Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சந்திரிகாவின் மகளின் திருமணத்திற்கு ஜே.வி.பி. எதிர்ப்பு http://www.nitharsanam.com/?art=20462

  2. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சிறிலங்காவுக்கு இராணுவ உதவி: அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரான றொபேர்ட் ஓ ப்ளேக் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்காவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் இராணுவ உதவி வழங்கப்படும். சிறிலங்காவுக்கு இராணுவ உதவி வழங்கினால் எப்படி விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுக்களை முன்னெடுப்பது என்ற நோக்கில் செயற்பட முடியும்? பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தை வலுப்படுத்த உதவுவோம். தமிழீழ விடுதலைப் புலிகள் முதல் நடவடிக்கையாக பய…

  3. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ.புஷ் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டமேசை மாநாடு ஜனநாயக ஆட்சிகள் நடக்கும் வட்டமேசை மாநாடு என அழைக்கப்படுகிறது. இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  4. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்த நள்ளிரவு யோசனையை ஏற்று நோர்வே மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு எதிராக ஜே.வி.பி. களமிறங்கியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் இங்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.அவர் சிறிலங்காவின் ஆளுநர் போன்று செயற்படுகிறார். சிறிலங்காவின் எதிரியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனப்படுத்த வேண்டும். எரிக் சொல்ஹெய்ம் இங்கு வந்தாலும் கிளிநொச்சி செல்ல அனுமதிக்கக்கூடாது. இணைத் தலைமை நாடுகளின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு கூறியும் இணைத் தலைமை நாடுகள் ஏன் பதில் தரவில்லை? தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் அல்லது ச…

  5. 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது என்றும் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த படுகொலைகள், காணாமல் போதல்களுக்கு இராணுவமே பொறுப்பு என்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையமாக Human Rights Watch குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதலும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான பரிந்துரைகள் என்ற தலைப்பில் 60 பக்க அளவிலான ஆய்வறிக்கை அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: - முல்லைத்தீவில் சிறிலங்கா விமானம் குண்டு வீச்சுத…

  6. கொழும்பில் கடத்தப்பட்ட கணவனுக்காக போராடும் தமிழ்ப் பெண் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்களை அடையாளம் தெரியாத குழுவினர் கடத்தி பணம் பறிப்பதும் கொலை செய்வதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கடத்தப்பட்ட புதிதாக திருமணமான கணவனை மீட்க கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த மே 26 ஆம் நாளன்று புதிதாக திருமணமான கிளிநொச்சியைச் சேர்ந்த இருதயசாமி பிரான்சிஸ் (வயது 34) என்பவரை அடையாளம் தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளனர். அவருக்கு பெப்ரவரியில் திருமணம் நடந்ததாகவும் கனடா செல்ல இருந்த நிலையில் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா செல்வதற்கு சில நாட்கள் முன்பாக தனது மனைவியுடன் கொட்டாஞ்சேனை பகுதியில் விடுதி ஒன்றில் அவர் …

  7. உலகிலேயே மிக மோசமான மத சுதந்திர மீறல்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா: அமெரிக்கா அறிவிப்பு உலகின் மிக மோசமான மத சுதந்திர மீறல்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை அமெரிக்கா இணைத்துள்ளது. இதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் கூறியதாவது: சிறிலங்காவை தோல்வியடைந்த நாடு என்று முன்னர் அமெரிக்கா அறிவித்தது. ஜாதிக ஹெல உறுமயவை பயங்கரவாத அமைப்பாகவும் அறிவித்தது. மரபுகளுக்கு மாறாக மக்களை நாங்கள் மதம் மாற்றுவதில்லை. தன்னை ஜனநாயக நாடாக வெளிப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்காவில் பாரிய மனித உரிமை மற்றும் மத சுதந்திர மீறல்கள் உள்ளன. அமெரிக்க மக்கள் தொகையில் 37 விழுக்காடு உள்ள ஸ்பானிஸ் மக்களுக்கு அமெர…

  8. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்கா வெளியேற்றம்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றப்படக் கூடும் என்று தெரிகிறது. ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுத் தீர்மானங்களில் சிறிலங்கா கைச்சாத்திடவில்லை என்றும் அந்த அமைப்புக்களால் சிறிலங்காவை கட்டுப்படுத்த முடியாது என்றும் கடந்த வாரம் சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகையால் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்திலிருந்து சிறிலங்காவை வெளியேற்ற வேண்டும். சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்…

  9. [செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 02:30 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதேசத்தை நோக்கி சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முனநகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி கறுத்தபாலம் பகுதியிலிருந்து பதுள்ள வீதியூடாக நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இம்முன்நகர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இருதரப்பினரிடையே ரொக்கெட் வீச்சு அதிகாலை 4.30 மணிவரை நீடித்தது. இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தினர் தமது நிலைகளுக்குப் பின்வாங்கினர். சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களினால் விடுதலைப் புலிகளின் பிரதேச கிராமங்களான கரடியனாறு, இலுப்ப…

