விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிரிக்கெட் விதிகளில் மாற்றம் கிரிக்கெட்டில் களத்தடுப்புச் சம்பந்தமான விதியொன்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ள , கிரிக்கெட் விதிகளுக்குப் பொறுப்பான அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, துடுப்பாட்ட வீரரொருவர் தான் பந்தை அடிக்கப் போகும் திசை குறித்துத் தெளிவான சமிக்ஞைகளை மேற்கொண்டால், விக்கெட் காப்பாளர் தவிர்ந்த ஏனைய களத்தடுப்பாளர்கள், பந்துசெல்லவுள்ள திசையை நோக்கிக் கணிசமானளவு நகர முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பாவட் அலாமின் பிடியொன்றைப் பிடித்த போது, இது தொடர்பான விவாதம் ஏற்பட்டு, சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நடைமுறைகளில் இம்மாற்றம் ஏற்பட்டது. அதுவே, தற்…
-
- 0 replies
- 305 views
-
-
அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்! ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளை தடுத்து நிறுத்தி, அதன் மண்ணிலேயே அந்த அணியை 329 ரன்களை சேஸ் செய்தது, 6 இந்திய வீரர்கள் சென்சுரி அடித்தது உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது சீனியர் அணி. அதே போல இன்று 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் மெகா சாதனை நிகழ்த்தியிருக்கிறது. யுவராஜ் , விராட் கோலி என பல வீரர்கள் இந்திய அணியில் நுழைந்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் பிரகாசித்ததன் மூலம்தான். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். வருங்காலத்தில் சீனியர் இந்திய அணி, உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே இளம் வீரர்களை பட்டை தீட…
-
- 0 replies
- 616 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி சந்தேகத்தில் உலக இருபதுக்கு-20 தொடரில், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையில், தர்மசாலாவில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள போட்டி, அங்கு இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் எழுதியுள்ளதாகக் கூறப்படும் கடிதத்தாலேயே இச்சந்தேகம் எழுந்துள்ளது. பதன்கொட் விமானத் தரிப்புப் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படும் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து, தர்மசாலாவில் அப்போட்டி இடம்பெறக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். பதன்கொட் தாக்குதல் போல பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந…
-
- 0 replies
- 381 views
-
-
சன்ரைஸர்ஸ் அணியின் தலைவராக மீண்டும் டேவிட் வோர்னர் By Mohamed Azarudeen - Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI ஐ.பி.எல். (IPL) டி20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது அத்தியாயம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் விளையாடும் அணியான சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் தமது தலைவராக சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரை மீண்டும் நியமனம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 597 views
-
-
ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! by : Anojkiyan கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. இதன்படி, தற்போது டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சரி தற்போது, தரவரிசை பட்டியலை பார்க்கலாம். இந்த பட்டியலில், இந்தியக் கிரிக்கெட் அணி 116 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி இரண்ட…
-
- 0 replies
- 397 views
-
-
88 லட்சம் ரூபாய் வாடகை சொகுசு படகில் பொழுதை கழிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து போட்டியில் முத்திரை பதித்து வருபவர் 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த தலைமுறையில் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சியுடன் சேர்ந்து புகழ்பெற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 25ஆவது நிமிடத்தில் களத்தை விட்டு வெளியேறினார். இருந்தாலும் வீரர்களுக்கு வெளியில் இருந்து அறிவுரை வழங்கினார். இந்த போட்டியில் போர்த்துக்கல் 1-0 என வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 500 views
-
-
