Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவத்துக்கும் இடையில் கடும் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வெருகல் பகுதியை நோக்கி இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. அதேநேரத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரையின் தென்மேற்குப் பகுதியான கட்டுமுறிவு பகுதியை நோக்கி இராணுவம் 5 கிலோ மீட்டர் தூரம் முன்னேறியுள்ளது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அங்குள்ள ஒரு பாடசாலையில் படையினர் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே ஈச்சிலம்பற்றிலும் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்றதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். படையினர் தங்கள் நிலையில் இருந்து…

    • 0 replies
    • 2.1k views
  2. (வியாழக்கிழமை, 7 டிசெம்பர் 2006) ஜனனி இலங்கைக்கான வத்திக்கானின் பிரதிநிதி அருட்தந்தை மாரியோ சானாரி நேற்று புதன்கிழமை யாழ். சென்று, அங்கு தற்போதுள்ள நிலைமையையும் ஏ-9 வீதி மூடப்பட்ட பின்னர் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் அவர் நேரில் கண்டறிந்தார். அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் நிலைமையை ஆய்வு செய்ய யாழ்ப்பாணம் சென்றனர். போப் ஆண்டவரின் சிறப்புத் தூதுவருமான அருட்தந்தை மாரியோ சானாரி, யு.என்.எச்.சி.ஆர் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவர் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை சந்தித்து பேசினார். சிறிலங்கா கடற்படையினரின் விசாரணைக்குப் பின்னர் காணாமல் போன அருட்திரு ஜிம் பிறவுன் மற்றும் அவரது உதவியாளர் குறித்து அவர் விசாரித்தார் எ…

  3. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்த 24 மணி நேரத்துக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 13 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். வலிகாமம் கிழக்கில் உள்ள கல்வியங்காடு, கட்டப்பிராய், டச் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேரை ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் சென்றவர்கள் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். அதே இரவில் வலிகாமம் வடக்குப் பகுதியில் இருந்து மேலும் நால்வரை இராணுவம் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து யாழ். மனித உரிமை அமைப்பிடம் கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் புகார் செய்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தாங்கள் கைது செய்ததை இராணுவம் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது என்றும் அந்த உ…

  4. இன்று வியாழக்கிழமை வெருகல், ஈச்சிலம்பற்று பகுதியை நோக்கி இராணுவத்தினர் நகர்வு ஓன்றை கடும் எறிகணை சூட்டாதரவுடன் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றை மோதலை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் உறுதி செய்துள்ளார். மேலதிக தகவல்கள் விரைவில்..

    • 0 replies
    • 1.3k views
  5. நாட்டின் கடற்பகுதியில் மூன்றில் இரண்டு பகுதிக் கடலில், புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்த கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, புலிகள் தன்னுடன் தனிப்பட்ட உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட முன்வந்தால் தான் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "மீனவர்களைப் பயன்படுத்தி இராணுவம் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென புலிகளிடம் தமிழ்க் கூட்டமைப்பினர் வலியுறுத்த வேண்டும். நாங்கள் சமாதானம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். புலிகள் மீ…

  6. ரவிராஜ் கொலையை கண்டித்த யுத்த விரோதிகள் கோதாபய மீதான கொலைமுயற்சியை ஏன் கண்டிக்கவில்லை அளுத்கமகே கேள்வி ரவிராஜின் படுகொலையை `வெட்கம் வெட்கமென' கண்டித்த யுத்த விரோதிகள், கோதாபய ராஜபக்‌ஷ மீதான கொலை முயற்சியை ஏன் கண்டிக்கவில்லையென பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது; "தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையென யாராவது கூறுவார்களானால் அதனை நான் ஏற்க மாட்டேன். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு ஆனால், அதற்கு யுத்தம் தான் தீர்வில்லை. எனவே, புலிகள் சமாதான…

  7. டக்ளஸின் கோரிக்கையை நிராகரித்தார் பாலு இலங்கைக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்காக இந்திய கப்பல்களை வழங்க வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிராகரித்து விட்டார். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென பல தரப்பினரும் விடுத்த கோரிக்கையினை ஏற்று, மத்திய அரசு இலங்கைக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் யார் மூலம் அனுப்புவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை இலங்கை அரசிடம் வழங்கினால் அந்நாட்டு இராணுவத்திடம் தான் வழங்கியாக வேண்டும். அந்த இராணுவம் தான் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எனவே, உணவுப் பொரு…

  8. அன்ரன் பாலசிங்கத்தின் முன்னாள் பெயர் எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் இந்த நாட்டில் பயங்கரவாதத்துடன் மிகவும் நெருங்கிய பிரபலமான பெயர் தான் அன்ரன் பாலசிங்கம் என்பது. அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்புக்குமிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பெயரில் அறிமுகமான அன்ரன் பாலசிங்கம் தற்போது சுமார் 43 வருடங்களுக்கு முன் ஸ்ரீ லங்காவிலிருந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்து பணி புரிந்தவர். அப்பொழுது இவருடைய பெயர் எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்பதாகும். பிற்காலத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இவர் இங்கிலாந்தில் குடியேறிய பின்னரே எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்ற தனது சொந்தப் பெயரை அன்ரன் பாலசிங்கம் என மாற்றி…