  10. பேச்சுகள் என்ற போர்வையில் பாரிய படை நடவடிக்கைகளை நகர்த்தும் சிறிலங்கா அரசு - விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கத் தயாரென அரசு கூறியுள்ள அதேநேரம் புலிகளுக்கெதிராக பாரிய தாக்குதலை நடத்துவதற்கான முனைப்பிலும் அரசு மிகத் தீவிரம் காட்டுவதாக தெரியவருகின்றது. இதற்காக படையினரை சகல வழிகளிலும் அரசு தயார்படுத்தி வருவதாகவும் அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசு பேச்சுகளை நடத்தி வரும் அதேநேரம், விடுதலைப் புலிகளுடன் அடுத்த மாத முற்பகுதியில் ஒஸ்லோவில் சமாதானப் பேச்சுகளை நடத்தவும் அரசு நோர்வே அனுசரணையாளர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்…

  11. மக்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்த நாடு சிறிலங்கா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் சாடல் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பொறுப்பாளர் லூயிஸ் ஆர்பௌர் குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தை இன்று திங்கட்கிழமை தொடங்கி வைத்து லூயிஸ் ஆர்பௌர் பேசியதாவது: சிறிலங்காவில் நாளாந்தம் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் 2 இலட்சத்துக்கு 40 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இனப்பிரச்சனையில் பொதுமக்கள்தான் சிக்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய அளவில் மனித உரிமைகளை மீறியிருப்பினும் சிறிலங்கா…

  12. யாழில் 7 தாக்குதல்கள்: 3 இராணுவத்தினர் பலி- 8 பேர் காயம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடத்தப்பட்ட 7 தாக்குதல்களில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ். அளவெட்டியில் நேற்று இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஆர்.எம். சந்திரசிறி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். தௌ;ளிப்பளையில் நேற்று மாலை 5.30 மணியளவில் வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த கோர்பரல் ஐ.எம்.ஏ.ஐ. வீரசிங்க சிகிச்சை பலனின்றி பலாலி மருத்துவமனையில் உயிரிழந்தார். இத்தாக்குதலில் இராணுவத்தைச…

  13. அம்பாறையில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொலை [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 13:57 ஈழம்] [ம.சேரமான்] அம்பாறை மாவட்டத்தில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. அம்பாறை பனாமா நகருக்கு அருகே இக்கொலைச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று நடந்திருக்கக் கூடும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ( Puthinam)

  14. தமிழர்களின் வடக்கு - கிழக்குத் தாயகப் பிரதேசங்களை அந்நிய நாடாக சிறிலங்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவே நடக்கும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பால் வேறுபாடின்றி இனப்படுகொலைகள், மூடிய எல்லைகளுக்கப்பால் பொருளாதாரத் தடை, பெரும் படை நகர்வை மேற்கொண்டு சிறு துரும்பை ஆக்கிரமித்தவுடன் ஆனந்தப் பெருங்களிப்பு முதலியன இப்படித்தான் கருத வைக்கின்றன. புலிகளின் ஆட்லறி நிலைகளைத் தகர்க்கவே படை நடவடிக்கை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு கண்துடைப்புக் காரணங்கள். அத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் வரையறுக்கப்படாத புதிய சரத்துக்களை தாமாகவே பின்னிணைப்பாக அரசு சேர்த்துக் கொண்டிருக்கிறது. இப்புதிய சரத்துக்களில் ஆட்லறி நிலைகளை அகற்றுதல், பொங்கு தமிழ் ஏற்பாட்டாளர்களை புகைப்படம் மூலம் இனங்கண்டு கொலை…

  15. [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:11 ஈழம்] [ம.சேரமான்] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதையடுத்து மாணவர்களின் தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆம் பகுதி தேர்வு ஓகஸ்ட் மாதம் நடத்தப்படும். ஆனால் ஓகஸ்ட் மாதம் திடீரென பாடசாலைகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது. தற்போது பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. மன்னாரில் உயிலங்குளம் மற்றும் மடு சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுவிட்ட்டதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மடு மற்றும் அடம்பன் கல்வி வலய பிரதேசங்களுக்கு வினாத் தாள்களை கல்வி திணைக்களத்தினர் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்…

    • 0 replies
    • 692 views
  16. பேச்சுவார்த்தையில் துணை இராணுவக்குழுவை சேர்க்க அரசாங்கம் முயற்சி: அனுரா பண்டாரநாயக்க தகவல் [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:47 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களை விலக்கி விட்டு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவை சேர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு நிகழ்வில் அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது: ஒரு சிறந்த பயங்கரவாத இயக்கம் ஆயுதங்களைக் கீழே போட்டு விடுமா? அறிவீனமான நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்த வேண்டும். கருணா…

