விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
”கிரிக்இன்போ’ விருதை வென்றார் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 3வது முறையாக ’கிரிக்இன்போ’ விருதை பெற்றுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தரம்சாலாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா 66 பந்தில் 106 ஓட்டங்கள் குவித்தார். இந்த சிறந்த இன்னிங்சிற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே பரிந்துரை செய்தார். இவருடன் முன்னாள் தலைவர்களான வாலஷ் (மேற்கிந்திய தீவுகள்), ஜான் ரைட் (நியூசிலாந்து) ஆகியோரும் அந்த விருது வழங்கும் தெரிவு குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும் ஆண்டின் சிறந்த தலைவருக்கான விருது சமீபத்தில் ஓ…
-
- 0 replies
- 669 views
-
-
6 ப்ளஸ்! ஒரு மைனஸ்! சொல்லி அடிக்குமா கில்லி இந்தியா? சிக்ஸர் பீவர் (மினி தொடர் -6) அக்ரசிவ் பேட்ஸ்மேன்கள், அசத்தல் ஆல்ரவுண்டர்கள், ஆக்ரோஷ பந்து வீச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த சிறந்த கேப்டன் என டி20 போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணியாக மாறியிருக்கிறது இந்தியா. இம்முறை உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்தியாதான் என ரசிகர்கள் மட்டுமல்ல, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதற்கொண்டு வரிசையாக பேட்டி தட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஐந்து டி20 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய அணியின் நிலை தற்போது தலைகீழ். ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசிய கோப்பை தொடர் என இந்தாண்டு இதுவரை விளையாடிய பதினோரு போட்டியில் பத்தில் வென்று அசாத்திய சாதனை புரிந்திரு…
-
- 0 replies
- 385 views
-
-
தோனி பந்தை விளாசும் போது அவர் மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி...- சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தோனி அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி....: சச்சின் நம்பிக்கை. | படம்: ஏ.எஃப்.பி. தோனி அதிரடி ஆட்ட வழிமுறைக்குத் திரும்பியதன் அறிகுறியாக அவர் பந்தை அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி உள்ளது என்றும் இது உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்கு நல்ல பலன் அளிக்கும் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தனியார் சேனல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் இது பற்றி கூறியதாவது: உலகில் எந்த ஒரு வீரரும் வாழ்நாள் முழுதும் சிறந்த ஃபார்மில் இருந்து விட முடியாது, மேலும் அவர் எந்திரமல்ல. ஆனால் தோனியின் மட்டையில் பந்து படும்போது ஏற்படும்…
-
- 0 replies
- 364 views
-
-
தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புகிறேன்: சர்பராஸ் அகமட் சர்பராஸ் அகமட். | படம்: ஏ.பி. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மெனான சர்பராஸ் அகமட், தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: நான் தோனியை பலவழிகளில் பின்பற்றி வருகிறேன். விக்கெட் கீப்பராக அவர் காட்டும் வித்தியாசம், பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பது என்ற விதத்தில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர், நான் அவரை எனது லட்சிய ஆளுமையாகவே வடிவமைத்துக் கொண்டுள்ளேன். உலகக்கோப்பைக்காக இந்தியாவில் விளையாடுவது உற்சாகமளிக்கிறது. என்னுட…
-
- 0 replies
- 448 views
-
-
தோனி 7, கோலி 18, அஸ்வின் 99 ஏன்! ஜெர்சி ரகசியம் சொல்லும் இந்திய கில்லிகள்! கிரிக்கெட் வீரர்களின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று ஜெர்சி எண். தோனியின் 7ம் நம்பர் ஜெர்சி துவங்கி, புதிதாக அணிக்கு அறிமுகமாகியுள்ள ஹர்திக் பாண்ட்யாவின் 228ம் நம்பர் ஜெர்சி வரை நம்பர் ரகசியம் என்ன என்பதை கூறியிருக்கிறார்கள். தோனி தனது பிறந்த தினமான 7ம் தேதியை குறிக்கும் வகையில் 7ம் நம்பர் ஜெர்சியையும், ரோஹித் ஷர்மா தனது அம்மா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் ராசியான எண் என்று 45-ம் நம்பரை அளித்ததாகவும் கூறியுள்ளார். கோலி, "எனது ஜெர்சி எண்களுக்கு பின்னால் பெரிய ராசியெல்லாம் ஒன்றுமில்லை. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் எனக்கு இந்த எண் வழங்கப்ப…
-
- 1 reply
- 602 views
-
-
'தெறிமாஸ்' காட்டுமா வெஸ்ட் இண்டீஸ் - சிக்ஸர் பீவர் (மினி தொடர் -5) உலகில் நடக்கும் ஐ.பி.எல் முதலான அத்தனை டி20 லீக்களிலும் 'தெறிமாஸ்' காட்டும் சிறுத்தைகள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் இருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத டானாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அதன் பின்னர் இறங்குமுகத்தையே சந்தித்தது. லாரா, கூப்பர், கெய்ல் என பல்வேறு சிறந்த வீரர்கள் அணிக்கு வந்தாலும் உலககோப்பையில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறமுடியாமல் பரிதாபமாக வெளியேறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2012 உலககோப்பையில் திடீரென விஸ்வரூபம் எடுத்தது வெஸ்ட் இண்டீ…
