விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸி. அணி அறிவிப்பு: ஸ்டார்க், லின் சேர்ப்பு; பால்க்னெர் அவுட் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி ஆல் ரவுண்டரான பல்க்னெருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்டார்க், லின் இடம்பிடித்துள்ளனர். மெல்போர்ன், ஏப்.20- இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்…
-
- 236 replies
- 22k views
- 1 follower
-
-
தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட இந்திய வீரர்களுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி, யுவராஜ்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அசார் அலியின் குழந்தைகள் | படம் உதவி: அசார் அலியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்த இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெர்ட் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தானுடனான இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசி…
-
- 0 replies
- 279 views
-
-
சம்பியன்களுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு - படங்கள் இணைப்பு சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் அபார வெற்றிவாகை சூடிய பாகிஸ்தான் அணிக்கு அவர்களின் தாய்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்ப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் நேற்றுமுன்தினம் சம்பியன்ஸ் கிண்ணத்துடன் நாடு திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது. அத்தோடு வீதியோரங்களில் ரசிகர் கூட்டம் பொங்கிவழிய சம்பியன்ஸ் அணி வலம் வந்தது. …
-
- 1 reply
- 351 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கெள்ளவுள்ளது இந்திய அணி இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகைக் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இலங்கை – இந்திய அணிகள் மோதும் குறித்த தொடரானது எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 18 நாட்களாக நடைபெற்றுவந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. தற்போது இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 -ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாடவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடனான இந்தப் போட்டித் தொடர…
-
- 0 replies
- 229 views
-
-
'இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ், தோனியின் நிலை என்ன?' - கேள்வி எழுப்பும் டிராவிட்! 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை வரப் போகிறது. அதற்கு முன் இந்திய அணியில் இருக்கும் சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி, பெருமளவு சோபிக்கவில்லை. குறிப்பாக, இறுதிப் போட்டியில் அவர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து, அணியில் அவர்கள் இடம் குறி…
-
- 0 replies
- 384 views
-
-
இந்தியா - பாகிஸ்தான்: கிரிக்கெட்டில் படுதோல்வி; ஹாக்கியில் அமோக வெற்றி படத்தின் காப்புரிமைTHEHOCKEYINDIA லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அமோகவெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் சிங், டல்விந்தர் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். போட்டி தொடங்கிய பிறகு இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்து போட்டியில் அணிக்கு முன்னிலையை கொடுத்தார். போட்…
-
- 1 reply
- 698 views
-
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் இரத்தாகிறதாம் முன்னணி அணிகளுக்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடுவதாலும், அதிக அளவில் சுவாரஸ்யம் இருப்பதாலும் ஐ.சி.சி. இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்தது. அதன்படி தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்தியத்…
-
- 0 replies
- 313 views
-
-
யாழ் அணியை வீழ்த்தி சம்பியனாகியது ஜயவர்தனபுர பல். அணி இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமரின் இந்த வருடத்திற்கான இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை 4 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி இம்முறையும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்த போட்டிகளின் நிறைவில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய யாழ் பல்கலைக்கழக அணியும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியும் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் (சனிக்கிழமை) மோதின. இதில் யாழ் பல்கலைக்கழக அணியினர் 13 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 392 views
-
-
Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இன்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட…
-
- 4 replies
- 878 views
-
-
ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை புரியுமா கத்துக்குட்டி ஸ்காட்லாந்து! ஒரு பக்கம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பற்றி கிரிக்கெட் உலகமே பேசிக் கொண்டிருக்கும்போது, மறு பக்கம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை வெற்றி பெறும் நோக்குடன் களத்தில் உள்ளது ஸ்காட்லாந்து. ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஸ்காட்லாந்து ஜிம்பாப்வேவை முதன்முறையாக வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது ஸ்காட்லாந்து…
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கை வருகிறது சிம்பாப்பே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு இம்மாத இறுதியில் சிம்பாப்வே அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி இங்கு வரும் சிம்பாப்வே அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் காலி மற்றும் பல்லேகல ஆகிய மைதானங்களிலேயே நடைபெறவுள்ளன. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்ட இலங்கை அணி தற்போது நாடு திரும்பி தங்களின் வழக்கமான பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் சிம்பாப…
-
- 0 replies
- 513 views
-
-
ரியல் மாட்ரிட்டிலிருந்து ரொனால்டோ வெளியேறுகிறார்? போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் க்ளப்பிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளார். ரொனால்டோ 2009-ம் ஆண்டிலிருந்து ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் க்ளப்பில் விளையாடிவருகிறார். கடந்த சில ஆண்டுகளாகப் புகைப்பட உரிமம் மூலம் சம்பாதித்த பணத்தை, அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்து, ஸ்பெயினில் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கிட்டத்தட்ட 14.7 மில்லியன் யூரோஸ் (106 கோடி ரூபாய்) வரை வரி ஏய்ப்பு செய்ததாக, ஸ்பெயின் அரசு சார்பில் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு, விசாரணையில் உள்ளது. இந்தத் …
-
- 0 replies
- 399 views
-
-
ஒரு நாள் தரவரிசையில் எட்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கை தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி இன் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு எட்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக, 88 புள்ளிகளுடன் தரவரிசையில் எட்டாம் இடத்தினைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றிகள் மூலம் 5 மேலதிக புள்ளிகளைப் பெற்றது. இதன் காரணமாக, தற்போது இலங்கை அணி பெற்றுள்ள 93 புள்ளிகளுடன் பாகிஸ்தான் சமநிலையில் இருக்கின்றது. எனின…
