேட்டுக்கொண்டுள்ளார். . கிட்டத்தட்ட 1 53 000 மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர் இவர்கள் சரியான உணவு குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இன்றி கடந்த நான்கு ஐந்து நாட்களாக மிகவும் அவதிப்படுகின்றனர். சர்வதேச சமுதாயமும் புனர்வாழ்வு அமைப்பும் இந்த ஆதரவற்ற மக்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் என திரிகோணமலை-மட்டக்களப்பைச் சேர்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பிஷப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை ஊடகங்களுக்கு தெரிவித்தார் மேலும் அங்கு இருக்கும் மிக கொடூரமான நிலையையும் தெளிவாக நேற்று ஞாயிற்றுக் கிழமை கூறினார். பெரும்பாலான இடம்பெயர்ந்தோர்…
-
- 0 replies
- 808 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களின் நடுவே பிரித்தானியாவின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் சிக்கிக்கொள்ள நேரிடலாம் என பிரித்தானியா தனது மக்களை எச்சரித்துள்ளது. இத்தகவல் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பிரித்தானியாவில் தங்கியிருந்த வேளை பிரித்தானியா இந்த அறிவித்தலை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென்பகுதியான கொழும்பில். கொழும்பு நகர வீதிகளில் அதிகளவான படையினரை காணமுடியும். வீதிச் சோதனைச்சாவடிகள் வழமையாக அதிகரித்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
'' உலக வலையில் புலிகள் '' அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் தாக்கி அழிக்கப் படும் கப்பல்கள் எவ்வாறு இலங்கை கடற்படைகளால் கண்காணிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டன என்ற விடையை தேடினால் அதிர்ச்சி தரும் பல உண்மைகள் துளங்கும். இவ்வாறான நிகழ்வுகள் ஏன் செய்யப் படுகின்றன யாரால் செய்யப்படுகின்றன என்பதை வெளிப்படையாக புலிகளறிவார். இது புலிகளிற்கு ஒரு எச்சரிக்கை...யாரால்...?? இதுவே தான் புதிர்... தனது சுயநலன்களிற்காக ஒரு விடுதலை படையை அழித்து நசுக்கி அந்த அரசகளுடன் கூட்டு வைத்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி கொள்ள அந்த வல்லரசுகள் செய்யும் சதி நடவடிக்கைகள் தான் இவை... இருவரும் சமதானத்தை நிலை நாட்டி போரை முடிவிற்கு கொண்டு வரவேண்டுமென்ற வெற்று கோசத்தை வெளி…
-
- 14 replies
- 5.5k views
-
-
திங்கள் 19-03-2007 18:58 மணி தமிழீழம் [சிறீதரன்] வர்த்தகர், மாணவர் அரியாலையில் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் யாழ்பாணம் புங்கன்குளம் அரியாலைப்பகுதியில் வர்த்தகர் மற்றும் அவருடன் சென்ற மாணவர் ஒருவரும் யாழ் மாநகரசபை பகுதியின் ஞாயிறு மதியம் விசாரணைக்கு உட்படுத்திய பின் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட வர்த்தகர் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 39 அகவையுடைய விக்னேஸ்வரன் சுபாஸ்கரன் எனவும் மாணவர் 18 அகவையுடைய தேவராஐா நிதர்சன் எனவும் இனம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் ஞாயிறு காலை 9 மணியளவில் வியாபார விடயமாக யாழ் நகருக்கு சென்றபின் அரியாலையில் சுபாஸ்கரனின் தயாரின் வீட்டுக்கு சென்றபின் நுணாவிலுக்கு திரும்…
-
- 0 replies
- 677 views
-
-
Human Rights Watch web about srilankan tamils? or go to -__transcurrents.com/tamiliana/archives/119
-
- 1 reply
- 938 views
-
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது சிறிலங்கா வான்படையினரின் மிக் ரக விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வடமராட்சி கல்வி வலயத்தின் 2 பாடசாலைகள் சுண்டிக்குளத்தில் இயங்கி வரும் நிலையில் அப்பாடசாலைகளில் ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சிறிலங்கா வான்படையினரின் மிக் ரக விமானங்கள் 5 குண்டுகளை வீசியுள்ளன. இதில் ஆசிரியயையான கேசவஞானி சத்தியவதி (வயது 20), மாணவர்களான கணபதிப்பிள்ளை நிரோஜன் (வயது 12), இ.ஜெகதீபன் (வயது 14) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் சிறு காயங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடத்தபட்டு உயிருடன் இருந்து சித்தரவதை அனுபவிக்கும் தமிழரை மீட்க ஜரோப்பிய தமிழர்கள் போராடவேண்டும். திங்கட்கிழமை 19 மார்ச் 2007 யோகராஜன் இலங்கை இராணுவத்தாலும் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டு 60 பேர் கொண்ட குழுவாக இயங்கும் விசேட கட்டமைப்பே என்னை கடத்தியது என்னை அடைத்து வைத்திருந்த குகைக்குள் 38 தமிழ் இளைஞர்கள் வரை தடுத்து வைக்கபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒருவர் இருவராக தினமும் வாகனத்தில் ஏற்றி சென்று கொலை செய்து பல்வேறு இடங்களில் வீசப்படுவார்கள் நான் சிறை பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருப்பவர்கள் அனைவரும் இறுதியாக கொலை செய்வதற்கு நாட்கள் குறிக்கப்பட்டு கொலை செய்யபடும் நாளை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். இந…