-
- 0 replies
- 662 views
-
-
செல்சி தோல்வி எஃப்.ஏ கிண்ண காலிறுதிப் போட்டியொன்றில் எவெர்ற்றனும் செல்சியும் மோதிய நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்ற எவெர்ற்றன், எஃப்.ஏ கிண்ண அரையிறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இப்போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் செல்சியை எவெர்ற்றன் தோற்கடித்திருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் செல்சியின் முன்னாள் வீரரான ரொமேலு லூகாகு என்பவரே பெற்றிருந்தார். இப்போட்டி முடிவினைக் காட்டிலும் இப்போட்டியின் கவனத்தை சர்ச்சைக்குரிய வீரரான செல்சியின் டியகோ கோஸ்டாவே கவனத்தை ஈர்த்திருந்தார். போட்டியின் 84ஆவது நிமிடத்தில் எவெர்ற்றனின் கரித் பரியுடன் முரண்பட்டுக் கொண்டமைக்காக ம…
-
- 0 replies
- 405 views
-
-
பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை: ஷாகித் அப்ரிடி கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் ஷாகித் அப்ரிடி | படம்: ஏ.பி. 'பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை' டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வருவது தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தனர். வ…
-
- 2 replies
- 878 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2016 – ஒரு கண்ணோட்டம் 16 அணிகள் பங்கேற்கும் 35 போட்டிகளைக் கொண்ட 6வது இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று (மார்ச் 08) முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தல…
-
- 0 replies
- 538 views
-
-
நடந்தது இதுதான்: டென்னிஸ் ரசிகர்களுக்கு ஷரபோவா மனம் திறந்த கடிதம் மரியா ஷரபோவா மரியா ஷரபோவா, தன் பதிவோடு இணைத்துள்ள வாலட் கார்டு (ஊக்க மருந்து தொடர்பான தகவல்கள் அச்சிடப்பட்ட) அட்டைகள் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ள மரியா ஷரபோவா, தன்னுடைய வலைதளம் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக, அவரின் டென்னிஸ் ரசிகர்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'ஊக்க மருந்து குறித்து தனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி தவறானது' என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய …
-
- 0 replies
- 628 views
-
-
’’ஸ்டெம்பை வைத்து வீட்டை சுற்றி வேலி அமைத்துக் கொள்வேன்’’ டோனி March 12, 2016 இந்திய அணி வெற்றி பெறும் போட்டியில் ஸ்டம்பை கையோடு எடுத்துச் செல்வது பற்றி அணித்தலைவர் டோனி மனம் திறந்து பேசியுள்ளார். பலப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் போது அந்த அணியின் தலைவரான டோனி ஓடி வந்து முதலில் ஸ்டெம்பை பிடுங்கி கையோடு எடுத்துச் செல்வதை பார்த்திருக்கலாம். அது எதற்கு என்று நமக்கு தெரியாது. தற்போது அதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார். இது குறித்து டோனி கூறுகையில், ”அது ஒரு சிறந்த விடயத்திற்காக தான் செய்கிறேன். அந்த ஸ்டம்பில் நான் ஏதும் எழுதி வைக்கவில்லை. நான் ஓய்வு பெற்ற பிறகு வீடியோவில் பார்த்து இது எந்தப் போட்டியின் ஸ்டம்ப் என கண்டுபிடிப்பேன். இதற…
-
- 0 replies
- 339 views
-
-
இந்திய மண்ணில் சாம்பியனாகுமா பாகிஸ்தான்? சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 4) பாகிஸ்தான் இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றதே இல்லை. ஆனால் இம்முறை இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை வென்றால் எவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பத்து முறை மோதியுள்ளன. பத்திலும் பாகிஸ்தான் தோல்வியடைந்திருக்கிறது. உலகக் கோப்பை என்றாலே இந்தியாவிடம், பாகிஸ்தான் தோற்றுவிடும் என மக்கள் எண்ணுகிறார்கள், இதுவரை ஏற்பட்ட தோல்விகளுக்கு எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக, " இந்த உலகக்கோப்பையில் இந்தியாவையும் வெல்வோம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை வென்று சாம்பியனும் ஆவோம்" என சூளுரைத்து இந்…
-
- 0 replies
- 1k views
-
-
செய்தித்துளிகள்: ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ல் தொடக்கம் ஐபிஎல் டி 20 தொடரின் 9வது சீசன் ஏப்ரல் 9-ம்தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. 51 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் இறுதி ஆட்டமும் மும்பையிலேயே நடக்கிறது. இறுதிப்போட்டியையும் சேர்த்து மொத்தம் 60 ஆட்டங்கள் மொகாலி, டெல்லி, மும்பை, நாக்பூர், புனே, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், ராய்ப்பூர் ஆகிய 10 நகரங்களில் நடைபெறுகிறது. ------------------------------------------ க…
