Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. U-19 இந்திய அணி துணை பயிற்சியாளர் மரணம்! இந்திய கிரிக்கெட் (19 வயதுக்குபட்ட) அணியின் பயிற்சியாளர் ராஜேஷ் சவாந்த் மும்பையில் உள்ள ஹோட்டலில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் பயிற்சிக்கு வராததால், சந்தேகமடைந்து, அறையை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ராகுல் டிராவிட்டுக்கு கீழ் உள்ள பயிற்சிக் குழுவில் இவரும் ஒருவர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/india/79078-indian-cricket-u-19-trainer-rajesh-sawant-died-in-hotel.art

  2. ஆஸ்திரேலிய ஓபன்: செரினா சாம்பியன் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதினர். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் தனது மூத்த சகோதரி வீனஸை வீழ்த்தி செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம் செரினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குறிப்பாக கிராண்ட் ஸ்லாம்களில் அவர் வெல்லும் 23-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79030-serena-williams-wins-in-australian-open-final.art

  3. சர்வதேச சைக்கிள் சவாரி வடக்கு - கிழக்கு அணிகளுக்கு விசேட அழைப்பு எஸ்.ஜே.பிரசாத் 'டீ – கப்' என்ற பெயரில் இலங்­கையில் சர்­வ­தேச அணி­க­ளுக்­கி­டை­யி­லான சைக்கிள் சவாரிப் போட்டி இவ்­வ­ருடம் ஏப்ரல் மாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்தத் தொடரில் வடக்கு, கிழக்கு அணிகள் பங்­கு­பற்ற வேண்டும் என்றும் ஏற்­பாட்­டுக்­குழு விசேட அழைப்­பொன்றை விடுத்­துள்­ளது. அந்த வகையில் இந்தப் போட்டி சர்­வ­தேச தரத்­திற்கு அமைய நடத்­தப்­ப­ட­வுள்­ளது. விளை­யாட்டுத் துறையின் மூலம் சுற்­று­லாத்­து­றையை மேம்­ப­டுத்­தவும் இந்த சைக்கிள் சவாரி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முதல் கட்­ட­மாக இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள டீ – கப் சைக்கிள் சவா­ரியில் 100 பேர் பங்­கு­…

  4. பூஜ்ஜியத்தில் பும்ரா... எதுல தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி தற்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. 2007 ல் இருந்து கேப்டனாக விளங்கிய தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது, மீண்டும் சிக்ஸர் மன்னன் யுவராஜ் அணியில் சேர்க்கப்பட்டு தன் அதிரடியை வெளிப்படுத்தியது, ரஹானே பார்ம் இழந்து அணியில் இருந்து நீக்கப்பட்டது, கேதார் ஜாதவின் சதம், விராட் கோஹ்லியின் தலைமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்திய அணி தன் திறமையை பல வீரர்களின் துணைகொண்டு கச்சிதமாக காய் நகர்த்திதான் வருகிறது. ஆனால், இந்திய அணியில் இடக்கை பந்து வீச்சாளர் யாரும் அணியில் நிரந்திரமாக இல்லை என்பது தான் ஒரு குறை. இந்த இடத்திற்கு அவ்வப்போது…

  5. பல்கேரிய வீரரை 5 மணி நேரம் போராடி வீழ்த்தினார் ரபேல் நடால்- இறுதியில் பெடரருடன் மோதல் டிமிட்ரோவை வீழ்த்திய நடால். | படம்.| ஏஎப்பி. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மேடக், செக் குடியரசின் லூசி சபரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆட…

  6. ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா! இந்தியா - இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டி, நேற்று கான்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ரெய்னா, 23 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இவர் தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த உதவியதுடன், அணியின் ரன் ரேட்டையும் அதிகரித்தார். 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, ஆரம்பத்தில் இருந்தே அலட்டிக் கொள்ளாமல் அடித்து ஆடியது. …

  7. நியூசிலாந்து சுற்றுப்பயணம்: ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் விலகல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் …

  8. கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். கெளரவத்தை நிராகரித்தார் தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார். இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ரா…

  9. ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி! ‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார். …

  10. தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர் இன்று ஆரம்பம் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் செஞ்­சூ­ரியன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்ள போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸ் - தென் ஆபி­ரிக்­க­ அணித் தலைவர் பர்ஹான் புஹார்தீன் இரண்டு அணி­களும் 2012 முதல் கடந்த வருடம் வரை விளை­யா­டி­யுள்ள 6 சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­களில் 4 – 2 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபி­ரிக்கா முன்­னி­லையில் இருக்­கின்­றது. இதே­வேளை தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­…

  11. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா மற்றும் வீனஸ் ஆகிய இருவரும் வென்றதையடுத்து, இறுதி போட்டியில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து களமிறங்கவுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் தனது அரையிறுதி போட்டியில் குரோஷியாவை சேர்ந்த மிர்ஜனா லுசிக்-பரோனியை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வென்றார். முன்னதாக நடந்த முதல் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், 6-7(3) 6-2 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கோகோ வான்டெவெக்கைத் தோற்கடித்தார். …

