Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழ் ஏதிலிகளை வாழ வையுங்கள்! http://www.tamilnaatham.com/articles/2006/...akheeran/13.htm

  2. சிங்களப் பத்திரிகை லங்காதீபவில் வந்த செய்தி இந்தியப்படையினரிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பிரபாகரன் ஸ்ரீ லங்காவின் பாதுகாப்புப் படையினருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமல்ல என்பதே யதார்த்தம். உலகில் மிகக் கூடுதலான எண்ணிக்கையிலான இராணுவத்தை உடையதாகக் கருதப்படும் இந்தியாவின் படையினர் ஸ்ரீ லங்காவில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கும் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமாக அமையவில்லை. ஒருமுறை இந்தியப் படையினர் புலிக்குட்டி ஒன்றைச் சுட்டுக் கொன்று விட்டு அது பிரபாகரன் செல்லமாக வளர்த்த புலிக்குட்டி எனக்கூறி அதன் புகைப்படத்தை ஸ்ரீ லங்கா ஊடகங்கள் மூலம் காட்டி பிரபாகரனை தம்மால் பிடிக்க முடியாவிட்டாலும் பிரபாகரன் இருந்த இடத்தை அ…

    • 7 replies
    • 3.7k views
  3. இலங்கையில் "காணாமல்" போகும் தமிழர்கள்: ரொறன்ரோ ஸ்ரார் இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவது குறித்து ரொறன்ரோ ஸ்ரார் என்ற கனேடிய பத்திரிகை விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரை விவரம்: யாழில் சில வாரங்களுக்கு முன்பாக நள்ளிரவில் வெள்ளை வானில் வந்த இராணுவத்தினர் கனகன் சசிகரன் என்பவரது வீட்டின் முன்பாக வந்திறங்கினர். வீட்டின் பின் கதவை 15-க்கும் மேற்பட்டோர் காலால் உதைத்து உடைத்தனர். அவர்களில் சிலர் கறுப்பு முகமூடி அணிந்திருந்தனர். வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் சசிகரனை (வயது 29) படுகொலையிலிருந்து இழுத்து வானில் ஏற்றினர். அவரது மனைவியின் முகத்தில் ஏ.கே.௪7 ரக துப்பாக்கி முனையினால் இராணுவத்தினர் தாக்கினர். அதன் பின்னர் சசிகரன் இருப்பிடம் குற…

    • 2 replies
    • 1.4k views
  4. http://www.bbc.co.uk/sinhala/news/story/20...ayamaster.shtml

    • 3 replies
    • 2.6k views
  5. :!: நள்ளிரவு வேளை வீதியில் நடமாடிய சிறுமி படையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு :!: நள்ளிரவு வேளை தனியாக வீதி யில் நடமாடிய 12 வயதுச் சிறுமியை இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்து மறுநாள் காலை அப்பகுதி கிராம சேவை யாளர் முன்னிலையில் விடுவித்தனர். இச்சம்பவம் கடந்த மூன்றாம் திகதி நள் ளிரவு கைதடிப் பகுதியில் இடம்பெற் றது. அன்றைய தினம் இரவு தனது பேர்த்தி யாரின் வீட்டில் நின்ற சிறுமியை மறு நாள் நயினாதீவு அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றோம் என்று பெற்றோர் கூறிவிட்டு தமது வீட் டிற்கு சென்று விட்டனர். நயினாதீவுக்கு மறு நாள் செல்வது என்ற சிந்தனையோடு பேர்தியார் வீட்டில் அன்றைய இரவு இச்சிறுமி உறங்கினார். நள்ளிரவு ஒரு மணியளவில் விழித்த சிறுமி ஒருவருக்கும் சொல்லாமல் இரண்டு பைகளில்…

    • 2 replies
    • 2.2k views
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் அணுகுமுறை மாற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லூன்ஸ்டெட் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பொறுப்பிலிருந்து விலக உள்ள ஜெப்ரி லூன்ஸ்டெட் கண்காணிப்புக் குழுவினரிடம் கூறியதாவது: வன்முறைகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை நீங்கள் சந்திக்கும் போது அவர்களது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பேச்சுக்களுக்குத் திரும்புமாறு வலியுறுத்த வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்துவது போல் செப்ரெம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டால் கண்காணிப்புக் குழுவின் பணிகள் மிகவும் கடினமாகிவிடும். கண்காணிப்புக்…

