ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயலைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டு பொருட்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்குமாறு மலேசியத் தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஐனநாயக செயல் கட்சி சார்பில் மலேசியாவில் முல்லைப் படுகொலையில் பலியெடுக்கப்பட்ட சிறுமிகளுக்கான கண்ணீர் அகவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. மலேசிய எதிர்க்கட்சி தலைவரின் மகன் லிம் குவான் எங் தலைமையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. அக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: - சிறிலங்காவின் உற்பத்தி பொருட்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிப்பது. - சிறிலங்காவின…
-
- 1 reply
- 928 views
-
-
மாவிலாறு இடம்: திருகோணமலை நன்றி: ஈழவிசன் சிறப்புச் செய்திகள் இந்தியா நிராகரித்ததால் பாகிஸ்தானிடம் 2 கப்பல் ஆயுதங்களை வாங்கியது சிறிலங்கா சிறிலங்காவுக்கு கனரக இராணுவ உதவிகளை செய்ய இந்தியா நிராகரித்தமையால் பாகிஸ்தானிடமிருந்து 2 கப்பல் ஆயுதங்களை சிறிலங்கா வாங்கியுள்ளது. [விரிவு] முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது கொடூர விமானத் தாக்குதல்: 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை- 129 பேர் படுகாயம் முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா இராணுவம் இன்று நடத்திய கொடூர விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 129 பேர் படுகாயமடைந்துள்ளனர். [விரிவு] விமானக் குண்டுவீச்சின் எதிர்விளைவை அரசு ச…
-
- 0 replies
- 796 views
-
-
பலாலி படைத்தளம் அருகே இரவு 11:30 இருந்து 12:00 மணி வரை மோதல் சம்பவம் இடம் பெற்றதாக தமிழ்நெற் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்கதலை தொடர்ந்து படையினர் அப்பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19406
-
- 4 replies
- 3.2k views
-
-
யாழில் எம்.ஜி.ஆர். சிலைக்கு தார்பூசி சேதப்படுத்தியது சிங்கள இராணுவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலைகளை சிங்கள இராணுவத்தினர் தார்பூசி அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பெரும் பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு மதிப்பளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களால் அவருக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டது. இந்தச் சிலை கடந்த ஆண்டு இந்திய சிற்பக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. யாழில் ஊரடங்குச் சட்டத்தினை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிங்கள இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த ஊர…
-
- 5 replies
- 1.8k views
-
-
பருத்தித்துறை இறங்குதுறைப் பகுதியில் கடற்கரையோரமாக புதிய பாதையொன்றினை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். இதுவரை பருத்தித்துறை 1 ஆம் குறுக்குத்தெருவூடாக பாரவூர்திகள் மற்றும் இறங்குதுறையில் பணியாற்றும் பணியாளர்கள் சென்று வந்தனர். எனினும், நேற்று முதல் சுப்பர்மடம் வீதியூடாகவே இறங்குதுறைப் பணியாளர்கள் மற்றும் பாரவூர்திகள் சென்றுவர அனுமதிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் தரித்து நிற்கும் கப்பலிலிருந்து பொருட்களை இறக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன என்றும் இதுவரை சுமார் 1000 மெற்றிக்தொன் பொருட்கள் இறக்கப்பட்டுள்ளன என்றும்- ஏனைய பொருட்கள் இன்னும் ஓரிரு தினங்களில் இறக்கப்பட்டு விடும் என்றும் துறைமுகத் தகவல்கள் தெரிவித்தன. …
-
- 0 replies
- 892 views
-
-
மட்டக்களப்பு மாங்கேணி கடற்பரப்பில் நேரடி மோதல்கள் படையினரின் தாக்குதலிற்கு பதிலடி. மட்டக்களப்பு மாங்கேணி கடற்பரப்பில் நேரடிமோதல்கள் நடைபெற்றுள்ளன.நேற்று மாலை ஆணைமுனையில் இருந்து பனிச்சம்கேணியை நோக்கி சென்ற இருபடகுகளை நோக்கி மாங்கேணி சிறீலங்கா படைமுகாமிலிருந்து எறிகணைத்தாக்குதலும் கனரக துப்பாக்கி தாக்குதலும் நடைபெற்று உள்ளது. இதற்கு பதிலடியாக படகில் இருந்து எதிர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்த மேலதிக 6 படகுகள் மாங்கேணி படைமுகாமை நோக்கி பாரிய தாக்குதலை தொடுத்தது. இதனை அடுத்து படகுகள் அணைத்தும் பாதுகாப்பாக பனிச்சம்கேணியை சென்றடைந்தது. படகில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் படையினர் தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக…
