Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்குகிழக்கு மாகாணத்தை பிரிக்கக் கோரும் வழக்கை ஜே.வி.பி யினர் சிறிலங்கா தலைமை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அது சட்டப்புூர்வமானது அல்ல என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியான ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என ஜே.வி.பி.யினர் தங்களது மனுக்களில் கோரியுள்ளனர். ஜேவிபியினரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி சில்வா ஆஜராகிறார். இவர் மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை …

    • 23 replies
    • 4.4k views
  2. பவுத்த பேரினவாத மகிந்தவின் இரட்டை வேடம். - தயா மாஸ்ரரை கைது செய்மாறு தனது இனவாதிகளை தூண்டிவிட்டு விட்ட மகிந்த. வியாழக்கிழமைஇ 14 டிசெம்பர் 2006 மௌலானா தயா மாஸ்ரரை கைது செய்யுமாறு பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யபட்டுள்ளது. இலங்கையின் சிங்கள பொலிஸ் மா அதிபருக்கு இனவாத அமைப்பு ஒண்று இதனை செய்துள்ளது. அதற்கான ஆதரமாக பொலிசார் கொடுத்த கடிதம். மருத்துவமனையிலை அனுமதித்துவிட்டு எந்த மருத்துவ மனை என்று இனவாதிகளுக்கு கூறிவிட்டு ஆர்பாட்டம் நடாத்துமாறு தூண்டிவிட்டு ஆர்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்குமாறு பொலிசாரையும் தூண்டிவிட்டு ஆர்பாட்டத்தில் தயாமாஸ்ரருக்கு எதிராக முறைப்பாடு பொலிசில் பதிவு செய்யுமாறு தூண்டிவிட்டு அந்த முறைப்பாடடை பொலிசார் ஏற்றுக்கொள்ளுமாறு தூண்டிவிட்…

    • 1 reply
    • 1.1k views
  3. சரத் பொன்சேகா மீது தாக்குதல்: உயிருடன் இருக்கிறார் தற்கொலைதாரி என அறிவிக்கப்பட்ட "மஞ்சுளாதேவி" [வெள்ளிக்கிழமை, 14 யூலை 2006, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டிருந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என்பவர் உயிருடன் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று சிறிலங்காவின் இரகசியப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. முதலில் ரம்புக்கனையிலும் பின்னர் வெலிவேரியவிலும் வசித்து வந்த தற்கொலைதாரி மஞ்சுளாதேவி என அடையாளம் காணப்பட்டதுடன் அவரின் அடையாள அட்டையையும் இரகசியப் பிரிவினர் கண்டுபிடித்திருந்ததாக கூறப்பட்டது. பின்னர் மஞ்சுளாதேவி சிறு வயதில் தங்கிய…

  4. சம்பத் சில்வா கொலையை விசாரித்த 4 பொலிஸ் குழுக்களும் விலகல். ஊடகவியலாளர் சம்பத் லக்மல் சில்வா கொலை விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறை குழுக்களில் நான்கு குழுக்கள் விலகியுள்ளன. பிரதிகாவல்துறை அதிகாரி ஒருவரின் பணிப்புரையின் அடிப்படையிலேயே இந்த குழுக்கள் விலக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கல்கிஸ்ஸை காவல்துறையின் குழு ஒன்று மாத்திரமே தற்சமயம் இந்த கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  5. புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளை விடுவிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளையதினம் விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பார்கப்படுகிறது. பந்துஜீவ போபிட்டிய என்ற காவல்துறை அதிகாரியே தமிழிழ விடுதலைப்புலிகளால் கடந்த வருடம்; செப்டம்பர் மாதம் தமிழிழ விடுதலைப்புலிகளால் தடுத்துவைக்கப்பட்ள்ளார். இவரும் ஏனைய இரண்டு காவல்துறை அதிகாரிகளும் மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் பந்துஜீவவை தவிர்ந்த ஏனைய இருவரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 75 replies
    • 10k views
  6. மட்டக்களப்பில் ஆழ ஊடுருவிய படையினர் மீது தாக்குதல்: 8 படையினர் பலி! மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகுள் சிறீலங்காப் படையினரும் மற்றும் துணை ஆயுதக்குழுவினரும் ஊடுருவ முற்பட்ட போது விடுதலைப் புலிகளில் பதில் தாக்குதலில் 8 படையினர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு வாகனேரிப் பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை காலை 6மணிக்கு ஊடுருவிய படையிருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றன. இம்மோதலிலேயே படையினர் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களின் சடலங்களை விதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளா தயாமோகன் எமது செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து படையினர…

