Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. யாழில் மைலோ கிண்ண கால்பந்தாட்டம் ஆறு லீக்குகளிலிருந்து 160 கழகங்கள் யாழ். மாவட்­டத்தில் கால்­பந்­தாட்டக் கழ­கங்­களை ஊக்­கு­விக்கும் நோக்கில் யாழ். மாவட்ட செய­ல­கமும் நெஸ்ட்லே லங்கா (பி எல் சி) நிறு­வ­னமும் இணைந்து நடத்தும் ‘மைலோ கிண்ணம் யாழ்ப்­பாணம்’ என்ற பெய­ரி­லான கால்­பந்­தாட்டப் போட்­டிகள் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. 40 கழ­கங்­க­ளுடன் 2013இல் ஆரம்­பிக்­கப்­பட்ட இப் போட்­டியில் தொடர்ந்த வரு­டங்­களில் முறைஙே 60 கழ­கங்­களும் 100 கழ­கங்­களும் பங்­கு­பற்­றின. இவ் வருடப் போட்­டி­களில் தீவகம் (31 கழ­கங்கள்), யாழ்ப்­பாணம் (28), வலி­காமம் (38), வட­ம­ராட்சி (17), பருத்­தித்­துறை (28),, மரு­தங்­கேணி (18) ஆகிய லீக்­கு­களைச் சேர்ந்த 160 கழ­கங…

  2. நட்சத்திரங்களின் உதைபந்தாட்டம் மானிப்பாய் இந்து ஹற்றிக் வெற்றி சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் நடாத்திவரும் அழைக்கப்பட்ட பாடசாலைக ளுக்கிடையிலான நட்சத்திரங்களின் உதைபந்தாட்டத் தொடரில் மானிப்பாய் இந்துக்கல்லூரி சம்பியனானது. குறித்த போட்டியின் இறுதியாட்டமானது நேற்றைய தினம் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் கல்லூரியின் அதிபர் மு. செல்வஸ்தான் தலைமையில் ஆரம்பமானது. மானிப்பாய் இந்துக்கல்லுரி எதிர் மகாஜன கல்லுரி அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன. இப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 3:0 என்ற கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது. குறித்த பாடசாலையானது தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாக வெற்றி பெ…

  3. கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சரித்திரத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான யூனுஸ் கான் ஓர் அரிய சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலேயே யூனுஸ் கான் இந்த சாதனையை படைத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிரிஸ் கெயிலை பின்தள்ளியுள்ளார். சர்வதேச ஆட்டங்களில் குறைந்தது 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்தவர்களில் அதிகமான பூச்சியத்துடன்( டக் அவுட் ) ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் இப்போது யூனுஸ் கான், கெயிலை பின்தள்ளியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வது …

  4. இங்கிலாந்து அணியின் திறனை இந்தியாவில் தீர்மானிக்க முடியும்: இயன் போத்தம் கருத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேச மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. முதல் டெஸ்டில் தட்டுத்தடுமாறியே இங்கிலாந்து அணி வெற்றியை வசப்படுத்தியிருந்தது. 2-வது டெஸ்ட்டில் 100 ரன்கள் வரை விக்கெட்களை இழக்காமல் இருந்த நிலையில் அடுத்த 64 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத் தது. இதனால் 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததுடன் போட்டியை 3 நாட்களில் முடிவுக்கும் கொண்டு வந்தது இங்கிலாந்து அணி. ஒரே ஷெசனில் இங்கிலாந்து அணியை சுருட்டிய வங்கதேச அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. சுழ…

  5. 'உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை' பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து, தொடரை 1-1 என சமப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், இங்கிலாந்து அணியில், உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என ஏற்றுக் கொண்டுள்ளார். 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதலாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், "240 என்பது, சிறப்பான இலக்காக இருக்குமென எண்ணினேன். அவர்கள், 30 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றார்கள். எங…

  6. இலங்கை நடுவர் குமார் தர்மசேனாவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்! அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 2ம் திகதி இந்தியாவுக்கு செல்கிறது. அந்த அணி டாக்காவில் இருந்து இந்தியா புறப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தாரை நடுவராக ஐசிசி நியமித்திருந்தது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த இடத்திற்கு இலங்கை நடுவர் குமார் தர்மசே…

