விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
அனித்தா மீண்டும் சாதனை யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கோலூன்றிப் பாய்தலில் பெண்கள் பிரிவில் அனித்தா புதிய சாதனை படைத்தார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை இந்தப் போட்டி நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சாத்வீகா கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 2.82 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து படைத்திருந்த சாதனையை, நடப்பு வருடத்தில் அனித்தா 3.10 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து முறியடித்து தங்கம் வென்றார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஹெரினா 2.80 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், சாத்வீகா 2.70 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.…
-
- 0 replies
- 339 views
-
-
இந்திய கிரிக்கெட்டைக் கண்டு பயமாக இருக்கிறது: ஏ.பி.டிவில்லியர்ஸ் டிவில்லியர்ஸ். | படம்.| ஏ.எஃப்.பி. உலக பவுலர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் 360 டிகிரி பேட்ஸ்மென் என்று அறியப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ், தனக்கு இந்திய கிரிக்கெட் மேலும் மேலும் வலுவடைந்து வருவது பயமூட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார். “நான் இந்திய கிரிக்கெட்டைப் பார்த்து பயப்படுகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டினால் இந்திய கிரிக்கெட் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே வருகிறது. உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய அழுத்தங்களை, நெருக்கடிகளை சவாலுடன் சந்திக்கும் இளம் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று வருகின்…
-
- 0 replies
- 394 views
-
-
ஜயசூரிய - தரங்கவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி! அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 320 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணியின் டீப்டி சர்மா 188 ஓட்டங்களையும், பூனம் ரவுட் 109 ஓட்டங்களையும் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் சாரா டெய்லர் மற்றும் கரோலின் அட்கின்ஸ் பெற்ற 268 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. இதேவேளை ஆண்களுக்கான ஒருநாள் போட்டியொன்றில் உபு…
-
- 0 replies
- 362 views
-
-
லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் 4-1 என எதிரணிகளை வீழ்த்தியதால் சாம்பியன் பட்டம் வெல்வதில் கடும்போட்டி நிலவுகிறது. லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்காக ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற லா லிகா லீக் போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் - செவிலா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா…
-
- 0 replies
- 299 views
-
-
ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை செவிலா அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார். போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 2009-ம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு டிரான்ஸ்ஃபர் ஆனார். ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக விளங்கி வருகிறார். லா லிகாவில் நேற்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதி…
-
- 1 reply
- 435 views
-
-
மாகாண கூடைப்பந்தில் யாழ்ப்பாணம் சம்பியன் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டம் சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட அணி மோதியது. 42:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணி வெற்றிபெற்று கிண்ணம் வென்றது. http://uthayandaily.com/story/2802.html
-
- 1 reply
- 332 views
-
-
“மிஸ் யூ யூனிஸ் !” - பாகிஸ்தானின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஓய்வு பாகிஸ்தானின் ஆச்சர்யகரமான பேட்ஸ்மேன், அட்டகாசமான பிளேயர் யூனிஸ் கான். நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டார். "இன்னும் 23 ரன்கள் எடுத்தால் போதுமே, பத்தாயிரம் ரன்களைக் கடந்து முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆக வேண்டிய ஆள் என்ற பெருமை கிடைக்குமே?" நிதானமாய் யூனிஸ்கான் சொன்ன பதில் இதுதான், "உலகம் இப்படித்தான் கேட்டுக் கொண்டே இருக்கும். 10,000, 12,000 என்று இலக்குகள…
-
- 0 replies
- 696 views
-
-
40 வயதிற்குப் பிறகு 2000 ஆயிரம் ரன்னுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த மிஸ்பா பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 40 வயதிற்கு மேல் 2000 ஆயிரம் ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் இன்றைய கடைசி ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். தற்போது மிஸ்பா உல் ஹக்கிற்கு 42 வயது 351 நாட்கள் ஆகிறது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001-ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் உடன் 75 டெஸ்ட…
-
- 0 replies
- 421 views
-
-