அனல் பறக்கும் தடகளப் போட்டிகள் இன்று தொடக்கம் 1 2 வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு மற்றும் புதிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லாத ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஒலிம்பிக்கில் மற்ற போட்டிகளைவிட தடகளப் போட்டிகளுக்குத்தான் எப்போதுமே முக்கியத்துவம் அதிகம். ரியோ டி ஜெனீரோவில் உள்ள ஜுவா ஹாவேலாஞ்சே மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகள், ஒலிம்பிக்கின் கடைசி நாளான 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் உல…
-
- 0 replies
- 506 views
-
-
ஆஸி. வீரர்களுக்கு காத்திருக்கும் அஸ்வின் எனும் பயங்கரம்: இயன் சாப்பல் அஸ்வின். | கோப்புப் படம். நியூஸிலாந்துக்கு எதிராக அஸ்வின் வீசியதைப் பார்க்கும் போது அஸ்வின் சுழற்பந்து வீச்சு என்ற பயங்கரம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு காத்திருக்கிறது என்றே கூற வேண்டியுள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார். ஈஎஸ்பிஎன்-கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்வது விருப்பமில்லாமல் போயுள்ளது என்பது ஒரு சாபமாகவே பரவலாகியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் வீசியதைப் பார்க்கும் போது இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய அணியை …
-
- 0 replies
- 386 views
-
-
2016ன் டாப்10 டி20 பேட்ஸ்மென் இவர்கள்தான்! #Top10T20Batsmen டி20! கிரிக்கெட் விளையாட்டின் ஸ்டார் ஃபார்மெட்! அடித்து ஆடு அல்லது அவுட் ஆகு என்பதுதான் டி20 கிரிக்கெட்டின் பாலிசி. மூன்றரை மணி நேர ஆட்டம் தான், ஆனால் ஓவருக்கு ஓவர் எகிறும் சஸ்பென்ஸ் காரணமாக டி20 கிரிக்கெட்டுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றார்கள். ஆறு பந்துகள் உங்கள் வாழ்க்கையை மாற்றிப் போடலாம். ஒரே ஒரு கேட்ச், ஒரே ஒரு விக்கெட், ஒரே ஒரு சிக்ஸர், ஒருவரை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கும் என்றால் எந்த கிரிக்கெட் வீரனுக்குத் தான் டி20 கிரிக்கெட் ஆட ஆசை வராது? ஜென் Z க்கு கிரிக்கெட்னா டி20 தான். சினிமாவை போல, சூதாட்டத்தை போல, ஷேர் மார்க்கெட்டைப்போல ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெரும…
-
- 0 replies
- 565 views
-
-
இயன் சேப்பல் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த மிஸ்பா உல் ஹக் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி 0-3 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் சரியாக விளையாடாத பாகிஸ்தான் அணியை ஆ…
-
- 0 replies
- 351 views
-
-
ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா! இந்தியா - இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டி, நேற்று கான்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ரெய்னா, 23 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இவர் தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த உதவியதுடன், அணியின் ரன் ரேட்டையும் அதிகரித்தார். 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, ஆரம்பத்தில் இருந்தே அலட்டிக் கொள்ளாமல் அடித்து ஆடியது. …
-
- 0 replies
- 459 views
-
-
தென்னாபிரிக்க T-20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள் தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக நடைபெறவுள்ள குளோபல் டி20 லீக்கில் ஸ்டெலன்போஸ்ச் மொனாச் அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரராக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற ஐ.பி.எல் டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் பிரபல்யமடையத் தொடங்கியது முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. இந்த பட்டியலில் தற்போது தென்னாபிரிக்காவும் இணைந்துகொள்ளவுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் நடத்…
-
- 0 replies
- 331 views
-
-
ஒரே நாளில் 271 ரன்கள், பிறகு முச்சதம்; பிரஷாந்த் சோப்ரா சாதனை: இமாச்சல் அணி 729 ரன்கள் குவிப்பு ரஞ்சி சாதனை நாயகன் பிரஷாந்த் சோப்ரா. தரம்சலாவில் நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இமாச்சல் அணி தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா 338 ரன்களை விளாசினார், இமாச்சல் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 729 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வலது கை வீரரான 25 வயது பிரஷாந்த் சோப்ரா 338 ரன்கள் எடுக்கும் முன்பாக நேற்று ஒரேநாளில் 271 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் அதிக ரன்கள் எடுத்த வகையில் பாவ்சாஹேப் நிம்பால்கர் 277 ரன்களை ஒரே ந…
-
- 0 replies
- 375 views
-
-