  7. நோர்வேயினை வெளியேற்ற ராஜபக்சே திட்டம்! இழுத்த இழுப்புக்கு இந்தியாவருமா? http://www.tamilnaatham.com/pdf_files/VIKA..._2006_07_13.pdf

  8. தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியினை அரசுடமையாக்க அரசாங்கம் முடிவு. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உரியவர்களால் பராமரிக்கப்படாமலிருக்கும் வங்கிக் கணக்குகளை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் இந்த நடவடிக்கையை இலங்கை வங்கி ஆரம்பித்திருப்பதன் மூலம் குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் பல கோடி ரூபா வைப்பு அரசுடைமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இதன் முதற்கட்டமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காசநோய் ஆஸ்பத்திரி வளவிலுள்ள கோயிலின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அரசுடைமையாக்கப் போவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. வடக்…

  9. தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழ் ஏதிலிகளை வாழ வையுங்கள்! http://www.tamilnaatham.com/articles/2006/...akheeran/13.htm

  10. சிங்களப் பத்திரிகை லங்காதீபவில் வந்த செய்தி இந்தியப்படையினரிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பிரபாகரன் ஸ்ரீ லங்காவின் பாதுகாப்புப் படையினருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமல்ல என்பதே யதார்த்தம். உலகில் மிகக் கூடுதலான எண்ணிக்கையிலான இராணுவத்தை உடையதாகக் கருதப்படும் இந்தியாவின் படையினர் ஸ்ரீ லங்காவில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கும் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமாக அமையவில்லை. ஒருமுறை இந்தியப் படையினர் புலிக்குட்டி ஒன்றைச் சுட்டுக் கொன்று விட்டு அது பிரபாகரன் செல்லமாக வளர்த்த புலிக்குட்டி எனக்கூறி அதன் புகைப்படத்தை ஸ்ரீ லங்கா ஊடகங்கள் மூலம் காட்டி பிரபாகரனை தம்மால் பிடிக்க முடியாவிட்டாலும் பிரபாகரன் இருந்த இடத்தை அ…

    • 7 replies
    • 3.7k views
  11. இலங்கையில் "காணாமல்" போகும் தமிழர்கள்: ரொறன்ரோ ஸ்ரார் இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவது குறித்து ரொறன்ரோ ஸ்ரார் என்ற கனேடிய பத்திரிகை விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரை விவரம்: யாழில் சில வாரங்களுக்கு முன்பாக நள்ளிரவில் வெள்ளை வானில் வந்த இராணுவத்தினர் கனகன் சசிகரன் என்பவரது வீட்டின் முன்பாக வந்திறங்கினர். வீட்டின் பின் கதவை 15-க்கும் மேற்பட்டோர் காலால் உதைத்து உடைத்தனர். அவர்களில் சிலர் கறுப்பு முகமூடி அணிந்திருந்தனர். வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் சசிகரனை (வயது 29) படுகொலையிலிருந்து இழுத்து வானில் ஏற்றினர். அவரது மனைவியின் முகத்தில் ஏ.கே.௪7 ரக துப்பாக்கி முனையினால் இராணுவத்தினர் தாக்கினர். அதன் பின்னர் சசிகரன் இருப்பிடம் குற…

    • 2 replies
    • 1.4k views
  12. http://www.bbc.co.uk/sinhala/news/story/20...ayamaster.shtml

    • 3 replies
    • 2.6k views
  13. :!: நள்ளிரவு வேளை வீதியில் நடமாடிய சிறுமி படையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு :!: நள்ளிரவு வேளை தனியாக வீதி யில் நடமாடிய 12 வயதுச் சிறுமியை இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்து மறுநாள் காலை அப்பகுதி கிராம சேவை யாளர் முன்னிலையில் விடுவித்தனர். இச்சம்பவம் கடந்த மூன்றாம் திகதி நள் ளிரவு கைதடிப் பகுதியில் இடம்பெற் றது. அன்றைய தினம் இரவு தனது பேர்த்தி யாரின் வீட்டில் நின்ற சிறுமியை மறு நாள் நயினாதீவு அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றோம் என்று பெற்றோர் கூறிவிட்டு தமது வீட் டிற்கு சென்று விட்டனர். நயினாதீவுக்கு மறு நாள் செல்வது என்ற சிந்தனையோடு பேர்தியார் வீட்டில் அன்றைய இரவு இச்சிறுமி உறங்கினார். நள்ளிரவு ஒரு மணியளவில் விழித்த சிறுமி ஒருவருக்கும் சொல்லாமல் இரண்டு பைகளில்…

