ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி தொடரும் இடப்பெயர்வு சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ்க் குடும்பங்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றன. இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.மகேசன் இன்று ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இதுவரை 16,540 குடும்பங்களைச் சேர்ந்த 62,643 பேர் அகதிகளாகியுள்ளனர். இவர்களில் 10,657 குடும்பத்தினர் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் 5 முகாம்களில் தங்கியுள்ளனர் என்றார். இதனிடையே செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரைக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல…
-
- 0 replies
- 839 views
-
-
போலி பிறப்புச் சான்றிதழ் மோசடி விவகாரம்: ஐ.தே.க.வின் மகரூப்பிடம் நாளை விசாரணை போலி பிறப்புச் சான்றிதழ் மோசடி குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகரூப்பிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் நாளை விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து கொழும்பு குற்றப் பிரிவின் தலைவர் சரத் லுகொட கூறியதாவது: மகரூப்பின் பிறப்புச் சான்றிதழ் மோசடியை அம்பலப்படுத்தியமைக்காக லேக் ஹவுசின் பிரதி ஆசிரியர் பிரசாத் குணவர்த்தவனை படுகொலை செய்யும் பொறுப்பை இரு நபர்களிடம் மகரூப் ஒப்படைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து நாளை திங்கட்கிழமை விளக்கம் அளிக்குமாறு மகரூப்புக்கு தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிறப்புச் சான்றிதழ் மோசடி குறித்து சிறிலங்கா காவல்துறையினரும் விச…
-
- 0 replies
- 917 views
-
-
கடத்தப்பட்ட பிரபல பொலிஸ் அத்தியட்சகரின் மகன் சடலமாக கொழும்பில் மீட்பு. ஜசனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 23:19 தமிழீழம்ஸ ஜகிருஷ்ணப்பிள்ளைஸ கொழும்பில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் கடத்தி செல்லபட்ட பிரபல பொலிஸ் அத்தியட்சகரின் மகன் சடலாமாக இன்று இராணுவ புலனாய்வு பிரிவினால் வீசப்பட்டுள்ளார். கொழும்பு 15 மட்டக்குளியில் வாழ்ந்துவரும் பொலிஸ் அத்தியட்சகரின் மகனான றெஜினோல்ட் யேசுதாசன் நேற்றையதினம் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டார். இலங்கையின் பிரபல காப்புறுதி நிறுவனமான யூனியன் அசுறன்ஸ் காப்புறுதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். http://www.nitharsanam.com/2006/09/02/50671.php
-
- 1 reply
- 872 views
-
-
தூங்கியவர்களை தட்டியெழுப்பும் சரத் பொன்சேகா..... விடுதலைப் புலிகளின் தாக்குதலால் நிலகுலைந்து போயிருக்கும் யாழ்குடா படைகளை தட்டி எழுப்பி ஊக்க மாத்திரை அழித்து போயிருக்கிறார் இலங்கை இராணுவ தளபதி. சரத்பொன்சேக... புலிகளின் விமானங்களும். அவர்களின் இலக்கு தவறா ஆட்லெறி தாக்குதலும் உள் நுழைந்து தாக்குதல் நடத்திய புலிகள் சிறப்பு படையனிகளின் தாக்குதலில் கதி கலங்கி போய் இருந்த படைகளிற்க்கு ஓடி வந்து ஊக்க மாத்திர அளித்துள்ளார். முகமாலையை அன்மித்த உயர் முன்னனி படை நிலைக்கும் சென்று படைகளிற்க்கு உற்சாகம் வழங்கியிருக்கிறார். இவ்வாறான நிகழ்வுகள் கடந்த காலங்களில் இருந்த படை நிலை தளபதிகளும் இதைத்தான் செய்தனர். குண்டு வைப்பில் காயப்பட்ட பின்னர் அங்கு …
-
- 1 reply
- 982 views
-
-
பருத்தித்துறை கடற்சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 80 போராளிகள் உயிரிழந்ததாக சிறிலங்கா அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்படுவது சாத்தியமற்ற எண்ணிக்கை என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் கடற்சமர் குறித்து எழுதிய கட்டுரையில் இதனை இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை கடற்சமர் குறித்து அக்கட்டுரையில் இக்பால் அத்தாஸ் மேலும் கூறியதாவது: - சிறிலங்கா கடற்படை மீது அல்லது கடற்படைக் கப்பல் மீது புலிகள் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு அது தவறிவிட்டதா? - திருகோணமலையிலிருந்து வடக்கு கிழக்கு கடற்பிரதேசம் வழியாகத்தான் இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கான விநியோகப்பாதை அமைந்துள்ளது வெளிப்படையான ஒன்று. அப்படியான…
