விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
பார்சிலோனா: ஜாம்பவான்களின் அணிக்கு சரிவு ஏன்? ஏதாவது ஒரு ஃபுட்பால் டீம் பேரு சொல்லுங்க – பார்சிலோனா. ஒரு ஃபுட்பால் பிளேயர் பேரு சொல்லு – மெஸ்ஸி. இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும். காரணம் இவர்கள் ஐரோப்பாவின் நடப்பு சாம்பியன்கள் என்பதால் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் 22 கோப்பைகள் வென்று தன்னிகரற்ற அணியாக விளங்குவதால்தான். மெஸ்ஸி, இப்ராஹிமோவிக், தியரி ஹென்றி, நெய்மார், சுவாரஸ், சேவி, இனியஸ்டா, புயோல், வில்லா என உலகின் மிகப்பெரிய வீரர்களெல்லாம் இவ்வணிக்காக விளையாடியுள்ளனர். ஸ்பானிஷ் லா லிகா, கோபா டெல் ரே, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய சூப்பர் லீக், கிளப் உலகக்கோப்பை என அனைத்தும் தற்போது அவர…
-
- 0 replies
- 515 views
-
-
பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியுற்றது - அஞ்சலோ மெத்யூஸ் இங்கிலாந்து தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியை தழுவியதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணி,இங்கிலாந்து தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது இலங்கை அணியின் சில வீரர்கள் தங்களின் திறன்களை மேலும் வலுவூட்டிக் கொண்டனர். அதில் தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் அடங்குவதாக தெரிவித…
-
- 0 replies
- 247 views
-
-
விமான நிலையத்துக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர்! போர்ச்சுகல் நாட்டில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடிராவில் உள்ள விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த யூரோ கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி கோப்பையை வென்றது. சர்வதேச கால்பந்து அரங்கில், போர்ச்சுகல் வென்ற முதல் கோப்பை இதுதான். ரொனால்டோ தலைமையில், போர்ச்சுகல் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி இது. இதையடுத்து ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில், அவரது பெயரை விமான நிலையத்துக்கு சூட்ட, அந்த நாட்டு அதிபர் மிகுவேல் அலெகுரேக் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மெடிரா விமான நிலையம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விமானநிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மெடிரா நகரில் …
-
- 0 replies
- 374 views
-
-
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக கிரிக்கெட் விளையாடிய அவுஸ்ரேலிய பிறிஸ்பன் A.A.Potoroos அணி மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக அவுஸ்ரேலியா பிறிஸ்பன் A.A.Potoroos கிரிக்கெட் அணி மற்றும் மட்டக்களப்பு மைக்கல்மென் இணைந்து 30 ஓவர் கொண்ட நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று இன்று நடைபெற்றது. மைக்கல்மென் அணி மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில் ஆரம்பமான கிரிக்கெட் போட்டி உத்தியோகபூர்வமாக கிழக்கு பல்கலைகழகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தீர்மானித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல்மென் அணி முப்பது ஓவர் முடிவில் நான்கு பேர் ஆட்டமிழப்பு…
-
- 0 replies
- 610 views
-
-
நெய்மரின் அதிவேக கோல் சாதனையுடன் இறுதியில் பிரேசில் வெற்றியை கொண்டாடு பிரேசில் வீரர் நெய்மர் (மஞ்சள் ஆடை) | படம்: ஏ.பி. ரியோ ஒலிம்பிக் போட்டி கால்பந்தாட்டத்தில் ஹோண்டூராஸ் அணியை பிரேசில் அணி 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதன் மூலம் இறுதியில் ஜெர்மனியைச் சந்திக்கிறது. 2014 உலகக்கோப்பையில் 7-1 என்ற கோல் கணக்கில் தங்கள் சொந்த மண்ணில் தங்களை மண்ணைக் கவ்வ வைத்து அழவிட்ட ஜெர்மனியை வீழ்த்த இன்னொரு சந்தர்ப்பம் பிரேசில் அணிக்குக் கிடைத்துள்ளது. சனிக்கிழமையன்று பிரேசில்-ஜெர்மனி இறுதி நடைபெறுகிறது. நெய்மர் ஆட்டம் தொடங்கி 15-வது விநாடியில் கோல் அடித்து அதிவேக தொடக்க கோலுக்கான ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தியதோடி மே…
-
- 0 replies
- 403 views
-
-
யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த பிரேஸில் யுவதி 'அவமானத்தினால் சாகிறேன்' என்கிறார் 2016-08-24 15:12:43 உலகின் அதிவேக மனிதரான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த யுவதி, 'நான் அவமானத்தில் சாகிறேன்' எனக் கூறியுள்ளார். 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனாகவும் உலக சம்பியனாகவும் திகழும் யூசெய்ன் போல்ட் கடந்த ஞாயிறன்று தனது 30 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். யூசெய்ன் போல்ட், காதலி கெசி பெனட் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் கடைசி நாளாகவும் அது அமை ந்தது. அன்றைய இரவில் பிரேஸிலைச் சேர்ந்த ஜேடி துவார்ட்டே என் பவருடன் இரவைக…
-
- 0 replies
- 653 views
-
-
அந்தக் காலத்து ‘ஹிட்டர்’! கிரிக்கெட்டைப் பற்றி மிக நன்றாக எழுதுபவர் என்ற பாராட்டைப் பெற பலரிடையே போட்டி உண்டு. யார் சிறந்த கிரிக்கெட் எழுத்தாளர் என்பதில் இப்போது சர்ச்சை கிடையாது. ஆஸ்திரேலியரான கிடியான் ஹைக்தான் அது. அவரே ஒரு வித்தியாசமான கிரிக்கெட் வீரர். (டான் பிராட்மன் ‘இன்வின்சிபிள்ஸ்’ என்ற பெயருள்ள அணியில் 1948-ல் விளையாடினார். கிடியானின் அணிப் பெயர் ‘தி வின்சிபிள்ஸ்’. பிராட்மன் அணியின் பெயருக்கு ‘வெல்ல முடியாதவர்கள்’ என்று பொருள். கிடியானின் அணியோ ‘வெல்ல முடியும்’ என்று எதிராளிக்கு நம்பிக்கை ஊட்டும் அணி!) கிரிக்கெட் விளையாட்டின் நுட்பம் குறித்து அவருக்கு ஆழ்ந்த ஞானம். அத…
-
- 0 replies
- 400 views
-
-
லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் 4-1 என எதிரணிகளை வீழ்த்தியதால் சாம்பியன் பட்டம் வெல்வதில் கடும்போட்டி நிலவுகிறது. லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்காக ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற லா லிகா லீக் போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் - செவிலா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா…
-
- 0 replies
- 299 views
-
-
மழை காரணமாக 2 ஆவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களாக குறைப்பு! சுற்றுலா தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி பாதிக்கப்பட்டது. அதன்படி, போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/n…
-
- 0 replies
- 578 views
-
-
விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 10-ம் நிலை வீராங்கனையான 37 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், 14-ம் நிலை வீராங்கனையான 23 வயதே ஆன ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள். முதல் …
-
- 0 replies
- 535 views
-
-
பெனால்டி கோல் அடிப்பதில் நெய்மர் - கவானி இடையே ‘ஈகோ’ போர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னணி வீரர்களான நெய்மர் மற்றும் கவானி இடையே பெனால்டி கோல் அடிப்பதில் ஈகோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார். இதற்காக பார்சிலோனாவிற்கு 220 மில்லியன் யூரோவை டிரான்ஸ்பர் பீஸாக வழங்கியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். அதிக தொகை கொடுத்து வாங்கியதால் பி.எஸ்.ஜி. அணியின் முன்னணி வீரராக நெய்மர் திகழ்கிறார். அதேவேளையில் அந்த அணிக்காக 2013-ல் இருந…
-
- 0 replies
- 491 views
-
-
ஜஸ்ப்ரீத் பும்ராவைச் சந்திக்க முடியாத ஏக்கத்தில் தாத்தா மரணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங், சபர்மதி ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ராவைப் பார்க்க அகமதாபாத்துக்கு வந்த அவரை ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாயார் தல்ஜித் சிங் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்தோக் சிங் காணாமல் போனார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சபர்மதி ஆற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார். குஜராத்தின் மிகச்சிறந்த வர்த்தகராக திகர்ந்த சந்தோக் சிங்கின் வியாபாரம் நஷ்டத்தைச் சந்தித்தையடுத்து, ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆங்கில நாளிதழ் ஒன்ற…
-
- 0 replies
- 343 views
-
-
மற்றவர்களை விட சேவாக்தான் எனக்கு பேட்டிங் பற்றி அதிகம் கற்றுக் கொடுத்தார்: ஆஸி. பயிற்சியாளர் ட்ரெண்ட் உட்ஹில் புகழாரம் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து 122 ரன்கள் விளாசியபோது சேவாக் ஆடிய ஷாட்டை தோனி பார்க்கிறார். - படம். | விவேக் பெந்த்ரே. ட்ரெண்ட் உட்ஹில் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம், அவர் சுமார் 10 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்தரப்பட்ட வீர்ர்களுடன் பணியாற்றி வருகிறார். இதில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, சேவாக், ஏ.பி.டிவில்லியர்ஸ், கெவின் பீட்டர்சன், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் குறிப்…
