விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிளார்க் தலைமையில் ‘நச்சுக் கலாச்சாரம்’ பரவியது: மிட்செல் ஜான்சன் கடும் தாக்கு மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன். | படம்: ஏ.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், மைக்கேல் கிளார்க் கேப்டன்சி காலக்கட்ட பிரச்சினைகளை அலசி எழுதும் போது “நச்சுக் கலாச்சாரம்’ பரவியது என்று கடுமையாக சாடியுள்ளார். தனது ‘Resilient’ என்ற சுயசரிதை நூலில், பாண்டிங் சென்ற பிறகே கிளார்க் தலைமையில் அணியில் கடும் கோஷ்டிகள் உருவானதால் சில வீரர்கள் விளையாடுவதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் என்று எழுதி அதிர்ச்சி அலை பரப்பியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு ஜான்சன் கூறும்போது, “பாண்டிங்கிற்குப் பிறகு நடைமுறைகள் மிகவு…
-
- 0 replies
- 305 views
-
-
களமிறங்கப்போகும் உலகக் கிண்ண அணி 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த அர்ஜுன ரணதுங்க தலைமையிலான அதே இலங்கை கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு அர்ஜுன ரணதுங்க, சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியின் மூலம் சமூக தொண்டாற்றுவதற்கு நிதி சேகரிப்பதே முக்கிய நோக்கம் என்றும் பழைய வீரர்களை மீண்டும் ஒ…
-
- 1 reply
- 447 views
-
-
இருபதுக்கு-20 போட்டிகளில் ஜொலிஸ்ரார் முதலிடம் -குணசேகரன் சுரேன் யாழ். மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இருபதுக்கு-20 போட்டிகளின் தரப்படுத்தல்களில், 54.54 புள்ளிகளைப் பெற்ற ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம், முதலிடத்தைப் பெற்றுள்ளது. சென்ரல் விளையாட்டுக் கழகம், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணத்துக்காக யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சிறந்த அணியை தெரிவு செய்யும் தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது. 2010ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தரப்படுத்தலில், 50, 40, 30 ஓவர்கள் மற்றும் இருபதுக்கு-20 ஆகிய போட்டிகளுக்கு தனித்தனியாக புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வருடத்துக்கான அனைத்து இருபதுக்கு-20 போட்ட…
-
- 1 reply
- 300 views
-
-
ரஹீமோடு முரண்படுகிறார் தமிம் பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், ஓரளவு போட்டித்தன்மையை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி, அப்போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அப்போட்டியிலிருந்து பெறப்படக்கூடிய முடிவு என்னவென்பது குறித்து, அவ்வணியின் தலைவர் முஷ்பிக்கூர் ரஹீமோடு, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 22 ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த ரஹீம், அப்போட்டியில் பங்களாதேஷ் அணி போட்டித்தன்மையுடன் விளையாடியதை முன்னிறுத்தியதோடு, தங்களால் முடிந்ததை, தாங்கள் செய்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு, அப்போட்டியில் வெ…
-
- 0 replies
- 355 views
-
-
வெஸ்ட் ஹாம், செல்சி போட்டியில் இரசிகர்கள் இரகளை வெஸ்ட் ஹாம் யுனைட்டெட், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில், இரசிகர்களின் இரகளையுடன் வெஸ்ட் ஹாம் கழக இலண்டன் அரங்கத்தில் இடம்பெற்ற, ஈ.எஃப்.எல் கிண்ண நான்காவது சுற்றுப் போட்டியில், செல்சியை வெஸ்ட் ஹாம் வென்றபோதும், பொலிஸாரினால் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் வென்ற இப்போட்டியின்போது, நூற்றுக்கணக்கான இரசிகர்கள் மோதி, கலமடக்கும் பொலிஸார் சனத்திரளினுள் நுழைந்த நிலையில், பிளாஸ்டிக் போத்தல்கள், இருக்கைகைகள், நாணயக் குற்றிகள் எறியப்பட்டிருந்தன. இப்பருவ காலத்திலேயே, புதிய அரங்குக்கு வெஸ்ட் ஹாம் நகர்ந்த நிலையில், கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மிடில்ஸ்பேர்க் அணியுடனான போட்…
-
- 0 replies
- 221 views
-
-