-
- 0 replies
- 887 views
-
-
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மாதாந்த சஞ்சிகையான `முரகல' (காவற்கல்) சஞ்சிகையின் ஆகஸ்ட் இதழில் வெளியான "இந்தியாவின் புதிய நிகழ்ச்சி நிரல் என்ன?" என்ற சிங்களக் கட்டுரையின் தமிழாக்கம். -தமிழில் ப.பன்னீர்ச்செல்வம்- சேர்.ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவி வகித்த காலத்தில் பாண்டுங் நகரில் வலய நாடுகளின் மாநாடொன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் சேர்.ஜோன் "ஏகாதிபத்திய வாதிகளுக்கு சார்பான" உரையொன்றை நிகழ்த்தினார். இவ்வுரையை செவிமடுத்த ஜவஹர்லால் நேரு கொத்தலாவலவின் அருகில் வந்து இந்த உரையை நிகழ்த்துவதற்கு முன்னர் அதன் பிரதியை ஏன் தன்னிடம் காண்பிக்கவில்லையென வினவினார். இதற்கு பதிலளித்த சேர் ஜோன் எனது உரையின் பிரதியை நான் ஏன் உனக்கு காட்ட வேண்டும்? நீ உனது உரையின் பிரதியை எனக்கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
மூதூரிலிருந்து ஒரு நேரடி விளக்கம் -கொத்தியார்- மனித அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் அண்மையில் மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இடம்பெயர்வுகளில் முஸ்லிம்களையும் இடம்பெயர்வு தொட்ட பின்பே, இந்த அவலங்கள் அரசியல் வாதிகளுக்கும் அரச உயர் மட்டத்தினருக்கும் அகதிகள் பற்றிய அனுதாபம் ஏற்பட்டிருக்கின்றது. ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்குப் பின்பு, பதில் நடவடிக்கையாக சம்பூர் பிரதேசத்தின் மீது நடத்தப்பட்ட வான் மற்றும் எறிகணை தாக்குதலால் மூதூர் கிழக்குப் பகுதியில் பதினொரு கிராம அதிகாரி பிரிவுகளில் வசித்த 18 ஆயிரத்து 360 மக்கள் இடம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாய்ச்சலுக்கு புலிகள் தயராகி விட்டாhக்கள்.......!!! சிங்கள படைகள் முன்னெடுத்து வரும் வலிந்து தாக்;குதலை முறியடிக்க தற்காப்பு சமரை நடத்தி வரும் புலிகள் எத்தனை காலத்திற்க்கு இதனை செய்யப் போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.... மூதுரில் இருந்து தொடங்கப்பட்ட தாக்குதலில் இருந்து இது வரை 125 போரளிகளை வீடுதலைப்புலிகள் இழந்துள்ளார்கள் இத்தனை போராளிகளையும் பலி கொடுத்து அவர்கள் சும்மாய் இருக்க போவதில்லை.... மாறாக அவர்களும் தமது பலத்தை மீண்டும் ஒரு முறை நிருபிக்க வேண்டிய இக்கெட்டான நிலைக்குள் சிக்கியிருக்கிறார்கள். பலம் இழந்தார்கள் புலிகள் என பறை சாற்றும் சிங்கள பேரினவாத படைகளிற்க்கு பெரும் அடி கொடுக்க புலிகள் நிச்சயம் முனைவார்கள். …
-
- 10 replies
- 2.9k views
-
-
புலிகளின் முக்கிய செய்தி நோர்வேக்கு அனுப்பி வைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செய்தி ஒன்று நோர்வே அனுசரணையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த செய்தியின் உள்ளடக்கத்தை நோர்வே அனுசரணையாளர்களே வெளிப்படுத்துவர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது இவ்வாறிருக்க சம்பூர் பகுதியை நோக்கி முன்னேறும் தமது நடவடிக்கை தொடர்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 8 replies
- 2k views
-
-
தான் பிறந்த மண்ணில் வாழும் உரிமை எனக்கு இல்லையா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனக்கு வழங்கிய கொமாண்டோ பாதுகாப்பு மற்றும் வாகனங்களை குறைப்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளாருக்கு என்ன உரிமை இருக்கிறது எனவும் அவர் கேட்டுள்ளார். இக் கடிதம் இந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.திசாநாயக்க செய்தி சேவைக்கு ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற நாளில் இருந்து பல சந்தர்ப்பங்களில் தனது பாதுகாப்பு பிரதான…
