விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
“என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” - யுவராஜ் சிங்கை வஜ்ரமாக்கிய அந்த திமிர்! ஆறு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த கிரிக்கெட் மேட்ச் அது. 2011 உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்திய அணியில் எல்லோரும் திணற, தனி ஆளாக சதமடித்து, பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வாங்கினார் யுவராஜ். பெரும் மகிழ்ச்சியோடு உறங்கச்சென்ற யுவராஜுக்கு அந்த இரவு அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. நள்ளிரவு திடீரென மூச்சு விட சிரமப்பட்டார்; சில நிமிடங்களில் ரத்த வாந்தி எடுத்தார். மருத்துவர் அறிவுரைப்படி மாத்திரைகளைச் சாப்பிட, அடுத்த அரைமணிநேரத்திலேயே பிரச்னை முடிவுக்கு வந்தது. தனக்கு ஏதோ ஒரு மிகப்பெரிய பி…
-
- 0 replies
- 824 views
-
-
ஊடகவியலாளரின் வாயை மூடச் செய்த கோலியின் பதில்! (காணொளி இணைப்பு) இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இ-20 போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நிருபர் ஒருவரது கேள்விக்கு அதிரடி பதிலளித்து அவரது வாயை மூடச் செய்தார் கோலி! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் இ-20 ஆகிய மூன்று தொடர்களிலும் இந்தியா வெற்றி வாகை சூடியது. மூன்று போட்டித் தொடர்களுக்கும் விராட் கோலியே தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான இ-20 போட்டியில் இந்தியா 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஒரு நிருபர், ‘ஆரம்பத்…
-
- 0 replies
- 307 views
-
-
‘கெப்டன் கூல்’ தோனிக்கு இந்திய அணி வழங்கிய விசேட பரிசு! திறமையான வழிநடத்தல் மற்றும் வசீகரமான தலைமைத்துவம் போன்றவற்றால் இந்திய கிரிக்கெட் அணிக்குப் பெரும் புகழ் தேடித் தந்திருக்கும் மகேந்திர சிங் தோனியை இந்திய கிரிக்கெட் அணி நினைவுப் பரிசளித்து கௌரவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இ-20 போட்டிக்கு முன்னதாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்திய அணி வீரர்கள் மற்றும் ஒரு சில அதிகாரிகளே கலந்துகொண்ட இந்த பிரத்தியேக நிகழ்வில், இந்திய அணி சார்பில் தோனிக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மரத்தாலான ஒரு சட்டகத்தில், தோனியின் மார்பளவுப் படமும், அவரது தலைமைத்துவத்தின் கீழ் பெற்ற முக்கியமான நான்கு வ…
-
- 0 replies
- 363 views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்திய சக வீரர் மீது கோபம் கிடையாது – போல்ட் ஊக்க மருந்து பயன்படுத்தியமை நிரூபணமான சக வீரர் மீது கோபம் கிடையாது என நட்சத்திர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார். சக வீரரின் ஊக்க மருந்து பயன்பாட்டு குற்றச்சாட்டு காரணமாக போல்ட் ஒர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இழக்க நேரி;ட்டுள்ளது. அஞ்சல்ப் போட்டியில் ஜமெய்க்காவின் சார்பில் பங்கேற்ற வீரர் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளதனால் இவ்வாறு பதக்கம் ஒன்றை இழக்க நேரிட்டமை வருத்தமளிக்கின்றது என்ற போதிலும் சக வீரர் மீது குரோத உணர்வு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றிருந்த ஹூசெய்ன் போல்ட்இதில் ஒரு பதக்கத்தை தற்…
-
- 0 replies
- 489 views
-
-
இந்தியாவிற்கு எதிரான வங்காள தேச கிரிக்கெட் அணி அறிவிப்பு இந்தியாவிற்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட வங்காள தேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்காள தேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வருகிற 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் வங்காள தேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு எதிரான தங்கள் அணியை இன்று அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. முஸ்டாபிஜ…
-
- 0 replies
