ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
நேற்று முன்தினமிரவு வவுனியா மருக்காரம்பலை வீதி கணேசபுரத்தில் வீடொன்றிற்குச் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் வீட்டில் இருந்த இளைஞன் வெளியில் அழைத்துச் சுட்டுக்கொன்றுள்ளனர். இதன்போது கொல்லப்பட்டவர் தேவதாசன் கெவின் சுரேந்திரன் (அகவை 24) என உறவினர்களால் இனம் காணப்பட்டுள்ளது. நேற்றுக்காலை வவுனியாவைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட இறந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் உத்தரவுக்கமைய மருத்துவபரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 931 views
-
-
இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி கண்டனம் - ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றே தீருவோம் மஹிந்த சபதம். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர நார்வே நாடு முயற்சி மேற்கொண்டது. பல முறை இரு தரப்பிலும் அமைதிப் பேச்சு நடந்தும் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதனால் உள்நாட்டுப் போர் நீறு பூத்த நெருப்பாக கனன்று வருவதுடன், அவ்வப்போது இந்த நெருப்பு கொழுந்து விட்டு எரியவும் செய்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி ஆகியவை அதிக அளவில…
-
- 3 replies
- 1.7k views
-
-
கொழும்பு பிரதமநீதிபதி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கொழும்புக்கிளையில் பணிபுரியும் மூன்று முக்கிய உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 7 ம் திகதி நீதிமன்றில் சமூகமளிக்குமாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளார். இதேவேளை தமிழர்புனர்வாழ்வக்கழகத்துக
-
- 0 replies
- 617 views
-
-
சிறீலங்கா இராணுவம், சிறீலங்கா வான்படையினர் மற்றும் காவல்துறையினரும் கூட்டாக திருகோணமலைக்கு 24 கிலோமீற்றர் தென்மேற்காக அமைந்துள்ள மொறவீவா பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்கிழமை காலை மொறவீவா பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதையடுத்தே இக்கூட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 699 views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று நேற்று காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணிவரை கிளிநொச்சியிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப்பணியக முன்றலில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு ஊடகப்பிரிவு, நடுவப்பணியகம். 30.01.2007. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று நேற்று காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணிவரை கிளிநொச்சியிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப்பணியக முன்றலில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 29.01.2006, 30.…
-
- 0 replies
- 634 views
-
-
ரிக்கட்பெற நின்ற மக்கள் கலகம் விமான சேவை அலுவலகம் தாக்கப்பட்டது. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:45 யாழ் குடாநாட்டிலுள்ள தனியார் விமானசேவை அலுவலகத்தில் ரிக்கட் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் கலகத்தில் ஈடுபட்டதில் அந்த அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்காக விமான டிக்கட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நேற்று அதிகாலை 4.00 மணிமுதல் அந்த விமானசேவை அலுவலகத்துக்கு முன்னால் 2 ஆயிரத்தக்கும் அதிகமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்களில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் ‘டோக்கன்’ வழங்கப்பட்டதால் ஆத்திரமுற்றவர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் அலுவல…
-
- 2 replies
- 1.4k views
-
-
நான் மேற்கொள்ளும் நல்லவிடயங்களை கூறாது தவறை மட்டும் சுட்டிக்காட்டவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி இணையத்தளப்பிரிவு நான் மேற்கொள்கின்ற நல்ல விடயங்களை கூற வேண்டாம் மாறாக எனது தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டவும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். காலியில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி சபை மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு நோக்கி வருகையில் இறக்குவானை அஸ்லாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்தார். அங்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆ…
