ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142586 topics in this forum
-
தமிழக உறவுகளின் உணர்வும் ஈடுபாடும் தமிழக மற்றும் இந்திய அரசுகளில் நிலைப்பாடுகளில் மாற்றத்தை உருவாக்கும்: சு.ப.தமிழ்ச்செல்வன் நம்பிக்கை எமது தமிழக உறவுகளின் உணர்வும் ஈடுபாடும் தமிழக மற்றும் இந்திய அரசுகளில் நிலைப்பாடுகளில் மாற்றத்தை உருவாக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலிக்கு கடந்த சனிக்கிழமை (10.06.06) நோர்வேயிலிருந்து அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: எமது உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள், தமிழீழ மக்கள் தொடர்பாக- தமிழீழ மக்களினது விடுதலைப் போராட்டம் தொடர்பாக முழு அளவிலும் ஆதரவுடன்தான் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள எங்கள் மக்கள் தலை…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜே.வி.பியை தலையில் தட்டிவைக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயார்! கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்து கட்டம் கட்டமாக ஆலோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதான கூட்டாளிகளான ஜே.வி.பியினரை தலையில் தட்டி அமர்த்தி ஓரமாக ஒதுக்கி வைப்பதற்குத் தீர்மானித்திருக்கிறார் என்று உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தனது கட்சி முக்கியஸ்தர்களுடன் அவர் கட்டம் கட்டமாக ஆலோசனை நடத்த ஆரம்பித்துள்ளார். சிவப்புச் சட்டைக்காரர்களுக்குப் பாடம் புகட்டும் விதத்தில் மிகவிரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது பற்றியும் ஜனாதிபதி அவர்களுடன் ஆராய்கிறார் என்று கூறப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலம்முதல் சமாதான முயற்சிகளை எதிர்பார்த்த விதத்தில் நகர்த்த முடியவில்லை. புதிய…
-
- 0 replies
- 977 views
-
-
யதார்த்த நிலைமைக்கு புறம்பானவற்றைத்தான் மகிந்த சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கிறார்: கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள யதார்த்த நிலைமைக்குப் புறம்பானவற்றைத்தான் ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தால் இந்தத் தீவில் நாங்கள் தொட…
-
- 0 replies
- 954 views
-
-
யாழில் காணாமல் போன 8 தமிழர்களது நிலை என்ன?: சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன 8 தமிழர்களினது நிலை என்ன என்பதை தெரிவிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச மன்னிப்புச் சபையான அம்னஸ்ரி இன்டர்நசனல் கேட்டுக்கொண்டுள்ளது. யாழில் கடந்த மே 6 ஆம் நாளன்று கோவில் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த இராசநாயகம்பிள்ளை சிவானந்தமூர்த்தி, மார்க்கண்டு புஸ்பகாந்தன், கந்தசாமி பரிமேழலகன், வைகுந்தவாசன் விகுந்தகுமார், இரட்ணம் தயாரூபன், பொன்னம்பலம் பார்த்தீபன், செல்வரட்ணம் சிவானந்தம் மற்றும் இராமச்சந்திரன் இராசகுமார் ஆகியோர் காணாமல் போயினர். இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணை குழுவிடம் முறைப்பாடு செய்தனர். அம்முறைப்பாட்டில் கூற…
-
- 0 replies
- 998 views
-
-
