Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை குறைந்த வயதில் எடுத்ததற்கான சச்சின் டெண்டுல்கர் சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்தார். ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதாவது சச்சின் டெண்டுல்கரை விட 94 நாட்கள் முன்னதாகவே அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 30 வயது, 159 நாட்களில் அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எட்ட, சச்சின் டெண்டுல்கர் தனது 9,000 டெஸ்ட் ரன்களை 30 வயது, 253 நாட்களில் எடுத்தார். ஆனால் 31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ரன்களை எடுத்த வீரர்கள் சச்சின் மற்றும் குக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 204 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்…

  2. பாக் வீரர்கள் மீது குற்றம் ஊர்ஜிதம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சல்மான் பட் வேண்டுமென்றே நோ பால்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தாங்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று இந்த இருவரும் தெரிவித்தனர். பணம் வாங்கியதாக கூறப்படுவதையும் மறுத்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த 12 ஜூரிக்களில் 10 பேர் சல்மான் பட் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்தார் என்ற தீர்ப்பை எட்டியுள்ளனர். அதே நேரம் முகமது ஆ…

    • 0 replies
    • 499 views
  3. தாக்கிய சுறாவை பந்தாடிய தில்லான உலக சாம்பியன் வீரர்! (வீடியோ) கடலில் அலை சறுக்குப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரரும், உலக சாம்பியனுமான மிக் ஃபானிங் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென சுறா தாக்கியதால் சுதாரித்துக் கொண்ட அவர், எதிர் தாக்குதல் நடத்தி அதனை விரட்டி அடித்துள்ளார். இந்த தில்லான சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. https://youtu.be/iJchroxUM0Q ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நீர்சறுக்கு வீரர் மிக் ஃபானிங். இவர் நீர் சறுக்கு விளையாட்டில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஃபானிங், தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். போர்ட் எலிசபெத் நகரில் ஜெஃப்ரி பே ஓபன் அலை சறுக்குப் போட்டியில் அவர் ஈடுபட்டு…

  4. பத்திரிகையாளரை தாக்கிய மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் நீக்கம் ! பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதால் மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த 'கான்காப்' தங்க கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி, இறுதி ஆட்டத்தில் ஜமைக்கா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் கோப்பையை வென்ற 24 மணி நேரத்துக்குள், மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா, தொலைக்காட்சி நிருபர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த திங்கட்கிழமை பிலடெல்பியா விமான நிலையத்தில் வைத்து, அஸ்டெகா தொலைக்காட்சியின் நிருபரான கிறிஸ்டியன் மார்ட்டினோலியின் முகத்தில் மிகுவேல் குத்தியுள்ளார்…

  5. பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை! அபாரமான பந்து வீச்சினால் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ஓட்டத்தினால் வீழ்த்தியுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே கார்டீபில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை குவித்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் மழை முடிவடைந்ததும் இரவு 8.30 மணியளவில் ஓவர்களின…

  6. இன்று இரவு 7 மணிக்கு கேப்டன் தோனி...! இந்திய அணியின் கேப்டன் தோனி 50 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை இன்று பெறப் போகிறார். உலகிலேயே இத்தகையை சாதனையை எட்டும் முதல் கேப்டன் தோனிதான். தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹிமாச்சல்பிரதேசத்தில் உள்ள எழில்கொஞ்சும் தரம்சாலாவில் இன்று இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் கேப்டன் தோனியின் 50வது டி20 போட்டி ஆகும். இந்த பட்டியலில் அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்ட் 41 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி 2வது இடத்தை பிடிக்கிறார். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் சமி 39 போட்டிகளுக்கு கேப்டனாக பண…

  7. இந்தியன் பிரீமியர் லீக்கின் புதிய இலட்சினை வெளியீடு October 28, 2015 புதிய டைட்டில் அனுசரணையாளர் விவோவுடனான ஐ.பி.எல் புதிய இலட்சினை நேற்று முன்தினம் திங்கட் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி ஒன்பதாவது ஐ.பி.எல் போட்டிகள் விவோ ஐ.பி.எல் என அழைக்கப்படவுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளின் டைட்டில் அனுசரணையாளராக இருந்த பெப்சி நிறுவனம் அண்மையில் வெளியேறியது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சூதாட்டத்தினால் கிரிக்கட் மதிப்பிழந்துள்ளதாகத் தெரிவித்து தனது அனுசரணையிலிருந்து விலகியது. இதனையடுத்து சீனாவின் ஸ்மார்ட் போன் நிறுவனமான விவோ எதிர்வரும் இரு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வங்கி உத்தரவாதம் கடந்தவாரம் வழங்கப்பட்டது. இந்நிலையி…

