ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143503 topics in this forum
-
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் தாக்குதல் நடத்தாமைக்கான இரகசியத்தை வெளியிடுவோம் பின்னால் வெள்ளைவான் வருகின்றது என்கிறார் ஸ்ரீபதி சூரியாராச்சி விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நானும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுமே கலந்து கொண்டோம் என்று பதவி விலக்கப்பட்ட அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சபையில் தெரிவித்தார். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்ற இரகசியத்தை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமையான தினப்பணிகள் முடிவடைந்ததும் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர் ஜசெவ்வாய்க்கிழமைஇ 6 மார்ச் 2007இ 17:03 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடும் அளவுக்கு எமது படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவர்" என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "அரசாங்கம் தேர்தலை நடத்தப்போவதில்லை. எமக்கு பலமான அரசாங்கம் இருக்கின்றது. அதனால் அனைத்து சக்திகளும் நிபந்தனைகளை விதிப்பதை கைவிட்டு விட்டு அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும். அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ…
-
- 42 replies
- 6.3k views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலை திட்டமிட்டவர் கைது ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:44 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்காவின் அனைத்துலக விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதலை திட்டமிட்ட மணிமாறன் உட்பட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களை சிலாபம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இத்தகவலை இன்று புதன்கிழமை வெளிவந்த சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டிருக்கின்றது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "விநாயகம் மணிமாறன் என்பவர் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலின் பின்னர் மன்னாருக்கு தப்பியோடி இந்தியாவில் தஞ்சடைந்திருந்தார். பின்னர் இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற அவர் கடந்த ஜனவரி மாதம் இலங்கை திரும்பினார். இவர் …
-
- 12 replies
- 3.3k views
-
-
மட்டக்களப்பு சிறிலங்காப் படை முகாம்கள் மீது எறிகணை வீச்சு ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007இ 18:10 ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ மட்டக்களப்பு சிறிலங்காப் படை முகாம்கள் மீது படுவான்கரையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. எறிகணைகள் தமது பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளதனை சிறிலங்கா படைத்தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். புல்லுமலைஇ தம்பிட்டிஇ பத்திரெக்க ஆகிய இடங்களில் உள்ள படைத்தளங்களிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலுமே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர். புல்லுமலை அதிரடிப்படை முகாமிற்குள் அதிகளவு எறிகணைகள் வீழ…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னாரில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மீது தாக்குதல்: சடலம்- ஆயுதங்கள் மீட்பு மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களில் ஒருவரைக் கொன்று சடலத்தையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடு பெரிய தம்பனைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடுருவலை மேற்கொண்ட ஆழ ஊடுருவும் அணியினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது சடலமும் துப்பாக்கி மற்றும் இராணுவ உபகரணங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சடலத்தை அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் ஊடாக இராணுவத்தினரிடம் கையளிப்பதற்கான நடவடி…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - தமிழக பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை. விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே பணம் மற்றும் பொருள் களை உதவி செய்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக ஆதரவு கொடுப்பவர்கள் மீது பாரபட்சமின்றிக் கடும் நடவடிக்கை எடுக் கப்படும். தமிழக காவல்துறை பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.முகர்ஜி மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சி மற்றும் தனி இயக்கங்களைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆயுதங்களைக் கடத்தியது தொடர்பாக 16 இலங்கைத் தமிழர்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அண்மைக் காலமாக நிலவிவரும் ப…
-
- 10 replies
- 2.1k views
-
-
கடந்த ஆண்டு ரீ.ஆர்.ஓ பணியாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் அதன் பின் அவர்களிற்கு நடைபெற்ற கொடூரம் தொடர்பாக டி.பி.ஸ்.ஜெயராஜ் கட்டுரை ஒன்றை கருணா கும்பலின் முன்னாள் உறுப்பினரின் தகவல்களை வைத்து எழுதியுள்ளார். அக்கட்டுரைக்கான இணைப்பு: http://www.tamilsydney.com/content/view/369/37/
-
- 9 replies
- 5.7k views
-
-
யாழில் 2007 ல் 87 இளைஞர்கள கடத்தப்பட்டுள்ளார்கள் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவலின் படி 87 தமிழ் இளைஞர்கள் 2007 ம் ஆண்டு முதல் 69 நாட்களில் கடத்தப்பட்டுள்ளார்கள அல்லது காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களது தகவலின்படி 2006 ம் ஆண்டு 416 பேர் காணாமல் போகடிக்கப் பட்டுள்ளார்கள். இதேவேளை அம்னிஸ்ரியின் தகவலினபடி கடந்த 18 மாதங்களில் 600 பேர் சிறீலங்கா இராணுவத்தால் கைதுசெய்தபின் சித்திரவதையின்போதோ அல்லது கொல்லப்பட்டும் இறந்துள்ளார்கள். இதேவேளை ஆறு இளைஞர்கள் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த சனிக்கிழமை மீன்வர்த்தகரின் இறுதி நிகழ்வில் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.எனினும் இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளவில்லை என தெரியவருகிறது…
-
- 0 replies
- 658 views
-
-
மட்டு முறியடிப்பு சமரில் இராணுவத்திற்குபலத்த சேதம்; - 15 இராணுவத்தினரின் உடல்கள் மற்றும் பல ஆயுதங்கள் பறிமுதல்! hotnews from thaakam.