  12. மேலாடையை தூக்கியதால் சர்ச்சையில் சிக்கிய தாஹீர் ; ஐ.சி.சி எச்சரிக்கை (காணொளி இணைப்பு) தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது அவர் அணிந்திருந்த அணியின் சீருடைக்குள் தனிப்பட்ட நபரொருவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அணிந்திருந்த சீருடைக்குள் இருந்த புகைப்படத்தை அவர் போட்டியின் போது வெளிக்காட்டியதால் தாஹீரை ஐ.சி.சி எச்சரித்துள்ளது. இம்ரான் தாஹீர் தனது அணி மேலாடைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர் ஜுனைட் ஜேம்சாட் புகைப்படம் பொறிக்கப்பட்ட உள்ளாடையினை அணிந்திருந்தமை குறிப்பிடத்த…

  13. எமது அணி திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் : விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி: இலங்கையின் வெற்றிகுறித்து சங்கா,மஹேல தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்வானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று இருபது20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது. …

  14. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-25#page-12

  15. சகவீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் 4X100 மீ ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இழந்தார் உசைன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரிலே ஓட்டக்குழுவினர். | படம்.ஏ.பி. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் 4X100மீ பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை இழந்தார். நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ‘மெதில்ஹெக்சானியமின்’ என்ற ஊக்கமருந்து இருந்தது மறு ஆய்வின் போது தெரியவந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது, இதனையடுத்து ‘ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறது’ என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரி…

  16. கருண் நாயர் முச்சதம் அடித்தது போல் இந்தியாவுக்கு எதிராக வார்னர் விளாச வேண்டும்: ஸ்மித் விருப்பம் வார்னர், கேப்டன் ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்த வேண்டுமெனில் பெரிய ஸ்கோர் தேவை, அதற்கு வார்னர், கருண் நாயர் போல் முச்சதம் விளாச வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய தொடரில் நமது மூத்த வீரர்கள் தங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். இதைத்தான் நாம் இலங்கையில் சரிவர செய்யவில்லை. அதனால் நாங்கள் விரும்பிய முடிவுகள் கிட்டவில்லை. எனவே எங்கள் விரு…

  17. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது டெல்லி: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அறிவிக்கப்பட்டுள்ள…

  18. பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மாரியப்பன் தங்கவேல் | கோப்புப் படம். பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற கு…

  19.  'கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும்' வா.கிருஸ்ணா கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார். மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. …

  20. 7 மாதங்களுக்குப் பின் அணிக்குத் திரும்புகிறார் டி வில்லியர்ஸ்..! அதே வேகம், அதே அதிரடி என உற்சாகமாக அணிக்குத் திரும்பியிருக்கிறார் டி வில்லியர்ஸ். கடந்த ஜூன் மாதத்தில் கரீபிய மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முத்தரப்பு போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து ஒதுங்கினார். காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருந்தாலும் பூரண குணமடைய நீண்ட காலம் ஆனது. இதனால் அணியில் இருந்து பல மாதங்கள் ஒதுங்கியே இருந்தார். இதோ இந்த தொடரில் வந்துவிடுவார், அந்த தொடரில் வந்துவிடுவார் என ரசிகர்கள் ஒவ்வொரு முறை எதிர்பார்க்கும்போதும் ஃபிட்னெஸ் சோதனையில் தோல்வியைத் தழுவி விளையாட முடியாத சூழ்நிலையில் இருந்தார். …

  21. அவுஸ்திரேலிய ஓபன் ; 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய வீனஸ் வில்லியம்ஸ் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப்போட்டியில் ரஸ்யாவின் அனஸ்டாசியா பவ்ல்யுசென்கோவாவை எதிர்கொண்ட வீனஸ் வில்லியம்ஸ் 6-4 என்ற அடிப்படையில் முதல் செட்டை வென்ற நிலையில், இரண்டாவது சுற்று 6-6 என சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில் டை பிரேக்கர் செட்டை எதிர்கொண்ட வீனஸ் 7 -3 என்ற அடிப்படையில் வென்று அரையிறுதிக்கு தகுதி…

  22. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி: அஸ்வின், ஜடேஜா, சமிக்கு ஓய்வு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்து இருக்கிறது. இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும் 3 ஒரு…

  23. பாக்.எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா திணறல் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. பிரிஸ்பென்: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் அ…

  24. கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். http://www.vikatan.com/news/india/76889-dhoni-steps-down-as-captain-of-the-indian-cricket-team.art ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி திடீர் விலகல் தோனி. | கோப்புப் படம்: சந்தீப் சக்சேனா. …

  25. விரைவாக 1000 ஓட்டங்களைப் பெற்று விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் 22 வயதான இளம் வீரர் பாபர் அஸாம் 100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். அவர் இந்த போட்டிக்கு முன் 20 போட்டியில் 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில் 47 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் விரைவாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.