அரசதரப்பு செய்திகளை மட்டும் வெளியிட்டு வருவதைக் கண்டித்து இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு . http://www.tamilernessag.underskrifter.dk/index.php டென்மார்க் ஊடகங்கள் தமிழீழ மக்கள் மீது தொடரும் வன்முறைகள் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் அரச தரப்பு செய்திகளை மட்டும் வெளியிட்டு வருவதைக் கண்டித்து இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு நடைபெறுகிறது. இந்த ஊடகங்களினது பக்கசார்பான செய்திகள் விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதை ஊக்கப்படுத்தியதும், ஐரோப்பிய ஒன்றியத் தடையால் சமாதான முயற்சிகள் முற்றாக தற்பொழுது தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே இவர்கள் தொடர்ந்தும் இப்படியான பக்கசார்பான செய்திகளை வெளியிடுவதை டென்மார்க்கில் வாழும் 10.500ற்கும் மேற்ப்பட்ட பு…
-
- 0 replies
- 828 views
-
-
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி வீரச்சாவடைந்துள்ளார். வெள்ளாங்குளம்- துணுக்காய் வீதியில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக லெப். கேணல் மகேந்தி செயற்பட்டார். இதனிடையே விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மன்னார் மாவட்டம் பாலமடு பகுதியில் நேற்று இரவு 7.25 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. சேத விவரம் தெரியவில்லை. Thanks:Puthinam
-
- 15 replies
- 4.5k views
-
-
ஈழத்தமிழனை ஏறெடுத்துப் பார்ப்பதற்கு தமிழகத்துக்கு நேரமில்லையா? http://www.tamilnaatham.com/pdf_files/vika..._2006_06_10.pdf
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் மூன்றாவது சக்திக்குத் தொடர்பு: திஸ்ஸ விதாரன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் மூன்றாவது சக்திகளுக்குத் தொடர்பிருப்பதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரன குற்றம்சாட்டியுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சிறிலங்கா நாடாளுமன்றில் அவர் பேசியதாவது: ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் ஈடுபட்டோரை அடையாளம் காட்ட அரசாங்கம் தவறிவிட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியிருந்தார். மேலும் ஹிட்லரின் நாசிச ஆட்சிக்காலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய படுகொலைகளைப் போன்று சிறிலங்காவிலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு: இந்திராவின் அணுகுமுறை "புலம் பெயர்ந்த தமிழர்கள்" தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் சிக்கல் எப்போதோ தீர்வு கண்டிருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான கிழக்கு வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பானவர்களே தயவுசெய்து தினமுரசு பத்திரிகையை விற்கவேண்டாம் என்று தெரிந்தவர்கள் மூலம் கடை உரிமையாளர்களுக்கு விளங்கப் படுத்தி அதை நிறுத்துவோம். தாங்களே கொலை செய்த அல்லைப்பிட்டி மக்களின் கொடூர படங்களை தங்களின் பத்திரிகையின் முன்பக்கத்தில் போட்டு, அதற்கு நாலு வியாக்கானம் எழுதி தாங்கள் அதை கண்டிப்பதைப்போலவும்,புலிகளி
-
- 14 replies
- 4k views
-
-
சென்ற கிழமை தீபம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் வன்னியில் இருந்து ஒரு வயதான பெண்ணிடம் ஒரு கருத்து கேட்கின்றார்கள். அப்பெண் தலைவரின் சாதியை சொல்லி அவர் அந்த ஆள் என்று எல்லாரும் சொல்கினம் அனால் அவர் அந்த சாதி இல்லை.அதெல்லாம் பொய் என்று அந்த பெண்மணி முடிக்கின்றார். அதை எந்த கட்டத்திலும் சென்சார் செய்யாமல் அப்படியே தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. சாதியின் பெயர் சொல்லி சொன்ன அந்த கட்டத்தை வெட்டாமல் ஒளிபரப்பு செய்ய தீபம் தொலைக்காட்சிக்கு என்ன துணிவு இருக்கிறது.? அது ஒன்றும் நேரஞ்சல் நிகழ்ச்சி அல்ல. அனைவரும் கண்டியுங்கள் விசம் பரவுகிறது.
