Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேவையென்றால் நீதிமன்றத்தை இடமாற்றுக. சிறிலங்கா இராணுவம் பதில். - பண்டார வன்னியன் Friday, 16 March 2007 16:22 மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் செறிந்துவாழும் பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரப் பகுதியின் பெவர் மைதானத்திலிருந்து படையினர் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதால் அருகிலுள்ள 4 பாடசாலைகள், தபால் நிலையம், நீதிமன்றம், மாவட்ட செயலகம் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாகப் பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர்…

  2. பாம்பு கடித்து இலங்கை அகதி சிறுவன் பலி மார்ச் 16, 2007 திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பாம்பு கடித்து 13 வயது இலங்கை தமிழ் அகதிச் சிறுவன் ப>தாபமாக இறந்தான். திருவண்ணாமலை அருகே புதுப்பாளையம் என்ற இடத்தில் இலங்கை தமிழ் அகதிகளுக்கான முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்து வரும் ராபின்சன் என்கிற 13 வயது சிறுவனை நேற்று பாம்பு கடித்து விட்டது. அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவனை பாம்பு கடித்தது. உடனடியாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவன் இறந்து விட்டான். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://thatstamil.oneindia.in/news/2007/03/16/boy.html

  3. எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக கர்ப்பிணித் தாய்மார் பலருக்கு கருச்சிதைவு. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்துமேற்கொள்ளப்படும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக கர்ப்பிணித் தாய்மார் பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், முகாம்களில் உரிய சுகாதார வசதியின்மை காரணமாகப் பெரும் தொற்றுநோய் பரவும் அபாயமிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 89 முகாம்களில் ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 264 பேர் அடிப்படை வசதிகளின்றி தங்கியுள்ளதுடன், வீதியோரங்கள் மற்றும் மர நிழல்களுக்குக் கீழ் 15 ஆயிரம் பேரும் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எறிகணைத் தாக்குதல்களின் அதிர்வு காரணமாக கர்ப்ப…

  4. இன்று பிரித்தானிய பாராளுமன்றில் உறுப்பினர் ஒருவர் சிரிலங்கா தொடர்பாக கேட்ட கேள்வி ஒன்றிற்கு பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் அளித்த பதில் ஒளி வடிவில் : http://www.dailymotion.com/video/2423561 நன்றி : நிதர்சனம்

  5. வியாழன் 15-03-2007 16:47 மணி தமிழீழம் [தாயகன்] தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு - ஜேர்மனி, இந்தியத் தூதுவர்கள் சந்திப்பு மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் எற்கணைத் தாக்குதல்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு தூதுவர்களுக்கு முறையிட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாக ஜப்பான், சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று இந்தியா, மற்றும் ஜேர்மனி நாடுகளின் சிறீலங்காவிற்கான தூதுவர்களை சந்தித்தனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியனேந்திரன், கனகசபை, தங்கேஸ்வரி ஆகியோர் இந்தச் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்…

  6. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 1,53,463ஆக உயர்வு [ மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை மாலைவரை 40 ஆயிரத்து 745 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 53 ஆயிரத்து 463 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை இடம்பெயர்ந்த மக்கள் 89 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளின்றி இடம் பெயர்ந்த மக்கள் அவலப்பட்டு வருகின்றனர். சுகாதார வசதியின்மையால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மண்முனை வடக்கில் 29 நலன்புரி நிøலயங்களும், கோறளைப்பற்றில் 4 நிலையங்களும்,…

  7. மட்டக்களப்பு அகதிகள் நகரம் ஆகிவிட்டது எங்கு பார்த்தாலும் மக்களின் அவலக்குரல்கள் உண்மையை வெளிப்படுத்த முடியாத நிலை ஆயர் சுவாம்பிள்ளை கவலை [Friday March 16 மட்டக்களப்பு மாவட்டம் இடம்பெய ரும் அகதிகளால் நிரம்பிவழிகின்றது. இந்த மாவட்டத்தை அகதிகள் நகரம் என்றே கூறவேண்டியுள்ளது. மக்கள் படும் அவ லம் பெரும்துயரைத் தருகின்றது. இவ்வாறு தமது கவலையை வெளி யிட்டார் திருமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி ஜோஸப் சுவாம்பிள்ளை ஆண்டகை. கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூ ரியின் (தேசியப் பாடசாலை) எஹெட் கரித்தாஸ் நிறுவனம் 62லட்சம் ரூபா செலவில் அமைத்துள்ள எஹெட் கரித்தாஸ் வகுப் பறைக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இத்திறப்புவி…

