Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மாடல் அழகியை துரத்தும் ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா. பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரை பாண்ட்யா அற்புதமாக வீசினார். இதனால் இந்தியா ஒரு ஓட்டத்தால் ‘திரில்’ வெற்றி பெற்றது. நாங்கள் வகுத்த திட்டத்தை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி இறுதி பந்தை வீசினார் டோனியும் பாண்ட்யாவை பாராட்டினார். அந்த நெருக்கடியான நேரத்திலும் சிரித்த முகத்தோடு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் சிறப்பாக பந்துவீசியதை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் கிரிக்கெட் மூலம் பிரபலமாகத் தொடங்கிவிட்டதால், பாண்ட்யா கொ…

  2. கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம் நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று தனது 68 ஆவது வயதிதில் மரணம் அடைந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 3 முறை பெற்றவர் ஜோஹன் கிரப். இவரது தலைமையிலான நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தது. http://www.virakesari.lk/article/4540

  3. ஓய்வை அறிவித்தார் ஷேன் வொற்சன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷோன் வொற்சன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இடம்பெறும் உலக இருபதுக்கு-20 தொடரின் முடிவிலேயே ஓய்வுபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கடந்தாண்டு இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் முடிவில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வொற்சன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர், அவர் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிலையிலேயே, உலக இருபதுக்கு-20 …

  4. பூரண அங்கத்துவ நாடுகளுடன் கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் தரவேண்டும் என்கிறார் ஆப்கான் அணித்தலைவர் 2016-03-24 09:45:58 இணை உறுப்பு நாடு­க­ளுக்கு சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் கூடுதல் வாய்ப்பு வழங்­குமாறு கிரிக்கெட் விற்­பனர்­க­ளான சச்சின் டெண்­டுல்கர், பிறையன் லாரா, மைக்கல் வோன் ஆகியோர் குரல் கொடுத்­தி­ருப்­பது தங்­களை நெகி­ழ­ வைத்­துள்­ள­தாக ஆப்­கா­னிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் பூரண அந்­தஸ்து வகிக்கும் எந்­த­வொரு நாட்­டையும் வெற்­றி­கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை தங்­க­ளுக்கு இருப்­ப­தா­கவும் அவர் கூறினார். ஆப்…

  5. தஸ்கீன் அஹ்மதுக்கு தொடர்ந்தும் தடை! சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு (டெல்­லி­யி­லி­ருந்து நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பங்­க­ளாதேஷ் சுழல்­பந்­து­வீச்­சாளர் தஸ்கின் அஹ­மத்­துக்கு பந்­து­வீச விதிக்­கப்­பட்­டுள்ள தடை அவ்­வாறே அமுலில் இருக்கும் என சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று அறி­வித்­தது. தஸ்கின் அஹ்மத் மீதான பந்­து­வீச்சுப் பாணி தொடர்­பாக தொலை­பேசி மூலம் விசா­ரணை ஆணை­யாளர் நடத்­திய விசா­ர­ணையின் மூலம் தஸ்­கினின் பந்­து­வீச்­சுப்­பாணி (பெரும்­பா­லா­னவை) தவ­றா­னது என்­பது ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சர்­வதேச கிரிக்கெட் பேரவை தெரி­வித்­தது.…

  6. தோனியின் தலை வெட்டப்பட்டது - ரசிகர்களின் பதிலடி! (காணொளி) சமீபத்தில் நடந்த ஆசிய கிண்ண இறுதி போட்டிக்கு முன்பாக இந்திய அணி தலைவர் தோனியின் வெட்டப்பட்ட தலையுடன் பங்காளதேஷ் பந்துவீச்சாளர் தஸ்கின் ஓடிவருவது போன்று ஒரு போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டார்கள் பங்காளதேஷ் ரசிகர்கள். இந்த மார்பிங் போட்டோ இந்திய ரசிகர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடந்துவரும் டி20 உலக கிண்ண தொடரில் இன்று பங்காளதேஷூம் இந்தியாவும் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு முன்பாக பங்களதேஷ் ரசிகர்களை கலாய்த்து இந்திய ரசிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவனாது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் போட்டோஷாப் வைத்திருக்கும் இந்திய …

  7. அதிக விக்கெட்டுக்களை பெற்று அப்ரிடி சாதனை! கடந்த போட்டியில் பாகிஸ்தான் தலைவனும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அவரது விக்கெட் எண்ணிக்கை 39-ஆக (33 போட்டி) உயர்ந்தது. இதையடுத்து 20 ஓவர் உலக கிணண கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் மலிங்கவிடம் இருந்து (38 விக்கெட், 31 போட்டி) தட்டிப்பறித்தார். 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 போட்டி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=78297

