Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஜாவித் மியன்டாட்டின் 19 ஆண்டுகால சாதனை முறியடித்த 21 வயதான பாபர் அசாம்.தொடர்ச்சியான 3 சதம் விளாசினார். ஜாவித் மியன்டாட்டின் 19 ஆண்டுகால சாதனை முறியடித்த 21 வயதான பாபர் அசாம்.தொடர்ச்சியான 3 சதம் விளாசினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் 21 வயதான இளம் துடுப்பாட்ட வீரரான பாபர் அசாம் மகத்தான சாதனையொன்றை இன்று படைத்துள்ளார். பாகிஸ்தான் அணி சார்பில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பெறப்பட்ட அதிகப்படியான ஓட்டங்கள் எனும் சாதனையை 19 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மியண்டாட் தன்வசம் வைத்திருந்தார். 1987 ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில், மியண்டாட் 262 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டமையே இதுவரையான பாகிஸ்தான் …

  2. ஜிடானை வசை பாடிய ரொனால்டோ! தனக்குப் பதிலாக சப்ஸ்டிட்யூட் பிளேயரை களமிறக்கியதால், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடானை, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையே லா லிகா கால்பந்து தொடர் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடந்த போட்டியில் உலகின் செல்வாக்கு மிக்க அணியான ரியல் மாட்ரிட், லாஸ் பல்மாஸ் அணியை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் 2-1 என முன்னிலையில் இருந்தபோது, 72வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக, மாற்று வீரரை களமிறக்கினார் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடான். இதனால் ரொனால்டோ கடும் அதிருப்தி அடைந்தார். களத்தில் இருந்து சிடுசிடு முகத்துடன் …

  3. ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: ஐபிஎல்-இல் கலக்கிவிட்டு சர்வதேச ஆட்டத்தில் சொதப்பிய இந்திய பேட்டர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு சந்தித்த முதல் போட்டி இவ்வளவு மோசமான முடிவாக இருக்கும் என இளம் இந்திய அணி எதிர்பார்த்திருக்காது. அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி என்று மார்தட்டி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற அணி, 116 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணியை 13 ரன்கள் வித…

  4. முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 219 ரன்னில் சுருண்டது. ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் கோப் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். …

  5. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் எழுதிய 'இனவெறி' குறித்த கடிதத்தால் சர்ச்சை! ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இயக்குநருமான அலெஸ்டர் கேம்பெல் என்னிடம் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிராஸ்பர் உத்சயா புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத் தலைவர் தலைவர் வில்சன் மனசேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் '' ஜிம்பாப்வே அணி வீரர்களில் என்னிடம் மட்டும் கேம்பெல் பாரபட்சமாக நடக்கிறார். தனிப்பட்ட பகைமை பாராட்டுகிறார். அண்மையில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நான் அணியின் முதல் 11 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படாமல் போனதற்கு கேம்பெல்தான் காரணம். கடந்த 2010முதல் 2012 ஆம் ஆண்டு வரை அ…

  6. ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லை - வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற ஒரு நாள்…

  7. ஜிம்பாப்வே தொடர்: தோனிக்குக் காத்திருக்கும் சோதனைகள் தோனி இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.| படம்: ஏ.பி. ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடும் தொடரில் நாளை (சனிக்கிழமை) முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் தொடங்குகிறது. இந்திய அணியில் தோனி, மணிஷ் பாண்டே, அம்பாத்தி ராயுடு தவிர மற்றோர் அனுபவமில்லாதவர்கள். அன்னிய மண்ணில் அனுபவமற்ற வீரர்களை நம்பி தோனி ஜிம்பாப்வே பிட்சில் களமிறங்குகிறார். அதுவும் தோனி ஜிம்பாப்வேவுக்கு கடைசியாக சென்று விளையாடியது 2005-ம் ஆண்டு, அவரது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலமாகும் அது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் சமீபத்திய ஆட்டங்கள் அந்த அணியை பெரிய அச்சுறுத்தலாகக் காட்…

  8. ஜிம்பாப்வே வந்து சேர்ந்த ரஹானே தலைமை இந்திய அணி: வெள்ளிக்கிழமை முதல் போட்டி இந்திய அணி. | படம்: விவேக் பெந்த்ரே. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அஜிங்கிய ரஹானே தலைமை இந்திய அணி ஜிம்பாப்வே சென்றடைந்தனர். இந்த அணியின் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் இது பற்றி ட்விட் செய்துள்ளார், “ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே வந்தடைந்தோம். உள்ளூர் டிரம் இசைக் கலைஞர்கள் எங்களை வரவேற்றனர், மீண்டும் இவர்களைப் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். நாளை முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி ஹராரேயில் நாளை இந்திய நேரம் 12.30 மணிக்குத் தொடங்குகிறது. ராபின் உத்தப்பா இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படவிருக்கிறார். எனவே இது அவருக்…

