Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாகிஸ்தானுக்கு ஆடுவதை விட இங்கிலாந்துக்கு ஆடலாம்: வெறுப்பில் ஜுனைத் கான் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆட பரிசீலித்து வருகிறார். தொடர்ந்து தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு நிர்வாகம் ஒதுக்கி வருவதால் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக ஜுனைத் கான் தெரிவித்தார். 71 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தற்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வரிசையில் இவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக இருந்தாலும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு ஜுனைத் கானுக்கு ஏற…

  2. பாகிஸ்தானின் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு பிஸ்மாஹ் மாறூவ், சானா மிர் தலைவிகளாக நியமனம் மகளிருக்கான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக் கெட் போட்டிகளுக்கான அணித் தலைமை களைப் பிரித்து வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் பாகிஸ்தான் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவியாக தொடர்ந்தும் சானா மிர் செயற்படவுள்ளார். மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு மிர்ருக்குப் பதிலாக புதிய அணித் தலைவியாக பிஸ்மாஹ் மாறூவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இவ் வருடம் நடைபெற்ற மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் நிறைவில் இருபது 2…

  3. பகலிரவு டெஸ்ட் போட்டிக்குச் சம்மதித்தது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்க அணி, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்குச் சம்மதித்துள்ளது. நீண்ட இழுபறியின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பித்து, இந்தப் போட்டி அடிலெய்டில் இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்தப் பருவகாலத்தில், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்தது. அதிலொன்று பாகிஸ்தானுக்கெதிராகவும் மற்றையது தென்னாபிரிக்காவுக்கெதிராகவும் அமையவிருந்தது. எனினும், போதிய பயிற்சிகளின்றி, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு, தென்னாபிரிக்க வீரர்கள் பலர் தயக்கத்தை …

  4. பயிற்சியாளர் நம் கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்: தோனி தோனி. | படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணிகான பயிற்சியாளர் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ள நிலையில் பல பயிற்சியாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தோனி தன் கருத்தை இது குறித்து கூறியுள்ளார். லால்சந்த் ராஜ்புத், கிரெக் சாப்பல், கேரி கர்ஸ்டன், டன்கன் பிளெட்சர், ஸ்டீபன் பிளெமிங், ரவிசாஸ்திரி என்று ஏகப்பட்ட பயிற்சியாளர்களுடன் சுமுகமாக பணியாற்றியுள்ள இந்திய கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே தொடருக்கு முந்தைய சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “…

  5. பல்வேறு காரணங்களுக்காக, ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளின் வருகை காரணமாக, அந்நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, புதிய அணிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கடந்தாண்டில் அகதிக் கோரிக்கையை விடுத்த 476,649 பேரில் 31,902 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் 8047 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனவும் அறிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் ஆர்வமிகுந்த இந்த நாடுகளைச் சேர்ந்தோரால், ஜேர்மனியிலும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனி கிரிக்கெட் சம்மேளனத்தின் இணையத்தளத்தினூடாக 'நான் எங்கே விளையாட முடியும்?" என்ற கேள்வியே, அதிகமாகக் கே…

  6. போட்டி நிர்ணயங்கள், ஸ்பொட் ஃபிக்சிங்குகள்: ஐ.சி.சி மீது மக்கலம் விமர்சனம் போட்டி நிர்ணயம், ஸ்பொட் பிக்சிங் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதில், காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமை குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) மீது, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, தனது விமர்சனத்தை அவர் வெளியிட்டார். நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரரான கிறிஸ் கெயின்ஸ், போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு இடம்பெற்றபோது, கெயின்ஸூக்கெதிராக தான…

  7. திராவிட்-கங்குலி சாதனை ரன் குவிப்பை முறியடித்த லம்ப், வெசல்ஸ் மைக்கேல் லம்ப் பேட்டிங். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. நாட்டிங்கம் அணிக்கும் நார்த்தாம்ப்டன் அணிக்கும் இடையே நடைபெற்ற ராயல் லண்டன் கோப்பை 50 ஓவர் முதல் தர லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மைக்கேல் லம்ப், ஹென்ரிக் வெசஸ்ல் ஆகியோர் அதிக ரன்கள் கூட்டணி சாதனையை நிகழ்த்தியுள்ளனர். டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது. அதாவது இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டுகளில், 1999 உலகக்கோப்பை போட்டியின் போது இலங்கைக்கு எதிராக திராவிட்-கங்குலி கூட்டணி 318 ரன்களைக் குவித்து சாதனை செய்திருந்தது. அந்த சாதனையை தற்போது முதல் விக்கெட்டுக்காக 342 ரன்கள் குவித்…