-
- 23 replies
- 6.8k views
-
-
புலிகளின் பகுதியில் தொடரும் கிளைமோர் இதற்கு புலிகள் நடவடிக்கை எடுப்பதக தெரியவில்லை
-
- 2 replies
- 1.4k views
-
-
மன்னார் கிளைமோரில் விடுதலைப் புலிகளின் தளபதி வீரச்சாவு [சனிக்கிழமை, 10 யூன் 2006, 16:37 ஈழம்] [ம.சேரமான்] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி வீரச்சாவடைந்துள்ளார். வெள்ளாங்குளம்- துணுக்காய் வீதியில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக லெப். கேணல் மகேந்தி செயற்பட்டார். இதனிடையே விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மன்னார் மாவட்டம் பாலமடு பகுதியில் நேற்று இரவு 7.25 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. சேத விவரம் தெரியவில்லை. http://www.eela…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று தனது தொகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயகாந் ஈழத்தமிழர் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது ஒரு மறுமொழியும் சொல்லாமல் தட்டிக்கழித்துவிட்டு ஓடிவிட்டார்... ஏன் சொல்லாமல் ஓடினார்?
-
- 3 replies
- 3.1k views
-
-
ஓஸ்லோப் பேச்சுக்கள் இன்று தொடக்கம் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்கள் இன்று வியாழக்கிழமை தொடங்குகின்றன. இந்தப் பேச்சுக்களில் நோர்வே அனுசரணையாளர்கள், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் பங்கேற்கின்றனர். ஓஸ்லோ பேச்சுக்களில் விவாதிக்கப்படக் கூடியவை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத் தடையையடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களின் பணி, கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்பு ஆகியவை …
-
- 7 replies
- 2.6k views
-
-
நாதியற்ற தமிழர்கள் [09 - June - 2006] [Font Size - A - A - A] தெ.சுந்தர மகாலிங்கம் கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்ததை `இனப் படுகொலை' என அறிவித்து உலக நாடுகளுக்கெல்லாம் பறையறைந்த கையோடு இந்திய இராணுவத்தை அனுப்பி பங்களாதேஷ் உருவாக முழு மூச்சாக ஈடுபட்டார் இந்திரா காந்தி. சிங்களக் காடையர்களால் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட போது, இனப் படுகொலை என்று கூற டில்லியில் யாருக்கும் மனம் வரவில்லை. நேரு - கொத்தலாவல, சாஸ்திரி - சிறிமோவோ காலத்திலிருந்தே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையை அணுகிய போதெல்லாம் பேரிழப்புக்குள்ளாவோர் தமிழர்களே என்பதை மறந்துவிட முடியாது. யசிர் அரபாத்துக்குத் தூதரகம் அமைக்க அனுமதியும் ஐ.நா.சபையில் அங்கம் வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
கைதடியில் தொடரும் புதை குழிகள் மேலும் இரண்டு சடலங்கள் மீட்பு. யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வெளியில் அமைந்துள்ள வெளியில் மனித புதைகுழிகள் தோண்டும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாகவும் இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது இன்றைய தினம் குறிப்பிட்ட இடத்திற்கு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி அரியரெத்தினம் உட்பட மற்றும் யாழ்ப்பாணம் வையித்திய சாலை சட்ட வையித்திய அதிகாரி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழு பொறுப்பதிகாரி உட்பட மற்றும் பலர் சென்றுள்ளர்கள் ஏற்க்கனவே இந்தப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன இதனைத் தொடர்ந்து இன்று இடம் பெறும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது நேற்றைய தினம் கண்டு பிடிக்கப…
-
- 5 replies
- 1.7k views
-
-
வெள்ளைக் கனவான்களின் சிறுமைத் தனச் செயற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது ஈழத் தமி ழர்களை மட்டுமல்லாது புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களைக்கூட விசனத்திலும், எரிச்சலிலும், சீற்றத்தி லும், தாங்கொணாக் கோபத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. ஈழத் தமிழருக்கு நியாயம் செய்யவேண்டிய கடப்பாடும், பொறுப்பும், கட்டாயமும் உடைய ஒரு தரப்பே இந்த அநீதி யைத் தமக்கு எதிராக இழைத்தது என்ற ஆதங்கமும், குமைச் சலும் ஈழத் தமிழர்களின் மனதை ஆழ நெருடிக்கொண்டி ருப்பதை இங்கு குறிப் பிட்டேயாக வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெற்றுள்ள இருபத்தியைந்து நாடுகளையும் அவை இத்தடை வருவதை விரும் பியோ, விரும்பாமலோ உள்ள நிலையில் ஈழத் தமிழருக…