    • 2 replies
    • 2.2k views
  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் அணுகுமுறை மாற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லூன்ஸ்டெட் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பொறுப்பிலிருந்து விலக உள்ள ஜெப்ரி லூன்ஸ்டெட் கண்காணிப்புக் குழுவினரிடம் கூறியதாவது: வன்முறைகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை நீங்கள் சந்திக்கும் போது அவர்களது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பேச்சுக்களுக்குத் திரும்புமாறு வலியுறுத்த வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்துவது போல் செப்ரெம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டால் கண்காணிப்புக் குழுவின் பணிகள் மிகவும் கடினமாகிவிடும். கண்காணிப்புக்…

  15. புளொட்டின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் சுட்டுக்கொலை யாழ்ப்பாணத்தில் புளொட் அமைப்பின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் செபஸ்தியன் இருதயராஜன் (வயது 48 ) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வீரகேசரி நாளேட்டின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். கொல்லப்பட்ட செபஸ்தியன் இருதயராஜன், யாழ். மாட்டின் வீதியைச் சேர்ந்தவர் என்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது நன்றி-புதினம்

  16. நல்லூரில் கிளைமோர்த் தாக்குதல் 4 காவல்துறையினர் பலி- 3 பேர் படுகாயம் யாழ். நல்லூரில் இன்று இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையின் வாகனம் சிக்கியதில் நால்வர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்தனர். நல்லூர் முத்திரைச் சந்தி மற்றும் நாரிக்குண்டுகுளத்தடி இடையே உள்ள கைலாசபிள்ளையார் ஆலயம் அருகே சிறிலங்கா இராணுவ முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் நிறைந்த இராணுவப் பாதுகாப்பு மிகவும் உள்ள பகுதியில் இத்தாக்குதல் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காவல்துறையினரின் வாகனம் முற்றாக சிதைந்தது நன்றி-புதினம்

  17. Started by vilankapayal,

    கறுப்பு ஜூலை எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை இலண்டன் ஹைபார்க் மைதானத்தில் 12.30இலிருந்து 3.30வரை நடைபெற இருக்கின்றது. இதில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளை பிரித்தானியா வாழ் மக்களுக்கு தெரியப்படுத்துவோம். உங்கள் வேலைத்தளங்களில் அன்றைய நாளை ஓய்வு நாளாக மாற்றி பேரணிக்கு வர முயற்சி செய்யுங்கள் நண்பர்களே

    • 2 replies
    • 1.4k views
  18. சட்டப் புத்தகங்களுக்குள் தூங்கும் தமிழின் நிர்வாக அந்தஸ்து த.மனோகரன் இலங்கையின் இனமுறுகல் இன்று பூதாகரமாகத் திகழ்ந்து பல அழிவுகளுக்கு அடிப்படையாக அமைந்து, தமிழ்மொழி உரிமைக்கு மறுப்புத் தெரிவித்து தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தமை என்பது வரலாறு. 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள அரச கரும மொழிச்சட்டத்தை எதிர்க்கத் தலைப்பட்ட தமிழினம் இன்று தனிநாடு என்ற கோட்பாடு வரை வந்து விட்டது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதைச் சிந்திப்பது அவசியமாகும். ஓர் இனத்தின் இருப்புக்கு, வாழ்வின் உறுதிக்கு, மொழியுரிமை கட்டாயமானது, அவசியமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஓர் இனத்தின் மொழியுரிமை பறிக்கப்படும் போது அவ்வினம் வாழும் நாட்டின் இரண்டாம் தரப்பிரஜைகளாக, நாட்டிற்கு …