- 399 views
-
-
சச்சினின் துடுப்பாட்டத்தைத் திருத்திய ஹோட்டல் சிப்பந்தி தனது ‘பேட்’டை லாவகமாகத் திருப்பி விளையாடுவதற்கு சென்னை ஹோட்டல் ஒன்றின் சிப்பந்தியே யோசனை கூறியதாகத் தெரிவித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். மும்பையில், ‘சச்சின் பை ஸ்பார்ட்டன்’ என்ற விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சச்சின் அங்கு பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: போட்டி ஒன்றுக்காக நான் சென்னை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் வந்த ஹோட்டல் சிப்பந்தி ஒருவர், ‘நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்லலாமா?’ என்று பணிவாகக் கேட்டார். தயங்காமல் சொல்லுங்கள் என்று நான் கூறினேன். ‘உங்கள் முழங்கைக் கவசம்…
-
- 1 reply
- 501 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-01#page-12
-
- 0 replies
- 385 views
-
-
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் என்ரே ரஸலுக்கு ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்டனில் உள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனை குழுவுக்கு தனது இருப்பிடம் தொடர்பான தகவலை தெரிவிக்காத குற்றச்சாட்டுக்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊக்கமருந்து சோதனை குழு கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பலமுறை அவரை தொடர்புக்கொண்டு அவரது இருப்பிடம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதும் ரொஸல் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரொஸல் எதிர்வரும் வருடம் ஜனவரி 30 ஆம் திகதிவரை கிரிக்கெட் விளையாடத் …
-
- 0 replies
- 306 views
-
-
வயசானாலும் உன் 'லைனும்... லெங்த்’தும்... வாவ் நெஹ்ரா! நெகிழும் நெட்டிசன்ஸ் #Nehra #AshishNehra தான் செய்யும் தொழிலை நேசிப்பவன், தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அவற்றுக்காக தரத் துணிவான் எனச் சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி தனது நாடி, தசை, நாளம், புத்தி எல்லாவற்றிலும் தனது தொழிலை நேசித்த, அதில் வெற்றியடைய முயற்சித்து கொண்டே இருக்கும் ஒரு மகத்தான கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. அவரை கிண்டல் செய்யலாம், கேலி பண்ணலாம் ஆனால் புறக்கணிக்கவே முடியாது. ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பும் இருந்தது இல்லை, ரசிகர் பட்டாளமும் இல்லை, விளம்பர வருவாயும் கிடையாது, ஆனாலும் கிரிக்கெட்டை நேசித்த, அணியை நேசித்த, தேசத்தை நேசித்த பிளேயர் நெஹ்ரா…
-
- 0 replies
- 658 views
-
-
ஆஸ்திரேலியன் ஓபனில் நடாலை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஃபெடரர்.!! ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வென்றுள்ளார் ஃபெடரர். இருவரும் 2-2 செட்களை கைப்பற்றவே 5-வது செட்டில் அரங்கமே நுனி சீட்டுக்கு வந்தது. இறுதி செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், நடாலை திக்குமுக்காட வைத்தார். இது ரோஜர் ஃபெடரரின் 18-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79088-roger-federer-beats-rafael-nadal-and-wins-australian-open-title.art
-
- 2 replies
- 588 views
-
-
தென்னாபிரிக்காவில் மூத்தவர்கள் சோடைபோக சம்பியனானது இளம் படை தென்னாபிரிக்காவில் இலங்கை அணி தட்டுத் தடுமாறி விளையாடிவரும் நிலையில், தென்னாபிரிக்க மண்ணில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை இளம் அணி வெற்றிகொண்டு முக்கோணத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியும், இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளம் கிரிக்கெட் அணியும் தென்னாபிரிக்காவில் முகாமிட்டுள்ளன. இதில் 19 வயதிற்குட்பட்டோருக்கான மூன்று நாடுகள் மோதும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் இலங்கை, சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்தத் தொடரின் இறுத…