லண்டனில் சரே அணிக்காக சதம் விளாசிய சங்கக்கார! (Highlights) இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருாநாள் கிண்ணத் தொடரின் நேற்றைய ஹம்சையர் அணிக்கெதிரான போட்டியில் குமார் சங்கக்கார 124 ஓட்டங்களை விளாசியுள்ளார். இந்த போட்டியில் 238 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சரே அணி துடுப்பெடுத்தாடிய போதே சங்கக்கார சதம் விளாசியுள்ளார். இவர் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டங்களை குவித்து சரே அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் ச…
-
- 0 replies
- 858 views
-
-
ஸ்பெயின் பார்முலா-1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி பார்சிலோனாவில் நேற்று நடந்த 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். வெற்றிக்கோப்பையுடன் ஹாமில்டன். பார்சிலோனா : இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 307.104 கிலோ மீட்டராகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். விறுவிறுப்பான இ…
-
- 0 replies
- 339 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியும், அயர்லாந்து வீரரின் சாதனையும்! அயர்லாந்து - வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அயர்லாந்து - வங்கதேசம் இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 31.1 ஓவர்களில் 157/4 என்ற நிலையில் இருக்கும்போது, தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன. இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்…
-
- 0 replies
- 375 views
-
-
கால்பந்து உலகின் எதிர்கால சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்! கால்பந்து உலகில் மெஸ்சி, ரொனால்டோவுக்கு நிகராக உருவெடுத்து வரும் டாப் 5 இளம் வீரர்களை பற்றிய விவரம். பிளேபாய் நெய்மர் நெய்மர் டா சில்வா, பிரேசிலைச் சேர்ந்த 25 வயது இளம் முன்கள வீரர். பிரேசில் அணிக்காகவும் ஸ்பெயின் நாட்டின் டாப் மோஸ்ட் கிளப் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரம். முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரொனால்டினோ போன்ற பிரேசிலின் மூத்த வீரர்களுடனும் தற்போதைய சூப்பர் ஸ்டாரான மெஸ்சியுடனும் இணைந்து விளையாடி அனுபவம் கற்றவர். எதிரணி வீரர்களை குழப்பும் மந்திர கால்களுக்குச் சொந்தக்காரர். டிரிபிளிங் மூலம் லாவகமாக பந்தைக் கடத்துவதில் கெட்டிக்காரர். எத…
-
- 0 replies
- 384 views
-
-
யாழ்ப்பாணம் இந்து. வென்றது கிண்ணம் யாழ்ப்பாணம் மாவட்ட பளுதூக்கல் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய பளுதூக்கல் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி சம்பியனானது. யாழ்ப்பாணம் துரையப்பா உள்ள விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 39 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாணம் பளுதூக்கும் கழகம் 9 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும், மலாயன் சாண்டோ அணி 2 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தையும் பெற்றன. http://ut…
-
- 0 replies
- 481 views
-
-
2019 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு: டு பிளிசிஸ் சூசக தகவல் இங்கிலாந்தில் 2019-ம் நடைபெறும் 50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக டு பிளிசிஸ் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டு பிளிசிஸ். முன்னணி பேட்ஸ்மேன் பணியுடன், பீல்டிங்கிலும் சிறந்து விளங்கக்கூடியவர். 32 வயதாகும் இவர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்…
-
- 0 replies
- 336 views
-
-
ரொனால்டோ கோல் அடிப்பதை யுவென்டஸ் தடுக்க முடியுமா? #Championsleague #Gameplan தலைப்பைப் படித்ததும் திட்ட வேண்டாம். `இன்று நள்ளிரவுதான் சாம்பியன்ஸ் லீக் அரை இறுதி செகண்ட் லெக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் மோதுகின்றன. அதற்குள் எப்படி ஃபைனலில் ரொனால்டோ கோல் அடிப்பதைப் பற்றி எழுதலாம்?' எனக் கேட்கலாம். கால்பந்தை, சாம்பியன்ஸ் லீக்கை, இந்த சீஸனை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்களுக்கு ஃபைனலில் ரியல் மாட்ரிட் - யுவென்டஸ் மோதலைத் தவிர்க்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். ரியல் மாட்ரிட் ஹோம் கிரவுண்ட் சாண்டியாகோ பெர்னபுவில் நடந்த முதல் அரை இறுதியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்க, 3-0 என ரியல் மாட்ரிட் வெ…
-
- 3 replies
- 620 views
-
-
இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையம் பல்லேகலயில் ஆரம்பம் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு பகுதிகளைக் கொண்ட உள்ளக கிரிக்கெட் பயிற்சி மையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற நேற்றைய தினம், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவுள்ள இலங்கை வீரர்களுக்கான 06 நாள் பயிற்சி முகாமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சி நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் மெதிவ்ஸ் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த உள்ளக பயிற்சி நிலையமானது, இலங்கை கிரிக்கெட் சபையின் கனவுத்திட்டங்களுள் ஒன்றான நாடு தழுவிய ரீதியில் வீரர்களின் த…
-
- 0 replies
- 353 views
-
-
பெண்கள் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனை பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வானி பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் நான்கு மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 7.3 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம…
