ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர். பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில் 4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி) கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மாணவி அந்தோனிக்கா ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்ட…
-
- 15 replies
- 3.4k views
-
-
உருவாகிவரும் மூன்றாவது சதி வலை கிரிஜா "தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டம்" என பல பத்தாண்டுகளுக்கு முன்பே இவ்விடுதலையுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்த மார்க்சிய தேசியவாதிகள் சிலர் `எதிர்வு' கூறினர். அன்று இதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வழி நடத்துதலின் கீழ் தமிழ் தேசம் இதன் அர்த்தத்தை அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. தேச விடுதலைப் போராட்டம் கருநிலையிலிருந்த போது மக்கள் உட்பட போராட்ட அமைப்புகள் இந்தியாவை முழுமையாக நம்பினர். தமிழீழத்தை மீட்கவும் தேசத்தை மீள் நிர்மாணம் செய்யவும் இந்தியா பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கை ஆழமாகக் காணப்பட்டது. இதை நம்பி `பெரிய' இயக்கங்கள் அனைத்துமே இந்தியாவ…
-
- 3 replies
- 2.2k views
-
-
வீட்டுக்குள் புகுந்து அறைகளை கொத்திக் கிளறிய படையினர்! ஊரெழுவில் இப்படிச் சோதனை ஊரெழுப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்கு மண்வெட்டி கள், பிக்கான்கள், அலவாங்குகளுடன் சென்ற படையினர் அறைகளுக்குள் புகுந்து கொத்திக்கிளறிச் சோதனையிட்டிருக்கின்றனர். கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வீட்டினுள் தேடுதல் நடத்தப்போவதாக வீட்டு உரிமை யாளரிடம் கூறிய படையினர், அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் கண்முன்னாலேயே சகல அறைகளையும் கொத்திக் கிளறி நாசப்படுத்தினர். வீட்டு முற்றத்தையும் பிக்கான்களால் உழுது பிரட்டி அசிங்கப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதற்குப் பிறகு கடந்த 27ஆம் திகதி இரவு குறித்த வீட்டுக்குள் மீண்டும் வந்த படையினர் அங்கிருந்…
-
- 3 replies
- 2.3k views
-
-
புத்தாண்டுக் கலண்டர்களில் ஆபாசக் காட்சிகள் வேண்டாம்! தாயகப் பிரதேசங்களில் விற்பனை செய்வதற்கும், அன்பளிப்புச் செய்வதற்கும் தயா ரிக்கப்படும் நாள்காட்டிகளில் ஆபாச உணர்வைத் தூண்டும் படங்களையும் சினிமா நட்சத்திரங்களைச் சித்திரிக்கும் காட்சிகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு விடுதலைப் புலிகள் கேட்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இதுதொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை விடுத் திருக்கிறது. புத்தாண்டை ஒட்டி வெளியிடப்படும் கலண்டர்களில் சினிமா நட்சத்திரங்களின் படங் கள் மற்றும் பெண்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் படங்கள் இடம்பெறுவது தடை செய்யப் பட்டிருக்கின்றது. இவற்றுக்குப் பதிலாக தமிழர் தாயகப் பிரதேசத்தின் இயற்கை எழில் காட்சிகள் மற்றும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச: அம்பலப்படுத்துகிறது பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தேர்தலுக்கு முன்பாக எச்சரித்திருந்தார் என்ற உண்மையை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் அம்பலப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செப்டம்பர் 6 ஆம் நாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் வெளியாகும் 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் பற்றி வழங்கிய செவ்வியில் "ராஜபக்ச போர்ப் பறை சாற்றுகிறார்" என்று கூறியிருந்தார…
-
- 15 replies
- 3.4k views
-
-
ராஜீவ் நினைவு சொற்பொழிவு: சோனியாவுக்கு இலங்கை அழைப்பு இலங்கையில் நடைபெற உள்ள முதலாவது ராஜீவ் காந்தி நினைவு சொற்பொழிவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சய. நான்கு நாள் பயணமாக புதுடில்லி வந்திருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையில் தன்னைச் சந்தித்த சோனியா காந்திக்கு இந்த அழைப்பை விடுத்தார் இலங்கை அதிபர். இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்புறவு நிலவும் சூழ்நிலையில், சோனியா காந்திக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினருக்காக …
-
- 1 reply
- 2k views
-
-
read virakesari e-paper for free this is what u have 2 do 1 :arrow: .register onetime as a free 30day trail member then they will send you 2 a link like this http://222.54.255.53/virakesari/svww_activateuser.php? Email=your@email.com 2 :arrow: .you keep this important email in your inbox for entire one month & enjoy your free access for one month,then 3 :arrow: .second month just go to their e-paper login site eg :-http://222.54.255.53/virakesari/login.php 4 :arrow: . enter any e-mail address & password eg:-whattheh@ck.com pass:-hacker 5 :arrow: . now go to your veryfirst e mail activation link (step1-LINK)& c…
-
- 0 replies
- 3.4k views
-
-
இறந்தோரின் எண்ணிக்கை 225.000 www.tsunamiineelam.com மேலதிக விபரங்கள்...
-
- 7 replies
- 3.6k views
-
-
இந்தமுறை இலங்கை தேர்தலில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள்? உங்கள் பொன்னான வாக்குகளை மேலே போடுங்கள்.
-
- 43 replies
- 7.6k views
-