-
- 1 reply
- 1.8k views
-
-
மூதூர் கிழக்கை கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் முயற்சி: புலிகள் பதில் தாக்குதல் [திங்கட்கிழமை, 28 ஓகஸ்ட் 2006, 15:03 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலை மூதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி பல்குழல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களுடன் இன்று அதிகாலை 4.30மணிக்கு நகர்வு முயற்சியினை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர். இந் நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா கடற்படையினரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எமக்குத் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தின் இ…
-
- 16 replies
- 2.4k views
-
-
வடமராட்சி கிழக்கில் இராணுவ சுற்றிவளைப்பில் 300 குடும்பங்கள் யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பால் 300 குடும்பங்கள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மனித கேடயங்களாக சிக்கியுள்ளனர். வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காடு கிராமத்தில் புனித அந்தோனியார் தேவாலயப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நாகர்கோவில் சிறிலங்கா இராணுவ தளத்தைப் பாதுகாப்பதற்காக தாங்கள் மனித கேடயங்களாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நாகர்கோவில் மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிக்கு இடையே மணற்காடு கிராமம் உள்ளது. தங்களது கிராமத்தை விட்டு வெளியேற…
-
- 0 replies
- 750 views
-
-
தற்கொலை முடிவில் தமிழ் விவசாயிகள்": ஒரு இடப்பெயர்வு கிராமத்தின் அவலம் இலங்கையின் வடக்கு-கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்களின் அவலத்தை விவரிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி கிராம மக்களின் அவலம் அமைந்துள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலினால் நெற்செய்கைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் இப்போது பட்டினிக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு நகரிலிருந்து 24 தென்கிழக்குப் பகுதியில் வெல்லாவெளி கிராமம் அமைந்துள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. வெல்லாவெளியிலிருந்து தென்கிழக்கில் மண்டூர் கிராமம் 3 கிலோ மீற்றர் தொலைவ…
-
- 0 replies
- 842 views
-
-
கனேடிய இஸ்ரேலியர்கள்- சீக்கியர்கள்- ஐரிஸ் நாட்டவர் செய்ததையேதான் தமிழர்களும் செய்கிறார்கள்: "ரொறன்ரோ சண்": ஏடு கனடாவில் உள்ள இஸ்ரேலியர்கள்-சீக்கியர்கள் மற்றும் ஐரிஸ் நாட்டவர்கள் தங்களது நாடுகளின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பைத்தான் கனேடியத் தமிழர்களும் செய்கிறார்கள் என்று கனடாவிலிருந்து வெளியாகும் "ரொறன்ரோ சண்" என்ற ஏடு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த ஏட்டில் எறிக் மார்க்கோலிஸ் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஆறு கனேடியத் தமிழர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளமையானது எனக்கு சேர் பீற்றர் உஸ்டினோவின் அறிவார்ந்த் வரிகளை நினைவூட்டியது. அந்த வரிகள்: "ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்க…
-
- 0 replies
- 707 views
-
-
பாகிஸ்தானிடமிருந்து மட்டுமல்ல- இந்தியாவிடமிருந்தும் ஆயுதங்கள் வாங்கியுள்ளோம்: மகிந்த ராஜபக்ச பாகிஸ்தானிடமிருந்து மட்டுமல்ல இந்தியாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். "இந்தியா டுடே" வார இதழுக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். விடுதலைப் புலிகளுடன் போரிட வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். நிர்ப்பந்தங்களுக்கு நாங்கள் பணிந்து விடமாட்டோம். இலங்கை இன பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்த …
-
- 1 reply
- 1.1k views
-
-
மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்றை துண்டித்திருக்கிறது சிறிலங்கா அரசு: சி. எழிலன் "மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் முற்றாக திருகோணமலையிலிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன" என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து சி.எழிலன் கூறியதாவது: "மூதூர் மக்களின் இடம்பெயர்வு அவலங்கள், நிவாரணம் அளிப்பு மற்றும் மீள்குடியமர்வு என்று செய்யப்படும் பரப்புரைகள் மூதூர் கிழக்குக்கு ஆனவை அல்ல. அவை மூதூர் நகர் சார்ந்த பகுதிகளுக்கானவை மட்டுமே. "திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு விட்ட நிலைமையே தற்போது உள்ளது. இப்பகு…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்கள நாட்டில் எமது விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும்: எஸ்.ஜெயானந்தமூர்த்தி "சிங்கள நாட்டில் எமது தமிழீழ விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (21.08.06) சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்று எஸ்.ஜெயானந்தமூர்த்தி பேசியதாவது: "56 ஆண்டுகாலமாக தமிழர்களுடன் சிங்களவர்கள் பேச்சு நடத்தலாம்- தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு நடத்தி ஏமாற்றலாம்- பேச்சுக்கள் நடாத்தி காலத்தை கடத்தி தமிழ் …
-
- 0 replies
- 1.3k views
-
-
சம்பூரை நோக்கி படையினர் தாக்குதல். சம்ப+ரிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் நிகைளை நோக்கி இன்று காலை முதல் ஸ்ரீலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.last update 10:01 பல்குழல் எறிகணை மற்றும் ஆட்லறி எறிகணைகள் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை நோக்கி ஏவப்படுவதாக திருமலை செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அடுத்து விடுதலைப்புலிகளும் பதில் தாக்குலை மேற் கொண்டிருப்பதாக தெரியவருகிறது http://www.athirvu.com/index.php?option=co...id=409&Itemid=1
-
- 9 replies
- 1.7k views
-
-
திருகோணமலை மாவட்டம், மூது}ரில் இன்று காலை 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மூது}ர் கிழக்கிற்கான நுழைவாயில் பகுதியான செல்வநகர் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேவேளை திருமலையின் புறநகர் பகுதியான விஜிதபுரவில் உள்ள ஏகாம்பரம் வீதியில் சேதமடைந்த நிலையில் இராணுவ ஊர்தி ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை தகவல் : சங்கதி
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் உத்திகளும் விடைதேடும் சிறிலங்கா-சர்வதேச புலனாய்வு அமைப்புக்களும்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 27 ஓகஸ்ட் 2006, 08:11 ஈழம்] [ச.விமலராஜா] யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். "சண்டே ரைம்ஸ்" வார இதழில் இன்று ஞாயிற்றுக்கிழமை …
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பு புறநகர் பமுனுகமவில் வெடிபொருட்கள் மீட்பு ; 17 பேர் கைது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்த பெருமளவிளான வெடிபொருட்கள் கிரனேட் குண்டுகள் , மறைத்து வைக்கப்பட்ட வீடு ஒன்றை இன்று நண்பகல் சிறிலங்கா பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர் . . கொழும்பு புறநகர் பகுதியான பமுனுகம என்ற இடத்தில் பெருமளவிளான பொலிஸார் சுற்றி வளைப்பு இன்று தேடுதல் நடத்தியுள்ளனர் தேடுதல் நடவெடிக்கையின் போது சந்தேகத்திற்க்கு இடமான வீடு ஒன்றினை சோதனையிட்ட பொழுது பொருமளவிளான ஆயுதங்கள் டிபொருட்கள் கைப்பற்றபட்டன என்றும் சந்தேகத்தின் பேரில் 17 பேர் வரை கைதுசெய்யப்பட்டு பொலிஸார் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்டுள்ளனர் . எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன .. கைத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா விமானபடையினர் கிபிர் விமானங்கள் முகமாலையில் குண்டுதாக்குதல் சிறிலங்கா விமானபடையினர் கிபிர் விமானங்கள் முகமாலை தொண்டு பகுதியில் புலிகளின் முகாம் என இலக்கு வைக்கப்பட்ட இடங்கள் மீது இன்று பிற்பகல் முதல் தாக்குதல் நடத்தி வருவதாக பாதுகாப்பு ஊடக அமைச்சு தெரிவித்த்து .. இனங்காணப்பட்ட புலிகள் சிறிய முகாம்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் விடுதலைப்புலிகள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து தான் மோட்டார் எறிகனை தாக்குதல் படையினர் மீது மேற்கொள்வதாகவும் பாதுகாப்பு ஊடக செய்தி தெரிவிக்கிறது.