-
- 0 replies
- 264 views
-
-
அர்ஜுனவின் மன உறுதி தேவை இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கான பயிற்சியை முடித்துக் கொண்டு இளம் சன்ஜீவ ரணதுங்க வீடு திரும்பி இருந்தார். அவரது மூத்த சகோதரர், ஆட்டம் எப்படி இருந்தது? என்று விசாரித்தார். பதிலளித்த சன்ஜீவ, “நான் நன்றாக ஆடினேன் ஆனால், தெற்கில் இருந்து வந்த அந்த கருத்த இளைஞனை நீங்கள் வந்து கட்டாயம் பார்க்க வேண்டும். அவனால் சாதாரணமாக பந்தை ஒரு மைல் தூரத்துக்கு அடிக்க முடிகிறது” என்றார். அடுத்த தினமே அர்ஜுன NCC இல் நடக்கும் 19 வயதுக்கு உட்பட்ட பயிற்சி முகாமுக்கு சென்றார். உண்மையில் அந்த திறமையை பார்த்து அவர் வியப்படைந்தார். அந்த இளைஞன் அவுஸ்திரேலியாவில் நடந்த ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்ட முதலாவது உலகக் கிண்ண போட்…
-
- 0 replies
- 483 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் முதலிடம் – இலங்கை வீரர்கள்? சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளனர். அதேபோல, தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான றபாடா 3 இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். தென்னாபிரிக்கா – சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி, …
-
- 0 replies
- 445 views
-
-
இப்படியே இருந்தா, "செத்துப் போயிருவோம்".. "குண்டு" போடும் வக்கார் சிட்னி: சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு வராமல் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால், பாகிஸ்தானில் கிரிக்கெட் இறந்து போய் விடும் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் எச்சரித்துள்ளார். இப்படியே இருந்தா, கடந்த 2009ம் ஆண்டு முதல் சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட வருவதில்லை என்பது நினைவிருக்கலாம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் போகாமல் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கர தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அதில், 7 வீரர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். அன்று முதல் எந்த அணியும…
-
- 0 replies
- 533 views
-
-
ஈ.எஸ்.பி.என். நிறுவனம் கிரிக்இன்போ இணையத்தளத்தை தங்களது வியாபார நோக்கத்திற்காக வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர் -verakesary- ESPN buys Cricinfo Web site from Wisden Group MUMBAI (Reuters) - Walt Disney Co.'s (DIS.N: Quote, Profile, Research) ESPN has bought cricket Web site Cricinfo from the Wisden group, ESPN and Cricinfo said in a statement on Monday. Financial details of the deal were not disclosed. "Growing our business in the online world is vital," said Russell Wolff, managing director of ESPN International. "Cricinfo will be a strong addition to ESPN," he said in the statement. Founded in 1993, Cricinfo reaches more than 7 mil…
-
- 0 replies
- 2.3k views
-
-
அவுஸ்திரேலியாவுதிரான முதலாவது டெஸ்ட் போட்டி – இலங்கை இன்னிங்ஸ் தோல்வி : January 26, 2019 அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. கடந்த 24ம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி பகலிரவு போட்டியாக பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 323 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்ததிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 179 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது இ…
-
- 0 replies
- 331 views
-
-