  8. கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் பொண்டிங்கின் துடுப்பாட்டத்தில் பாதிப்பு [18 - February - 2008] [Font Size - A - A - A] கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் ரிக்கி பொண்டிங்கின் துடுப்பாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். முக்கோண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. அவரது சராசரி 10 ஆகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சோபிக்கவில்லை. பல்வேறு சர்ச்சைகளில் தான் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைக் கப்டன் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ரிக்கி பொண்டிங்குக்கு எல்லா வீரர்களைப் போல் பல பிரச்சினைகள் என்றாலும…

  9. FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் December 18, 2015 சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் பணம் நகர்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகவும் இதன் காரணமாக குறித்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச காற்பந்து சபையில் கடந்த இருதசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தற்போது முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் போது ஒளிபரப்பு உரிமம…

  10. FIFA முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ சிறையில் December 27, 2015 சுவிஸர்லாந்திலிருந்து உருகுவேக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ ஃபெகரெய்டோ உருகுவேயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிபா ஊழல் குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் சுவிஸர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ விசாரணைகளுக்காக நேற்று (வியாழக்கிழமை) உருகுவேக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில் உருகுவேயை வந்திறங்கிய யூஜினியோ நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யூஜினியோ ஃபெகரெய்டோ கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆ…

  11. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கான் சார்பாக ஷேஹ்ஸாத் முதல் சதம் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் வர­லாற்றில் நான்­கா­வது அதி­கூ­டிய இன்னிங்ஸ் எண்­ணிக்­கையைப் பதிவு செய்த மொஹமத் ஷேஹ்ஸாத், ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 போட்­டியில் ஆப்­கா­னிஸ்­தானின் இல­கு­வான வெற்­றிக்கு வித்­திட்டார். ஷார்ஜா கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று மின்­னொ­ளியில் நடை­பெற்ற இப்போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆப்­கா­னிஸ்தான் 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 215 ஓட்­டங்­களைக் குவித்­தது. ஆரம்ப வீரர் மொஹமத் ஷேஹ்ஸாத் 67 பந்­து­களை எதிர்­கொண்டு 8 சிக்­ஸர்கள், 10…

  12. ராயல் சேலஞ்சர்ஸ் அணி இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் மல்லையா விலகல்! புதுடெல்லி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பதவியை விஜய் மல்லையா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் ம…

  13. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூஸி. அணியில் ஜேம்ஸ் நீஷம் நியூஸிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம். | படம்: ராய்ட்டர்ஸ். இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பயணிக்கும் நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது, இதனையடுத்து கொல்கத்தா, இந்தூர் ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பன் மைதானத்தில் கடைசியாக டெஸ்டில் ஆடிய ஜேம்ஸ் நீஷம் மீண்டும் தன்னை நிரூபிக்க வாய்ப்பு பெற்றுள்ளார். நியூஸிலாந்து டெஸ்ட் அணி: கேன் வில்ல…

  14. நெதர்லாந்து கால்பந்து வீரர் ராபின் வேன் பெர்ஸி கண்ணில் காயம் (வீடியோ) ராபின் வேன் பெர்ஸி நினைவிருக்கிறதா? பிரேசில் நாட்டில் 2014ல் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தாரே... யார் கண் பட்டதோ இப்போது அவர் கண்ணுக்கு சிக்கல். மான்செஸ்டர், ஆர்சனல் கிளப்களின் முன்னாள் வீரரான ராபின் தற்போது, துருக்கியில் உள்ள பெனர்பேஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியின்போது பெனர்பேஸ் - அகிசர் அணிகள் மோதின. பெனர்பேஸ் அணியின் முதல் கோலை ராபின் அடித்தார். ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸில் வைத்து அகிசர் அண…

  15. 2019 வரை மெத்தியூஸே அணித் தலைவர் ; திலங்க சுமதிபால இலங்கை அணித் தலைவரை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கவில்லை. அடுத்த உலகக்கிண்ணம் வரை அஞ்சலோ மெத்தியூஸ் தான் அணித்தலைவரென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் நாம் கலந்துரையாடவில்லை. அணியில் தற்போது இருக்கும் குறைநிறைகளை பற்றியே நாம் ஆராய்ந்தோம்…

  16. 'இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ், தோனியின் நிலை என்ன?' - கேள்வி எழுப்பும் டிராவிட்! 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை வரப் போகிறது. அதற்கு முன் இந்திய அணியில் இருக்கும் சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி, பெருமளவு சோபிக்கவில்லை. குறிப்பாக, இறுதிப் போட்டியில் அவர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து, அணியில் அவர்கள் இடம் குறி…

