Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வியாழன் 18-01-2007 22:28 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு அம்பாறை விஜயம் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் நிமால் சிறீபாலடீசில்வா தலைமையிலான அரசின் உயர்மட்டக் குழு ஒன்று இன்று அம்பாறை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறைக் கச்சேரியில் இடம் பெற்ற மாவட்டத்தின் 167 கிராமசேவகர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் பேரியல் அஸ்ரவ், அத்தாவுல்லா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். நன்றி-பதிவு

  2. வியாழன் 18-01-2007 22:31 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அம்பலாங்கொடையில் துப்பாக்கிப் பிரயோகம்: இரு காவல்துறைச் சிய்பாய்கள் பலி! அம்பலாங்கொடையில் இன்று 4 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவற்துறை சிப்பாய்களும் மரணமாகியுள்ளனர். முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர்; காயம் அடைந்துள்ளார். அம்பலாங்கொடை நகரப் பகுதியில் உள்ள ஆபரண நிலையம் ஒன்றைக் கொள்ளையிட முனைந்தவர்களை கைது செய்யும் நோக்கில் முச்சக்கர வண்டியில் சென்ற காவற்துறையினர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையினர் பதில் தாக்குதல் நடத்திய பொழுதிலும் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளையர்களை க…

  3. இருவேறு மோதல்களில் ஆறு போராளிகள் வீரச்சாவு. சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற இருவேறு மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (09.01.07) சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய பதுங்கித் தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த வீரவேங்கை மாதுளன் என்றழைக்கப்படும் சிவானந்தராசா கோபிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் துர்க்காதரன் என்றழைக்கப்படும் விஜயகுமார் சிவாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் ஹேமன் அல்லது கமலன் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் ஹேமநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த வீர…

  4. எங்கள் மக்களின் பிரச்சினை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது. இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார். மேலும் அவர் தெரிவ…

  5. ஐ.நாவின் சிறப்பாலோசகரும் சிறுவர் மற்றும் ஆயுதமோதலுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன்றொக் பத்துநாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கையை சிறிலங்கா அரசிற்கு அனுப்பியிருந்தார். அவ்வறிக்கையில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக்குழுவான கருணாகுழுவினர் தமது படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கு அரசபடைகள் உதவிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடமுண்டு எனவும் அலன்றொக் தெரிவித்திருந்தார். ஆனால் றொக்கின் அறிக்கையை அரசு நிராகரித்ததுடன் அவர் அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐ.நா பாதுகாப்புசபையின் சிறிலங்கா தொடர்பான அலன்றொக்கின் அறிக்கை உரியவேளையில்…

  6. 'நான்கு தொண்டர் நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு' [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 06:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] விடுதலைப் புலிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருந்த அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பற்றிய இரகசியங்கள் வெளியாகியிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் முகாம்கள் பல கைப்பற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொண்டர் அமைப்புக்கள் சில விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை அம்பலமாகியிருப்பதாகவும்…

  7. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இரண்டு நிர்வாகப் பிரதேசங்களாகப் பிரிப்பதற்குச் சார்பான நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இது சம்பந்தமாக ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாறு வடக்கையும், கிழக்கையும் பிரிக்கும் ஷ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கான இந்திய அரசின் சம்மதத்தையும் ஷ்ரீலங்கா அரசால் பெறமுடிந்தது. எவ்வாறாயினும் வடக்கையும், கிழக்கையும் பிரிப்பதற்கு எதிராக இருப்பது புலிகள் இயக்கம் மட்டுமல்ல. புலிகள் அமைப்பின் எதிரிகள் கூட வடக்கு, கிழக்கு பிரிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இந்த வகையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய புலிகள் இயக்கத்துக்கு எதிரான தலைவர்களும் வடக்க…

  8. மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம். அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தரத்தில் தொங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவலை அரசு ஊக்குவித்தால் இரு கட்சிகளினதும் புரிந்துணர்வில் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். கேம்பிரிட்ச் றெரசில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ரணில், உறுப்பினர்களின் கட்சித்தாவல், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் உறுப்பினர்களின் கட்சித்தாவல் தொடர்பாக மகிந்தவுக்கு த…

  9. விஞ்ஞான ரீதியிலான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே விமானப் படையினர் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அஜந்த சில்வா தெரிவித்தார். கொழும்பு கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; "இராணுவத்தினருக்கு எதிராகவும் விசேட அதிரடிப்படையினருக்கு எதிராகவும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுக்கும் புலிகளின் இலக்குகள் பல அண்மைக் காலமாக விமானப் படையினரின் குண்டு வீச்சுகள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று, அவர்களின் பயிற்சி முகாம்கள் கடற்புலிகளின் படகுத்தளங்கள் ஆகியனவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. …

  10. முப்படையினர், பொலிஸாரின் பிள்ளைகளுக்காக கொழும்பு கொம்பனித்தெருவில் தேசிய பாடசாலையொன்றை நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சிறாருடன் பாடசாலைக்குள் பிரவேசிப்பதை காண்கிறீர்கள். ... தினக்குரல்

