Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாம் எப்போதும் இந்திய அரசையும் அரசியல்வாதிகளையும் நம்பக்கூடாது. இது அடுத்த உதாரணம் http://thatstamil.oneindia.in/news/2006/12/19/lanka.html

    • 2 replies
    • 1.7k views
  2. நீலாசேனை இராணுவ முகாம் மீது தாக்குதல் ஒரு இராணுவ வீரர் பலி [Wednesday December 20 2006 06:29:37 AM GMT] [யாழ் வாணன்] மன்னார் நீலாச்சேனை இராணுவ முகாம் மீது இன்று புதன்கிழமை அதிகாலை புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் போது ஒரு இராணுவ வீரர் பலியாகியுள்ளதாகவும், இத்தாக்குதல் இராணுவத்தினரால் முறையடிக்கப்பட்டுள்ளதாக ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது http://www.tamilwin.com/

  3. "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் [புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006, 06:04 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் "தேசத்தின் குரல்" மறைவு குறித்த இரங்கல் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரத்துக்காக போராடும் இந்த இயக்கத…

    • 0 replies
    • 759 views
  4. வடமராட்சியில் சிகையலங்கார நிலைய உரிமையாளர் சுட்டுக்கொலை நிஷாந்தி நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ் வடமராட்சியில் சிகையலங்கார உரிமையாளரொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ள்ளார்.. கொல்லப்பட்டவர் அந்தோனிப்பிள்ளை பிரபகரன்(32) என்னும் குடும்பஸ்தர் என இனங்காணப்பட்டுள்ளார் தொண்டமனாறு- வல்வெட்டிதுறை வீதியில் ஆதியடி கோவிலிலுள்ள தனது சிகையலங்க்கர நிலையத்தில் நின்றபோது இரு இனந்தெரியாத நபர்கள் இவரை சுட்டு கொன்றுள்ளனர்.. http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3420

  5. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு கடந்த 48 மணிநேரத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழைப்பொழிவு காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம் மழைப்பொழிவு காரணமாக அம்பாறை பாக்கியவதி, திருக்கோவில் ஆகிய பகுதிகளில் 50 000க்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை நேற்று அம்பாறை திருருக்கோவில் பகுதியில் சிறிய புயல் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாடசாலை ஒன்றும், தபால் அலுவலகம், வை.எம்.சி.ஏ கட்டிடமும், சில செயலகங்களும், 50வவரையான வீடுகளும் சேதங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. http://www.pathivu.com/

  6. அவுஸ்திரெலியாவில் விடுதலைப்புலிகளினைத்தடை செய்யப் போவதாக வந்த செய்தி பொய்யாகும். இலங்கை அரச பத்திரிகையான தினகரனிலும், டெயிலி நியூசிலும், சிங்கள ஊடகங்களிலும், எட்டப்ப ஊடகங்களிலும் சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. அவுஸ்திரெலியாப்பாரளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ்சாண்டர் டவுணர் சொன்னதாக அச்செய்திகளில் வந்தன. ஆனால் அச்செய்தி பொய் என்று அவுஸ்திரெலியாப்பாரளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்பு உள்ளவர்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. Australia (Alexander Downer) will not ban Tamil Tigers - Utter lie by Sri Lankan Intel Circle The recent reports published by Sri Lankan State intelligence funded news web blogs regarding Australia's stand on Tamil freedom stru…

  7. ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க டிச. 22 இல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி அறப்போர்! - கி. வீரமணி ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அறப் போராட்டம் நடைபெறும் என்று இன்று (டிச. 19) செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு: இலங்கையில் ஈழத் தமிழர்கள், அப்பாவி பொதுமக்கள் பட்டினிப் போட்டும் குண்டு மழை பொழிந்தும் சிங்கள அரசு தமிழினத்தை அழித்து வருவது தடுக்கப்பட வேண்டும். அங்கு செயற்கையாக ஒரு பஞ்சத்தை சிங்கள அரசு உருவாக்கி தமிழினத்தை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதை முதலில் நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். இதில் கட்சி,…