  7. புளொட்டின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் சுட்டுக்கொலை யாழ்ப்பாணத்தில் புளொட் அமைப்பின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் செபஸ்தியன் இருதயராஜன் (வயது 48 ) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வீரகேசரி நாளேட்டின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். கொல்லப்பட்ட செபஸ்தியன் இருதயராஜன், யாழ். மாட்டின் வீதியைச் சேர்ந்தவர் என்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது நன்றி-புதினம்

  8. நல்லூரில் கிளைமோர்த் தாக்குதல் 4 காவல்துறையினர் பலி- 3 பேர் படுகாயம் யாழ். நல்லூரில் இன்று இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையின் வாகனம் சிக்கியதில் நால்வர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்தனர். நல்லூர் முத்திரைச் சந்தி மற்றும் நாரிக்குண்டுகுளத்தடி இடையே உள்ள கைலாசபிள்ளையார் ஆலயம் அருகே சிறிலங்கா இராணுவ முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் நிறைந்த இராணுவப் பாதுகாப்பு மிகவும் உள்ள பகுதியில் இத்தாக்குதல் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காவல்துறையினரின் வாகனம் முற்றாக சிதைந்தது நன்றி-புதினம்

  9. Started by vilankapayal,

    கறுப்பு ஜூலை எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை இலண்டன் ஹைபார்க் மைதானத்தில் 12.30இலிருந்து 3.30வரை நடைபெற இருக்கின்றது. இதில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளை பிரித்தானியா வாழ் மக்களுக்கு தெரியப்படுத்துவோம். உங்கள் வேலைத்தளங்களில் அன்றைய நாளை ஓய்வு நாளாக மாற்றி பேரணிக்கு வர முயற்சி செய்யுங்கள் நண்பர்களே

    • 2 replies
    • 1.4k views
  10. சட்டப் புத்தகங்களுக்குள் தூங்கும் தமிழின் நிர்வாக அந்தஸ்து த.மனோகரன் இலங்கையின் இனமுறுகல் இன்று பூதாகரமாகத் திகழ்ந்து பல அழிவுகளுக்கு அடிப்படையாக அமைந்து, தமிழ்மொழி உரிமைக்கு மறுப்புத் தெரிவித்து தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தமை என்பது வரலாறு. 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள அரச கரும மொழிச்சட்டத்தை எதிர்க்கத் தலைப்பட்ட தமிழினம் இன்று தனிநாடு என்ற கோட்பாடு வரை வந்து விட்டது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதைச் சிந்திப்பது அவசியமாகும். ஓர் இனத்தின் இருப்புக்கு, வாழ்வின் உறுதிக்கு, மொழியுரிமை கட்டாயமானது, அவசியமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஓர் இனத்தின் மொழியுரிமை பறிக்கப்படும் போது அவ்வினம் வாழும் நாட்டின் இரண்டாம் தரப்பிரஜைகளாக, நாட்டிற்கு …

  11. கிளைமோருடன் கைதான கருணா குழுவைச் சேர்ந்தவர் கண்காணிப்புக்குழுவிடம் ஒப்படைப்பு மட்டக்களப்பில் கிளைமோர் கண்ணிவெடியுடன் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்தவர் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாக சம்பூர் அரசியல்துறை செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கைது செய்யப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற ஜெயா கூறியதாவது: கடந்த ஜூலை 2 ஆம் நாளன்று நான் என் தொழில் நிமித்தமாக சென்றுவிட்டுத் திரும்பும்போது கருணா குழுவினர் என்னை கடத்திச் சென்றனர். சிறிலங்கா இராணுவத்தின் பவல் கவச வாகனத்தில் மட்டக்களப்பு நீதிமன்றம் அருகே உள்ள இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கே கருணா குழுவினர் இருந்தனர். அவ…

  12. போர் நடவாத, குண்டு கொண்டுபோய் மக்கள் தலையில் போடாத பம்பாய் நகரில் ஏழு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கிறது என்றால், நித்தம் தமிழரை சாகடித்துக்கொண்டிருக்கும் சிங்கள நகரங்கள் எப்படி சிதற வேண்டும். ஆனால் புலிகள் எவ்வளவு நல்லவர்கள் .சிங்கள நகரங்கள் காப்பாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