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கிலாந்து பிரதமர் ரொனி பிளேயருடன் இந்தியாவின் ஆதரவு குறித்து தான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இது தொடர்பில் மகிந்த கூறியுள்ளதாவது: இந்தியாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியத் தரப்பினருடன் நான் நேரடியாக பேசுவேன். சர்வதேச நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்களை ரொனி பிளேயருடன் பேசினோம். அதுபற்றி விரிவாக தெரிவிக்க இயலாது. எமது அருகாமை நாடான இந்தியாவுடனான உறவுகள் குறித்து விவாதிக்க மூன்றாம் தரப்பின் உதவியைக் கோரியதாக நினைப்பது ஆச்சரியமளிக்கிறது என்றார் மகிந்த ராஜபக்ச. இங்கிலாந்துக்கு திடீர் பயணத்தை மகிந்த மேற்கொண்டிருந்த நிலையில் இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியாவின் ஆதரவ…
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் வெளியேறியதையடுத்து அதன் அலுவலகங்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றன. இது குறித்து கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பின்னூர் ஓமர்சன் கூறியதாவது: கண்காணிப்புக் குழுவினரது எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் எமது அலுவலகங்களை ஒன்றிணைக்கிறோம். தற்போது 6 அலுவலகங்கள் இயங்குகின்றன. இதனை 4 ஆக குறைக்க உள்ளோம். கிளிநொச்சியில் உள்ள அலுவலகம் தொடர்ந்து இயங்கும். எமது நடவடிக்கைகளில் தற்போது எதுவித மாற்றமும் இல்லை. கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் எமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பார். மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கான அலுவலகங்கள் அம்பாறையிலும் மன்னார் மற்றும் வவுனியாவுக…
-
- 0 replies
- 599 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழகமே கிளர்ந்துள்ள நிலையில் தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது என்று வட அமெரிக்க ஐரோப்பிய தமிழர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் எம்முடன் இரண்டறக் கலந்து செயற்படும் எமது உறவுகளான திரைப்படக் கலைஞர்கள் தற்போதைய ஈழத்து நிலவரம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது தொடர்பாக ஐரோப்பிய வட அமெரிக்க திரைப்பட ஆர்வலர்கள் சம்மேளனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை: ஈழத்தமிழர்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவதும், அவர்களது கிராமங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு அவர்கள் அகதிகள் ஆக்கப்படுவதும் தற்போது சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிட்டு நடத்தப்ப…
-
- 1 reply
- 792 views
-
-
திருகோணமலையில் ரெலோ அலுவலகத்தை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.என்.டி.எல்.எஃப் ஆக்கிரமித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ரெலொவின் அலுவலகத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆயுதங்களுடன் நுழைந்த துணை இராணுவக் குழுவினர் இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டனர். ரெலோ அலுவலகத்தில் தங்கியிருந்த அதன் திருமலை மாவட்ட அமைப்பாளர் ரங்கா உள்ளிட்ட இரு குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு வலுவில் அந்த அலுவலகத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார். "சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்ப…
-
- 0 replies
- 714 views
-
-
சிறீலங்காவின் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தமிழ் மனித நேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி சிறீலங்கா அரசின் உடனடி முடக்க அறிவிப்பின் கீழ் ரகசியமாக முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அரச வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற முயன்ற போது இது தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீதான அனைத்துலகத் தடைகளின் பின்னர் சிறீலங்கா அரசு தமிழர் தரப்பின் மீது சகட்டுமேனிக்கு இராணுவ மற்றும் இதர இன அழிப்பு நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் நிலையில்..வெறும் வெற்றுக் கோசங்களும் அறிக்கைகளும் சிறீலங்கா அரசை அதன் செயற்பாடுகளின் இருந்து கட்டுப்படுத்தப் போவதில்லை. சிறீலங்கா அரசின் பொருளாத்தாரத்தை சிதைத்து அதன் இராணுவ வலிமையைத் தகர்த்து அதனை உறைய வைக்க வேண்டிய நடவடிக…