1970இல் உலக சம்பியனான பிரேஸில் அணித் தலைவர் கார்லோஸ் காலமானார் 2016-10-27 10:05:40 பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவரும் 1970 உலக சம்பியனான பிரேஸில் அணியின் தலைவருமான கார்லோஸ் அல்பர்ட்டோ தனது 72ஆவது வயதில் காலமானார். ரியோ டி ஜெனெய்ரோவில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தெரிவிக்கப்பட்டது. இத்தாலிக்கு எதிராக 1970 இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கார்லோஸ் புகுத்திய கோல், உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதி சிறந்த கோலாக இன்றும் புகழப்படுகின்றது. பின்கள வீரரான கார்லோஸ், முன்களத்திற்கு நகர்ந்து தன்னை நோக்கி பரிமாறப்பட்ட பந்தை எவருமே எதிர்…
-
- 0 replies
- 317 views
-
-
இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு- ஆண்டர்சன் அணியில் இல்லை. இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு- ஆண்டர்சன் அணியில் இல்லை. இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள அலிஸ்டயார் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பங்களாதேஷ் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் அணியில் எதுவித மாற்றமுமின்றி அதே அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதைகள் காரணமாக அவதிப்பட்டு வரும் அந்த அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியத் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் மாதம் 9 ம் தி…
-
- 0 replies
- 324 views
-
-
உலக கிண்ணப் போட்டிகள்வரை டோனி விளையாட வேண்டும் -காவஸாகர் விருப்பம். உலக கிண்ணப் போட்டிகள்வரை டோனி விளையாட வேண்டும் -காவஸாகர் விருப்பம். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் டோனி தொடர்பில் ஒரு சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டோனி, இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள 2019 உலக கிண்ணப் போட்டிகள் வரை இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 4 வது ஒருநாள் போட்டி டோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் இடம்பெற்றுவருகின்றது. இந்தப் போட்டியில் வர்ணனையாளராக கலந்துகொண்டுள்ள சுனில் கவாஸ…
-
- 0 replies
- 288 views
-
-
2-வது டெஸ்ட்: யூனிஸ் கானின் 33-வது சதத்துடன் மே.இ.தீவுகளுக்கு எதிராக பாக். ஆதிக்கம் 33-வது டெஸ்ட் சதம். | மிஸ்பா உல் ஹக். | படம்: கெட்டி இமேஜஸ். அபுதாபியில் தொடங்கிய மே.இ.தீவுகள்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. யூனிஸ் கான் 127 ரன்கள் எடுத்து தனது 33-வது டெஸ்ட் சதத்தை சாதித்தார். 42/2 என்ற நிலையிலிருந்து ஆசாத் ஷபிக்(68), யூனிஸ் கான் (127), மற்றும் மிஸ்பா உல் ஹக் (90 நாட் அவுட்) ஆகியோர் பாகிஸ்தானை தூக்கி நிறுத்தினர். ஆசாத் ஷபிக், யூனிஸ் கான் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 87 ரன்களைச் சேர்த்தனர். மிஸ்பா-யூனிஸ் கான் ஜ…
-
- 2 replies
- 347 views
-
-
விவியன் ரிச்சர்ட்ஸ் + சச்சின் + ரிக்கி பாண்டிங் = கோஹ்லி! சொல்வது யார்? கோஹ்லிக்கு பாராட்டுகள் 360 டிகிரியில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் டர்ன். கொஞ்சம் அதீதமாக தோன்றினாலும் பரவாயில்லை என கோஹ்லியை விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், ரிக்கி பாண்டிங் சேர்ந்த காம்போ என்கிறார் அமர்நாத். கோஹ்லியை பற்றி அவர் வாசித்த பாராட்டுப் பத்திரம் இதோ... ”ஒரே வீரரை திரும்ப திரும்ப புகழ்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், விராட் கோஹ்லியைப் புகழ்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. கோஹ்லியைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ச்சியாக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேனைப் பார்த்ததில்லை. உண்…
-
- 0 replies
- 312 views
-
-