  8. அப்ரிடியின் தலைவர் பதவிக்கு ஆப்பு இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்ப்டுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில், டி20 உலகக்கிண்ணத்தோடு தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை அப்ரிடி புரிந்துக்கொண்டுள்ளார். அவர் பதவி விலகாத பட்சத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும், அவர் ஒரு வீரராக மட்டும் அணியில் நீடிக்க விரும்பினால், அவரை தேர்வு செய்வதா வேண்டாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும். அதேபோல் பயிற்சியாள…

  9. இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் ரூ.30 லட்சம் செலவு செய்தார்: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் தகவல் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தேசிய கீதம் பாடிய அமிதாப் பச்சன். கொல்கத்தாவில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் பச்சன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.30 லட்சம் செலவு செய்ததாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் போது அமிதாப் தேசிய கீதம் பாட ரூ.4 கோடி வாங்கியதாக எழுந்த புகாரையும் கங்குலி திட்டவட்டமாக மறுத்தார். டி 20 உலகக் கோப்பையில் கடந்த 19ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்க…

  10. ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் உசேன் போல்ட் ஓய்வு 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற உசேன் போல்ட். படம்:ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற பின்னர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். 6 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உசேன்போல்ட் முன்னதாக 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்தார். அவரது பயிற்சியாளர் கிளென் மில்ஸின் அ…

  11. இந்தியா vs பாகிஸ்தான் - தொடரும் வரலாறு! சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் எதிரும் புதிருமாகவே இருக்கிறது. உடன்பாட்டை மீறி நம் நாட்டின் எல்லைக்குள் நுழைவது, மக்களைத் துன்புறுத்துவது போன்ற கொடூர செயல்களைக் காலம்காலமாக செய்து வருவதோடு, தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கிறது பாகிஸ்தான். என்னதான் இந்தியாவைத் தோற்கடிக்க பலமுறை முயற்சித்தாலும், இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில், 1992 முதல் வெற்றியை இந்தியா மட்டுமே உரித்தாக்குகிறது. இந்த ஆண்டும் அவ்வாறு நடந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மேலும், ஈடன் கார்டனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 4 ஆட்டத்திலும், தொடர்ந்து வெற்றியைத் தனதாக்கியிருந்தது பாகிஸ்தான். அந்த சாதனையும் தற…

  12. கத்தார் உலகக்கோப்பை ரசிகர்கள் பலர் கூடாரங்களில் தங்க வேண்டிவரும் ! கத்தாரில் வரும் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக்கோப்பை கால்பந்து போட்டியைக் காணவரும் ரசிகர்கள் பாலைவனங்களில் பெதுவான் இனப்பழங்குடியினர் தங்கும் கூடாரங்கள் போன்ற கூடாரங்களில் தங்கவேண்டிவரும். கத்தார் உலகக் கோப்பையில் இருப்பிட நெருக்கடி ; கூடாரங்கள் தீர்வாக அமையும் ! உலகக் கால்பந்து சங்கமான, ஃபிஃபாவினால் கோரப்படும் சுமார் 60,000 அறைகளை கத்தாரால் தரமுடியாத அளவுக்கு, தற்போதைய கட்டுமான வேலைகளின் முன்னேற்றம் காணப்படும் நிலையில், இந்த யோசனையை , போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூடாரங்களை அமைக்கும் யோசனை, ஃபிஃபாவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு ஆ…

  13. இந்திய அணியால் அப்ரிடி நடந்த கொடுமை! பாகிஸ்தான் டி20 அணி தலைவர் அப்ரிடியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதால் அப்ரிடியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாம். அவரை பதவியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்ரிடியின் செயல்பாடுகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியததிற்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம். குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றதை அது ரசிக்கவில்லையாம். மேலும் இந்தியாவில் விளையாடும்போது எனக்கும், எனது அணி வீரர்களுக்கும் பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிக அன்பு கிடைப்பதாக அப்ரிடி கூறியதையும் பாகிஸ்தான் கிரி்க்கெட் வாரியம்…

  14. எனது பங்கு பெரிதளவல்ல: மஹேல தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில், அவ்வணியால் விதிக்கப்பட்ட 230 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அவ்விலக்கை அடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறித்து மஹேல ஜெயவர்தன, சிறப்பான பாராட்டை வழங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்டுவரும் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து அணிக்கு அனுபவமின்மை காணப்படுகின்ற போதிலும், அவ்வணியின் திறமைகள் என்பன பரந்தவை என்றார். இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற போதிலும், தனது பங்கு சிறியதே என அவர் குறிப்பிட்டார். 'உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் பெரிதாக எதையும் செய்யவில்லை. திறமையுள்ள வீரர்கள் குழாமுடன் நீங்கள்…

  15. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் மொரின்ஹோ செல்சி அணியின் முன்னாள் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துடன் ஒப்பந்தத்துக்கு முன்னரான உடன்பாடொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கு முன்னர், அக்கழகத்தின் முகாமையாளராக மொரின்ஹோ நியமிக்கப்படாதுவிடின், அவருக்கு 15 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது. கடந்தாண்டு டிசெம்பரில், செல்சி அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொரின்ஹோ, அதன் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவித்த போதிலும், உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இ…