  9. கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பத்திரிகைகளை விநியோகம் செய்வதை சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழு தடுக்கிறது என பல தமிழ்ப் பத்திரிகைகள் சிறிலங்கா பிறஸ் கழகத்தில் முறையிட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின் ஞாயிறு பதிப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் ஏனைய நாட்களில் பத்திரிகைகளை விநியோகிக்க தடையில்லை. லேக் ஹவுசின் வெளியீடான தினகரன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என தமிழ்ப் பத்திரிகையாளர்கள் குறை கூறியுள்ளனர். பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக கிழக்கு மாகாணத்துக்கு சுடரொளி பத்திரிகை செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைத் தாண்டி வீரகேச…

  10. இனப்பிரச்சினை தீர்வுக்கான புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. வடக்கு கிழக்குக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்க பரிந்துரை.10:02:45 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான கட்சிகளின் பிரதிநிதி நிபுணர்கள் குழு இனப்பிரச்சினை தீர்வுக்காக புதிய யோசனைகளை முன்வைத்துள்ளது. 37 பக்கங்களை கொண்ட இந்த பரிந்துரைகள் நேற்று சர்வகட்சி மாநாட்டு குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டு குழுவால் ஆராயப்படவுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அதில் அடங்கியுள்ள யோசனைகளை வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த பரிந்துரைகள் நேற்று இரவே இந்து ஆசிய செய்திசேவை இணையத்தளத்தில் வெளியிடப்பட…

  11. அமைச்சர் டக்ளஸ் - தமிழ் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் கடும் வாய்ச்சண்டை அமைச்சரும் ஈ.பி.டி.பி. அமைப்பின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் களுக்குமிடையே இடம் பெற்ற வாதப் பிரதிவாதங்களால் சுமார் 10 நிமிடங்கள் சபாமண்டபம் அதிர்ந்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிதியமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜி லிங்கம் எழுந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சபைக்குள் நுழைந்தார். அப்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் துரோகக் கும்பல் தமது இனத்துக்கு எதிராக செயற்படுகின்றது. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது போல் எ…

  12. வியாழக்கிழமை 7 டிசெம்பர் 2006, 16:14 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. தமிழக மக்களின் உணர்வு …

  13. அன்புக்குரிய சங்கதி வாசகர்களே.. சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எம் தமிழ் உறவுகளுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்துக்களும் வலுச்சேர்க்குமென எண்ணுவதால் அன்பான வாசகர்களே இவ்மனிதாபிமான உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மதிப்பக்குரிய கோபி அனான் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; அவர்களுக்கு சமாதானத்திலும் நீதியிலும் நம்பிக்கைகொண்ட தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்வது இலங்கையில் உள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களான யாழ்ப்பாணம், வாகரை ஆகிய ப…

    • 4 replies
    • 2.2k views
  14. பாக்கிஸ்தான் அரசு பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் Col.பஸிர் வாலியை இலக்கு வைத்ததென சிலரால் கூறப்படும் கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலில் இறந்த, காயமடைந்த சிறீலங்கா படையினரின் குடும்பங்களுக்கு அன்பளிப்பு செய்த நன்கொடைகளை நேற்று இடம்பெற்ற விழா ஒன்றில் சிறீலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஐபக்ஸ அலரிமாளிகையில் குடும்பங்களிடம் கையளித்தார். இவ்விழாவில் பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் Col. பாஸிர் வாலி பாக்கிஸ்தான் அரசின் சார்பில் பங்குபற்றியிருந்தார். இவர்களுடன் இப்போதைய தூதுவர் திரு.சேகம் அஸ்லாம் சவுத்திரி, Maj.Gen நந்த மல்லவராச்சியும் கலந்து கொண்டிருந்தனர். http://pathivu.com/index.php?subaction=sho...rom=&ucat=2&

  15. இந்த ஆண்டு முடிவதற்குள் கணனிமயப்படுத்தப்பட்ட புதிய தேசிய அடையாள அட்டைகளை வழங்க சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. புதிய அடையாள அட்டைகள் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ளது. அதனால் போலி அடையாள அட்டைகளைத் தயாரிப்பது மிகக் கடினமானதாகும். தற்போது அடையாள அட்டையை வைத்திருப்பவர் அனைவரும் புதிய அடையாள அட்டைகளைப் பெறுவர். புதிய அட்டையில், உரியவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் விவரங்கள் மாற்றக்கூடியதாகவும் இருக்கும். உதாரணமாக கணனிமயப்படுத்தப்பட்ட இந்தப் புதிய அட்டையில் முகவரி மாற்றத்தை எளிதாகச் செய்யலாம். அதே நேரத்தில் போலி அட்டைகளைத் தயாரிக்க முடியாது. அடையாள அட்டை பெறுபவர்களின் முழு விவரங்களும் கணனியில் சேகரிக்கப்ப…