-
- 0 replies
- 404 views
-
-
இந்தியாவின் மலிங்கா... பூம் பூம் பும்ராவின் பின்னணி தெரியுமா? #Bumrah இங்கிலாந்திடம் தோல்வியடைந்து தலைகுனிவை சந்தித்திருக்க வேண்டிய தருணத்தில், 'அவ்ளோ சீக்கிரம் விட்ர மாட்டோம் கண்ணுகளா' என கெத்தாக ஜெயித்து நிமிர்ந்திருக்கிறது இந்தியா. அணியின் வெற்றிக்கு அதிமுக்கிய காரணம் பும்ராவின் அந்த மேஜிக் ஓவர். தான் பதிவியேற்ற முதல் தொடரையே தோல்வியுடன் துவங்கியிருக்க வேண்டிய கோஹ்லிக்கு, டிவிஸ்ட் கொடுத்து மேட்ச்சை ஜெயிக்க வைத்து டி20 தொடரை உயிர்ப்புடன் வைக்க உதவியிருக்கிறது நெஹ்ரா - பும்ரா இணை. யார் இந்த பும்ரா ? குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பிறந்தவர் பும்ரா, ஆனால் சீக்கிய வம்சத்தை சேர்ந்தவர். ஜாஸ்பிட் பும்ராவின் முழு பெயர் ஜாஸ்பிட் ஜாஸ்பிர் …
-
- 0 replies
- 506 views
-
-
திரில் போட்டியில் நியுஸிலாந்து வெற்றி ; மயிரிலையில் ஆஸி தோல்வி நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் ஹசல்வூட்டின் கவனக்குறைவினால் அவுஸ்திரேலிய அணி மயிரிலையில் வெற்றியை நழுவ விட்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நியுஸிலாந்து அணி சார்பில் புரூம் 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் கடும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. ஒரு கட்டத்தில் அ…
-
- 0 replies
- 410 views
-
-
U-19 இந்திய அணி துணை பயிற்சியாளர் மரணம்! இந்திய கிரிக்கெட் (19 வயதுக்குபட்ட) அணியின் பயிற்சியாளர் ராஜேஷ் சவாந்த் மும்பையில் உள்ள ஹோட்டலில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் பயிற்சிக்கு வராததால், சந்தேகமடைந்து, அறையை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ராகுல் டிராவிட்டுக்கு கீழ் உள்ள பயிற்சிக் குழுவில் இவரும் ஒருவர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/india/79078-indian-cricket-u-19-trainer-rajesh-sawant-died-in-hotel.art
-
- 0 replies
- 404 views
-
-
ஆஸ்திரேலிய ஓபன்: செரினா சாம்பியன் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதினர். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் தனது மூத்த சகோதரி வீனஸை வீழ்த்தி செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம் செரினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குறிப்பாக கிராண்ட் ஸ்லாம்களில் அவர் வெல்லும் 23-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79030-serena-williams-wins-in-australian-open-final.art
-
- 2 replies
- 566 views
-
-
சர்வதேச சைக்கிள் சவாரி வடக்கு - கிழக்கு அணிகளுக்கு விசேட அழைப்பு எஸ்.ஜே.பிரசாத் 'டீ – கப்' என்ற பெயரில் இலங்கையில் சர்வதேச அணிகளுக்கிடையிலான சைக்கிள் சவாரிப் போட்டி இவ்வருடம் ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ளது. இந்தத் தொடரில் வடக்கு, கிழக்கு அணிகள் பங்குபற்ற வேண்டும் என்றும் ஏற்பாட்டுக்குழு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளது. அந்த வகையில் இந்தப் போட்டி சர்வதேச தரத்திற்கு அமைய நடத்தப்படவுள்ளது. விளையாட்டுத் துறையின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த சைக்கிள் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இவ்வருடம் நடைபெறவுள்ள டீ – கப் சைக்கிள் சவாரியில் 100 பேர் பங்கு…
-
- 0 replies
- 284 views
-
-
பூஜ்ஜியத்தில் பும்ரா... எதுல தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி தற்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. 2007 ல் இருந்து கேப்டனாக விளங்கிய தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது, மீண்டும் சிக்ஸர் மன்னன் யுவராஜ் அணியில் சேர்க்கப்பட்டு தன் அதிரடியை வெளிப்படுத்தியது, ரஹானே பார்ம் இழந்து அணியில் இருந்து நீக்கப்பட்டது, கேதார் ஜாதவின் சதம், விராட் கோஹ்லியின் தலைமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்திய அணி தன் திறமையை பல வீரர்களின் துணைகொண்டு கச்சிதமாக காய் நகர்த்திதான் வருகிறது. ஆனால், இந்திய அணியில் இடக்கை பந்து வீச்சாளர் யாரும் அணியில் நிரந்திரமாக இல்லை என்பது தான் ஒரு குறை. இந்த இடத்திற்கு அவ்வப்போது…