-
- 5 replies
- 2k views
-
-
செஞ்சோலை தாக்குதல்கள் குறித்து திரு. பழ. நெடுமாறன் - இலங்கைத் துணைத் தூதர் திரு. அம்சாஆகியோரிடையே நடைபெற்ற விவாதம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்முகம் 16-08-2006 நேர்முகம் கண்ணொளி காட்சி http://www.thenseide.com/audio/SunTV-Aug06.rm நன்றி: தென்செய்தி
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்குவதைத் தடுக்க அமெ. அழுத்தம் இலங்கைக்கு ஆயுதத் தளபாடங்களை பாகிஸ்தான் வழங்குவதைத் தடுக்கும் விதத்திலான அழுத்தமொன்றை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கொடுத்துவருகிறது. சிங்கள நாளிதழான லங்காதீபவில் நேற்று வெளியான "தரலிய பெரல'என்ற தலைப்பிலான உள்நாட்டு அரசியல் பற்றிய அந்தக்கட்டுரையில் இது குறித்துக் கூறப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தான் கடந்த காலம் முழுவதும் எமக்கு ஆயுத உபகரணங்களை வழங்கி உதவிகளைச் செய்திருந்தாலும், அரசு வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் இராணுவத் தீர்வை மட்டும் நாடுவது தவறெனக் கூறியிருக்கும் அமெரிக்கா, இலங்கைக்கு ஆயுதங்களை விற்பது தொடர்பான விடயத்தில் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அழுத்தத்தை வழங…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிங்கள இனவெறியர்களால் குறைந்தது நாளுக்கு 20 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்! எங்கே யுத்தநிறுத்தம்? புலிகளின் பதில் என்ன? தமிழ் மக்கள் அங்கலாய்ப்பு! - டேவிட்ஸரன் லண்டன் சிறீலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ பதிவியேற்றதிலிருந்து சிறிது சிறிதாக சமாதானத்துக்கான கதவுகள் மூடப்படத் தொடங்கின. ,தன் பின்னணி மகிந்த ராஜபக்ஸவுடன் சூழவிருக்கும் ஜே.வி.பி, ஜாதிககெல உறுமைய தானென்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் ,வர்களே தானென்று மகிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் கூறினாலும் சம காலத்தில் பல திரைமறைவு வேலைகளை முழு வீச்சில் முடுக்கி விட்டார். முழுவீச்சில் கட்டியெழுப்பப்பட்ட சிங்கள இராணுவ கட்டமைப்பு இன்று தனது கோர முகங்களை அப்பாவி தமிழ் மக்கள் மீது காட்டத் தொடங்கியுள்ளத…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலிகளுக்கு எதிரான தாக்குதலில் பாக்.விமானிகள் பங்குபற்றவில்லை இந்தியாவிடம் இலங்கை தெரிவிப்பு வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தான் விமானப்படையினர் எவ்வித பங்கையும் வகிக்கவில்லை என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல்களின்போது இதை தெரிவித்துள்ளார் என இந்திய செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:v ""இலங்கை இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் பல விடயங்கள் குறித்து தெளிவுபடுத்த இலங்கை ஜ…
-
- 1 reply
- 981 views
-
-
யாழ். தினக்குரல் அலுவலகம் படையினரால் நேற்று சோதனை வீரகேசரி நாளேடு யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள யாழ். தினக்குரல் அலுவலகமும் அதனையண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் நேற்றுக்காலை படையினரின் சுற்றி வளைப்பு தேடுதலிற்கு உள்ளானது. குறிப்பாக கஸ்தூரியார் வீதிக்கும் காங்கேசன் துறை வீதிக்கும் இடைப்பட்ட நகரையண்டிய பகுதிகளிலேயே இத்தேடுதல் வேட்டை இடம்பெற்றது. யாழ். தினக்குரல் அலுவலக வாசலினுள் காலை 8 மணியளவினுள் புகுந்த 15 இற்கும் அதிகமான படையினர் ஆசிரியபீட பகுதி, கணினிப் பகுதி மற்றும் விளம்பரப் பகுதி என்பவற்றுடன் அச்சிடல் பகுதிகளிலும் தேடுதல் நடத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இத்தேடுதலின் போது அங்…
-
- 1 reply
- 1.3k views
-
-
BBc யின் ஓளிபரப்பாகிய மூதூர் தொண்டர் நிறுவனப்பணியாளர்கள் பற்றிய ஒளிப்படம்...! http://news.bbc.co.uk/media/avdb/news_web/...1bf_16x9_bb.ram ஏதோ என்னால முடிஞ்சது...!