  8. Started by Theevaan,

    Sorry to write in English but I read a message from following article that you can send Malar Valayam if you cannot go to Alexandra Palace. Specially who live out of England. Use the website, they will deliver for us. Thank you http://www.tamilnaatham.com/articles/2006/dec/arush/20.htm

    • 0 replies
    • 4.3k views
  9. செவ்வாய் 19-12-2006 21:39 மணி தமிழீழம் (சிறீதரன்) டிசம்பர் மாதம் முதல் இருவாரத்தில் சிறீலங்காப் படையினரால் 72 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் அறிக்கையில்: சிறீலங்கா படையினர் மற்றும் துணை ஆயுதக் குழுவினரின் நேரடியான தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்இ ஏனைய 41 பேரும் திருமலை வாகரையில் சிறீலங்காப் படையினர் ஏவிய எறிகணைத் தாக்குதலிலும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : பதிவு கடந்த இருவாரத்திலும் 21 தமிழ் மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் இவர்களில் 13 பேர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும…

  10. ராதிகா குமாரசுவாமிக்கு எதிராக அமெரிக்காவில் பிரசாரங்கள்! சிறுவர்களும், ஆயுத முரண்பாட்டிற்கு மான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மீண்டும் அப்பதவியில் நியமிப்பது தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட சந்திப்பொன்றை அமெரிக்கா வின் நியூயோர்க்கில் நடத்தியுள்ளார் நியூயோர்க் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங் கைக்கான ஐ.நாவின் பிரதிநிதி பிரசாத் காரி யவசம் விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். அவரது இல்லத்தில் நடை பெற்ற இந்த விருந்துபசாரத்தில் ராதிகா குமார சுவாமி மற்றும் முன்னாள் இந்தியத் தூது வர் நிருபம் சென் ஆகியோர் கலந்துகொண் டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற…

  11. இலங்கையில் ஈழம் எரிகிறது, எரிகிறது, எரிந்துகொண்டே இருக்கிறதே! மூவாயிரம் பேர் படுகொலை; 35,000 பேர் வீடிழந்துள்ளனர்! சிங்கள அரசுக்கு எச்சரிக்கை தேவை! ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை தேவை! தேவை!! காலத்தால் தக்க நடவடிக்கை எடுத்துள்ளார் தமிழக முதல்வர் பிரதமருக்கும், சோனியாவுக்கும் தந்திகள் குவியட்டும்! குவியட்டும்!! ஈழத்திலே தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கும் படுகொலைகள் குறித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- இலங்கையில் சிங்கள வெறித்தன அரசால் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்படும் கொடுமை பல முனைத் தாக்குதல்களாக நாளும் நடைபெறுகிறது. மனித உர…

  12. ஜானக பெரேராவை பாதுகாப்பமைச்சின் துணைச் செயலாளராக நியமிக்க திட்டம் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரேராவிற்கு பாதுகாப்பு அமைச்சின் துணைச் செயலாளர் பதவி அல்லது அதற்கு இணையான பதவி நிலை ஒன்று வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நீண்ட காலம் இலங்கையில் இருந்திருக்கவில்லை, மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நுட்பங்கள் குறித்து போதிய அனுபவங்களை பெற்றிராமை ஆகியவற்றால் அவருடைய செயல்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்கள் குறித்து விசாலமான அறிவு மற்றும் அனுபவம் கொண்ட ஜானக பெரேராவை வரவழைத்து அவருடைய…

  13. தொடரும் வன்முறைகள் குறித்து நோர்வே ஆழ்ந்த கவலை பண்டிகை காலத்தை முன்னிட்டு தாக்குதலை நிறுத்துமாறும் கோரிக்கை [Tuesday December 19 2006 06:45:33 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள நோர்வே பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதியாவது தற்காலிகமாகவேனும் இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. சமாதான பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நோர்வே உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. இருதரப்பினரும் சமாதானத்துக்கான விருப்பத்தையோ சமிக்ஞைகளையோ வெளிப்படுத்தினால் மட்டுமே மீண்டும் சமாதான பேச்சுக்கள் சாத்தியமாகும் என்றும் …