  19. கிளைமோருடன் கைதான கருணா குழுவைச் சேர்ந்தவர் கண்காணிப்புக்குழுவிடம் ஒப்படைப்பு மட்டக்களப்பில் கிளைமோர் கண்ணிவெடியுடன் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்தவர் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாக சம்பூர் அரசியல்துறை செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கைது செய்யப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற ஜெயா கூறியதாவது: கடந்த ஜூலை 2 ஆம் நாளன்று நான் என் தொழில் நிமித்தமாக சென்றுவிட்டுத் திரும்பும்போது கருணா குழுவினர் என்னை கடத்திச் சென்றனர். சிறிலங்கா இராணுவத்தின் பவல் கவச வாகனத்தில் மட்டக்களப்பு நீதிமன்றம் அருகே உள்ள இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கே கருணா குழுவினர் இருந்தனர். அவ…

  20. போர் நடவாத, குண்டு கொண்டுபோய் மக்கள் தலையில் போடாத பம்பாய் நகரில் ஏழு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கிறது என்றால், நித்தம் தமிழரை சாகடித்துக்கொண்டிருக்கும் சிங்கள நகரங்கள் எப்படி சிதற வேண்டும். ஆனால் புலிகள் எவ்வளவு நல்லவர்கள் .சிங்கள நகரங்கள் காப்பாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

    • 1 reply
    • 2k views
  21. தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (09.07.06) ஒளிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளந்திரையன் தெரிவித்த கருத்துகளின் எழுத்து வடிவம்: சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு இயந்திரங்களில் ஒன்றுதான் அரச படைகள். அந்த அரச படைகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளன. அதாவது தீர்வுத் திட்டமானது சிங்களவருக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்பதில் தங்களின் பங்களிப்பு குறித்து தெளிவாக…

  22. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய கடலையும் திருகோணமலை துறைமுகத்தையும் பாதுகாப்பது புலிகளே [11 - July - 2006] [Font Size - A - A - A] இந்தியா இதை உணர வேண்டுமென்கிறார் திருமாவளவன் இந்தியாவுக்கு எதிராக விடுதலைப்புலிகள் எப்போதும் செயல்பட்டது கிடையாது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைந்து நடத்திய ஈழத் தமிழர் பாதுகாப்புக்கான மனிதநேயப் பேரணி - பொதுக் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் கடந்த சனிக்கிழமை நடந்தது. பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது; அரசியல் ரீதியாக நான் வேறு கூட்டணியில் இருப்பதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை சிலர் தவிர்த்துள்ளது வருத்தமாக உள்ளது. …

  23. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் தீர்வுகாண விடுதலைப் புலிகள் முன்வருவார்களா? [11 - July - 2006] [Font Size - A - A - A] அரசு கேள்வியெழுப்புகிறது ஐக்கிய இலங்கைக்குள்ளும், ஒற்றையாட்சியின் கீழும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை எதிர்க்கும் விடுதலைப் புலிகள் `பிரிக்கப்படாத இலங்கைக்குள்' அதிகாரப் பரவலாக்கல் மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவார்களா எனக் கேள்வியெழுப்பும் கொள்கை திட்டமிடல் அமுல்படுத்தும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தினக்குரலுக்கு மேலும் தெரிவிக்…

    • 9 replies
    • 1.8k views
  24. பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தலுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை [11 - July - 2006] [Font Size - A - A - A] பத்திரிகையாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலுள்ள நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடம் வகிக்கிறது. அங்கு அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் ஆரம்பமான காலம் முதல் இன்று வரை 125 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்றே இலங்கையில் கடந்த 16 மாத காலத்தில் 4 பத்திரிகையாளர்களும் ஊடகத்துறையில் பணி புரியும் 2 உத்தியோகத்தர்களும் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெ…

  25. ஐ.நா. தீர்மானத்தின் கீழ் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி உரிமை உண்டு: வி.உருத்திரகுமாரன் திங்கட்கிழமைஇ 10 யூலை 2006 19:56 ஈழம் ஜச.விமலராஜா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. தீர்மானத்தின் கீழ் ஆயுத இறக்குமதிக்கான உரிமை உண்டு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரலில் சூரிச் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் "தற்போதைய அமைதி முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுப் போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம்: இலங்கையில் உள்ள தற்போதைய யுத்த நிறுத்தமானது கடந்த 2000 ஆம் ஆண்…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.