  8. ஆஸிக்கு தஞ்சம் கோரிச் சென்றவர்கள் பசுபிக் தீவில் உள்ள அகதி முகாமுக்கு 83 பேரில் எவருமற்ற ஒரு சிறுவனும்! அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் 83 இலங்கை அகதிகளையும் பசுபிக் தீவான நவ்றுவில் தடுத்து வைப்பது என்று ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்திருக் கின்றது. இவர்களில் மிகப் பெரும்பாலா னோர் இலங்கைத் தமிழர்கள். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவர். நாட்டுக்கு வெளியே இவர்களைத் தடுத்துவைத்துப் பின்னர் அவர்களது தஞ் சக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு தமது அரசு முடிவு செய்துள்ளது என்றும் சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்தி வரும் செயலில் ஈடுபடும் கடத்தல்காரர் களுக்கு இதன்மூலம் உறைப்பானசெய்தி ஒன்றைத் தெரிவிக்க ஆஸ்திரேலி…

  9. ஜவெள்ளிக்கிழமைஇ 16 மார்ச் 2007இ 06:52 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் போர்க் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற உள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் வசம் உள்ள ஐந்து போர்க் கைதிகளையும் விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் உதவியை நாடியுள்ளது. அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளானது நேற்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனுடன் நடைபெற்ற சந்திப்பின் போது கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் சோல்பேர்க்கினால் தெரிவிக்கபட்டதாகவும் இந்த வேண்டுகோள் தொடர்பாக விடுதலைப் புலிகள் பரிசீலிப்பதாகவும் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர…

    • 0 replies
    • 1.1k views
  10. குடாநாட்டில் இளைஞர் இருவர் கடத்தப்பட்டுள்ளார்கள் யாழ் குடாவில் சிறீலங்கா படைப்புலனாய்வாரள்களால் நேற்று முன்தினம் வின்சன் திரையரங்கிற்கு அருகில் வைத்து 22 அகவையுடைய சிவஞானம் சபேசன் என்ற இளைஞர் கடத்தப்பட்டுள்ளார். இதேவேளை மற்றொரு இளைஞர் நேற்று முன்தினம் பகல் பருத்தித்துறை உணவகம் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்த திரவியம் சுசிக்குமார் என்ற இளைஞரும் கடத்தப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  11. மரக்கறி வகைகளை சந்தைப்படுத்த முடியாமல் யாழ் விவசாயிகள் சிரமம் யாழ் விவசாயிகள் பயிரிடப்பட்ட விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மரக்கறிகளின் விலைகள் பெருமளவு குறைவடைந்துள்ளதால் விவசாய குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. அதிகளவு பணத்தை செலவு செய்து பயிரிட்ட விளைபொருட்கள் சிறீலங்கா இராணுவத்தால் ஏ-9 பாதையை மூடியதையடுத்து ஏனைய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யமுடியாமல் உள்ளுர் சந்தைகளில் குறைந்தளவு விலையில் விற்கவேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  12. வடமராச்சி பிரதேச மகளீர் அரசியல் செயலகம் படையினரால் ஆக்கிரமிப்பு குடாநாட்டை விட்டு அரசியல் போராளிகள் அனைவரும் வெளியேறியதையடுத்து கடந்த ஒருவருடகாலமாக மூடப்பட்டிருந்த வடமராச்சி மகளீர் அரசியல்துறை செயலகம் சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நெல்லியடி – வதிரி வீதியில் இருந்த அரசியல்துறை செயலகத்தை ஆக்கிரமித்த படையினர் அதனையே படைமுகாமாக மாற்றியுள்ளனர். இதேவேளை சுற்று வட்டாரங்களில் அமைந்துள்ள வீடுகளிலும் புதிதாக காவலரண்களை அமைத்துள்ளனர்.