  9. ஜிம்பாப்வேயிடம் சுருண்டது ஆப்கானிஸ்தான் January 04, 2016 ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் பீட்டர் மூர் (0), சமு சிபாபா (0) மோசமான தொடக்கம் தந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்பவே, 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஹாமில்டன், கிரீமர் ஜோடி ஓரளவு அணியின் ஓட்டங்களை உயர்த்தவே, 117 ஓட்டங்களை எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சொ…

  10. ஜிம்பாப்வேயிலும் போய் கேவலப்பட தயாராக இல்லை.. இந்திய அணியின் பயணம் திடீர் ரத்து! டெல்லி: வங்கதேசத்திடம் மிக கேவலமாக தோற்று தொடரை இழந்து அவமானப்பட்டது தொடராமல் இருப்பதற்காகவோ என்னவோ இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது. வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலே அத்திப்பூத்தாற் போல ஜெயிப்பதும் பெரும்பாலும் தோற்பதும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது வங்கதேச நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அந்த நாட்டின் சுண்டைக்காய் அணியிடம் படுகேவலமாக தோற்று தொடரை இழந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாட இருந்தது…

  11. ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? Tamil ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் தமது சொந்த மண்ணில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்தித்திராது காணப்பட்டிருந்த இலங்கை அணியானது, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) காலி நகரில் இடம்பெற்றிருந்த போட்டியில் அவ்வணிக்கு எதிராக பாரிய வெற்றி இலக்கு ஒன்றினை வைத்தும் மிகவும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியதால், வரலாறு மாற்றப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அத்தோல்வியினால் இலங்கை அணி மீது ரசிகர்களின் அதிருப்தியும்…

  12. ஜிம்பாப்வேயை வென்றது தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 92.4 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 158.3 ஓவர்களில் 397 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் டூபிளெஸ்ஸிஸ் 98, டி காக் 81 ரன்கள் எடுத்தனர். பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்…

  13. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை புரியுமா கத்துக்குட்டி ஸ்காட்லாந்து! ஒரு பக்கம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பற்றி கிரிக்கெட் உலகமே பேசிக் கொண்டிருக்கும்போது, மறு பக்கம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை வெற்றி பெறும் நோக்குடன் களத்தில் உள்ளது ஸ்காட்லாந்து. ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஸ்காட்லாந்து ஜிம்பாப்வேவை முதன்முறையாக வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது ஸ்காட்லாந்து…

  14. கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா 350 ரன்கள் குவிப்பு முத்தர்ப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் ஜிம்பாவேயிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்களைக் குவித்தது. ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று ஹராரேயில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாவே கேப்டன் எல்டன் சிகும்பரா ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங் பற்றி அறியாமல் முதலில் பேட் செய்ய அழைத்தார். பிராட் ஹேடின், ஆரோன் ஃபின்ச் ஜோடி அதிரடியாகத் தொடங்கி 18 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்து அபாரத் தொடக்கம் கண்டனர். பன்யாங்கரா, மற்றும் சடரா என்ற பவுலர்கள் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். 48 ரன்களில் 2 பவுண்டரி …

  15. ஜூடோவில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி சௌந்தர்யா - தடைகளைத் தகர்த்து சாதித்தது எப்படி? 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஏற்காட்டில் உள்ள குண்டூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மாணவி சௌந்தர்யா. இவர் இந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவரது தந்தை சிவனேசன், தாய் மலர்க்கொடி. இவர்கள் ஏற்காட்டில் கூலி வேலை செய்து வருகிறார்கள். செளந்தர்யாவுக்கு கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை. அதனால் அவர் சேலம் அயோத்தியா பட்டினம் பகுதியில்உள்ள தமிழக விழி இழந்தோர் சங்கத்தினர் நடத்தும் தங்கும் விடுதியில் தங்கி உடையாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஜூடோ விளையாட்டில் ஆ…

  16. ஜூன் மாதம் இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மைதான ஒழுங்குகளில் மாத்திரம் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிகள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி காலியியும், இரண்டாவது போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்திலும், மூன்றாவது போட்…