  11. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது. இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசைய்யா இளந்திரையன், இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், 70-களில் நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த போது கழுத்தில் மாட்டிய சயனைட்டை இன…

    • 0 replies
    • 827 views
  12. புதன் 17-01-2007 10:10 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைவு? சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைந்து கொள்ளவுள்ளது.சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைவதற்கு முன்வைத்த 9 கோரிக்கைகளும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு அமைச்சரவை அந்நதஸ்தற்ற இரண்டு அமைச்சுக்களும் ஒரு பிரதி அமைச்சு பதவியும் முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கப்படவுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் பொறுப்பேற்றபார் என்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியினை ஏற்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்…

  13. நாகர்கோவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதில் எறிகணை தாக்குதலில் சிப்பாய் பலி. நேற்று மாலை வடபோர் முனை நாகர்கோவில் பகுதியில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏறிகணைத் தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் சிங்களப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சையடுத்து படை நிலைகளை இலக்கு வைத்து மாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போதே ஒரு சிப்பாய் கொல்லப்பட மற்றொருவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் அறியவருகிறது. -Sankathi-

  14. அரசு - ஐ.தே.க. அதிருப்திக்குழு பேரப்பேச்சில் இழுபறி நிலை - அமைச்சரவை மாற்றம் தாமதமாகும் சாத்தியம் [18 - January - 2007] [Font Size - A - A - A] கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு இவ்வாரத்தில் அரசுடன் இணையலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த திங்கட்கிழமை இரவு அரசு தரப்புக்கும் கரு ஜயசூரிய அணியினருக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பு ஆரோக்கியமானதாக அமையாததன் காரணத்தால் அரசுடன் இணைவதில் தயக்கம் காட்டுவதாக தெரிய வருகின்றது. ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கும் தற்போது அரசு தரப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டுக்கும் பெரும் முரண்பாடுகள் காணப்படுவதால் கரு ஜயசூரிய அணியினர் ஆத்திரமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.…

  15. எலி ஹவுஸ் லேனில் ஆட்டோ சாரதி சுட்டுகொலை நிஷாந்தி கொழும்பு மோதரை எலி ஹவுஸ் லேனில் இன்று வியாழக்கிழமை காலை 7:55 மணியளவில் ஆட்டோ சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ சாரதியின் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.. இன்று காலை மோதர எலி ஹவுஸ் லேனில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஜெகத் சுசந்த பெரேரா (36) என இனங்காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தனதுபிள்ளைகளை பாடசாலையில் விட்டு திரும்பும் வழியில் இவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.. ஆட்டோ சாரதியான இவர் கிம்புலாவில் பகுதியில் வசித்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாவட்ட நீதவான்…

  16. சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில்!? [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 08:21 ஈழம்] [கொழும்பு நிருபர்] புதினம் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் நாள் முழுமையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் அரசுடன் இணையத் தயாராகியுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியில் அதிருப்தியடைந்துள்ள சிலருடன் இணைந்து மீள் அரசியல் பிரவேசத்துக்கு சந்திரிகா குமாரதுங்க தயாராகி வருவதாகவும், அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருக்கின்றது. சந…

  17. ''பணம் பறிக்கும் ஒட்டுபடைகள்....'' வவுனியாவில் சில நாட்களாக மக்களை விரட்டி பணம் பறிக்கும் நிலையில் பல ஒட்டுகுழுக்கள் ஈடு பட்டுள்ளதாக அந்த நகர வாசிகள் எமக்கு தெரிவித்தனர். அதன் விபரம் வருமாறு.... வெளிநாடுகளில் இருந்து தமது உறவுகளின் தேவைக்காக பணம் அனுப்பும் அந்த உறவினரது வங்கிகணக்கை வங்கி அதிகாரிகள் ஊடாக பெற்று அதன் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று கொண்டவர்களிடம் சென்று இன்று உனக்கு பணம் வந்துள்ளது எனவே நீ எமக்கு பணம் தர வேண்டும் இல்லை என்றால் உனக்கு தண்டனை எதுவோ அது அளிக்கப்படும் எனமிரட்டி பண பறிப்புகளில் ஈடுபடுவதாக அந்த பணத்தொகையை இழந்த அயலவர்களில் சிலர் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் நிற்காது வெளிநாட்டில் உள்ள உறவுகளிற்கு தொலைபேசி எ…

  18. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் யாழ் நகரப் பகுதியில் திருட்டுக்கள் அதிகரிப்பு. நேற்று நள்ளிரவுவேளை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் நல்லூர்க் கோயிலின் முன்றலிலுள்ள நாவலர் மணிமண்டபத்தின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கு பெறுமதியான பொருள்கள் ஏதும் இல்லாததால் தமது முயற்சி களைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை கொய்யாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஆலயப் பூசகர் வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் உட்புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வானொன்றில் வந்திறங்கிய கொள்ளைக் கோஷ்டி ஆலயப் பூசகரின் மனைவியின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவர்களிடம் கத்தி, பொல்லு, வாள்கள் போன்ற ஆயுதங்கள் இருந்ததாகவும் முகத்தைக் கற…