  16. பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தும் முடிவை எடுத்த சில மணி நேரங்களில், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் உண்மையாக விரும்பினால் அதற்கு சிறிலங்கா அரசு தயாராக உள்ளது. அது நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ் மக்களுக்கு அவர் நம்பிக்கை தெரிவித்தார். இச்சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் நசுக்கப்பட எவ்விதமான வாய்ப்பையும் தாம் வழங்கப்போவதில்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒடுக்க மட்டுமே இந்தச் சட்டம் என்று அ…

  17. அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாழ்சென்றனர். அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு ஒன்று யாழ் குடாநாட்டிற்கு நேற்று விஜயம் செய்துள்ளது நான்கு போ அடங்கிய இந்த குழுவினர் யாழ் குடாநாட்டில் தற்போது தோன்றியுள்ள மனிதாபிமான நெருக்கடி நிலை குறித்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். யுhழ் குடுநாhட்டில் ஏற்பட்டுள்ள மனித பேரவலம் குறித்து தகவல்களை திரட்டும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. www.pathivu.com

  18. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி. நேற்று இரவு 7.30 அளவில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் மேற்கொள்ளபப்ட்ட கிளைமோர் தாக்குதலில் இரண்டு படைவீரர்கள் பலியாகினா். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இதேவேளை சாஸ்திரிகூளாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தங்கராசா பிரபாகரன் என்ற இளைஞர் பலியானார். www.pathivu.com

  19. சீருடையணிதல், கொடியேற்றல், ஒன்றுகூடல்,நிதிசேகரித்தல் கூட்டத்திற்கு அழைப்புவிடுதல் தண்டனைக்குரிய குற்றம் அரசாங்கம் அறிவிப்பு [Thursday December 07 2006 06:43:42 AM GMT] [யாழ் வாணன்] அரசாங்கமானது சமாதானத்தை அடைதல் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணுதல் சமூக வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளையும் வழங்கல்களையும் பேணுவதற்கான அதன் கொள்கையுடன் இணைந்த வகையில் எந்தவொரு நபர் அல்லது குழுக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான பரந்த செயல் விளைவுடைய நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தவுள்ளது என அரசாங்கம் விடுத்துள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக…

  20. பொரலஸ்கமுவ பிரதான நீர்வழங்கல் குழாயில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. [Thursday December 07 2006 06:36:20 AM GMT] [யாழ் வாணன்] லபுகமவிலிருந்து கொழும்பிற்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர்வழங்கும் குழாயில் நேற்று இரவு 11.30 மணியளவில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பொறலஸ்கமுவ பெலன்விலவிலுள்ள குழாயிலேயே வெடிப்பு சம்பவம் இஅடம்பெற்றுள்ளது.அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் இவ் வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரும் குண்டு செயலிழக்கும் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.எனினும் இவ் வெடிப…

    • 6 replies
    • 1.8k views
  21. ஜான் ஹான்சன் பவர் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பயணம். இலங்கை அரசின் கோரிக்கைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர்களை வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சியில் சந்திக்கத் நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜான் ஹான்சன் பவர் திட்டமிட்டுள்ளதாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசின் கோரிக்கைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர்களை வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சியில் சந்திக்கத் நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜான் ஹான்சன் பவர் திட்டமிட்டுள்ளதாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். www.tamilwin.com

  22. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வலுவான புதிய விதிகளுடன் அமுலுக்கு வந்தது சமாதானப் பேச்சு முயற்சிகளை பாதிக்காது என்கிறது அரசு. பாதுகாப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்' (Prevention of Terrorism Act) இலங்கைத் தீவு முழுவதும் நேற்று முதல் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் இந்தச் சட்டம் புதிய பல துணை விதிகள் சேர்க்கப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அமுலுக்கு வந்திருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர…

  23. விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சரணடையக்கோருகின்றனர் படையினர் பாதுகாப்பு, புனர்வாழ்வு தரப்படும் என அறிவிப்பு விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சரண் அடையுமாறு பலாலி பாதுகாப்பு நட வடிக்கைத் தலைமையகம் கேட்டுள்ளது. தலைமையகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டு தடைசெய் யப்பட்டுள்ள இயக்கமொன்றில் இணைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்த உண்மையை உணர்ந்து 24பேர் இதுவரை சரண் அடைந்துள்ளனர். எந்தவொரு இராணுவ முகாமிலோ, யாழ். சிவில் ஒருங்கிணைப்பு அலுவலகத்திலோ, பொலிஸ் நிலையத்திலோ அல்லது யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திலோ சரணடை…

  24. பாப்பரசரின் பிரதிநிதி யாழ். விஜயம் யாழ். நிலைமைகளை நேரில் அறிவதற் காக பாப்பரசரின் இலங்கைப் பிரதிநிதியான அதிவண. மரியோ சொனாறி நேற்று யாழ்ப் பாணம் வந்துள்ளார். விமானம் மூலம் நேற்றுப் பிற்பகல் யாழ்.வந்த அவர் யாழ்.ஆயர் அதிவண. தோமஸ்சவுந்தரநாயகம் மற்றும் குருமார்களுடன் கலந்துரையாடினார். யாழ். சிற்றாலயத்தில் இன்று காலை விசேட திருப்பலியை அவர் ஒப்புக்கொடுக்கவுள்ளார் -உதயன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.