  17. வங்கதேசத்தை மூழ்கடித்த ராம்தின், டேரன் பிராவோ சாதனை சதங்கள் செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியின் பேட்டிங் வங்கதேசத்தை மூழ்கடித்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் விளாச, வங்கதேசம் 247 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி தழுவியது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தினேஷ் ராம்தின், டேரன் பிராவோ இணைந்து 3வது விக்கெட்டுக்காக 258 ரன்கள் சேர்த்தது. புதிய ஒருநாள் சாதனையாகும். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க ஜோடி ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 238 ரன்களே உலக சாதனைய…

  18. களத்தில் அதிரடியாக ஆடும் ஹெர்ஷல் கிப்ஸ், கிரிக்கெட் சூதாட்ட விசாரணையின் போது மிரண்டு போயுள்ளார். டில்லி பொலிஸார் இவரிடம் 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு மடக்கியுள்ளனர். மிகுந்த பதற்றமாக இருந்த கிப்ஸ், சில கேள்விகளுக்கு `மறந்து விட்டேன்', `நினைவுக்கு வரவில்லை' என்று கூறி சமாளித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்த போது கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதில் அப்போதைய கப்டன் குரோஞ்ஞே, கிப்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நிக்கி போஜே சிக்கினர். குரோஞ்ஞே மரணமடைய, மற்ற இருவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்படும் அபாயம் இருந்ததால் இந்தியப் பயணத்தை கிப்ஸ் தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் இவர் மினி உலகக் கிண்ணத் தொடரில…

  19. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி ஒன்றில் ஸ்பாட் பிக்சிங்: அல்ஜசீரா வீடியோவால் பரபரப்பு படம். | ஏ.பி. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 2017-ல் ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடந்ததாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: அல்ஜஸீரா டிவி சேனல் ஆவண வீடியோ ஒன்றில் ராஞ்சியில் இந்தியா-ஆஸ்திரேலியா 2017 தொடரில் ஆடிய டெஸ்ட் போட்டி பற்றி காட்டப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஒரு கட்டத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சூதாட்டக்காரர்களின் நலன்களுக்காக ஸ்கோர் செய்தத…

  20. ஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் – ஹத்துருசிங்க எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அணி சிறந்த நிலைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ள இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பொறுமையுடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் பிறகு அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு சந்திக்க ஹத்துருசிங்க பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ”மேற்கிந்திய தீவுகளுக்கு நாங்கள் வந்தபோ…

  21. உலக கோப்பையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப்-10 பேட்ஸ்மேன்கள்! சென்னை: வரும் 14ம்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், பல நாட்டு ரசிகர்களும் தங்களது ஃபேவரைட் ஹீரோ பேட்ஸ்மேன்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை வைத்து காத்திருக்கின்றனர். இந்த உலக கோப்பையில் ஜொலிக்க வாய்ப்புள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான பத்து பேரின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் இப்போது பார்க்கலாம். ஏபிடி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். டெஸ்ட் போட்டியிலும் 2வது ரேங்க் இவருக்கு என்பதில் இருந்து எத்தனை திறமையான மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடியும். தொடர்ந்து 78 டெஸ்ட்…

  22. "ராக்கெட்" கெய்லின் செம ரெக்கார்ட்... 500 சிக்ஸ் அடித்து உலக சாதனை! பெங்களூர்: டுவென்டி 20 போட்டிகளில் 500 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தற்போது ஆடி வரும் கெய்ல், இதுவரை ஆடியுள்ள டுவென்டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 சிக்ஸர்களைக் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 500வது சிக்ஸரை விளாசினார் கெய்ல். இது கெய்லுக்கு 201வது டுவென்டி 20 போட்டியாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரான கீரன் போலார்ட் உள்ளார். அவர் இதுவரை 348 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்ஸர்களை விளாசியவர் கெய்ல்தான்.…

  23. இந்தியா-வங்கதேசம் போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி ஜூன் 7-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்படுகிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10-ம் தேதி ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. 9 ஆண்டுளுக்குப் பிறகு ஃபதுல்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால் ஒருநாள் போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி தடைபடுமானால் அடுத்த நாளில் நடத…

  24. இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி : January 27, 2019 பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதல் துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகளுகள் அணி முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களை எடுத்த அதே வேளை இங்கிலாந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இதனையடுத்து 212 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ஓட்டங்கை பெற்ற நிலையில் விளையாட்டினை நி…

  25. மைக்கேல் கிளார்க்கின் டாப்-5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர். தான் எதிர்கொண்ட அதிவேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் 'ர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.