-
- 0 replies
- 355 views
-
-
புதிய சாதனையுடன் பல்கலைக்கழக பளு தூக்கல் சம்பியனாகிய யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு தூக்கல் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழக வணிகப்பீட அரங்கில் இடம்பெற்று நிறைவுற்றது. இப் போட்டிகளில் பங்கேற்றிருந்த யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் புதிய சாதனை ஒன்றினை நிலை நாட்டி சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவரான குணசீலன் சாமுவேல் துஷாந்த், குறித்த பளு தூக்கல் சுற்றுப் போட்டிகளில், 105 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னேட்ச் (Snatch) முறையில் அதிகபட்சமாக 100 கிலோ கிராம் எடையினை தூக்கியதோடு, கிளின…
-
- 0 replies
- 376 views
-
-
இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது பாகிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியது. நாட்டை வந்தடைந்தவுடனேயே, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த ஊடவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, “இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது, எமக்கு சிறு கவலையைத் தருகின்றது. ஏனெனில், எமது அணி அரையிறுதி வாய்ப்பினை தவறவிட…
-
- 2 replies
- 587 views
-
-
100 சதங்கள் அடித்தார் சங்ககரா... குவியும் வாழ்த்துகள்! இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா, 'ஃபர்ஸ்ட்- கிளாஸ் மற்றும் லிஸ்ட்- ஏ' போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சங்ககரா, கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனாலும், அவர் தொடர்ந்து ஃபர்ஸ்ட்- கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார். இந்த நிலையில்தான், அவர் இங்கிலாந்தின் சர்ரே அணி சார்பில் விளையாடிய போட்டியில் 121 ரன்கள் ஸ்கோர் செய்து, 100-வது சதமடித்து சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில், 100 சதங்கள் அடிக்கும் 37-வது நபர்தான் அவர் என்பது, இந்தச் சாதனையின் வீச்சைப் பற்றி அறியச்செய்யும். …
-
- 2 replies
- 647 views
-
-
உலகக் கோப்பைக்கு ஈரான் தகுதி உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் ஈரான் வீரர்கள் சர்தார் அஸ்மவுன், மெஹ்தி தாரேமி. படம்: கெட்டி இமேஜஸ் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஈரான் அணி தகுதி பெற்றுள்ளது. பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய அணிகளுக்கு இடையோன தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் ஈரான் - உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதி…
-
- 0 replies
- 359 views
-
-
மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ்மான் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்மான். இவர் ஸ்பெயின் நாடடின் முன்னணி கால்பந்து கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசன் முடிந்த பிறகு இங்கிலாந்து நாட்டின் தலைசிறந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறுவார் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ‘‘மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்ல 60 சதவீதம…
-
- 0 replies
- 252 views
-
-
ஆறாவது தடவையாக ஹமில்டன் வென்றார் கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ஆதிக்கம் செலுத்திய, மெர்டிசிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், தனது ஆறாவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார். தனது ஆதர்ச நாயகனான அயூட்டன் செனாவின், 65 பந்தயங்களை முதலிடத்தில் ஆரம்பித்ததை, கடந்த சனிக்கிழமை (03) சமப்படுத்தியிருந்த ஹமில்டனுக்கு, இது 10ஆவது பந்தயம் என்ற நிலையிலேயே, அவற்றில் ஆறில் வெற்றிபெற்றுள்ளார். பந்தயத்தை ஐந்தாவதாக ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், அபாரமாக காரைச் செலுத்தி, பந்தயத்தை இரண்டாவதாக ஆரம்பித்…
-
- 0 replies
- 708 views
-
-
ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்? பாரீஸ் நகரில் ஞாயிறுக்கிழமை நடந்த ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில், 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில், ஸ்டான் வாவ்ரின்காவை தோற்கடித்து ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 10-ஆவது முறையாக வென்று ரஃபேல் நடால் சாதனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வெ…
-
- 1 reply
- 695 views
-
-
முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி செயிண்ட் லூசியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது. செயிண்ட்லூசியா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. ஜாவித் ஆட்டி 81 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சு…
-
- 2 replies
- 531 views
-
-
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கையை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 10-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கை எதிர்கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். …
-
- 20 replies
- 2.6k views
-
-
சொந்த மண்ணில் உசைன் போல்ட்டுக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னுடைய சொந்த மண்ணான ஜமைக்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 100 மீட்டர் இறுதிப்போட்டில் வென்ற உசைன் போல்ட், விளையாட்டு அரங்கம் நிறைந்திருந்த மைதானத்தில் இருந்து உணர்ச்சிகரமான பிரியாவிடை பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தன்னுடைய ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கும் 30 வயதான உசைன் போல்ட், கிங்ஸ்டனில் 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னால் பிரியாவிடை பெற்றுள்ளார். எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓ…
-
- 0 replies
- 334 views
-
-
இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் யாழ்ப்பாணத்தில் யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடர் இரண்டாவது முறையாக இவ்வருடமும் மிகவும் கோலாகலமாக இடம்பெறவிருக்கின்றது. ரொஹான் மற்றும் சங்கர் ஆகியோர் 1989ஆம் ஆண்டு கிறாஸ்ஹொப்பேர்ஸ் அணிக்காக முரசொலி கிரிக்கெட் கிண்ணத்தினைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்காளிகளாவர். முரசொலி கிரிக்கெட் தொடர் 6 பேர் விளையாடும் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அமை…
-
- 0 replies
- 615 views
-
-
காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்றில் இருந்து ஷரபோவா விலகல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்று தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. அவருக்கு ஊக்கமருந்து பயன்படுத்திய விவாரத்தில் சுமார் 15 மாதம் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பின்னர் டென்னிஸ் அரங்கில் கால் எடுத்து வைத்தார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பாக ரோமில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின்போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பர்மிங்காமில் நடைபெறும் தொடரிலும், கிராண்ட்ஸ்லாம் தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த விம…
-
- 0 replies
- 217 views
-