  19. யாழில் வெள்ளை வான் கும்பலினால் குடும்பஸ்தர் கடத்தல். யாழ்ப்பாணம் காங்கேசன் துறைவீதியில் சுண்ணாகம் பகுதில் வெள்ளை வானில் வந்த சிறிலங்கா படையினரின் துணை இராணுவக்குழுவினரால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இவர் கடந்தகால போர் நடவடிக்கையினால் காலொன்றை இழந்து அங்கவீனமுற்றவருமானவர். கடத்தப்பட்டவர் ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவரான டனியல் சாந்தரூபன் (30) என்பவராவார். இவர் தனது சொந்த விடயம் காரணமாக 11.00 மணியளவில் சுண்ணாகம் றெட்டிஆலையடியூடாக ஈருளியில் பயணித்துக்கொண்டிருக்கையில் அவ் வீதியால் சென்ற மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இவரது செயற்கைக் காலும் ஈருளியும் அநாதரவாக வீதியோரத்தில் கிடப்பதை அவரத…

  20. 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியரை, அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதியில் வலுக்கட்டாயமாகக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டுவந்துள்ள சிறிலங்கா அரசு, அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேரவிருந்ததாகவும், தாம் காப்பாற்றி விட்டதாகவும் ஊடகங்களிடம் பொய்த் தகவல் பரப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் முகாமிலிருந்து இவர்களைக் காப்பாற்றினோம் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சிறார்களிடம் நிருபர்கள் நேரடியாகக் கேள்வி கேட்டபோது, தாம் எந்தப் பயிற்சியிலும் ஈடுபடவில்லை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையவும் இல்லை, அவர்கள் எம்மைக் கடத்தவும் இல்லை, நாம் வீடு செல்ல விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லைப்புற…

  21. புலிகளையும் பொதுமக்களையும் இனம்காணும் திறன் படையினருக்கு இல்லை: மகிந்த ராஜபக்ச. புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை ஸ்ரீலங்கா படைகள் படுகொலை செய்து வருவதை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் நேற்று கொழும்பில் நடைபெற்ற கஜபா இராணுவ படையணியின் விருத வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா ஜனாதிபதி இது குறித்து ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார் புலிகளையும் சாதாரண மக்களையும் இனம் காணும் திறன் ஸ்ரீலங்காவின் முப்படைகளுக்கும் இருக்க வேண்டியது அவசியம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார் இதன் மூலம் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவிகளை ஸ்ரீலங்காவின் முப்படைகளும் படுகொலை செய்வதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவதானி…

    • 2 replies
    • 1.6k views
  22. அரசின் ஒத்துழைப்பின்மையால் வெறுங்கையுடன் திரும்பும் அவுஸ்திரேலிய விசாரணைக் குழு [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 01:36 ஈழம்] [காவலூர் சங்கீதன்] கிழக்கில் இயங்கி வந்த, பட்டினிக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோர்வே மனிதநேய நிறுவனத்தின் 17 ஊழியர்களை சிறீலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்தமை தொடர்பாக விசாரணை நடாத்த, விசேட பிரேத பரிசோதனை ஆய்வுக் குழுவொன்று சிறீலங்கா வந்திருந்தது. சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்குடன் சிறீலங்காவுக்கு அழைக்கப்பட்ட இந்த விசேட விசாரணைக் குழுவினர், 20 நாட்கள் தங்களது முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சிறீலங்கா அரச தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை செய்யும் நபர்கள் மற்றும் சாட்சியம் சொல்ல முன்வரும் நபர்களின் முழு விப…

  23. புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து இருகட்சிகளும் விலக வேண்டாம் - இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு கட்சிகளையும் வில வேண்டாம் என இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துள்ளன ஐக்கிய தேசிய கட்சியின் மாற்று குழுவை சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து சுதந்திர கட்சிகும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி விலகும் என எதிர்வு கூறப்பட்டிரந்தது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டால் ஒப்பந்தம் கிழத்தெறியப்படும் எ…

  24. பெப்ரவரி 9-க்கு முன்னர் அலன் றொக் அறிக்கை சமர்ப்பிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா தொடர்பான அலன் றொக்கின் அறிக்கை சமர்ப்பிக்கப்படாததற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்றும் அதற்கு எந்த அழுத்தங்களும் காரணமல்ல என்று ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் பெப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு என றொக் தனது இறுதிக்கட்ட அறிக்கையை தயார் செய்து வருவதாக ஐ. நாவின் போச்சாளர் ஓலா கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சிறப்பு ஆலோசகரும், சிறுவர் மற்றும் ஆயுத மோதல்களுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன் றொக் 10 நாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்…

  25. வெல்லாவெளியில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு. மட்டக்களப்பு வெல்லாவெளிப்பகுதியில் சிறிலங்காப் படையினர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம்முறியடிப்பில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணியளவில் வெல்லாவெளி, காக்காச்சிவெட்டை மாலையர்கட்டு 39 ஆம் கிராமப் பகுதியூடாக துணை இராணுவக்குழுவினர் சகிதம் முன்னேற்ற முயற்சியினை படையினர் மேற்கொண்டனர். முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.