தலைமைத்துவம் அற்றவர் டெய்லர்: டெய்லரை விமர்சிக்கிறார் மக்கலம் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் றொஸ் டெய்லர் மீது, அவ்வணியின் மற்றொரு முன்னாள் தலைவரான பிரென்டன் மக்கலம், விமர்சனங்களை முன்வைத்துள்ளார். டெய்லரின் தலைமைத்துவம் தொடர்பாகவே, இந்த விமர்சனம் அமைந்துள்ளது. பிரென்டன் மக்கலம் வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையில், "இடம்பெறாத அந்த சதித்திட்டம்" என்ற பிரிவில், இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் தலைவராக இருந்த டானியல் விற்றோரி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து தலைவராகப் பதவி வகித்த றொஸ் டெய்லரிடமிருந்து அப்பதவி, திடீரெனப் பறிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு மக்கலத்திடம் வழங்கப்பட்டது. மேற…
-
- 0 replies
- 379 views
-
-
தோல்வி வெறுப்பல்ல; பாடம் கற்றுத்தரும் அனுபவம்: முஷ்பிகுர் ரஹிம் முஷ்பிகுர் ரஹிம் பேட்டிங். | படம்: ஏ.எஃப்.பி. இங்கிலாந்துக்கு எதிராக அரிய வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி தழுவியது பாடம் கற்றுத்தரும் அனுபவம் என்று வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தார். “சில வேளைகளில் தோல்வி ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்தும். 15 மாதங்கள் டெஸ்ட் போட்டியே ஆடாமல் வங்கதேச அணி இப்படி ஆடுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே எங்களால் ஓரளவுக்கு நிரூபிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். இங்கிலாந்து போன்ற ஒரு அனுபவமிக்க அணிக்கு எதிராக நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டை தெரிவிக்குமாறு ஆடினோம். தோல்வி வெறுப்பேற்றுகிறது என்ற வார்த்தையை நா…
-
- 0 replies
- 360 views
-
-
ஸிம்பாப்வேயில் திறமையை வெளிப்படுத்த முடியும் – ரங்கன ஹேரத் நம்பிக்கை 2016-10-25 10:38:06 நெவில் அன்தனி ஸிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரங்கன ஹேரத் தெரிவித்தார். வழமையான அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் உபாதைக்குள்ளாகியிருப்பதாலும் உதவித் தலைவர் தினேஷ் சந்திமாலின் வலது பெரு விரல் காயம் பூரண குணம் அடையததாலும் இருவரும் ஸிம்பாப்வே கிரிக்கெட் விஜயத்தில் இடம்பெறவில்லை. அவர்கள் அணியில் இடம்பெறாதது அணிக்கு பேரிழப்பு எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு…
-
- 0 replies
- 239 views
-
-
'அணித் தலைவருக்கு நண்பர்களை விட விரோதிகளே அதிகம்' – ஏஞ்சலோ மெத்யூஸ் 2016-10-25 11:24:24 இலங்கை அணியில் தலைவர் பதவியை வகிக்கும்போது நண்பர்களை விட விரோதிகளையே அதிகம் சம்பாதிக்க வேண்டியுள்ளமை துரதிர்ஷ்டமானது என இலங்கை கிரிக்கெட் அணியின் வழைமையான தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் கூறினார். தான் அணியில் சேர்த்துக்கொள்வதற்கு அணித் தலை வர் ஏஞ்சலோ மெத்யூஸ்தான் தடையாக இருந்ததாக வீரர் ஒருவர் குற்றஞ்சாட்டியதாக செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டியபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘‘அணித் தலைவர் என்ற வகையில் நண்பர்களை விட விரோதிகளைத்தான்…
-
- 0 replies
- 303 views
-
-
பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 9 ஆவது வார போட்டி முடிவுகள். . பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 9 ஆவது வார போட்டி முடிவுகள். . #Bournemouth 0-0 Tottenham Hotspur புள்ளி பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்த டோட்டன்ஹாம் அணி பெர்னெமௌத் அணியுடனான போட்டியை சமன் செய்ததன் மூலம் 5 புள்ளி பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. #Arsenal 0-0 Middelsbrough ஆர்சனல் அணி அறிமுக அணியான மிடில்ஸ்ப்ரு அணிக்கெதிராக கோல் ஏதும் இல்லாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. #Burnley 2-1 Everton எவெர்ட்டன் அணிக்கெதிராக இறுதி நேர கோல் உதவியுடன் வெற்றியை பெற்றுள்ளது பெர்ன்லி. பெர்ன்லி சார்பாக வொர்க்ஸ் மற்றும் ஆர்ப…
-
- 0 replies
- 351 views
-
-
சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி. சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் ஓட்ட இயந்திரமாக வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித்தலைவரும், ஒருநாள் போட்டி அணியின் உதவித்தலைவருமான விராட் கோஹ்லி நாளுக்குநாள் சாதனைகள் பலவற்றைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மொஹாலியில் நிறைவுக்கு வந்த 3 வது ஒருநாள் போட்டியின் போது ஆட்டம் இழக்காத 154 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் கோஹ்லி தனது 26 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் விராட் கோஹ்லி தற்போது, சங்கக்காரவை பின்தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தன்ன…
-
- 0 replies
- 429 views
-
-
தோனி சதம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது; தொடர்ந்து 4-ம் நிலையில் ஆட வேண்டும்: கங்குலி வலியுறுத்தல் மொஹாலியில் 4-ம் நிலையில் தோனி களமிறங்கி விளாசியதால் இந்திய வெற்றி சுலபமானது என்று கூறிய கங்குலி அவர் தொடர்ந்து அந்த டவுனில்தான் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தொடர்ந்து தோனி இதே 4-ம் நிலையில் இறங்குவார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அனில் கும்ப்ளே, தோனியை இதே நிலையில் களமிறங்க வலியுறுத்த வேண்டும். இதனால் அவருக்கும் எளிதாகிறது, பின்னால் வருபவர்களுக்கும் எளிதாகிறது. அவர் கடைசி 3 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளி ஒரு சதம் கூட எடுக்கவில்லை. காரணம் 40-50 பந்துகளையே அவர் எதிர்கொள்ள முடிகிறது. இது…
-
- 0 replies
- 324 views
-
-
பங்களாதேஷுக்கு எதிரான வெற்றி அலையை இங்கிலாந்து அணியினால் தொடர முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் 2016-10-20 09:46:03 பங்களாதேஷுக்கு எதிராக இன்று ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு இங்கிலாந்து உறுதி பூண்டுள்ளது. ஆனால் அது இலகுவாக அமையும் என்று கூறுவதற்கில்லை. பங்களாதேஷுக்கு எதிராக 2003 முதல் 2010 வரை விளையாடிய 8 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவைவிட பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்ற இரண்டாவது நாடு இங்கிலாந்து ஆகும். எனினும் பங்களாதேஷின் அண்மைக்கால ஆற்றல்…
-
- 7 replies
- 645 views
-
-
ஜாதவ் விக்கெட் எடுத்ததால் வர்ணனை அறையிலிருந்து வெளியேறிய ஸ்காட் ஸ்டைரிஸ்: மொஹாலியில் ருசிகரம் விக்கெட் வீழ்த்திய கேதர் ஜாதவ்வை பாராட்டும் இந்திய வீரர்கள். | படம்: அகிலேஷ் குமார். மொஹாலி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங் பற்றி எதிர்மறையாகக் குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ் தனது பந்தயத்தில் தோற்றார். ஜாதவ் பந்து வீச அழைக்கப்பட்ட போது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோருடன் நியூஸிலாந்து வர்ணனையாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் வர்ணனை அறையில் அமர்ந்திருந்தார். ஜாதவ்வின் பந்து வீச்சு குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்த ஸ்காட் ஸ்டைரிஸ், “ஜாதவ் இன்று விக்கெட் எடுத்தால் இந்த வர்ணனை அறையிலிருந்து வெளியேறுகிறேன், முதல் விமானத்தை பிடித்து நியூஸில…
-
- 0 replies
- 444 views
-
-
தோனியின் 9,000 ரன்களும் கவனிக்கத்தக்க புள்ளிவிவரமும்! படம்.| கெட்டி இமேஜஸ். மொஹாலியில் நேற்று 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி, தனது பழைய அதிரடி ஆட்டத்தில் 80 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார், இதில் அவர் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் தோனி 9,000 ரன்களைக் கடந்தார், இதில் சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதாவது, நேற்று சக்தி வாய்ந்த பல ஷாட்களை ஆடிய தோனி 91 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 80 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்பாக குமார் சங்கக்காரா, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்கள் எடுத்ததையடுத்து தோனியும் பட்டியலில் இணைந்தா…