-
- 1 reply
- 1k views
-
-
நான் என்னை அமைச்சர் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறேன் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு வீரகேசரி நாளேடு நான் என்னை அமைச்சர் என்று கூறிக்கொள்வதற்காக வெட்கப்படுகிறேன். இதனை நான் உண்மையான உணர்வுடனேயே கூறுகின்றேன். அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக மக்கள் விசனங்களை தெரிவித்துள்ளனர் என்று விவசாய அபி விருத்தி மற்றும் கமநல சேவைகள் அமை ச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது. இந்த அளவு அமைச்சர்களின் எண்ணிக்கையானது நாட்டின் …
-
- 2 replies
- 1.1k views
-
-
வன்னிப்பகுதிகளுக்கான தொலைத்தொடர்புகள் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படாது தொழில் நுட்பக் கோளாறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா ராணுவ நகர்வையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இத்துடன் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் திடீர் விஜயமும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவுள்ளது
-
- 1 reply
- 1.1k views
-
-
காலியில் நடைபெற்ற அபிவிருத்தி சபை 2007 ஆண்டிற்கான இன்றைய மூன்றாவது அமர்வில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளது. மகிந்த சிந்தனையின் கீழ் வரும் பத்து ஆண்டுகளுக்கான அபிவிருத்திக்கான 09 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 4.5 பில்லியன் டொலர்களை வழங்க உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது. இந் நிதி பெருந் தெருக்கள்,அனல் மின் நிலையம், துறைமுகம் போன்றவற்றின் அபிவிருத்திகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பேசிய கலாநிதி சரத் அமுனுகம இலங்கையல் சமாதானம் வரும் வரை அபிவிருதிகளை தள்ளிப் போட முடியதெனவும், அபிவிருத்திகள் மிக விரைவில் செய்து முடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்க ஜப்பான் போன்ற நாடுகளையும் உலக நாடுகளையும் சேர்ந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
கொழும்பு துறைமுகக் கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் படகுகள் மீதே கடற்படையினர் தாக்குதல் நடத்தினர் என நீர்கொழும்பு மீனவர் சங்கப் பிரதிநிதியான ரொட்னி பெர்னாண்டோ என்பவர் தெரிவித்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகப் பகுதிக்குள் நுழைந்த புலிகளின் மூன்று படகுகளில் ஒன்றை கடற்படையினர் தாக்கி மூழ்கடித்தனர் என்றும் அவ்வாறு படகுகளில் வந்தோரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை மறுத்துள்ள மீனவர் சங்கப் பிரதிநிதி ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமது மீனவர்களின் படகுகள் மீதே கடற்படையினர் தாக்குதல் நடத்தினர் எனவும், அப்போது தாக்குதலிலிருந்து தப்புவதற்காக கடலில் குதித்த மூன்று மீனவர்களைய…
-
- 1 reply
- 982 views
-
-
வெளிநாட்டு கடன்களைப் பெறுவது அரசாங்கத்திற்கு கடினமாகத்தான் இருக்கும். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:52 இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வருமானத்தைப் பெறுவதோ, வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு கடினமானதாக அமையுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படாவிட்டால் முதலீடுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதில் எதிர்மறையான விளைவையே அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. …
-
- 5 replies
- 1.7k views
-
-