    • 1 reply
    • 2k views
  13. தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (09.07.06) ஒளிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளந்திரையன் தெரிவித்த கருத்துகளின் எழுத்து வடிவம்: சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு இயந்திரங்களில் ஒன்றுதான் அரச படைகள். அந்த அரச படைகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளன. அதாவது தீர்வுத் திட்டமானது சிங்களவருக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்பதில் தங்களின் பங்களிப்பு குறித்து தெளிவாக…

  14. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய கடலையும் திருகோணமலை துறைமுகத்தையும் பாதுகாப்பது புலிகளே [11 - July - 2006] [Font Size - A - A - A] இந்தியா இதை உணர வேண்டுமென்கிறார் திருமாவளவன் இந்தியாவுக்கு எதிராக விடுதலைப்புலிகள் எப்போதும் செயல்பட்டது கிடையாது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைந்து நடத்திய ஈழத் தமிழர் பாதுகாப்புக்கான மனிதநேயப் பேரணி - பொதுக் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் கடந்த சனிக்கிழமை நடந்தது. பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது; அரசியல் ரீதியாக நான் வேறு கூட்டணியில் இருப்பதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை சிலர் தவிர்த்துள்ளது வருத்தமாக உள்ளது. …

  15. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் தீர்வுகாண விடுதலைப் புலிகள் முன்வருவார்களா? [11 - July - 2006] [Font Size - A - A - A] அரசு கேள்வியெழுப்புகிறது ஐக்கிய இலங்கைக்குள்ளும், ஒற்றையாட்சியின் கீழும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை எதிர்க்கும் விடுதலைப் புலிகள் `பிரிக்கப்படாத இலங்கைக்குள்' அதிகாரப் பரவலாக்கல் மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவார்களா எனக் கேள்வியெழுப்பும் கொள்கை திட்டமிடல் அமுல்படுத்தும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தினக்குரலுக்கு மேலும் தெரிவிக்…

    • 9 replies
    • 1.8k views
  16. பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தலுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை [11 - July - 2006] [Font Size - A - A - A] பத்திரிகையாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலுள்ள நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடம் வகிக்கிறது. அங்கு அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் ஆரம்பமான காலம் முதல் இன்று வரை 125 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்றே இலங்கையில் கடந்த 16 மாத காலத்தில் 4 பத்திரிகையாளர்களும் ஊடகத்துறையில் பணி புரியும் 2 உத்தியோகத்தர்களும் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெ…

  17. ஐ.நா. தீர்மானத்தின் கீழ் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி உரிமை உண்டு: வி.உருத்திரகுமாரன் திங்கட்கிழமைஇ 10 யூலை 2006 19:56 ஈழம் ஜச.விமலராஜா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. தீர்மானத்தின் கீழ் ஆயுத இறக்குமதிக்கான உரிமை உண்டு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரலில் சூரிச் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் "தற்போதைய அமைதி முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுப் போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம்: இலங்கையில் உள்ள தற்போதைய யுத்த நிறுத்தமானது கடந்த 2000 ஆம் ஆண்…

    • 2 replies
    • 1.5k views
  18. யாழ். மேலதிக நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரனின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இராணுவத்தினர் பரமேஸ்வராச் சந்திக்கு அருகே அதனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர். எனினும், பொதுமக்களின் முயற்சியால், ஏற்படவிருந்த பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டதுடன், நீதிவானின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவரும், கார்ச் சாரதியும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இராணுவத்தினரின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கை காரணமாக திருநெல்வேலிப் பகுதியெங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. நீதிவானின் பிள்ளையை தனியார் கல்வி நிறுவனமொன்றிலிருந்து ஏற்றி வருவதற்காகச் சென்றபோதே காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

    • 5 replies
    • 1.8k views
  19. பிரதான எதிர்க்கட்சியையே ஏமாற்றுவோரிடம் பிரபாகரன் நம்பிக்கை வைத்து பேசுவாரா? [09 - July - 2006] -கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க. ஐ.தே.கட்சி தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு அக்கட்சிக்கெதிரான துரோகத்தை தொடரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயலை கண்காணிக்கும் பிரபாகரன் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு வருவாரா எனக் கேள்வியெழுப்பும் ஐ.தே.கட்சியின் பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இது தொடர்பாக இந்தியாவும் தனது ஆட்சேபனையை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் கருத்து தெரிவிக்கையில்; அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தால் ஐ.தே.…