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக நீளும் குற்றச்சாட்டு ` இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி, அமைதிப் பேச் சுக்களை உடன் ஆரம்பியுங்கள் என்று அடிக்கடி வற்புறுத்தி வருகின்ற இணைத் தலைமை அமைப்புக்களில் ஐரோப் பிய ஒன்றியமும் பிரதானமானது. இலங்கையில் இன்று அமைதி கேள்விக் குறியாகி யுத் தம் நிதர்சனமாகும் சூழ்நிலையில் அந்நிலைமையை ஏற் படுத்தியதற்கான பொறுப்பு குற்றச்சாட்டு சம்பந்தப் பட்ட இரு தரப்புகளான விடுதலைப் புலிகள் மீதும், இலங்கை அரசு மீதும் இணைத் தலைமைகளால் சுமத்தப்பட்டு வருகையில் அதே குற்றச்சாட்டு இணைத் தலைமைகளில் இடம் பெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் சுமத்தப்பட்டிருக் கின்றது. http://www.uthayan.com/editor.html
-
- 1 reply
- 1.4k views
-
-
மூதூரில் விமானக் குண்டுத்தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 5 பேர் படுகாயம் [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 19:30 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் இன்று பிற்பகல் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானப் படையினர் துறைமுகத்தில் இருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணிமுதல் சரமாரியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தினர். மேலும் விமானப் படையின் கிபீர் விமானங்கள் பலமுறை குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் இலங்கைத் துறைமுகத்துவாரப் பகுதியில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். 5 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
-
- 0 replies
- 864 views
-
-
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா அளித்த நேர்காணல்: அம்பாறை திருக்கோவில் தம்புலுவில் வீதியில் சிறிலங்கா அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடத்திய தாக்குதலில் அரசியல்துறைப் போராளியான சுடர் (வயது 21) வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அரசியல் பணி தொடர்பாக சென்ற போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார் ஜெயா. இதனிடையே தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த எம். தர்மரட்ண (வயது 35) மற்றும் டபிள்யூ. அபயரட்ண (வயது 33) ஆகியோர் படுகாயமட…
-
- 0 replies
- 895 views
-
-
தென்மராட்சி பகுதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாளுக்கும் முகமாலைக்கும் இடையேயான பகுதியில் வீதி சுற்றுக்காவல் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போது சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த 4 பேர் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
- 0 replies
- 1k views
-
-
INGOs leave Jaffna, ICRC UN Agencies stay [TamilNet, August 26, 2006 11:38 GMT] Several International Non Government Organizations (INGOs) are pulling out their staff from northern Jaffna peninsula following escalation of fighting between the Liberation Tigers and Sri Lankan government troops. Foreign staffs attached to Norwegian Refugee Council (NRC), World Vision, Caritas, PARCK, Danish De-Minning Group and Sewa Lanka staffs left Jaffna by boat flying ICRC flag, sources at the Jaffna Secratariat said. A convoy of vehicles carrying the INGO staffs left Jaffna town for Pt.Pedro, Saturday morning. They will travel to south of Sri Lanka by boat, sources said. …
-
- 0 replies
- 900 views
-
-
இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளும் துரோகங்களும்" [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 16:03 ஈழம்] [ம.சேரமான்] இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். "தினமணி" நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை: சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். க…
-
- 4 replies
- 1.5k views
-
-
புலிகளால் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் இன்று விடுதலை தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட உள்ளார் என்று தமிழ்நெட் இணையத் தளம் தெரிவித்துள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தலைவராக உள்ள உல்ப் ஹென்றிக்சன் வேண்டுகோளுக்கமைய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள்தாக தெரிகிறது. மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அத்துமீறி நுழைந்ததாக மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தமிழீழ நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இருவேறு சந்தர்ப்பங்களில் இர…
-
- 10 replies
- 2.3k views
-