-
- 9 replies
- 3k views
-
-
மட்டக்களப்பில் 6 பேரை காணவில்லையென முறையீடு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்குள் 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையும் பாதுகாப்புத் தரப்பையும் கேட்டுள்ளனர். யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த நிலையிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பிலாந்துறையைச் சேர்ந்த ரவீந்திரன் கோபிநாத் (வயது- 22), மாதகல் வைரவர் கோயில் அர்ச்சகர் மயிலப்போடி மேகநாதன் (வயது- 45), உன்னிச்சையைச் சேர்ந்த நவரெட்ணம் அஞ்சலா தேவி (வயது -18), அவரது சகோதரி நவரெட்ணம் ஜெயலலிதா (வயது -13), கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த அழகுத்துரை யோகராஜா (வயது- 23) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாட…
-
- 0 replies
- 760 views
-
-
தத்துக் கொடுப்பதற்கு நான்கு குழந்தைகள் யாழ்ப்பாணம், பெப்.19 சாவகச்சேரி நீதிமன்றப் பொறுப்பில் உள்ள நான்கு குழந்தைகள் தத்துக்கொடுக்கப்படவுள்ளனர். இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளுமே தத்துக்கொடுக்கப்படவுள்ளனர். குழந்தைகளை தத்து எடுக்க விரும்புவோர் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்பி வைக்குமாறு அறி விக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரருடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கத்தினை விண்ணப்பத்தில் குறிப்பிடுமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. http://www.uthayan.com/pages/news/today/18.htm
-
- 0 replies
- 1.2k views
-
-
நலன்புரி நிலையங்களில் நீரினால் பரவும் நோய்கள் குடாநாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் அண்மைக் காலமாக நீரினால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. யாழ். பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகப் புள்ளிவிவரங்கள் மூலம் இத் தகவல் தெரியவந்துள்ளது. ஏனைய பகுதிகளிலும் மேற்படி ரக நோய் காணப்படினும் நலன்புரி நிலையங்களிலேயே அதிக பாதிப்பு உள்ளது. நோய் காணப்படும் இடங்கள் குறித்து வைத்திய அதிகாரிகள் அவை பற்றிய தகவல்களை உடனுக்குடன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு அறி விக்க வேண்டும் என யாழ். பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ் வரன் அறிவுறுத்தியுள்ளார். http://www.uthayan.com/pages/news/today/13.htm
-
- 0 replies
- 851 views
-
-
தெற்கில் ஊற்றெடுக்கும் புதிய கருத்தாதிக்கப் போக்கு தென்னிலங்கையில் இப்போது ஒரு புதிய நம் பிக்கையுடன் கூடிய கருத்தாதிக்கம் பரவி வரு கின்றது. "மஹிந்த சிந்தனை'யின் விளைவாகவும், தென் னிலங்கை அரசியல் பிரசாரங்களின் பெறுபேறாக வும், கள நிகழ்வுகளின் வெளிப்பாடாகவும் இந்த நம்பிக்கை ஊற்றெடுத்திருக்கின்றது. 2001டிசம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்த லில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழி யில் சமாதான முறையில் தீர்வு காணப்பட வேண் டும் என வடக்கு, கிழக்குத் தமிழர்களோடு சேர்ந்து வாக்களித்தனர் தென்னிலங்கை மக்கள். 2004 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலின்போது இதில் சற்று மாற்றம் ஏற்பட்டது. வடக்கும், கிழக் கும் அதாவது தமிழர் தாயகம் தமிழ்த் தேசியத்தை யும், தென்னிலங்கை சிங்கள தேசியத்தையும் பிரதி ப…
-
- 0 replies
- 799 views
-
-
வீடுகளுக்கு சென்று உடைமைகளை எடுத்துவர ஏக்கத்துடன் அலைந்து திரியும் இடம்பெயர்ந்த மக்கள் * எல்லைச் சோதனை நிலையங்களிலும் காத்திருப்பு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தங்கள் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வருவதற்காக கடந்த சில தினங்களாக அலைந்து திரிகின்றனர். கடந்த 8 ஆம், 9 ஆம் திகதிகளில் புலிகளின் பகுதிகளை நோக்கி படையினர் ஆரம்பித்த பாரிய இராணுவ நடவடிக்கை மற்றும் அகோர ஷெல் தாக்குதல்களையடுத்து இரு நாட்களில் ஒன்றரை இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது, தினமும் புலிகளின் பகுதிகளை நோக்கி ஏவப்படும் கடும் ஷெல்கள் மற்றும் பல்குழல் ரொக்க…
-
- 0 replies
- 688 views
-
-
உணவுக்கு முண்டியடித்து கையேந்தும் பரிதாபம் சமாளிக்க முடியாமல் திணறும் அரச அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமைத்த உணவுகளும் மிகக்குறைந்தளவிலேயே தற்போது வழங்கப்பட்டு வருவதால் அவற்றைப் பெறுவதற்கு இடம்பெயர்ந்த மக்கள் வரிசையில் காத்து நிற்பதுடன் சிலவேளைகளில் முண்டியடித்துக் கொண்டு கையேந்தி நிற்கும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது. அத்துடன், மலசலகூட வசதிகள் இன்மையால் பெண்களும் சிறு குழந்தைகளும் பெரும் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. …
-
- 1 reply
- 791 views
-
-