  13. கொழும்பு விடுதிகள் தீவிர கண்காணிப்பு கொழும்பில் உள்ள தங்கு விடுதிகளை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தபோவதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்னர். சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கொழும்பு மாவட்ட காவல்துறையினருக்கு இடப்பட்ட உத்தரவிற்கு அமையவே இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக தெரியவருகிறது. இதன்படி புதிய தங்கு விடுதிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தியும் அடிப்படை வசதிகளை கொண்டிராத விடுதிகளை மூடுவதற்கும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  14. கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட இருவர் காயம் மன்னார் பேசாலை கடற்கரைப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. குடியிருப்பு ஒன்றிற்குள் சிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்ததில் அங்கிருந்த 34 அகவையுடைய சார்ள்ஸ் பீரிஸ், அவரது மகன் ஜோய்சன் ஆகிய இருவருமே படுகாயமடைந்தவர்களாவர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  15. இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்ற ஐக்கியநாடுகள் சபையிடம் போதிய பணம் இல்லை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 130 000 மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கூடபோதிய பணம் இல்லை என ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவ் இடம்பெயர்ந்த மக்களுக்கு முதலில் தேவையான அத்தியாவசிய உணவை கூட வழங்குவதற்கு போதிய கையிருப்பு இல்லை என உலக உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்து முக்கிய தேவைகளான குடியிருக்க தேவையான கூடாரங்கள் மற்றும் மலசலகூட வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுக்வும் முடியவில்லை என தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  16. இலங்கை அகதிகளிடம் தமிழக காவல்துறையின் வெறியாட்டம் இலங்கைத் தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாய் நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் என்ற நிலையில் தமிழர்களை இலங்கை அரச வைத்துள்ளது. அப்படிபட்ட நிலையில், இந்தியவிற்கு பல்லாயிரம் தமிழ் அகதிகள் தமிழகம் நோக்கி வந்து, சுமார் 103 அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அண்மைக்காலமாய் இலங்கையில் நிலவும் போர் சூழல் காரணாமாய், தமிழர்கள் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேசுவரம் வந்தடைகின்றனர். அங்கே அகதிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள 287 ஏக்கர் நில பரப்பில், உயரமான சுற்றுச்சுவருக்கு மேல் மின்சாரம் வேலியுடன் அமைந்துள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தான், புதிதாய் வந்திரங்கும் அகதிகளின் வாய்லாய் அமைகிறது. மண்டபம் முகாமில் ஏற்…

  17. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருவதையும், கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கொள்வனவை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதனையும் சில கட்சிகள் மறந்துவிட்டன என்று கொழும்பு ஊடகம் தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியாகியிருக்கும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவின் முன்னாள் கரையோர சுற்றுக்காவல் கப்பல் யுஎஸ்எஸ் கோஸ்ற் கட்டர் கறேஜியஸ் முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. இந்த கப்பலானது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக …

  18. 'இலங்கையில் மனித உரிமை அமைப்பின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்': ஐ.நா ஜவெள்ளிக்கிழமைஇ 16 மார்ச் 2007இ 05:45 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ "இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ் ஆபர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு லூயிஸ் ஆபர் உரையாற்றினார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அனைத்துலக சமூகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய ஜேர்மன் தூதுவரின் கேள்விக்கு பதிலளித்த போதே லூயிஸ் ஆபர் மேற்கண்டவாறு த…

    • 0 replies
    • 514 views
  19. பாத யாத்திரையை மேற்கொண்ட மக்களை திருப்பியனுப்பிய படையினர். - பண்டார வன்னியன் Thursday, 15 March 2007 21:13 மன்னார் நகரிலிருந்து வவுனியா கல்வாரித் தலத்திற்கு தவக்கால பாத யாத்திரை மேற்கொண்ட ஆயிரக் கணக்கான கத்தோலிக்க மக்களை படைத் தரப்பு முருங்கனில் வைத்து நேற்று மீண்டும் திருப்பியனுப்பியுள்ளது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற ஆரம்ப வழிபாடுகளின் பின்னர் காலை 4.45 மணியளவில் வவுனியா கல்வாரி நோக்கி பெருமளவில் கத்தோலிக்க மக்கள் தவக்கால பாத யாத்திரையை மேற்கொண்டனர். மன்னார் - மதவாச்சி பிரதான வீதி வழியாக காலை 10.45 மணியளவில் இந்த யாத்திரிகர் குழு முருங்கன் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது. மன்னார் நகரில் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பித்த குறி…