-
- 4 replies
- 1.8k views
-
-
இன நெருக்கடி இராணுவத் தீர்வை நோக்கி நகர்வதாக வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார் விஜேதாச ராஜபக்ஷ -மக்களை இன ரீதியாக பிரிக்கும் கைங்கரியத்தை தொடர வேண்டாமென வேண்டுகோள் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நடைமுறையே சபையில் தொடர்வதாகவும் இனப் பிரச்சினை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டிய ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ, இனியாவது இனப் பிரச்சினை குறித்து நிலைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளவென அனைத்து சமூக பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட விசேட தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் யோசனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
-
- 0 replies
- 690 views
-
-
வன்னிக்குள் பலமுனைகளில் படை நகர்வுக்கு அரசாங்கம் திட்டமிடுவதாக புலிகள் தெரிவிப்பு வன்னிப் பகுதியில் பல்வேறு முனைகளிலும் படைநகர்வுகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலும் பல் குழல் ரொக்கட் தாக்குதலும் விமானத் தாக்குதலும் இதனை தெளிவுபடுத்துவதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் இவ்வாறு கடுமையான ஷெல் தாக்குதலை படையினர் மேற்கொள்வது வழமையென்றும் புலிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். குடா நாட்டில் கிளாலி, முகமாலை மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளை நோக்கி தொடர்ச்சியாக கடும…
-
- 0 replies
- 879 views
-
-
புல்லுமலையில் பலியான 4 படையினரின் சடலங்கள் ஐ.சி.ஆர்.சி. யூடாக ஒப்படைப்பு மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட விசேட அதிரப்படையினரில் நால்வரது சடலங்கள் நேற்றுக் காலை புலிகளால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை புல்லுமலைப் பகுதி நோக்கி இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் முன்னேற்ற முயற்சியொன்றில் ஈடுபட்டனர். இதற்கெதிராக புலிகள் கடுமையான பதில் தாக்குதலை நடத்தியதில் பல படையினர் கொல்லப்பட்டதுடன் ஆறு அதிரடிப்படையினரின் சடலங்களையும் தாங்கள் கைப்பற்றியதாக புலிகள் தெரிவித்திருந்தனர். இதில், மிக மோசமாகப் பழுதடைந்த இரு சடலங்களை புலிகள் நேற்று அடக்கம் செய்த அதேநேரம், நான்கு சடல…
-
- 0 replies
- 568 views
-
-
அம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் தமிழ் மக்களை அழிப்பதிலுமே அரசு அக்கறை காட்டுகிறது -சபையில் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் - டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்று அம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும், தமிழ் மக்களை அழிப்பதற்கென வெளிநாடுகளில் இருந்து நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்து குவிப்பதிலுமே ஆர்வம் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா …
-
- 0 replies
- 630 views
-
-
தேசபக்தி என்பது அயோக்கியர்களின் புகலிடம்' என்ற கூற்று நான் பலமுறை மேற்கோளாகக் கேட்டது. எனினும் யாருடைய கூற்று என்று நினைவில்லை. தேசபக்தி மட்டுமல்லாமல் மொழி, மதம் என்பனபோன்ற மனித அடையாளங்களில் எதைப் பற்றியும் காட்டப்படும் தீவிரமான பக்தியும் பற்றும் பெரும்பாலும் பரப்பானவையாகவும் குறுகிய நோக்கங்களுக்கான மூடுதிரையாகவுமே இருந்துள்ளன. எங்கெல்லாம் தேசமும் இனமும் மொழியும் மதமும் புனிதப்படுத்தப்பட்டு அவற்றின் நலன் மனிதரது அடிப்படையான உரிமைகளையும் தேவைகளையும் உணர்வுகளையும் மறுக்கிற அளவுக்குப் போகிறதோ அங்கு சமூகப் பற்றுக்குப் பதிலாகச் சமூகத்தைச் சின்னாபின்னமாக்கக் கூடிய வெறித்தனம் ஆட்சி செலுத்துகிறது. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தேசப்பற்றும் இனப்பற்றும் மொழி உணர்வும் மத உணர்வும் …
-
- 0 replies
- 651 views
-
-