  17. மன்மோகன், கொபி அனானுடன் மகிந்த சந்திப்பு [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 04:55 ஈழம்] [தெ.சந்திரநாதன்] கியூபாவில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, சமதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன ஆகியோர் உடனிருந்தனர். இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாக கொபி அனான் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகளை கொபி அனானிடம் மகிந்த நியாப்படுத்தினார். நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் ஆகியவை தொடர்பில் விசாரணைகளை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொபி அனானிடம் மகிந்த விளக்கின…

    • 0 replies
    • 824 views
  18. இந்திய அமைதிப்படை இருந்திருந்தால் இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்: ரணில் விக்கிரமசிங்க [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:20 ஈழம்] [ம.சேரமான்] இந்திய அமைதிப்படை இருந்திருந்தால் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் 100 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் நேற்று பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க பேசியதாவது: இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பின. இந்திய அமைதிப் படையின் நடவடிக்கையானது விடுதலைப் புலிகளையும் ஜனநாயகப் பாதைக்கு கொண்டு வரும் வகையில் இருந்தது. ஜே.வி.பி.யின் அழுத்தத்தால் இந்திய…

  19. ஜே.என்.டிக்சிட் போல் செயற்பட்டால் மீண்டும் பிரச்சனை ஏற்படும்: இந்தியாவுக்கு அனுரா எச்சரிக்கை [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:36 ஈழம்] [ம.சேரமான்] ராஜீவ் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுக்கான முன்னால் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிட் போல் இந்தியத் தூதுவர்கள் செயற்பட்டால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்று சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று 1980-களிலிருந்தே குரல் கொடுத்து வருகிறேன். தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது இனப்பிரச்சனை, வாழ்க்கைச் செலவீனப் …

  20. இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரை நடத்த ஜே.வி.பி.க்கு மகிந்த "நள்ளிரவு" யோசனை: கொழும்பு ஊடகம் [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:07 ஈழம்] [ச.விமலராஜா] அமைதிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்ட இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரைகளை மேற்கொள்ள ஜே.வி.பிக்கு மகிந்த ராஜபக்ச யோசனை கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இணைத் தலைமை நாடுகளின் பிரசெல்ஸ் அறிக்கைக்குப் பின்னர் அரசாங்கம் முன்பாக ஜே.வி.பி. வைத்த நிபந்தனைகள் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை மற்றும் சர்வதேச ஊடகங்களில் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் ந…

    • 4 replies
    • 1.5k views
  21. இருண்டு கிடக்கிறது ஈழத்தமிழர் வாழ்க்கை - ஆனந்த விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/av_2..._2006_09_15.pdf

  22. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் கடந்த 2 மாதங்களில் இந்திய வர்த்தகர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா நகைக்கடை வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினர் கூறியுள்ளதாவது: கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் கொழும்பில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கப்பப் பணம் கொடுத்தவுடன் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணம் கொடுத்த பின்னரும் விடுவிக்கப்படாதோர் எண்ணிக்கை அதிகம். இரு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் கடத்தப்பட்ட ஒரு வர்த்தகர் கப்பப் பணமாக ரூ. 6 மில்லியன் செலுத்தினார். ஆனால் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்திய வர்த்தகர்கள…

  23. யாழ்ப்பாணத்துக்கான கப்பல் மூலமான விநியோகப் பணி நிறுத்தம்: செஞ்சிலுவைச் சங்கம் [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:10 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்லும் பணிகளை நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னதி கூறியதாவது: கப்பல் போக்குவரவு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுநிலைப்பாட்டுக்கு வரும் வரை அனைத்து கடல்சார் பணிகளும் இடை நிறுத்தப்படும். நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களை பட்டினியால் சாகவிடமுடியாது. …

    • 0 replies
    • 881 views
  24. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 17:03 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாதச் செயல் என்றும் பாலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கியூபா அணிசேரா நாடுகள் கூட்டத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கியூபாவில் மகிந்த பேசியதாவது: பாலஸ்தீன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. மனித உரிமைகள், சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. உலக ஆட்சி முறையை ஜனநாயகப்படுத்துவதில் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள், பயங்கரவாதம், போதைப்பொருட்கள், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், குற்றச் செயல்களால் நாட்டின் இறைமைக்கும் சிவ…

  25. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] யாழ். தீவகத்துக்கான தரை வழிப்பாதையை சிறிலங்கா கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திடீரென மூடியுள்ளனர். அல்லைப்பிட்டியூடான இந்தப் பாதை மூடப்பட்டமையால் இரு புறமும் மக்கள் சிக்கியுள்ளனர். எரிபொருள், தகவல் தொடர்பு உள்ளிட்டவைகளை ஏற்கனவே தீவகப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் முடக்கி உள்ள நிலையில் தரவழிப்பாதையையும் மூடியிருப்பதால் அங்கு நிலைமை மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது. http://www.eelampage.com/?cn=28815

    • 0 replies
    • 795 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.