அமெரிக்கா மீது ஐசிசி விமர்சனம் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபையின் தேர்வுக் கொள்கைகளையும் வீரர்களை நடாத்தும் விதத்தையும் சர்வதேச கிரிக்கெட் சபை விமர்சித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பின்னரே இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பார்படோஸில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த மாநாட்டில் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபையினை தடை செய்த நிலையிலேயே, தற்போது புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் தெரிவில் 7 வீரர்கள் முறைகேடான முறையில் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவர்களுக்குப் பதிலாக, தெரிவுக்கான தகுதிகளையுடைய வீரர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனக் கோரி, தெரிவு…
-
- 0 replies
- 322 views
-
-
Published By: VISHNU 22 JUN, 2024 | 12:37 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார். தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார். இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 436 views
- 1 follower
-
-
150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து குல்படீன் நைய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை மான்செஸ்டரில் 3.00 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 150 ஓட்டத்த…
-
- 0 replies
- 722 views
-
-
5 நாட்கள் ஆட்டம் 3 நாட்களில் முடிவதால், ஸ்டார் இந்தியாவுக்கு ரூ. 80 கோடி இழப்பு கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த இந்தியாவில் அதுவும் உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பி, ஸ்டார் இந்தியா தொலைகாட்சி ரூ.80 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொகாலி டெஸ்ட் 3 நாட்களில் இந்தியா வெற்றி பெற்று விட, பெங்களுர் டெஸ்ட் மழையால் 4 நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டு சமனில் முடிந்தது. நாக்பூர் ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட, தென்ஆப்ரிக்க அணி சுருண்டு விழுந்தது. இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்து விட, இந்தியா மீண்டும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்க அணியி…
-
- 0 replies
- 805 views
-
-
மீண்டும் சிக்கலில் பிளட்டினி சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் (பீபா) 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மைக்கல் பிளட்டினி, மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவரான பிளட்டினி, அனைத்து வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்தும், டிசெம்பர் 21ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். ஆனால், டுபாய் விளையாட்டுச் சபையினால் டுபாயினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூகோள கால்பந்தாட்ட விருதுகளில், கடந்த 27ஆம் திகதி, பிளட்டினி கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்வில், லியனொல் மெஸ்ஸி, அன்ட்ரியா பிர்லோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வைத்து, தனது தடை தொடர்பாகவும் …
-
- 0 replies
- 588 views
-
-
ஊழல் தொடர்பான விசாரணையில் சர்வதேச அணி: ஐ.சி.சி. ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் தெரிவிப்பு சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், ஊழல் தொடர்பாக சர்வதேச அணி ஒன்று விசாரணைக்குட்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் சேர் ரொனி ஃபிளனகன் தெரிவித்துள்ளார். உலக இருபது 20 போட்டிகளின்போது பந்தயம் பிடிப்பதற்கு வசதியாக ஆட்ட நிர்ணயம் செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை ஊழல் தடுப்புப் பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஃபிளனகன் குறிப்பிட்டார். இந்த சூழ்ச்சி தொடர்பாக ஒரு சிலருக்க…
-
- 0 replies
- 283 views
-
-
நடந்தது இதுதான்: டென்னிஸ் ரசிகர்களுக்கு ஷரபோவா மனம் திறந்த கடிதம் மரியா ஷரபோவா மரியா ஷரபோவா, தன் பதிவோடு இணைத்துள்ள வாலட் கார்டு (ஊக்க மருந்து தொடர்பான தகவல்கள் அச்சிடப்பட்ட) அட்டைகள் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ள மரியா ஷரபோவா, தன்னுடைய வலைதளம் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக, அவரின் டென்னிஸ் ரசிகர்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'ஊக்க மருந்து குறித்து தனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி தவறானது' என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய …
-
- 0 replies
- 628 views
-