  8. ‘‘இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் முறையாக கவனிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டால் சிறந்த குழு கிடைத்துவிடும்’’ - கிறஹம் ஃபோர்ட் 2016-06-07 11:10:17 இலங்­கையில் வேகப்­பந்­து­வீச்சில் பிர­கா­சிக்­கக்­கூ­டிய இளம் வீரர்கள் இருப்­ப­தா­கவும் அவர்கள் உரி­ய­மு­றையில் கவ­னிக்­கப்­பட்டால் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­களைக் கொண்ட ஒரு குழாம் உரு­வாகும் எனவும் கிரிக்கெட் தலைமைப் பயிற்­றுநர் கிறஹம் ஃபோர்ட் தெரி­வித்­துள்ளார். இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் விஜ­யத்­தின்­போது இரண்டு வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் உபா­தைக்­குள்­ளாகி நாடு திரும்­பிய நிலையில் மேலும் ஒரு பந்­து­வீச்­சா­ள­ரது பந்­து­வீச்சுப் பாணி குறித்து எழுப்­பப்­பட்­டுள்ள சந்­தேகம் ஆகி­ய­வற…

  9. பிரீமியர் பட்ஸல் லீக் இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்: ரஹ்மான் புகைப்படங்கள் சென்னை: இந்தியாவில் தொடங்கவுள்ள பிரீமியர் பட்ஸல் லீக் உள்ளக கால்பந்துத் தொடரானது இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார். பிரீமியர் பட்ஸல் லீக் சார்பில் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் கிரிக்கெட் தவிர வேறு விதமான விளையாட்டுகளில் கவனம் செலுத்த மாட்டோம்.…

  10. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடையலாம்: ஜோக்கோவிச் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ள உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், கலெண்டர் கிரான்ட் ஸ்லாமைக் கைப்பற்ற முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேயை எதிர்கொண்டிருந்த ஜோக்கோவிச், 3-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, தனது முதலாவது பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்றிருந்தார். இதன்மூலம், நான்கு வகையான கிரான்ட் ஸ்லாம்களையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஜோக்கோவிச் பெற்றுக் கொண்டதோடு, தனது 12ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தையும…

  11. தோனி என் மீது வைத்த நம்பிக்கையை டெல்லி அணி வைக்கவில்லை: பவன் நேகி ஆதங்கம் பவன் நேகி வலைப்பயிற்சியில். பின்புறம் நிற்பவர் அமித் மிஸ்ரா. | படம்: ஷிவ்குமார் புஷ்பகர். 2016 ஐபிஎல் தொடரில் ரூ.8.5 கோடி தொகைக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் பவன் நேகி தனது திறமைகள் மீது தோனி வைத்த நம்பிக்கையை டெல்லி அணி வைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், கேப்டன் ஜாகீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது. 14 போட்டிகளில் 8 ஆட்டங்களில் மட்டுமே பவன் நேகி ஆடியுள்ளார். அதில் 9 ஓவர்களை மட்டுமே அவர் வீசியுள்ளார். இதனால் தன்னை சரியாகப் பயன்படுத்தவில்லை என்…

  12. குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார் குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி, தனது 74ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். சுவாசம் தொடர்பான நோய்களோடு போராடிக் கொண்டிருந்த அலியின் நிலைமை, பார்க்கின்ஸன் நோயால் மேலும் மோசமாகியிருந்தது. இந்நிலையில், அலியின் இறுதிக் கிரியைகள், அவரது சொந்த நகரமான, கென்டக்கி மாநிலத்திலுள்ள லூய்வ…

  13. பிரெஞ்சு ஒப்பன் சாம்பியனானார் ஜோக்கோவிச் பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச் இறுதிப்போட்டியில் வென்றார். இந்த பிரஞ்சு ஒப்பன் சாம்பியன் பட்டத்தைத்தான் ஜோக்கோவிச் இதுவரை பெறாமல் இருந்தார். சற்று முன்னர் முடிந்த இந்த இறுதிப்போட்டியில், அவர் பிரிட்டிஷ் ஆட்டக்காரர் ஆண்டி மர்ரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்றார். மர்ரியும் இந்தப் போட்டியில் 1937லிருந்து இறுதிச் சுற்றுக்கு வந்த முதல் பிரிட்டிஷ் ஆட்டக்காரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறார். இந்தப் போட்டியின் முதல் செட்டில் ஆண்டி மர்ரி வென்றாலும் தொடர்ந்து ஜோக்கோவிச் மூன்று செட்களை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். http://www.bbc.com/t…