தீவிரவாதம்தான் பிரச்னையா?! - பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய அரசியலும் #9yrsofPAKterrorattack ஜிம்பாப்வே அணியுடனான அந்த டி20 தொடரை வென்றிருந்தது பாகிஸ்தான். ஜிம்பாப்வே அணியைத்தான் வென்றிருந்தது. ஆனால், உலகக்கோப்பையையே வென்றதுபோல் அளவுகடந்த ஆர்ப்பரிப்பு. பாகிஸ்தான் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தார்கள். கோப்பையை வாங்குவதற்குமுன் பேசச் செல்கிறார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி. "பல்வேறு காரணங்களால் இந்தத் தொடர் மிகவும் முக்கியமான தொடராக அமைந்துள்ளது. இந்த அணியிலுள்ள பல வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாடியதில்லை..." என்று உருக்கமாகப் பேசினார். ஆம், 6 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் நடந்த முதல் சர்வதேசத் தொடர் அது. ஒரேயொரு சம்பவம் அந்தத் தேச…
-
- 0 replies
- 520 views
-
-
FICA அமைப்பின் ஆலோசகராக சங்கக்கார நியமனம் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (FICA) ஆலோசனை குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) கிரிக்கெட்டில் சர்வதேச வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும். உலகெங்கும் உள்ள தொழில்சார் கிரிக்கெட் வீரர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து நாடுகளினதும் தேசிய வீரர்கள் சங்கங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து 1998 ஆம் ஆண்டு FICA நிறுவப்பட்டது. தேசியம், மதம், அரசியல் அழுத்தம் அல்லது இனம் ஆகிவற்றை பொருட்படுத்தாமல் உலகக் கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக இது உள்ளது. கிரிக்கெட் …
-
- 0 replies
- 360 views
-
-
மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில் Image Courtesy - Getty Images புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி ஆகியவற்றுக்கு இடையில் மே மாதம் 31 ஆம் திகதி விஷேட T20 போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 13 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் பரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். அத்தோடு இப்போட்டியை உலகம் பூராகவும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்புச் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல நோக்கம் ஒன்றுக்காக விளையாடப்படவுள்ள இப்போட்ட…
-
- 0 replies
- 266 views
-
-
சாதனைபடைக்கவிருந்த பெண் வீராங்கனை பலி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கவிருந்த இந்திய மலையேற்ற வீராங்கனை ரெனே நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டெல்லியை சேர்ந்த இந்திய மலையேற்ற வீராங்கனையான ரெனே(வயது- 49) தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தார். தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ரெனே, தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் பனிப்பாறைகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று எவரெஸ்ட் பகுதியில் சிக்கியுள்ள 150க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகளை மீட்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/29/%E0%AE%9…
-
- 0 replies
- 298 views
-
-
சம்பியனாகியது மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, தமது கிண்ணத்தை தக்க வைத்து சம்பியனாகியது. வெம்ப்ளி மைதானத்தில், நேற்று முன்தினமிரவு விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில், பெனால்டியில் செல்சியை வென்றே மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்தது. இப்போட்டியில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்ததுக்கு மேலாக, செல்சியின் முகாமையாளர் மெளரிசியோ சரியால், அவ்வணியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலகாவை பிரதியீடு செய்ய முயன்றமையை அவர் மீறியமையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. மேலதிக நேரத்தின் இறுதி நிமிடங்களி…
-
- 0 replies
- 463 views
-
-
உலகை உதையாலும் வெல்லலாம்! (வீடியோ) கடந்த 2015 -ம் ஆண்டு ஜுலை மாதம் நடந்த மகளிர் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், அமெரிக்க அணி ஜப்பான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த அமெரிக்க வீராங்கனை கார்லி லாயிடுக்கு மகளிர் பிரிவுக்கான 'பல்லான் டி ஆர்' விருது வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு எதிராக ஆஃப் லைனில் இருந்து லாயிட் அடிக்கப்பட்ட அற்புதமான கோல் இது.! http://www.vikatan.com/news/sports/57587-carli-llyod-wins-womens-ballon-dor.art