-
- 2 replies
- 1.6k views
-
-
சமாதானம் மீதான பற்றை உறுதிப்படுத்தும்படி பிரபா, மஹிந்தவுக்கு சொல்ஹெய்ம் கடிதம் பிந்திய செய்தி... சமாதானத்தின் மீதான பற்றுறுதியை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபா கரனும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவும் எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரும் கடிதத்தை அவர் கள் இருவருக்கும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அனுப்பி வைத்துள்ளார். விடுதலைப் புலிகளின் குழுவினருடன் பேசிய பின்னர் எரிக் சொல்ஹெய்ம் இதனைத் தெரிவித்தார். நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம், நோர்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர், சமாதான முயற்சிகளுக்கான விசேட தூதர் ஜோன் ஹன்ஸ் போவர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிசன், போர்நிறுத் தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்ஷன் ஆகிய…
-
- 0 replies
- 959 views
-
-
கடவுளையும் மதத்தலைவரையும் அவமதித்ததன் விளைவினை இராணுவத்தளபதி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் -தேரர் http://www.nitharsanam.com/?art=17923
-
- 6 replies
- 2.3k views
-
-
சிங்கள அரசும் இறுதிப்போரும் http://www.tamilnaatham.com/articles/2006_...sh/20060609.htm
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்.பல்கலையில் நாளை தியாகி சிவகுமாரனின் நினைவு நிகழ்வு தமிழின விடுதலைக்காய் முதல் முதலில் வீரச்சாவடைந்த தியாகி பொன்.சிவகுமா ரனின் நிகழ்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வும் நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை யரங்க முன்றிலில் நடைபெறவுள்ளது இதேவேளை தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல் கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற் பாட்டில் நேற்று முகமாலை முன்னரங்கள நிலைகளுக்குச் சென்ற மாணவர்கள் முன் னரங்க நிலைத் தளபதிகள் போராளிகளைச் சந்தித்ததுடன் தாம் கொண்டு சென்ற உண வுப் பொருள்களையும் அவர்களுக்கு வழங் கினர். -உதயன்
-
- 8 replies
- 2.4k views
-
-
ஐரோப்பியத் தடை முட்டாள்த்தனமானது- புலிகளின் முன் உள்ள தெரிவு யுத்தம்தான்: பிறையன் செனிவிரட்ன ஈழப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னுள்ள தெரிவு யுத்தம்தான் என்று சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் உறவினரும் மருத்துவருமான பிறையன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். "புதினம்" இணையத்தளத்துக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்: கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையானது தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்கு எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்? பதில்: ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்பட்ட முட்டாள்த்தனமான முடிவு என்றே இதை நான் கூறுவேன். இது விடயத்தில் சில கருத்துக்களை அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
சர்வதேச அழுத்தம் நீதியானதா? ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தடை விதித்திருக்கிறது. இத் தீர்மானம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ஒரே மனதுடன் ஏற்கப்பட்டிருக்க வேண்டும். முன்னர் பி(F)ன்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA), ஐக்கிய இராச்சியம் (UK) இரண்டினதும் அழுத்தத்துக்கு அந்த மூன்று நாடுகளும் அடிபணிந்ததால் இத்தீர்மானம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ஒரே மனதுடன் ஏற்கப்பட்டது. இது செய்தி. சர்வதேச அழுத்தங்கள் ஏன் உபயோகிக்கப் படுகின்றன? எப்படி உபயோகிக்கப் படுகின்றன? அவை நீதியானவையா? அவை பாரபட்சம் அற்றவையா? அண்மைக்கால நிகழ்வுகள் சிலவற்றைக் கீழே காணலாம். பொருளில்லார்க்கு இவ்வுலகம…
-
- 4 replies
- 2k views
-
-
கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம். - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 07 துரநெ 2006 15:07 மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஸ்ரீலங்கா ஆழஊடுருவித்தாக்கும் படையினர் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப…
-
- 6 replies
- 2k views
-