    • 0 replies
    • 411 views
  7. களமிறங்கிய ஜூனியார் மெஸ்ஸி..! ரொனால்டோ அணிக்கு நெருக்கடி? 0 7 உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் மகன் தியாகோ மெஸ்ஸி தனது முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது. நான்கு வயதான தியாகோ மெஸ்ஸி எதிர்காலத்தில் தந்தையை போலவே மிக சிறந்த ஆட்டக்காரராக திகழ்வார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலைியல், பார்சிலோனா கிளப்பின் இளைஞர் அகாடமியான La Masiaயாவில் தனது முதல் பயிற்சி வகுப்பில் களமிறங்கியுள்ளார் தியாகோ மெஸ்ஸி. பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் பார்சிலோனாவ…

    • 0 replies
    • 343 views
  8. வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது பங்களாதேஷ் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல் முறையாக வெற்றி கொண்டுள்ளது. பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியினை வெற்றிக் கொண்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். தனது முதலாவது இனிங்ஸில் பங்களாதேஷ் அணி 63.5 ஓவர்களுக்கு சகல விக்…

  9. சம்பியன் வாய்ப்பைத் தக்கவைத்தார் ஹமில்டன் மெக்ஸிக்கன் கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது நான்காவது போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லுவதற்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துள்ளார், பந்தயத்தின் ஆரம்பத்தில், ஹமில்டனின் காரின் முன் சக்கரம் இறுகியதால், முதலாவது வளைவில் வெளியே சென்று, அதிர்ச்சியொன்றை எதிர்நோக்கியிருந்தாலும், அதன்பின்னர், எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்நோக்காது, தனது வாழ்நாளில், 51ஆவது வெற்றியைப் பெற்றார். பிரேஸில், அபு தாபியில் இடம்பெறவுள்ள பந்தங்களில் மொத்தமாக 50 புள்ளிகளைப் பெறமுடியும் என்ற நிலையில், தனது சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்கை விட 19…

  10.  'பாம்பின் தலைக்கு இலக்கு வைப்பு' அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தை இலக்கு வைத்துள்ளதாக, தென்னாபிரிக்க அணியின் தலைமை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டுள்ளார். "பாம்பின் தலையை நீங்கள் வெட்டினால், உடம்பின் ஏனைய பகுதிகளும் வீழ்ந்துவிடும். கடந்த காலங்களில், அதை நாங்கள் செய்திருக்கிறோம். அணித்தலைவரை இலக்கு வைக்க நாங்கள் முயன்றிருக்கிறோம், ஏனெனில், அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினால், ஏனையோரையும் அது பாதிக்கும்" என்று, டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஸ்டெய்ன், "அ…

  11. டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுத்து சரித்திரம் படைத்தார் மொஹமட் அமீர் டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுத்து சரித்திரம் படைத்தார் மொஹமட் அமீர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதலாவது பிடியை அபாரமாக எடுத்து சரித்திர சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார் பாகிஸ்தானின் மொஹமட் அமீர். கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சாதாரண பிடியெடுப்பதற்கு ஏன் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் ஜோசிக்கலாம். ஆம், இந்தப் பிடியை எடுப்பதற்காக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் 7 ஆண்டுகள் காத்திருந்தார் என்பது ஆச்சரியமே. 2009 ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய அமீர், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான…

  12. ஒரு காலை இழந்தும் ஃபீல்டிங் செய்த கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மாற்றுத் திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் தாமஸ் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரது செயற்கை கால் தனியாக விழுந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ச்சியாக பந்தை தடுத்து கீப்பரிடம் த்ரோ செய்தார். செயற்கை கால் இழந்தாலும், விளையாட்டில் முழு ஈடுபாடு காண்பித்த அவரது செயல் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. இது பற்றி முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் பால் காலிங்வுட்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில், பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். http://www.vikatan…

  13. "தற்கொலை செய்ய நினைத்தேன்" - சுயசரிதையில் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு, முதல் திருமணம் தோல்வி... இரண்டும் சேர்ந்து வதைக்க, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கெள்ள நினைத்ததாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், தன் சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். பிராட் ஹாக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்துவீச்சாளர். 1996-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன இவரால், ஷேன் வார்ன் புகழ் வெளிச்சத்துக்கு முன் பிரகாசிக்க முடியவில்லை. ஆனாலும், 2003 மற்றும் 2007 ல் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். 2008-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் …

  14.  'உயர்ந்து நிற்கிறார் சான்ட்னெர்' இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஓரளவு முன்னேற்றமான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், அத்தொடரையும் 2-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடினமான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், மிகவும் சிறப்பான இந்திய அணிக்கெதிராக 2-2 என்ற நிலையில் காணப்பட்ட நிலைக்கு, சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம். அது மிகவும் அற்புதமான செயற்பாடு. ஆனால், இறுதித் திறமை வெளிப்பாட்டைத் தாண்டிப் பார்க்க முடியாதுள்ளது" என்றார். 5ஆவது போ…