  14. அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன?: விடுதலைப் புலிகள் [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 16:22 ஈழம்] [பூ.சிவமலர்] வாகரையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறிலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு எவரும் ஏவுகணை விஞ்ஞானம் படிக்க வேண்டியதில்லை. வாகரையைத் தன்வசமாக்கும் திட்டத்தில் சிறிலங்கா அரசு, அனைத்துலக விதிமுறைகளை மீறியதுடன், மனிதாபிமான வேண்டுகோள்களையும் நிராகரித்துள்ளது என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கை விடுத்துள்ளது. வாகரையில் உள்ள மக்கள் நல சேவை புரியும் இடங்களை மட்டக்களப்புக்கான அனைத்துலக செஞ்சிலுவகைச் சங்கப் பிரதிநிதி காசேசி மார்யத்தை, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் க…

    • 6 replies
    • 1.9k views
  15. மலையகத் தொழிலாளருக்கு ஆதரவாக நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போர்! அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணும்படி ஜே.வி.பி., ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. தவறும் பட்சத்தில் நாடு முழுவதும் அரச, தனியார் துறைகளை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் வேலை நிறுத்தப் போராட் டமொன்றை நடத்தப்போவதாக அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜே.வி.பியின் கீழ் இயங்கும் 131 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஜே.வி.பி. தொழிற்சங்கங்களுக்குப் பொறுப் பான கே.டி, லால்காந்த ஆகியோருடன் நேற்றுக் காலை இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளர் எஸ். சதாசிவம் பேச்சு நடத்தினார். தோட்டத் தொழிலாளரின…

  16. கடந்த 7 மாதத்தில் 210,000 பேர் அகதிகளாக இடப்பெயர்வு [செவ்வாய்க்கிழமை, 19 டிசெம்பர் 2006, 19:22 ஈழம்] [க.நித்தியா] கடந்த ஏழு மாத காலத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்து மேலும் 210,000 பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலை பேரழிவினால் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்கள் தொகையில் பாதி இது என முன்னணி பிரித்தானிய துயர் துடைப்பு அமைப்பு ஒன்று கவலை தெரிவித்துள்ளது. போரின் பயங்கரமான பாதிப்பும், நாட்டின் சில பகுதிகளில் போக்குவரத்துச் சேவை கட்டுப்படுத்தப்பட்டிருப்பத

  17. தேசியத் தலைவருடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்: பொட்டம்மான் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் தமிழீழத் தேசியத் தலைவருடன் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் தெரிவித்துள்ளார். பாலா அண்ணன் "தேசத்தின் குரல்" என்ற உயர்ந்த விருதால் தமிழீழம் உள்ளவரை நினைவு கூரப்படுகின்ற ஒருவராக தன்னுடைய சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார் எனவும் பொட்டம்மான் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது: தமிழீழம் உள்ளவரை அவருடைய நினைவுகள் தமிழ் மக்களுடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த…

    • 6 replies
    • 1.4k views
  18. செவ்வாய் 19-12-2006 15:08 மணி தமிழீழம் (மயூரன்) தேசத்தின் குரலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்கதினம் அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புகள் அழைப்பு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்கதினம் அனுஷ்டிக்கும்படி யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் கோரியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக கடந்த மூன்று தசாப்தமாக குரல் கொடுத்த "தேசத்தின் குரல்' கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு எமது கண்ணீர் வணக்கங்களைத்தெரிவிக்கும் முகமாக நாளை புதன்கிழமையன்று யாழ்ப்பாணக்குடாநாடு தழுவிய ரீதியில் பூரண துக்கதினமாக கடைப்பிடிப்போம். இதனூடாக எமது அஞ்சலிகளை எமக்காக உழைத்த கல்விமானும்இ தத்துவாசிரியரும்இ தமிழ் பேசும் ம…

  19. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுக்க இயலாது: முதல்வர் கருணாநிதி பேச்சு விழுப்புரம், டிச. 18: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார். 2-வது கட்ட இலவச நிலம் வழங்கும் விழாவை விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது: "துணைக் கண்டமான இந்தியாவுக்கு, "கண்டம்" வராமல் பாதுகாக்க வேண்டும். பக்கத்து நாடால் "கண்டம்" வரக்கூடாது என்பதற்காகச் சிந்தித்துச் செயல்படுகிறோம். இலங்கைப் பிரச்சினையில் இதே நிலையைக் கையாள்கிறோம். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது தொடர்கிறது. அண்மையில் தில்லிக்குச் சென்றபோது இதுகுறித்து …