அரசியலில் இப்படியும்.. நடவடிக்கை சீனவிஜயத்தைத் தொடர்ந்து நாடு திரும்பிய அதிகார அதிபர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாராம். அத்துடன், நாட்டினுள் இடம்பெற்ற ஆள் கடத்தல்கள், கொலைகள் என்பன தொடர்பாகவும் அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டாராம். இதன் போது பல தகவல்களை அதிகார அதிபர் பெற்றுக் கொண்டுள்ளாராம். சந்திப்பு பச்சைக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றதாம். இதன் போது நீலக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய இருவர் ரகசிய ஒப்பந்தமொன்று குறித்து தூதுவர்களுக்கு விளக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப…
-
- 0 replies
- 607 views
-
-
கிழக்கில் ஒரு ஜெயசிக்குரு? -விதுரன்- மட்டக்களப்பில் பாரிய படை நகர்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் கடைசி படை நடவடிக்கையே, மட்டக்களப்பிலிருந்து புலிகளை வெளியேற்றும் தாக்குதலென படைத்தரப்பு கூறுகிறது. ஆனாலும், இது எந்தளவுக்கு சாத்தியப்படுமென்பதை அங்கு புலிகள் மேற்கொள்ளும் பதில் தாக்குதல்கள் அரசுக்கு தெளிவுபடுத்தும். தெற்கில் அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிழக்கில் சில வெற்றிகள் தேவைப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிரிகள் தற்போது வெளியிடும் தகவல்கள் மகிந்தவுக்கு ப…
-
- 0 replies
- 769 views
-
-
மட்டக்களப்பில் இரு நாட்களில் 1-1/2 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு [ மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்று வரும் பாரிய படை நகர்வுகளையடுத்து ஒரு இலட்சத்து 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் படை நடவடிக்கை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 30 வீதமான மக்கள் கடந்த இரு நாட்களில் பாரிய இடப்பெயர்வைச் சந்தித்துள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் படுவான்கரை பகுதி நோக்கி கடந்த வியாழக்கிழமை மிகக் கடுமையான ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தியவாறு …
-
- 0 replies
- 581 views
-
-
தென்மராட்சி படையினரின் நிலைகள் மீது எறிகணை வீச்சுத்தாக்குதல். - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 10 ஆயசஉh 2007 10:35 தென்மராட்சிப் பகுதியிலுள்ள சிறிலங்காப் படையினரின் முகாம்கள் விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. நேற்றைய தினமும் படைமுகாம்கள் பல புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகின. படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக விடுதலைப்புலிகளின் தாக்குதல் இடம்பெற்று வருகின்றது. இந்தவகையில் நேற்றுக் காலையும் மிருசுவில், உசன், வரணி, ஆகிய பகுதிகளிலுள்ள படைமுகாம்கள் புலிகளின் எறிகணை வீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது. மேலும் கிளாலிப்பகுதியில் நேற்ற முன்தினம் இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் படையினர் பாரிய இழப்புக்கள…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடமராட்சி கரையோரப் பிரதேசங்களில் குடும்பப் புகைப்படம் எடுக்குமாறு மக்களை படையினர் வற்புறுத்து வடமராட்சி கரையோரப் பிர தேசங்களில் வசிப்போரை குடும் பப் புகைப்படங்களை எடுத்து வீட்டில் பார்வைக்கு வைக்குமாறு இராணுவத்தினர் கோரியிருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் எல்லா உறுப்பினர்களையும் சேர்த்து படம் எடுத்து அதில் ஒரு பிரதியை கிராம அலுவலரிடமும் ஒரு பிரதியை இராணுவ முகாமிலும் வழங்க வேண்டும் என்றும் மூன்றாவது பிரதியை நன்கு தெரியக் கூடியவாறு வீட்டில் பார்வைக்கு தொங்கவிட வேண்டும் என்றும் இராணுவத்தினர் பணித்திருக் கின்றனர் என்று கரையோர மக்கள் கூறுகின்றனர். படையினரின் இந்த உத்தரவினால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர் http://www.tamilwin.com/article.php?artiId...;tok…
-
- 0 replies
- 611 views
-
-