  15. தீபாவளி பரிசாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இறுதி போட்டியில் இந்தியா 3:2 என்ற புள்ளிக்கணக்கில் சம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. நிக்கின் திம்மையா அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது 2011 ஆம் ஆண்டு இதே போட்டியில் இவ்விரு அணிகளும் ஆடி பெற்ற வெற்றிக்கு பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா வென்றுள்ளது. தற்காத்து விளையாடுவதில் ஏற்பட்ட சில சறுக்கல்களுக்கு பின்னர், பொதுவான இந்தியாவின் ஆதிக்கமே விளையாட்டில் தொடர்ந்தது. இந்தியா வீரர் ருபின்தர் பால் சிங் 18-வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இந்தியாவின…

  16. இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல், சிற்றி, ஆர்சனல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்றுச் சனிக்கிழமை (29), இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், வட்போர்ட், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் மன்செஸ்டர் யுனைட்டெட், பேர்ண்லி ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. லிவர்பூல், கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. லிவர்பூல் சார்பாக, எம்ரே கான்,டெஜான் லொவ்ரென், ஜோயல் மட்டிப், ரொபேர்ட்டோ…

  17. இந்திய அணியை அச்சுறுத்த இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ வருகிறார் சக்லைன் முஷ்டாக் அடில் ரஷீத்துடன் சக்லைன் முஷ்டாக். | கெட்டி இமேஜஸ் முன்னாள் பாகிஸ்தான் ‘கிரேட்’ சக்லைன் முஷ்டாக், இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து தொடரில் சக்லைனின் அறிவுரைகள் இங்கிலாந்து அணிக்கு உதவியது. இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ சக்லைன் முஷ்டாக் ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். நவம்பர் 2-ம் தேதி முதல் இவர் இங்கிலாந்து அணியுடன் இருந்து பயிற்சி அளிப்பார். காரெத் பாட்டீ, அடில் ரஷீத், சஃபர் அன்சாரி ஆகியோர் தங்க…

  18. ஸ்டோக்ஸ் பவுன்சரில் கீழே விழுந்த முஷ்பிகுர்; தமிம் சதத்திற்கு பிறகு சரிந்த வங்கதேசம் ஸ்டோக்ஸ் பவுன்சரில் தலையில் வாங்கி கீழே விழுந்த முஷ்பிகுர் ரஹிம் எழுந்து நிற்க முயல்கிறார். | படம்: ஏ.எஃப்.பி. 2-வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த தமிம் இக்பால். | படம்: ஏ.பி. டாக்காவில் இன்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்ட முடிவில் இங்கிலாந்து குக் (14), டக்கெட் (7), பாலன்ஸ் (…

  19. ஒருநாள் தொடரிலும் ஆவேசமாகவே விளையாடுவோம்: அஜிங்கிய ரஹானே உறுதி ரஹானே. | படம்: விவேக் பெந்த்ரே. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைபிடித்த அதே ஆவேசமான அணுகுமுறையையே ஒருநாள் தொடரிலும் கடைபிடிப்போம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தரம்சலாவில் அவர் கூறியதாவது: கட்டுக்கோப்பு மிக முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆவேசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒருநாள் தொடரிலும் அதே அணுகுமுறையிலேயே ஆடுவோம். தீவிர கிரிக்கெட்டை எங்கள் பலத்திற்குத் தக்கவாறு ஆடுவோம். எதிரணியினரின் பலம், பலவீனத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை. டெஸ்ட் தொடருக்குப் பிறகே ஒருநாள் தொடரை ஆவலுடன் நான் எதிர்நோக்கினேன். இங்கும் புதிதாகவே தொடங்க …

  20. WTA டென்னிஸ்: சானியா - ஹிங்கிஸ் இணை தோல்வி WTA டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா - மார்டினா ஹிங்கிஸ் இணை போராடி தோல்வி அடைந்துள்ளது. ரஷ்யாவின் மகாரோவா - வெஸ்னினா ஜோடியிடம் தோல்வி கண்டது சானியா இணை. 6-3, 2-6, 6-10 என்ற செட் கணக்கில் வீழ்ந்துள்ளது. இதன் மூலம் சிறிய இடைவெளிக்கு பின் இணைந்த இந்திய - ரஷ்ய வெற்றி இணையின் பட்டக்கனவு முடிவுக்கு வந்தது. http://www.vikatan.com/news/sports/70880-wta-tennis-sania---hingis-lost-in-semi-final.art