கிளிநொச்சி பாடசாலை மீது விமானத்தாக்குதல் ஆசிரியர் மாணவர் இருவர் காயம். கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் இன்று காலை 9.45மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் சுண்டிக்குளம் பாடசாலை மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இக்குண்டுவீச்சுத் தாக்குதலின்போது தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஒரு ஆசிரியரும் இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஆசிரியர்மாணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதலின் போது பாடசாலை பலத்தசேதத்திற்குள்ளாகியுள்
-
- 3 replies
- 1.3k views
-
-
சர்வாதிகார அரசிற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: மங்கள சமரவீர ஜதிங்கட்கிழமைஇ 19 மார்ச் 2007இ 06:38 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ நாட்டில் தோன்றி வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எல்லா ஜனநாயகக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி போன்ற ஜனநாயக் கட்சிகளும் இணைந்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொது அமைப்புக்களும்இ ஏனைய தனிநபர்களும் கூட சர்வாதிகாரத்திற்கு எதிரான இந்தக் குழுவில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும். ஒரு சிறு குழுவினர் நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதற்கு அனுமதிக்க முடியாது. சிறீபதி சூரியாராச்சியின்…
-
- 1 reply
- 819 views
-
-
திங்கள் 19-03-2007 02:01 மணி தமிழீழம் [தாயகன்] மணலாற்றுப் பகுதியில் வெடி விபத்தின்போது வீரச்சாவடைந்த லெஃப்ரினன்ட் ஈழமலரின் வித்துடல் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் நேற்று விதைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தை சொந்த முகரியாகவும், 12ஆம் கட்டை, பத்திரகாளி வீதி, விசுமடுவை தற்காலிக முகரியாகவும் கொண்ட லெஃப்ரினன்ட் ஈழமலர் என்றழைக்கப்படும் கனகசிங்கம் கார்த்திகா கடந்த 16 ஆம் திகதி நிகழ்ந்த வெடி விபத்தில் வீரச்சாவடைந்திருந்தார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று மக்களின் வணக்கத்தைத் தொடர்ந்து, விசுமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் புனித விதை குழியில் விதைக்கப்பட்டது. நன்றி : பதிவு தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பி…
-
- 0 replies
- 1k views
-
-
[திங்கட்கிழமை, 19 மார்ச் 2007, 06:15 ஈழம்] [க.திருக்குமார்] இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்போருக்கு அமைதி வழியிலான தீர்வுத்திட்டமே ஒரே வழி என இலங்கையின் அமைதிக்கான ஜப்பானிய சிறப்புப் பிரதிநிதி யசூசி அகாசி அவரைச் சந்தித்த சிறிலங்காவின் நாடாளுமன்றக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கு ஒரு தெளிவான அமைதி வழியிலான தீர்வுத் திட்டத்தையே ஜப்பான் ஆதரிப்பதாக தமது பயணத்தின் போது யசூசி அகாசி தெரிவித்ததாக பேச்சுக்களில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கான இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற குழுவிற்கு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டபிள்யூ. ஜே…
-
- 0 replies
- 806 views
-
-
[திங்கட்கிழமை, 19 மார்ச் 2007, 07:07 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மிகவும் குழப்பமான நிலைப்பாடு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டணைகளுக்கு பதிலாக சுதந்திரத்தை வழங்கி உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை அதன் நடவடிக்கைகளில் மிகவும் செயற்திறன் உள்ளதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் விரும்புவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை கடந்த 9 மாதங்களாக மனித உரிமைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்த முயற்சித்து வந்தாலும் அதற்கு த…
-
- 2 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை 19 மார்ச் 2007 யோகராஜன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற இருக்கும் இலங்கை அரச பயங்கரவாத பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்புகளை எதிர்த்து பிரித்தானிய தமிழர்கள் மாபெரும் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாளை பிற்பகல் 3 மணியில் இருந்து 8 மணிவரை தொடர இருக்கும் இந்த ஆர்பாட்டம், இலங்கையில் இருந்து வருகைதரும் தமிழ் தேசவிரோதிகளுக்கும் மற்றும் அரசுடன் கூட்டிணைந்திருக்கும் சில முஸ்லீம் பச்சோந்தி அரசியல்வாதிகளுக்கும் எதிரானது என்று லண்டன் ஆர்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இன்று லண்டன் பாராளுமன்றத்தில் நடைபெறும் சந்திப்பில் உலகில் கலாச்சாரம் பண்பாடுகளை, இனங்களுக்கிடையே உறுதிசெய்யும் அமைப்பான யுனெஸ்கோ, தமிழரின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்க…
-
- 3 replies
- 1.5k views
-