[Tuesday January 30 2007 09:52:34 PM GMT] [virakesari.lk] 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் இது வரையில் 103 அமைச்சர்களை பதவியில் அமர்த்தியிருப்பதன் மூலம் எமது நாட்டில் இன்று அரசாட்சிக்கு பதிலாக வேடிக்கையான கண்காட்சியே நடைபெறுகின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரே விவகாரம் தொடர்பில் ஒன்பது பேரை அமைச்சர்களாக நியமித்து எந்த விவகாரம் எவரது பொறுப்பில் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்வதற்கு அரசாங்க அதிகாரிகளே தடுமாறும் ஒரு விசித்திரம் இன்று நமது நாட்டில் நிலவுகின்றது. உலகத்திலேயே மிக அதிகமான அமைச்சர்கள் தொகையை நடைமுறையாக்க…
-
- 1 reply
- 884 views
-
-
இனப்பிரச்சினையில் மீண்டும் இந்தியா? முக்கியஸ்தர்கள் புதுடில்லியில் பேச்சு! [புதன்கிழமை, 31 சனவரி 2007, 07:34 ஈழம்] [கொழும்பு நிருபர்] இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான மத்தியஸ்த்த முயற்சிகளில் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ள சம்பவங்களைத் தொடர்ந்து இராஜதந்திர வட்டாரங்களில் எழுந்திருக்கின்றது. சிறிலங்காவின் முக்கிய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் புதுடில்லிக்குச் சென்றுள்ளதையடுத்தே இராஜதந்திர வட்டாரங்களில் இந்தச் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமநாயக்க, தமிழ்க் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் றே…
-
- 0 replies
- 728 views
-
-
புதன் 31-01-2007 01:04 மணி தமிழீழம் [மகான்] யாழ்பல்கலைக்கழக ஊழியர் சுட்டுக்கொலை, இளைஞர் சடலம் மீட்பு உந்துருளியல் சென்ற இனம் தெரியாத ஆயுததாரிகளால் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் நாயன்மார்க்கட்டு நல்லூர் பகுதியில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் படுகாயமடைச் செய்யப்பட்டுள்ளார். இவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லம் வழியில் காயம்காரணமாக இறந்துள்ளார். இதேவேளை 23 அகவையுடைய இளைஞர் ஒருவரின் உடலமானது செவ்வாய்கிழமை ஆறுகால்மடப்பகுதி யாழ் நகரசபை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட வைத்தியசாலை ஊழியர் 29 அகவையுடைய முத்து பீற்றர் எனப்படும் ஒருபிள்ளையின் தந்தை என இனம் காணப்பட்டுள்ளார். இவர் நாவற்குழி தென்மராச்சி பகுதியை சொந்த இடமாககொண்டபோ…
-
- 1 reply
- 969 views
-
-
அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கை செவ்வாய் 30-01-2007 13:54 மணி தமிழீழம் [மகான்] கிழக்கில் சிறிலங்கா அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அழித்து கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. வாகரை பிரதேசத்தில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளித் தாக்குதல்கள் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா விமானப்படையினர் ஜெட் விமானங்கள் இன்று செவ்வாய்கிழமை முல்லைத்தீவில் குண்டுத்தாக்குதல் சிறிலங்கா விமானப்படையினர் ஜெட் விமானங்கள் இன்று செவ்வாய்கிழமை முல்லைத்தீவு பகுதியில் 11.45 மணியளவில் குண்டுகள் வீசுயுள்ளன தமிழீழ விடுதலைப்புலிகலின் முக்கிய இலக்குகள் மீது விமானதாக்குதல் நடத்தியதாக விமானப்படையினர் தகவல் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
-
- 1 reply
- 1.6k views
-
-
செவ்வாய் 30-01-2007 13:48 மணி தமிழீழம் [செந்தமிழ்] இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் இந்திய மறை முக மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் இராஜதந்திர தரப்புகளில் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளமை குறித்து பல்வேறு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பிரதமர் ரட்ன ஸ்ரீ விக்கிரமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர் இதேவேளை ஸ்ரீலங்காவின் சமாதான செயலக பணிப்பாளரும் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவும் இந்தியா சென்றுள்ளார் ஸ்ரீலங்காவின் புதிய வெளிநாட்டமைச்சர் ரோஹத போகொல்லாகம…
-
- 5 replies
- 2.1k views
-
-