  21. 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம் 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம். ***** இப்பொழுது போலல்ல அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதில் கிரிக்கெட் பிரியர்களுக்கு வெறித்தனம் இருக்கும். சீவிய தென்னம்மட்டை அல்லது சிறிய அளவிலான மரத்தாலான பற் சகிதம் வெள்ளை , மஞ்சள் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த காலத்தில்தான் 1996 உலகக்கிண்ணபோட்டிகள் ஆரம்பமாயிற்று. சங்கக்கடையில எப்பிடியாவது கஷ்டப்பட்டு 2 போத்தில் மண்ணெண்ணெய் உசார் செய்து கிடைக்காத பட்சத்தில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் டைனமோ சுத்தி கரண்டெடுத்து அன்ரனாக்கு இரண்டு எக்ஸ்ட்ரா பைப் போட்டு உயர்த்தி அப்பிடி சுத்தி இப்பிடி சுத்தி ஒருவாறாக ரூபவாஹினியை பிடி…

  22. ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது பாரிய தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாக உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊக்க மருந்து சோதனைகள் தொடர்பில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனைகள் தொடர்பில் திருப்திகொள்ள முடியாது எனவும்குறிப்பிட்டுள்ளது. சில நாட்களில் சுமார் 50 வீதமான சோதனைகள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தகவல் உள்ளீட்டு தவறுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்களில் சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/5076 Tags50 வீதமான சோதனைகள்

    • 0 replies
    • 218 views
  23. 900 ! - போட்டிகள், சாதனைகள், நட்சத்திரங்கள்... ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 900 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி புதிய மைல் கல்லைப் பதித்திருக்கிறது இந்திய அணி. அதுவும் 900 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி இந்தியாதான். அக்டோபர் 16-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான போட்டிதான் இந்தியாவுக்கு 900-மாவது போட்டி. இந்தத் தருணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் முத்தான முதல் முத்திரைகளைப் பதித்த 10 வீரர்களைப் பார்ப்போமா? அஜித் வடேகர் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியை வழி நடத்திய முதல் கேப்டன் இவர்தான். 1974-ம்ஆண்டு ஜூலை 13-ம் தேதி இங்கிலாந்துக்கு…

  24. பாகிஸ்தானுக்கு வரவேண்டாம்! தற்போது பாதுகாப்பு இல்லை என்கிறார் சொய்ப் அக்தர் பாகிஸ்­தானில் வெளி­நாட்டு அணி­க­ளுக்கு தற்­போது பாது­காப்பு இல்லை என முன்னாள் வேகப்­பந்து வீச்­சாளர் சொய்ப் அக்தர் கூறி­யுள்ளார். பாகிஸ்­தானின் குவெட்டா நகரில் உள்ள பொலிஸ் அகா­ட­மியில் தற்­கொலைப் படை தீவி­ர­வா­திகள் சமீ­பத்தில் அதி­ரடி தாக்­குதல் நடத்­தி­னார்கள். இதில் 62 பொலிஸார் மற்றும் 2 இரா­ணுவ வீரர்கள் பலி­யா­னார்கள். 170 பேர் காயம் அடைந்­தனர். இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து வெளி­நாட்டு அணி­க­ளுக்கு பாகிஸ்­தானில் பாது­காப்பு இல்லை என்று முன்னாள் வேகப்­பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கூறி­யுள்ளார். ராவல்­பிண்டி எக்ஸ்­பிரஸ் என்று வர்­ணிக்­கப்­படும் சொய்ப் அக்த…

  25. கொண்டாட்ட பாணியை மாற்றுங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்­கி­லாந்­திற்கு எதி­ராக வெற்­றி­பெற்­ற­போது வெற்­றியைக் கொண்­டா­டிய விதம் குறித்து கருத்­துக்கள் வெளியா­கி­யுள்­ளன. டெஸ்ட் கிரிக்­கெட்டில் வெற்றி பெற்­றதும், அதை கொண்­டாடும் வித­மாக மைதா­னத்­திற்­குள்­ளேயே பாகிஸ்தான் வீரர்கள் ‘உடற்பயிற்சி’ எடுக்கும் வித்­தி­யா­ச­மான பாணியை அவ்­வப்­போது கடைப்­பி­டிக்­கி­றார்கள். இங்­கி­லாந்து சுற்­றுப்­ப­ய­ணத்தின் போது இந்த பாணியில் வெற்­றியை கொண்­டாடி மகிழ்ந்­தனர். இது இப்­போது சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது. பாகிஸ்­தானின் ஆளுங்­கட்­சியை சேர்ந்த எம்.பி. ராணா அப்சல் கான், ‘இது போல் நடந்து கொள்­வது பாகிஸ்தான் மீது எதிர்­மறை எண்­ணத்தை உர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.