-
- 0 replies
- 530 views
-
-
பல்கேரிய வீரரை 5 மணி நேரம் போராடி வீழ்த்தினார் ரபேல் நடால்- இறுதியில் பெடரருடன் மோதல் டிமிட்ரோவை வீழ்த்திய நடால். | படம்.| ஏஎப்பி. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மேடக், செக் குடியரசின் லூசி சபரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆட…
-
- 0 replies
- 416 views
-
-
ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா! இந்தியா - இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டி, நேற்று கான்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ரெய்னா, 23 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இவர் தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த உதவியதுடன், அணியின் ரன் ரேட்டையும் அதிகரித்தார். 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, ஆரம்பத்தில் இருந்தே அலட்டிக் கொள்ளாமல் அடித்து ஆடியது. …
-
- 0 replies
- 459 views
-
-
நியூசிலாந்து சுற்றுப்பயணம்: ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் விலகல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் …
-
- 0 replies
- 313 views
-
-
கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். கெளரவத்தை நிராகரித்தார் தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார். இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ரா…
-
- 0 replies
- 386 views
-
-
ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி! ‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார். …
-
- 0 replies
- 360 views
-
-
தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர் இன்று ஆரம்பம் தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் செஞ்சூரியன் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் - தென் ஆபிரிக்க அணித் தலைவர் பர்ஹான் புஹார்தீன் இரண்டு அணிகளும் 2012 முதல் கடந்த வருடம் வரை விளையாடியுள்ள 6 சர்வதேச இருபது 20 போட்டிகளில் 4 – 2 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. இதேவேளை தென் ஆபிரிக்காவுக்கு எதி…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா மற்றும் வீனஸ் ஆகிய இருவரும் வென்றதையடுத்து, இறுதி போட்டியில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து களமிறங்கவுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் தனது அரையிறுதி போட்டியில் குரோஷியாவை சேர்ந்த மிர்ஜனா லுசிக்-பரோனியை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வென்றார். முன்னதாக நடந்த முதல் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், 6-7(3) 6-2 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கோகோ வான்டெவெக்கைத் தோற்கடித்தார். …
-
- 0 replies
- 354 views
-
-
மேலாடையை தூக்கியதால் சர்ச்சையில் சிக்கிய தாஹீர் ; ஐ.சி.சி எச்சரிக்கை (காணொளி இணைப்பு) தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது அவர் அணிந்திருந்த அணியின் சீருடைக்குள் தனிப்பட்ட நபரொருவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அணிந்திருந்த சீருடைக்குள் இருந்த புகைப்படத்தை அவர் போட்டியின் போது வெளிக்காட்டியதால் தாஹீரை ஐ.சி.சி எச்சரித்துள்ளது. இம்ரான் தாஹீர் தனது அணி மேலாடைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர் ஜுனைட் ஜேம்சாட் புகைப்படம் பொறிக்கப்பட்ட உள்ளாடையினை அணிந்திருந்தமை குறிப்பிடத்த…
-
- 0 replies
- 371 views
-