-
- 0 replies
- 599 views
-
-
அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம் தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன் மிஸ்டர் ஸ்ரீலங்கா தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர். புங்குடுதீவு மண்ணின் பரம்பரை சொத்து . யாழ் வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும் புங்குடடுதீவு மடத்துவெளியை பிறப்பிடமாகக் கொண்டவருமான கே.வி தம்பு மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார் . தியாகராசா தம்பு ,நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி ) ஆகியோர் இந்த திறமை மிக்க இளைஞனின் பெற்றோர் ஆவார் . ஆகியோர் இந்த தி…
-
- 0 replies
- 613 views
-
-
சர்ச்சைக்குரிய கோலின் உதவியுடன் செல்சி வெற்றி இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் செல்சி, எவேர்ட்டன், ஏ.எப்.சி போர்ன்மெத் அணிகள் வெற்றிபெற்றன. செல்சி அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், முதலாவது நிமிடத்திலேயே செல்சியின் கெனெடி பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன், செல்சி அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்தும் அவ்வணி சிறப்பாக விளையாடிய போதிலும், முதலாவது பாதியின் இறுதியில் சர்ச்சைக்குரிய விதத்திலேயே கோலொன்றைப் பெற்றது. செல்சியின் டியகோ கொஸ்டா, ஓப்-சைட் பகுதியிலிருந்து வந்து, கோலொன்றைப் பெற்றார். அந்தக் கோலை, ஓப்-சைட் கோல் என போ…
-
- 0 replies
- 460 views
-
-
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்... சாதித்த சாக்ஷி மாலிக்! ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில், மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிய ஆரவாரம் இந்தியாவில் குறைந்த நேரத்தில், புதிதாய் ஒரு நம்பிக்கை பிறந்து இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பி.வி.சிந்து பேட்மிட்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று இரவு, இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர், மல்ய…
-
- 0 replies
- 413 views
-
-
கோஹ்லிக்காக தோனி கேப்டன்சியைப் பறித்ததா பி.சி.சி.ஐ.!? குபீர் பின்னணி கடந்த ஜனவரி நான்காம் தேதி இரவு, கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார் என பி.சி.சி.ஐ அறிவிக்க, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஐ.சி.சி நடத்திய கோப்பைகள் அனைத்தையும் இந்தியா ஜெயிப்பதற்கு காரணமான முக்கியமான நபர் மகேந்திர சிங் தோனி. உலகிலேயே ஐ.சி.சி கோப்பைகள் அனைத்தையும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரரும் சரி, கேப்டனும் சரி தோனி மட்டும் தான். இந்தச் சூழ்நிலையில் தோனி ஏன் விலகினார் என்பது மர்மமாகவே இருந்தது. தோனி இதுவரை வெளிப்படையாக கடிதம் மூலமோ, பேட்டி மூலமோ, சமூக வலைதளங்கள் மூலமோ அதிக…
-
- 0 replies
- 425 views
-
-
கத்தார் ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி வெற்றி தோகா: கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் மீண்டும் சர்வதேச டென்னிசுக்கு திரும்பிய இந்திய வீராங்கனை சானியா மிர்சா, சுலோவேனியா வீராங்கனை ஆந்ரேஜா கிளெபக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6-4, 6-7 (5-7), 10-5 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லுட்மைலா கிச்செனோக்- நாடியா கிட்செனோக் இணையை போராடி தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தனர். இந்த ஆட்டம் 1 மணி 38 நிமிடங்கள் நீடித்தது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்றில் சிக்கிய சானியா மிர்சா அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து புதிய சீசனை வெற்றியோடு தொடங்கி இருப்பது குறிப்பிடத…
-
- 0 replies
- 625 views
-
-
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன்: ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்தது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேனான மொகமது சேஷாத்தை ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமாக திகழந்து வருபவர் மொகமது ஷேசாத். ஆப்கானிஸ்தான் அணிக்காக 2010-ம் ஆண்டில் அறிமுகமான சேஷாத், 58 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி துபாயில் உள்ள ஐ.சி.சி. அகாடமியில் ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரி …
-
- 0 replies
- 199 views
-