  17. ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை - இந்திய 'வேகப் பெண்' சாதித்தது என்ன? வந்தனா பிபிசி 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயத…

  18. ஜூலை 7: 'கேப்டன் கூல்' தோனி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர் இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் ! கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம். இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்தத…

  19. திங்கட்கிழமை, 9, மே 2011 (17:39 IST) ஜூலையில் இலங்கையில் எல்.பி.எல்! ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை போல 20 ஓவர் போட்டி நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு இலங்கை பிரிமீயர் லீக் என பெயரிடப்பட்டுள்ளது. ஜுலை மாதம் இறுதியில் தொடங்கும் போட்டி 18 நாட்கள் நடைபெறுகிறது. முதல் கட்ட போட்டியில் 7 அணிகள் இடம்பெற உள்ளன. லெவன் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 7 உள்ளூர் வீரர்கள் இடம் பெறுவார்கள். ஒரு அணி மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதில் தகுதி பெறும் 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். போட்டி கொழும்பு பிரமதேசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டிக்கு தகுதி பெறும். இலங்கை பி…

  20. ஜெங் தாவோ: நீச்சல் போட்டியில் 6 தங்கப் பதக்கம் - யார் இந்த ஜெங் தாவோ? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஆண்கள் நீச்சல் போட்டியில் பங்கேற்ற பிறகு ஜெங் தாவோ. சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார். "என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங். குழந்தையாக இருக்கும்போதே தமத…

  21. ஜென்டில்மேன்களின் விளையாட்டில் ஒரு மோசமான தீர்ப்பு இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வெற்றி, தோல்விகளைவிட அதிகமாக பேசப்பட்ட விஷயம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்-இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடையிலான மோதல் விவகாரம்தான். நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் மதிய உணவுக்காக இரு அணியினரும் பெவிலியின் திரும்பியபோது ஆண்டர்சனுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஆண்டர்சன், ஜடேஜாவை கீழே தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது. ஐசிசி நடத்தை விதி லெவல்-3 ஐ ஆண்டர்சன் மீறியதாக இந்தியா புகார் அளிக்க, பதிலுக்கு ஆண்டர்சனை மிரட்டியதாக இங்கிலாந்து சார்பில் ஜடேஜா மீது ஐசிசியிடம் புகார் அளி…

  22. ஜெயசூரியாவின் அதிவேக சத சாதனையை முறியடிக்கத் தவறிய இலங்கை வீரர் செகுகே பிரசன்னா அயர்லாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியது. இதில் டப்ளினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நேற்று இலங்கை அணி வீரர் செகுகே பிரசன்னா 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார், இதன் மூலம் ஜெயசூரியாவின் 48 பந்துகளில் சதம் என்ற சாதனையை செகுகே முறியடிக்க முடியாமல் போனது. செகுகே பிரசன்னாவின் ஒருநாள் கிரிக்கெட் சராசரி இதுவரை 9.19 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று திடீரென அவர் 3-ம் நிலையில் களமிறக்கப்பட்டார். இறங்கியவுடன் முதல் பந்திலேயே தனது நோக்கத்தை அவர் அறிவித்தார். அயர்லாந்து ஆஃப் ஸ்பின்னர் ஆண்டி மெக்பி…

  23. ஜெயவர்தனா அசத்தல் சதம் ஜூலை 24, 2014. கொழும்பு: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஜெயவர்தனா சதம் விளாசினார். இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று கொழும்புவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஜெயவர்தனா சதம்: இலங்கை அணிக்கு தரங்கா (11) நிலைக்கவில்லை. குசல் சில்வா அரை சத (44) வாய்ப்பை இழந்தார். ஸ்டைன் வேகத்தில் சங்ககரா ‘டக்’ அவுட்டானார். பின் ஜெயவர்தனா, மாத்யூஸ் ஜோடி பொறுப்புணர்ந்து விளையாடியது. ஸ்டைன் பந்துவீச்சில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். சிறப்பா…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களைக் கொண்டு வரும் மனநிலையில் கிரிக்கெட் நிர்வாகிகள் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை (two-tier system) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி மெல்போர்ன் ஏஜ் பத்திரிகையில் இதுகுறித்து ஒரு செய்தி வெளியானது. அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா கூடிய விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் மைக் பேர்ட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் ஆகியோரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டம் குறித்து, இம்மாத இறுதியில் நட…

  25. ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மணி நேரங்களுக்கு முன்னர் "ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை" - இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.