  14. டக்கரா விளையாடலாம் 'டக்ரா'! உலகில் அளவில் பிரபலமான விளையாட்டுகள் பட்டியலை சொல்லுங்கள் என்றால் கடகடவென சொல்லிவிடும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு கூட , இந்த விளையாட்டுகள் பற்றி கேட்டால் கொஞ்சம் யோசிக்கதான் செய்வார்கள். ஆனால் சில நாடுகளில் இந்த விளையாட்டுகளை உற்சாகமாக விளையாடுகின்றார்கள். வேடிக்கை, மகிழ்ச்சி, த்ரில் என பல சுவாரஸ்யங்களை கொண்ட இந்த விளையாட்டுகளின் பெயர்களை கூட இந்தியர்கள் அறிந்திருப்பது அரிதுதான். அப்படி சில வித்தியாச விளையாட்டுகளின் பட்டியல் இங்கே.... டக்ரா- Takraw வாலிபால் விளையாட்டின் சிறு மாற்றம்தான் டக்ரா. இந்த விளையாட்டு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இப்போது பிரபலமாகி வருகிறது. வாலிபால் விளையாட்டில், கையால் மட்டுமே …

  15. ஊக்கமருந்து விவகாரம்: போல்ட்டின் ஒலிம்பிக் பதக்கம் பறிபோகிறது? சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது, உலகின் வேகமான மனிதரான உசைன் போல்ட் வென்றெடுத்த மூன்று தங்கங்களில், ஒன்று பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 4*100மீற்றர் அஞ்சலோட்டத்தில், போல்டின் சக அணி வீரர்களில் ஒருவரான நெஸ்டா காட்டரின் ஏ மாதிரியில், தடை செய்யப்பட்ட மெதயில்ஹெக்ஸானமியன் பயன்படுத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியமையையடுத்தே பதக்கம் பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது பெறப்பட்ட 454 மாதிரிகள் மீளச்சோதனை செய்யப்பட்டதன் பின்பே மேற்படித் தகவல் வெளியாகியுள்ளது. …

  16. எனது பந்துவீச்சு முறை கடவுள் எனக்கு அளித்தது: இடது கை அதிசய ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் ஷிவில் கவுஷிக். | படம்: கே.வி.எஸ். கிரி. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒருமாதிரியான ஆக்சனுடன் வீசிய குஜராத் லயன்ஸ் இடது கை ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் என்பவரை பலரும் கண்டிருக்கக் கூடும். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு நேரடியாக நுழைந்தவர், இன்னமும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடது கையை உயர்த்தி உடம்பை தாறுமாறாக வளைத்து பந்தை தனது ரிஸ்டின் உதறலுடன் சரியான லெந்தில் வீசி அசத்திய ஷிவில் கவுஷிக், அசப்பில் தென் ஆப்பிரிக்காவில் இதே போல் வீசிய பால் ஆடம்ஸ் என்ற இடது கை ஸ்பின்னரை நினைவு படுத்துகிறார். இடது கை லெக் ஸ்பின், கூக்ளி, என்று ப…

  17. 5 ஜாம்பாவான்கள்... அசாத்திய திறமைகள்! நாக் அவுட் நாயகன் முகமது அலி, கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மேன், பீலே, தியான்சந்த் இவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள். விளையாட்டுத் துறையில் இவர்கள் நுழைந்தது குறித்தும், சாதித்தது குறித்தும் சில நினைவலைகள் இங்கே.... மேஜிக்மேன் தியான்சந்த் இந்திய ஹாக்கியில் எத்தனையோபேர் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவுக்கு வரலாம். சிலர் காலப் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தியான் சந்த் பெயர் மட்டும் இன்றளவும் மறக்கப்படாமல் உள்ளது. அவரது பெயரில் இன்றளவும் பல விருதுகள் வழங்கபடுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி, ராணுவக் குடும்பத்தில்…

  18. எனது டெஸ்ட் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் எளிதில் முறியடிப்பார்: கிளென் மெக்ரா இலங்கை வீரர் ஷமிந்தா எரங்காவை பவுல்டு செய்த ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ். தற்போது உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான தனது சாதனையை எளிதில் முறியடிப்பார் என்று கிளென் மெக்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக கிளென் மெக்ரா 563 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகிக்கிறார். மே.இ.தீவுகளின் ‘லெஜண்ட்’ கார்ட்னி வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார், இவருக்கு அடுத்த படியாக தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 451 விக்கெட்டுகளில் உள்ளார். இதனையடுத்து தனது 563 விக்கெட்ட…