-
- 6 replies
- 2.5k views
-
-
2 டோறாக்கள் மூழ்கடிப்பு...8 டோறா சேதம்.....16 ஆட்லெறி அழிப்பு... இரணுவத்தால் வலிந்து மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளால் இதுவரை ஆறு டோறாக்கள் முற்றக அழிக்கப் பட்டுள்ளன.. மூதுரில் தொடங்கிய தாக்குதலில் இருந்து .இதுவரை காலத்தில் ஆறு டோறாக்கள் வெற்றிகரமாக மூழ்கடிக்கப் பட்டுள்ளன. இதே வேளை எட்டு டோறாக்கள் கடும் சேதமாக்கப் பட்டுள்ளன. இரண்டு உலங்கு வானுர்திகள் சேதமாக்கப் பட்டுள்ளன பாதினாறுக்கு மேற்ப்பட்ட கனரக ஆட்லெறிகள் முற்றாக அழித்து நாசமாக்கப் பட்டுள்ளன. இது விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மிக உச்சகரமான காலப் பகுதியாகும். சிறிலங்கா இரணுவத்தால் மிக மூர்கத்தனமாக மேற்க் கொள்ளப்பட்ட வலிந்து தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிக…
-
- 15 replies
- 5.2k views
-
-
-
தாழையடி கடற்சமரில் 5 கடற்கரும்புலிகள் உட்பட 8 பேர் வீரச்சாவு. தமிழீழக் கரையோரங்களிலே மீனவர்களை அச்சுறுத்தியும் கரையோரக் கிராமங்கள் மீது கடலில் இருந்து தாக்குதல் நடத்தியும் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாளையடியில் வைத்து கடற்புலிகள் 01.09.2006 அன்று இரவு 8:45 மணிக்கு ஒரு தாக்குதலை தொடுத்தனர். இரண்டாம் திகதி அதிகாலை 3:45 வரை நீடித்த இக்கடல் சண்டையில் தொண்டமனாறு வரை சிறிலங்கா கடற்படையினர் விரட்டியடிக்கப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான கடற்படையினருக்கு உதவியாக திருமலை கடற்படைத் தளத்தில் இருந்தும் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் இருந்தும் கடற்படையினர் உதவிக்கு விரைந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட சிறிலங்கா கடற்கலங்களை எதிர்கொண்டு வீரச்சமரிட்ட கடற்புலிகள், தாக்குதல் படகு…
-
- 3 replies
- 2.1k views
-
-
கட்டைப்பறிச்சான் மோதலில் வீரச்சாவடைந்து நான்கு போராளிகளின் விரபங்கள் புலிகளால் அறிவிப்பு. திருமலை மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிமிப்பு யுத்தத்திற்கு எதிரான நடவடிக்கையில் களமாடி வீரச்சாவடைந்த நான்கு போராளிகளின் விபரங்களை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 1. கப்டன். லதாங்கன் என அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி பாலச்சந்திரன் 2. 2ம் லெப். ஒளிவாணன் என அழைக்கப்படும் வந்தாறுமூலையைச் சேர்ந்த மேகராஜா கிரிராஜன் 3. வீரவேங்கை காவலன் என அழைக்கப்படும் முனைக்காட்டைச் சேர்ந்த சண்முகம் நவீனன் ஆகிய மூன்று போராளிகளும் 31.08.2006 அன்று வீரச்சாவடைந்துள்ளனர். 4.இதேநாளில் களமாடி விழுப்புண் அடைந்த…
-
- 0 replies
- 986 views
-