    • 1 reply
    • 811 views
  20. வியாழன் 15-03-2007 17:06 மணி தமிழீழம் [மகான்] வவுனியா மன்னார் எல்லைக்கிராமங்களை நோக்கி கடும் எறிகணைத்தாக்குதல். இன்று வியாழக்கிழமை காலை கடும் ஆட்டிலறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மன்னார் வவுனியா எல்லைக்கிராமங்களான முள்ளிக்குளம், கீரிசுட்டான் மற்றும் பெரிய பண்டிவிரிச்சான் ஆகியபகுதிகளை நோக்கி மேற்கொண்டுள்ளன. இதனையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டிலறி எறிகணைத்தாக்குதல்களை வவுனியாவிற்கு வடமேற்காக 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இருந்து காலை 9 மணிமுதல் முள்ளிக்குளம் பகுதியை சூழவுள்ள பிரதேசங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்டதாக மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. இதேவேளை முல்லதைத…

  21. 'மட்டக்களப்பின் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் அரசு': 'தினக்குரல்' நாளேடு கவலை மட்டக்களப்பில் தோன்றியிருக்கும் மனிதப் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலான சில அறிக்கைகளை அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகளிடமிருந்து கேட்கக்கூடியதாக இருப்பது பெரும் வேதனையைத் தருகிறது" என்று 'தினக்குரல்' நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கின்றது. 'மட்டக்களப்பின் மனிதப் பேரவலம்' எனத் தலைப்பிட்டு இன்று வியாழக்கிழமை (15.03.07) வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே மூண்டிருக்கும் மோதல்களின் விளைவாக கடந்த வாரத்தில் இரு தினங்களில் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் …

    • 0 replies
    • 635 views
  22. ஜ உதயன் ஸ - ஜ ஆயச 15இ 2007 05:00 புஆவு ஸ இந்த நாட்டின் பாதுகாப்புத்துறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து வலிமை மிக்கவராகக் கருதப்படும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷஇ ஜனாதிபதியையும் வைத்துக்கொண்டு ஆற்றிய பகிரங்க உரை ஒன்று பெரிய சர்ச்சையையும் அதிர்ச்சியையும் கிளப்பியிருக்கின்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த அறிவுஜீவிகள் மத்தியில் ஆற்றப்பட்ட உரை என்ற பீடிகையோடே அது ஒலிஇ ஒளிபரப்பாகியது. கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்த உரை இடம்பெற்றது. "ஆட்கடத்தல்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது ஜே. வி. பியின் அல்லது மலையகத் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிகளின் உறுப்பினர்கள் யாராவது கடத்தப்பட்டிருக்கின்றார்கள

    • 0 replies
    • 970 views
  23. வியாழன் 15-03-2007 17:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] இரத்மலானயில் கைக்குண்டு வீச்சு – ஒருவர் காயம் நேற்று இரவு இரத்மலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது பதிவு.கொம்

  24. இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டும் : ச.செ.சங்கம் -கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்திருக்கும் 120,000ற்கும் அதிகமானவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை வழங்குவதற்கு தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்திருக்கும் 120,000 பேரும் 25 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னரி.கடந்த மூன்று தினங்களில் 40,000 பேர்இடம்பெயர்ந்துள்ளனர் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்ற…

  25. கிழக்கு மாகாணத்திற்கு நிதி உதவி வழங்கும் படி ஐ.நாவிடம் சிறிலங்கா கோரிக்கை ஜவியாழக்கிழமைஇ 15 மார்ச் 2007இ 05:10 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கி மூனை கடந்த செவ்வாய்க்கிழமை அவரது தலைமை அலுவலகத்தில் சந்தித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமஇ கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு நீயூயோர்க்கை சென்றடைந்த அமைச்சர்இ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்இ நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் வெனிமன்இ ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிர்வாக அதிகாரி கெமல் டெர்விஸ்இ மற்றும் உயரதிகாரிகளை சந்தித்தார். இது தொடர்பாக அமைச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.