-
- 1 reply
- 700 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து: டைட்டிலை நெருங்குகிறது செல்சியா இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி 2016-17 சீசனின் டைட்டிலை கைப்பற்ற நெருங்கி வந்துள்ளது. தற்போது 84 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி 20 கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும். இந்த சீசனுக்கான பிரமீயர் லீக் தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 ஆட்டங்களில் எந்த…
-
- 0 replies
- 384 views
-
-
நீச்சலில் இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் பவலச்சந்திரன் அருக்ஷன் Tamil நீச்சலில் இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் பவலச்சந்திரன் அருக்ஷன் அண்மையில் இடம்பெற்று முடிந்த தேசிய கனிஷ்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளின் நிறைவில் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஒரு இளம் வீரர் தன்பக்கம் ஈர்த்திருந்தார். 19 வயதிற்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்ட 15 வயது வீரரான இவர், தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த வீரர்களை தோற்கடித்து போட்டித் தொடரின் மிக முக்கிய விருதினை சுவீகரித்திருந்தார். சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் குழுமியிரு…
-
- 0 replies
- 355 views
-
-
சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை வாங்கும் ரியல் மாட்ரிட் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணி சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் முன்னணி இளம் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது. பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் வினிசியஸ். 16 வயதே ஆன இவர் அந்நாட்டின் பிளமிங்கோ கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தென்அமெரிக்காவின் 17 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தொடரில் 7 கோல்கள் அடித்ததுடன் இரண்டு கோல்கள் அடிப்பதற்கு உதவியாக இருந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் சாம்பியன் பட்டத்தை வென்றத…
-
- 0 replies
- 406 views
-
-
டி20 பிளாஸ்ட் லீக்: லங்காஷைர் அணியுடன் ஜெயவர்தனே ஒப்பந்தம் இங்கிலாந்தின் ‘டி20 பிளாஸ்ட்’ கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட லங்காஷைர் அணியுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் கேப்டனாகவும், முன்னணி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் மகேலா ஜெயவர்தனே. 39 வயதாகும் இவர், 2014-ம் ஆண்டு இலங்கை அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார். டி20 கிரிக்கெட்டில் 5455 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற…
-
- 0 replies
- 279 views
-
-
“ப்ளீஸ்.. இதையாவது நிறைவேற்றுவீர்களா விராட் கோலி?” - ஒரு ரசிகனின் கோரிக்கை! #ViratKohli ‘விராட் கோலிக்கு ட்ராவுக்காக ஆடுவது பிடிக்காது. களத்தில் கர்ஜிக்கும் சிங்கம், இவரது பேட் பந்துவீச்சாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்’ என சமூக வலைத்தளங்களில் மற்ற வீரர்களின் ரசிகர்களை ஓடவிட்ட காலம் இப்போது இல்லை விராட். ஆம், தோனி என்ற ஒரு மிகப்பெரிய வீரர் அணியை வழிநடத்திய போது அதில் ஓர் இளம் வீரராக நீங்கள் தனியாகத் தெரிந்தீர்கள் அதனால்தான் உங்களது தீவிர ரசிகர் ஆனோம். ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்பக்காலத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள் நாங்கள். இந்திய அணியில் உங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு, தண்ணீரே தராத பெங்களூருவை ஆதரித்தோம். காரணம் உங்களை ஒரு வீரனாக அதிகம் பிடித்த…
-
- 0 replies
- 405 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக மாரடோனா நியமனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார். ரியாத்: ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீய்கோ மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அல்-ஃபுஜைரா கால்பந்து கிளப் நேற்று வெளியிட்ட …
-
- 0 replies
- 325 views
-
-
ஐ.பி.எல். தொடரில் பூனே மற்றும் குஜராத் அணிகள் விளையாடுவதில் சிக்கல்? அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல்.தொடரில் பூனே மற்றும் குஜராத் அணிகள் பங்குபற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வழமைபோல் 8 அணிகள் பங்கேற்குமா? அல்லது 10 அணிகள் பங்கேற்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே தோன்றியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐ.பி.எல். தொடரின் தலைவர் ராஜீவ் சுக்லா, குஜராத் மற்றும் பூனே அணிகளுக்கு 2 ஆண்டுகள் மாத்திரம் விளையாடுவதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான ஒப்…
-
- 0 replies
- 348 views
-
-
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை தோற்கடித்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாத கால தடையை அனுபவித்த ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, இந்த போட்டியில் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை எதிர்கொண்டார். பரபரப்பான இ…
-
- 0 replies
- 268 views
-