  19. ஆடிப் பார்ப்போமா ஆடு புலி ஆட்டம்.... பழகிப் பார்ப்போமா பல்லாங்குழி ஆட்டம்! பல்லாங்குழி தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்று. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் இவ்விளையாட்டு, முப்பது - நாற்பது வருடங்களுக்கு முன்பு வரையிலும், நம் தமிழ்ப்பெண்களின் இன்டோர் கேமாகவும் விளங்கியது. தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கேண்டி கிரஷ் (candy crush ) என்று நவீன யுகதிகளாக மாறிவிட்ட இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு, பல்லாங்குழி பற்றிய அறிமுகமாவது உண்டா என்றால், சந்தேகம்தான். அவர்களுக்காக... பல்லாங்குழி எப்படி ஆடுறதுன்னு பார்க்கலாமா....? பல்லாங்குழி - மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். ஏழேழு குழிகளாக இரண்டு வரிசைகள், இ…

  20. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முகுருசாவுக்கு சாம்பியன் பட்டம் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் கோப்பையை பெறும் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முருகுஸா. அருகில் செரீனா. | படம்: ஏ.பி. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கார்பைன் முகுருசாவும், முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்சும் மோதினர். கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆடிவரும் செரினா வில்லியம்ஸ், இப்போட்டியில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு …

  21. இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சந்தீப் பாட்டீல் விண்ணப்பம் அனுராக் தாக்கூருடன், சந்தீப் பாட்டீல் (வலது). | கோப்புப் படம்: பிடிஐ. மேலேறி வந்து டிரைவ் ஆடும் சந்தீப் பாட்டீல். | படம்: இந்து ஆர்கைவ்ஸ். முன்னாள் அதிரடி வீரரும், நடப்பு அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சந்தீப் பாட்டீல், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் பொறுப்பு அவருக்கு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே கென்யா, ஓமன் அணிகளுக்கும் பயிற்சியாளராக சந்தீப் பாட்டீல் இருந்துள்ளார். 199…

  22. நெய்மரை தக்க வைக்கிறது பார்சிலோனா: டேனி ஆல்வ்ஸ் அணி மாறுகிறார் நெய்மர் ஸ்பெயின் நாட்டில் கால்பந்து கிளப் அணிகளில் பிரபலமானது பார்சிலோனா. இந்த அணியில் மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் போன்ற நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். தற்போது கிளப் அணிகளுக்கு இடையிலான வீரர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. வீரர்கள் மாற்று அணிக்கு செல்ல விரும்பும்போது, அவர்கள் சார்ந்த கிளப்புகள் அவர்களை விடுவிக்கும். அந்த வகையில், பார்சிலோனாவில் விளையாடும் முக்கிய வீரரான நெய்மர் இந்த சீசனில் வேறு அணிக்கு மாறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை பார்சிலோனா அணியின் தொழில்நுட்ப இயக்குநர் ராபர்ட் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,…

  23. கோடிகளில் கொழிக்கும் கிரிக்கெட் வீரர்கள்... கிறுகிறுத்துக்கிடக்கும் ஹாக்கி வீரர்கள்! விளையாட்டு என்பது ஒன்றுதான். ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு சம்பளம், ஹாக்கி, கால்பந்து விளையாட்டுக்கு ஒரு சம்பளம் என ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் கொந்தளிக்கிறார்கள் கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள். ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாக்கி விளையாட்டுக்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கப்போகிறதோ என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை. கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? …

  24. கிரிக்கெட் மட்டையின் அளவில் புதிய கட்டுபாடு வருமா? கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையின் அளவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக பல முன்னணி விளையாட்டு வீரர்களின் கோரிக்கைக்கு கிரிக்கெட் நிர்வாக அமைப்பான சர்வதேச கிரிகெட் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இலண்டனிலுள்ள லார்ட்ஸில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, இந்த விளையாட்டின் விதிகள் பற்றிய ஒட்டு மொத்த பொறுப்பையும் கொண்டிருக்கும் மார்லிபோன் கிரிக்கெட் கிளப் இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டுமென தான் விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மட்டையின் நீளம் மற்றும் அகலம் பற்றிய கட்டுபாடுகள் இருந்தாலும், அதனுடைய ஆழம் (…

  25. இந்தியாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான ஏழு வாரத் தொடர் ஜூலை 6இல் ஆரம்பம் மேற்கிந்தியத் தீவுகளுக்கான, நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் உள்ளடங்கிய ஏழு வாரத் தொடருக்காக, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இந்திய அணி செல்லவுள்ளது. அன்டிகுவா, ஜமைக்கா, சென். லூசியா, ட்ரினிடாட்டில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. சென்ட்.கிட்ஸில், ஜூலை 9ஆம் திகதி, இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கும் தொடரானது, அதேயிடத்தில் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பிக்கும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் தொடருகின்றதோடு, ஜூலை 21ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஜூலை 30ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஓகஸ்ட் 9ஆம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.