  20. இதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்கிறார் பழ.நெடுமாறன் இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசினதோ, தமிழகத்தினதோ நடவடிக்கைகள் போதுமானவையல்ல, இலங்கையில் ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும், ஏ9 வீதியை திறக்க வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறிவருகின்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை. எனவே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தியா இதனை மேற்கொள்ளவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழகம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறினார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து தமிழக மக்கள் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மிகுந்த கவலை கொண்டு உள்ளனர். தமிழக மக்கள் மத்தியில் பெரும் உணர்வலைகள…

    • 8 replies
    • 1.6k views
  21. வவுனியாவில் மூன்று இளைஞர்கள் சுட்டு கொலை வீரகேசரி இணையத்தளம் வுனியா சலபுத்துரம் பகுதியில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத நபர்களால் நேற்று திங்கள் இரவு சுட்டுக் கொல்லப்படடுள்ளனர் . பிரதேச வாசியான 27 வயதுடைய இளைஞனும் அவரது இரு நண்பர்களும் வீட்டில் இருந்து வேளை வீட்டினுள் நுழைந்து இனந் தெரியாத நபர்கள் பிரயோகம் செய்துள்ளனர் . வவுனியா பொலிஸார் இக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொள்கின்றனர்.

  22. குடாநாட்டில் மனிதாபிமான நெருக்கடி மத்தியில் சிக்குன் குனியா நான்கு மாதங்களுக்கு முன்பு ஏ-9 பாதையை அரசாங்கம் மூடியதைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோன்றிய மனிதாபிமான நெருக்கடி மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்ற அதேவேளை சகல பொருட்களினதும் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. குடாநாட்டு மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்கம் உலகிற்கு கூறிக் கொண்டிருக்கிற போதிலும், அங்குள்ள நிலைவரங்களில் எத்தகைய மேம்பாட்டையுமே காணக் கூடியதாக இல்லை. மக்கள் பெரும் அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக அத்தியாவசிய …

  23. 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை' கட்டுரைத் தொகுப்பு தொடர்பாக தமிழகத்தமிழர் பத்ரியின் நயப்புரை அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை எழுதியவர்: பத்ரி (திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விடுதலை நூல் பற்றிய இந்த நயப்புரை http://thoughtsintamil.blogspot.com என்னும் வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. இந் நூல்நயம் பரந்த வாசிப்பு அனுபவமும், இணைய வலைத் தளங்களில் நன்கு அறிமுகமுமான தமிழகத் தமிழர் ஒருவரால் எழுதப்பட்டது என்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் அட்டை எம்மால் இணைக்கப்பட்டது.) அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1 விடுதலை கட்டுரைத் தொகுப்பு அன்ரன் பாலசிங்கம் பெயர்மக்ஸ் பதிப்பகம் (Fairmax Publishing Ltd.), …

  24. "சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம்: "த இன்டிபென்டன்" நாளேடு லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான "த இன்டிபென்டன்" தமிழீழ விடுதலைப் புலிககளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை தனது நேற்றைய (18.12.06) நாளேட்டில் வெளியிட்டுள்ளது. ஜஸ்ரின் கூக்லர் (Justin Huggler) என்பவர் எழுதிய இந்த ஆய்வில், "போராளிக் குழுவின் சர்வதேச தொடர்பாடலுக்கு உரியவராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  25. இலங்கை அரசியலில் பண்டாரநாயக்க குடும்பம் எவ்வளவு துரம் ஊடுருவி இருந்தார்களோ அதைவிட பலமடங்கு ஊடுருவ இவர் முயற்சிக்கிறார் என்றே தென்படுகிறது. அது எவ்வளவு தூரம் பலிக்கும் என்பது புலிகளின் கைகளில்தான் உள்ளது.

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.