  16. கடுப்பில் தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் உடைத்த ரசிகர்கள் இந்தியாவுக்கு எதிரான நேற்றைய உலகக் கிண்ண ‘ருவென்ரி 20′ போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் காராச்சியில் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன்போது, பாரிய தொலைக்காட்சிப் பெட்டிகளை நடு வீதியில் கொண்டு வந்து கீழே போட்டு உடைத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். உலகக் கிண்ணப்போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை 6 முறை வென்று இருக்கிறது. ‘ருவென்டி 20′ போட்டிகளிலும…

  17. விராட் கோலி தலை வணங்கியதற்கான காரணம் வெளியானது..! ஐசிசி இருபது - 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டம் மூலம் வெற்றியை இந்திய வசமாக்கி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தார். பாகிஸ்தான் முதலில் நிர்ணயம் செய்த 119 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா 10 ஓடடங்களுடனும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரெய்னா ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து விராட் கோலியும், யுவராஜ்சிங்கும் கைகோர்த்து அணியை சரிவில் இரு…

  18. உலகக்கிண்ணத்தை இலங்கை கைப்பற்றி 20ஆவது ஆண்டு பூர்த்தி விழா 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக்கிண்ணத்தை தன தாக்கியிருந்தது. இதன் 20ஆவது வருடத்தை முன்னிட்டு நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சி ஆட்டத்துக்குப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்டத்தில் பங்குபற்றிய வீரர்களுக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கினார். http://www.onlineuthayan.com/sports/?p=10969

  19. வங்கதேச வீச்சாளர்கள் தஸ்கின் அகமட், அராபத் சன்னி பந்து வீசத் தடை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமட், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அரபாத் சன்னி ஆகியோர் முறைதவறிய பந்துவீச்சிற்காக ஐசிசி-யால் தடை செய்யப்பட்டனர். இருவர் பந்து வீச்சு மீதும் ‘த்ரோ’ புகார் எழுந்ததையடுத்து சென்னையில் இருவரது பந்துவீச்சின் மீதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவரது வீச்சும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் பந்து வீச இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பந்துவீச்சு முறையை சீர் செய்து கொண்டு மறுஆய்வுக்கு முறையிடலாம். மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் இவர்கள் இருவரும் வங்கதேச உள்நாட்டு கிரி…

  20. ”ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை” டில்சான் ஓய்வு குறித்து தற்போதைக்கு சிந்திக்க மாட்டேன் என இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டில்சான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண ‘ருவென்ரி-20′ தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 56 பந்துகளை எதிர்கொண்டு 83 ஓட்டங்களை பெற்றிருந்த டில்சான் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டில்சான், ‘ இவ்வாறு தொடர்ந்தும் விளையாடும் பட்சத்தில் தற்போதைக்கு ஓய்வு குறித்து சிந்திக்க மாட்டேன். கிரிக்கட்டை அனுபவித்து விளையாடுகின்றேன். ஓய்வு …

  21. ஆஸ்திரேலிய அணியின் கோப்பை ஆசை கைகூடுமா? சிக்ஸர் ஃபீவர் - மினி தொடர் 7 ஐந்து ஒருதின உலகக்கோப்பையை வென்றுவிட்ட ஆஸ்திரேலிய அணியால், இன்னும் ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. கிரிக்கெட்டில் பெரும்பாலான சாதனைகளுக்கு சொந்தமான ஆஸ்திரேலிய அணியின் நிறைவேறாத ஆசை டி உலகக் கோப்பையை வெல்வதுதான். இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் சூத்திரத்தை இன்னமும் ஆஸ்திரேலிய அணியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐ.பி.எல்லாக இருந்தாலும் சரி, பிக்பாஷ் போட்டிகளாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கம் எங்குமே நிறைந்திருக்கும். ஷேன் வாரன், ஸ்மித், வார்னர், வாட்சன், பெய்லி என பலர் ஐ.பி.எல்லில் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றனர். …

  22. 10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் அப்ரிடி வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்55 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ஷாகித் அப்ரிடி தெரிவானார், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 11-வது நிகழ்வாகும். 10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். முகமது ஷாசத்(ஆப்கானிஸ்தான்), ஷேன் வாட்சன்(அவுஸ்திரேலியா) தலா 9 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளனர் http://www.onlineuthayan.com/sports/?p=10768&cat=2

  23. ராயல் சேலஞ்சர்ஸ் அணி இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் மல்லையா விலகல்! புதுடெல்லி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பதவியை விஜய் மல்லையா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் ம…

  24. இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? : அப்ரிடி விளக்கம் இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார். அப்ரிடி கருத்துக்கு எதிர்ப்பு ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை விட இந்தியாவில் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை’ என்று தெரிவித்து இருந்தார். …

  25. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.