    • 2 replies
    • 1.4k views
  20. பெரும் எண்ணிக்கையானோர் பங்கெடுத்த ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தும் மனிதநேயப் பேரணி இன்று மாலை சென்னை மன்றோ சிலையிலிருந்து புறப்பட்ட ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதநேயப் பேரணியில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி மாலை 3 மணிக்கு புறப்படும் என அறிவித்திருந்தபோதும், தொண்டர்களின் தொடர் வருகை காரணமாய் மாலை 4.30 மணிக்கே புறப்பட்டது. பேரணியை எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தலைமையேற்று நடத்த தமிழ்த் தேசிய பெருந்தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். பேரணியில் மருத்துவர் ந. சேதுராமன், பசீர்அகமது, நடிகர் மன்சுூர் அலிகான், அரிமாவளவன், ஓவியர் புகழேந்தி, மனிதம் அக்னி சுப்பிரமணியம், ஓவியர…

    • 4 replies
    • 1.9k views
  21. மேலும் வாசிக்க....................... http://sankathi.com/content/view/3851/26/

    • 2 replies
    • 1.5k views
  22. கிளைமோர்த் தாக்குதலினால் பாதிப்படையாத வாகனங்களை தயாரிக்கும் விடுதலைப் புலிகள் [சனிக்கிழமை, 8 யூலை 2006, 20:13 ஈழம்] [கொழும்பு நிருபர்] வடக்கில் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு பெருமளவில் இரும்புத் தகடுகளும் வெல்டிங் குச்சிகளும் கொண்டு செல்லப்படுவதனால் விடுதலைப் புலிகள் கிளேமோர்த் தாக்குதலினால் பாதிப்படையாத வாகனங்களைத் தயாரிக்கின்றனரா என்ற சந்தேகம் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓமந்தை சோதனைச் சாவடியினூடாக இந்த இரும்புத் தகடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் வன்னிப் பிரதேசத்திற்கு இரும்புத் தகடுகள் கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்படாததுடன் அவற்றைக் கொண்டு சென்ற லொறிகளும் கொள்கலன்களும் தி…

    • 1 reply
    • 1.1k views
  23. தமிழினத்தை நவீன இராணுவமாக பரிணமிக்கச் செய்தவர் தேசியத் தலைவர்: கேணல் விதுசா [சனிக்கிழமை, 8 யூலை 2006, 19:56 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஆயுதங்களையே அறியாது அஞ்சியிருந்த தமிழினத்தை இன்று முழுமையான நவீன இராணுவமாக பரிணமிக்கச் செய்தவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் என்று மாலதி படையணியின் சிறப்புத் தளபதி கேணல் விதுசா தெரிவித்துள்ளார். லெப். கேணல் நிஸ்மியா பெண்கள் படைக் கட்டுமாணப் பயிற்சி 2 ஆம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிரி நெருக்கடிகளை மிகக்கடுமையாக மேற்கொண்ட காலங்களில் எல்லாம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலில் மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் மூலம் வெற்…

    • 1 reply
    • 1.1k views
  24. அமைதிப் படை - 02 என்ற பேச்சுக்கே இடமில்லை: இந்தியா சனிக்கிழமை 8 யூலை 2006 இரண்டு தரப்பிற்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில்இ சிறிலங்கா அரசு இந்திய படைகளின் உதவிக்கு கோரிக்கை விடுத்தாலும் கூட "அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அதிகாரி இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை பெற்ற கசப்பான அனுபவங்கள் இந்திய மக்களினதும் இ இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைவர்களினதும் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம்இ சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அள…

    • 14 replies
    • 2.7k views
  25. மன்னார் பேசாலை சம்பவங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரி சாட்சியம் மன்னார் பேசாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ரீ,ஜே.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அங்கு சாட்சியமளித்த வங்காலைப்பாடு கடற்படை முகாம் பொறுப்பதிகாரி, சம்பவ தினம் தனது முகாமைப் பாதுகாப்பதிலேயே தாங்கள் ஈடுபட்டிருந்ததாகவும், பேசாலை சம்பவத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான வெங்காலை தேவாலயம் அன்றைய தினம் மன்னார் சன்னி விலேஜில் உள்ள கடற்படை முகாமிலிருந்தே கடற்படையினரின் மோட்டார சைக்கிள்கள் வந்ததாகவும் அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார் சனி விலேஜ் கடற்படை முகாமில் உள்ள …

    • 4 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.