-
- 0 replies
- 348 views
-
-
எங்கே செல்கிறது கிரிக்கெட் சபை? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அண்மைய சில நாட்களாக, இலங்கை கிரிக்கெட் சபை பற்றி வெளியாகிவரும் செய்திகள், பெருமளவில் நன்மைதரக் கூடியனவாக இருக்கவில்லை. கடந்த 7 நாட்களுக்குள் மாத்திரம், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள், மஹேல ஜெயவர்தனவின் அறக்கட்டளைக்கான நடைபயணத்துக்கு ஆதரவளிக்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு, சர்ச்சைக்குரிய விதத்தில், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரர் பத்திரிகையால் வெளியிடப்பட்ட பிரத்தியேகமான செய்தியின்படி, இலங்கை கிரிக்கெட் சபையில் பணிபுரிந்த பெண் ஊழியரொ…
-
- 0 replies
- 341 views
-
-
சிம்பாவே தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு. சிம்பாவே தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு. இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி விபரம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அணித்தலைவராக மத்தியூஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக சுரங்க லக்மால் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அணிவிபரம்-அஞ்சலோ மத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா , குசல் மெண்டிஸ் ,கௌஷல் சில்வா ,திமுத் கருணாரத்ன , தனஞ்சய டி சில்வா, நிரோஷான் டிக்கவெல்லா ,ரங்கன ஹேரத் ,டில்ருவான் பெரேரா , லக்ஸன் சண்டகன், கசுன் மதுஷங்க , லஹிரு குமார,லஹிரு கமகே,சுரங்க லக்மால், அசேல குணரத்ன http:/…
-
- 2 replies
- 477 views
-
-
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான நீர்நிலை போட்டிகள் கொழும்பில் ஆரம்பம் முதலாவது போட்டியான வோட்டர் போலோவில் இலங்கை தோல்வி எஸ்.ஜே.பிரசாத் தெற்காசிய நீர்நிலை போட்டிகள் நேற்று கொழும்பு சுகததாச உள்ளக நீச்சல் அரங்கில் ஆரம்பமாகின. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவுகள், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தப் போட்டிகளில் இம்முறை கலந்துகொண்டன. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நேற்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தெற்காசிய நீர்நிலை போட்டித் தொடரானது இலங் கையில் முதல் முறையாக நடத்தப்படுகின்றது. நேற்றைய ஆரம்பவிழாவில் இலங்கை அணித் தலைவரும் தெற…
-
- 1 reply
- 494 views
-
-
ஒரே வீரருக்கு மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பை வழங்கிய தர்மசேன இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், கள நடுவராக செயற்பட்ட குமார் தர்மசேன ஒரே வீரருக்கு மூன்று முறை தவறான ஆட்டமிழப்பை வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரே பந்துவீச்சாளர் வீசிய பந்துகளில் ஒரே வீரருக்கு மேற்படி மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளையில் 26 ஆவது ஓவரை வீசிய சகிப் அல் ஹசனின் பந்துவீச்சை இங்கிலாந்தின் மொயின் அலி எதிர்கொண்டார். இதன்போது விக்கெட்டை மறைத்…
-
- 0 replies
- 420 views
-
-
அகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம் ; சமுக வலைத்தளங்களில் வரவேற்பு அகில இலங்கை ரீதியில் 33 பாடசாலைகள் கலந்துக்கொண்ட தேசிய மெய்வலுனர் போட்டி கண்டி போகம்பரையில் இடம்பெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் முஸ்லிம் மாணவியொருவர் இரண்டாம் இடத்தை பெற்றமை அனைவரினதும் கவனத்தையீர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது. முஸ்லிம் கலாசார உடையினை அணிந்து இப் போட்டியில் வெற்றிபெற்றமை தொடர்பில் நடுவர் தனது பாராட்டை தெரிவித்திருந்தார். கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றிபெற்றமை தொடர்பில் சமுக வலைத்தளங்கள் இம்மாணவி பிரபல்யம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12645
-
- 0 replies
- 321 views
-