தமிழக மீனவரை இலங்கைக் கடற்படை தாக்குவதை கண்டித்து நாளை சென்னையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் மாநில மீன்பிடி அமைச்சர் தலைமை வகிப்பார் பாக்குநீரிணையில் வைத்துத் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கொன்றும்இ தாக்கியும் வரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசத்தைக் கண்டித்துஇ தமிழகத்தின் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. நாளை திங்கட்கிழமைஇ சென்னையில் உள்ள இலங்கையின் பிரதித் தூதரகத்தின் முன்னாள் நடத்தப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி தலைமை வகிப் பார். மின்சக்தித்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் கண்டன ஊர்வலத்தில் பங்கு பற்றுவார். பாக்குநீரிணைக் கடற்பிரத…
-
- 1 reply
- 686 views
-
-
இதய பூமி... இறுதிப் போரின் தொடக்கப் புள்ளியா? நோர்வே அனுசரணையாளர்கள் இன்னமும் சமாதானக் களத்தில் இருக்கிறார்களென்பதை உலகிற்கு நினைவூட்ட, தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தற்போதைய களநிலவரம் குறித்து புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சலிப்புறாமல் நீண்ட விளக்கமொன்றை அவருக்கு அளித்துள்ளார். மட்டக்களப்பு எறிகணைச் சம்பவத்தின் பின் வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்த புலிகள், அரசியல் ரீதியில் பலவீனமானதொரு நிலையில் இருப்பதாக கற்பிதம் கொள்வதால், இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இனியொரு பேச்சுவார்த்தையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்கிற சிக்கலான நிலைமைக்குள் அனுசரணையாளர்கள் புதையுண்டு போயுள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
அம்பாறையில் கிளேமோர்த் தாக்குதல் விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி. - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 11 ஆயசஉh 2007 12:31 அம்பாறை பகுதியில் கிளேமோர்த் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. அம்பாறை கல்முனை பட்டிருப்புப் பகுதியில் இன்று காலை 8.55 மணியளவில் ரோந்து சென்ற சிறிலங்காப் படையினரின் விசேட அதிரடிப்படையினரை இலக்கு வைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. http://sankathi.org/news/index.php?option=...29&Itemid=1
-
- 0 replies
- 667 views
-
-
'இலங்கைத் தீவில் இன அழிப்பே இடம்பெறுகிறது': விடுதலைப் புலிகளின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர். "இலங்கைத் தீவில் தற்போது இடம்பெறுவது மனிதவதை, மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பனவற்றிற்கும் அப்பால், இன அழிப்புக் கூறுகளைக் (Genocide) கொண்டுள்ளது" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் திருமதி. செல்வி தெரிவித்துள்ளார். "ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமைப்பின் (UN Human rights council) 4 ஆவது கூட்டத்தொடர், தமிழீழத் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் பெரும் மனிதவதை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக தீவிர கவனத்தைச் செலுத்தி தாக்கமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் அவர் நம்பிக்கை தெரி…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் 57 ஆவது படைப்பிரிவின் உருவாக்கமும் ஆசிவேண்டிய பூசைகளும். சிறிலங்கா இராணுவம் புதிய படைப்பிரிவான 57 ஆவது படைப்பிரிவை உருவாக்கியுள்ளது. ஒவ்வொன்றும் லெப். கேணல் தர அதிகாரிகளின் வழிநடத்தலில் உள்ள மூன்று பிரிகேட்டுக்களை கொண்ட இந்த படைப்பிரிவு பிரிகேடியர் எஸ்.ஆர்.மணவதுகே தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, படையினரின் உயிர்களுக்கும், இராணுவத்தளபதியின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டியும், தமது நடவடிக்கைகள் வெற்றியடைய வேண்டும் என்று வேண்டியும் சிறிலங்கா இராணுவத்தினர் ஒரு வாரகால பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதம் 2 ஆம் நாள் ஆரம்பமாகிய பூசைகள் இந்த வாரம் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தின் புத்த பா…
-
- 1 reply
- 994 views
-
-
இலங்கைகடல் எல்லையில் மீன்பிடித்த தமிழ் நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் கருணாநீதி ஆவேசம்
-
- 1 reply
- 1.3k views
-