மோதல்கள் நிறுத்தப்படுமானால் உதவிகள் கிடைக்கும் - உதவு வழங்கும் நாடுகள் விடுதலைப்புலிகளுடன் அரசு தொடரும் மோதல்களை இலங்கை உடனடியாக கைவிடாவிடின் இலங்கைக்குக் கிடைக்க இருக்கும் பல மில்லியன் ரூபாய்கள் கிடைக்காது என காலியில் நடைபெறும் அபிவிருத்திச்சாலையில் கூட்டத்தில் சர்வதேச தூதுவரகம் இ மற்றும் அதிகாரிகளும் எச்சரித்துள்ளார். இம் மோதல்களிற்கும் இ முரண்பாடுகளிற்கும் இராணுவத் தீர்வு மூலம் ஒரு போதும் தீர்வு காண முடியாது . அதிகாரப் பகிர்வு மூலம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அடிப்படையை உருவாக்கி அதன் மூலம் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் என அமெரிக்க நம்புகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிள…
-
- 0 replies
- 947 views
-
-
இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் விமானத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. சேதவிபரம் கிடைக்கப்பெறவில்லை.அங்காலே அப்பா பிச்சையெடுப்பு இங்காலே பிள்ளைகள் இனஒழிப்பு
-
- 0 replies
- 963 views
-
-
தினமணி இப்பிடி - சொல்லுதாம்... வேற எங்கையும் வாசிசவங்க - சொல்லுங்க ! ஏற்கனவே - இது இணைக்கப்படாதிருந்தால்! http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0
-
- 12 replies
- 3.5k views
-
-
2006 தைமாதம் கடத்தப்பட்ட ஏழு த.பு.க.பணியாளர்களை விடுவிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 30 January 2007 15:27 கடந்த ஆண்டு முற்பகுதியில் 29-01-2006, 30-01-2006 ஆகிய இருதினங்களில் பொலநறுவை மாவட்ட எல்லைப்பகுதியான வெலிக்கந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகாமையில் ஆயுதக்குழுவொன்றினால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் ஏழு நிலமை என்னஎன்பதை இன்னமும் அறியமுடியாமல் இருக்கின்றது. சர்வதேச மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் வடிவம் வருமாறு- கடந்த ஆண்டு முற்பகுதியில் 29-01-2006, 30-01-2006 ஆகிய இருதினங்களில் பொலநறுவை மாவட்ட எல்லைப்பகுதியான வெலிக்கந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகாமையில் …
-
- 0 replies
- 729 views
-
-
செவ்வாய் 30-01-2007 14:08 மணி தமிழீழம் [மகான்] சாம்பல்தீவு தமிழ் விவசாயி சுட்டுக்கொலை இன்று காலை இனம்தெரியாத ஆயுததாரிகளால் 50 அகவையுடைய தமிழ் விவசாயி ஒருவர் சாம்பல்தீவு கிராமத்தின் அயல்கிராமமான ஆத்திமோட்டையில் சுட்டுக்கnhல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் சாம்பல்தீவை சேர்ந்த தர்மன் என இனம்காணப்பட்டுள்ளார். இவரது உடலமானது உப்புவெளி காவல்நிலையத்தில் கையளிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.pathivu.com
-
- 0 replies
- 851 views
-
-
புலிகளுக்கு நிதியுதவிகள் சென்றடைவதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது: றொபேட் ஒ பிளேக். அபிவிருத்திப்பணிகளுக்கு சமாதானம் முக்கிய காரணமென அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஒ பிளேக் தெரிவித்தார். காலியில் நேற்று இடம்பெற்ற உதவி வழங்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சமாதானம் முக்கியமாகவுள்ளது. அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைமூலமே இது சாத்தியமாகும். இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் திருப்தியான அரசியல் தீர்வை காண்பதற்கான அதிகாரப்பகிர்விற்கான தீர்வுத்திட்டம் குறித்து அரசாங்கம் முன் முயற்சிகளை எடுத்து வருவது க…
-
- 0 replies
- 883 views
-
-
மன்னார் தீவை நிலப்பகுதியுடன் இணைப்பதற்கு ஜப்பான் உதவி. மன்னார் தீவை நிலப்பகுதியுடன் இணைப்பதற்கு ஐப்பான் 30 மில்லியன் ரூபா பெறுமதியான பணஉதவியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இப்பணத்தின் உதவியுடன் பழைய பாலத்திற்குப்பதிலாக 157 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமுமான புதிய பாலமொன்று அமைக்கப்பட உள்ளது. இது மட்டும் அன்றி மதாவாச்சியிலிருந்து மன்னார், தலைமன்னார் ஊடாக செல்லும் கடல்பாதையை (CAUSE WAY) அபிவிருத்தி செய்யவும் ஐப்பான் உதவ உள்ளது. தற்போது பாவனையிலுள்ள பாலம் 1930 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகும். இப்பாலம் 1990 இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் சேதப்படுத்தப்பட்டது. இது பின்னர் தற்காலிகமாக மீண்டும் திருத்தப்பட்டது. பாலம் தவிர கடற்பாதையும் கடல்மட்டம் உயரும் போத…
-
- 0 replies
- 811 views
-