-
- 0 replies
- 453 views
-
-
’’சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஒய்வு தோல்விக்கு காரணம் அல்ல’’ டில்ஷான் March 11, 2016 சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர்களின் ஓய்வையே எப்போதும் தோல்விக்கு காரணம் காட்ட முடியாது என்று டில்ஷான் கூறியுள்ளார். டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ண டி20 தொடர் குறித்து இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறுகையில், ”எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர். சமீபத்திய தொடர்களின் இருந்து அவர்கள் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். முன்னாள் வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே அணியில் இல்லை என்று எப்போதும் நாம் காரணம் காட்ட முடியாது. அனுபவ வீரர்களான சனத்…
-
- 0 replies
- 381 views
-
-
வித்தியாசமான அணுகுமுறை: தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்: தோனி யின் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலமானது. புல் லென்த் பந்தை, அதிக வலுவுடன் அவர் தனது மணிக்கட்டு உதவியால் சிக்ஸருக்கு விரட்டுவது ரசிகர்களை அதிகம் கவர்ந்ததாகும். http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%…
-
- 0 replies
- 543 views
-
-
யாழ் மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்ட சங்கத்துடன் கரம் கோர்த்துள்ள பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனம் 08.03.2016 முதன்முதலாக யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் இறுதிச்சுற்றுப்போட்டியினை ஒழுங்கு செய்தது. யாழ் பரியோவான் மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரிகளின் 13 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான இந்தப்போட்டியில் யாழ். பரியோவான் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இத்துடன் நின்றுவிடாது BTCL ஆனது யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சுற்றுப்போட்டியின் சகல பிரிவுகளுக்கும் தனது ஆதரவை வரும் வருடங்களில் தொடர்ந்து வழங்கும். பிரித்தானியாவில் அண்மையில் தொடங்கப்பட்ட BTCL Cricket Academy Surrey இலும் Leicester இலும் மிகவும் நன்றாக ஒழுங்க…
-
- 0 replies
- 440 views
-
-
தற்கொலை செய்ய நினைத்தேன் : ரெய்னா அதிர்ச்சி தகவல் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சகலதுறை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, இருபதுக்கு - டி20 போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்நிலையில் தான் தற்கொலை தற்கொலை செய்ய நினைத்தமை குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு 13 வயது இருக்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் தூங்கும்போது ஏதோ என் தோளில் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கண் விழித்தேன். என் கைகளை கட்டிப்போட்டுவிட்டு ஒரு சிறுவன் என் நெஞ்சு மீது அமர்ந்து என…
-
- 0 replies
- 607 views
-
-
3 தமிழ் வீரர்களுடன் மலேஷியா பயணமாகியது இலங்கை அணி ( படங்கள் இணைப்பு ) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு எமது ஆதரவினையும் உந்துசக்தியையும் வழங்கி அவர்களை தேசிய அணியில் இடம்பெறச் செய்வேண்டும். இந்நிலையில் ஏனைய வீரர்களும் குறிப்பாக தமிழ் வீரர்களும் பல சாதனைகள் புரிந்து எமது தாய்நாட்டை உய…
-
- 0 replies
- 645 views
-
-
தவறல்ல அக்கறையின்மை 'கோடியில் ஒருத்தி' ஷரபோவா சரிந்தது ஏன்? ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா நேற்று முன்தினம் (07-03-2016), அன்று வைத்த பிரஸ்மீட் சர்வதேச டென்னிஸ் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒதுக்குபுறமாக நடந்த அந்த பிரஸ்மீட்டில் இருந்த செய்தியாளர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு அறிவிப்பார் என்றுதான் எதிர்பார்த்து சென்றனர். ஏனென்றால் சில காலமாகவே தோள்பட்டை வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார். ஆனால் பிரஸ்மீட்டில் ''இந்த ஆண்டின் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்ட்ரேலியன் ஓப்பன் போட்டியில் நடத்தப்பட்ட "ஊக்க மருந்து கண்டுபிடிப்பு சோதனையில் தான் தோல்வி அடைந்ததாகக் ஷரபோவா கூற …
-
- 0 replies
- 593 views
-
-
கிரிக்கெட் சபையின் நடவடிக்கையாலேயே மலிங்க பதவி விலகினார் இலங்கை கிரிக்கெட் சபையின் நடவடிக்கை காரணமாக, இலங்கையின் இருபதுக்கு-20 அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து லசித் மலிங்க விலகினார் என முன்னாள் பிரதம தேர்வாளர் கபில விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் பதவி விலக்கப்பட்ட தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த கபில விஜேகுணவர்தன, பதவி விலக்கப்பட்ட விதம் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். 'பொருத்தமான எந்தவிதக் காரணங்களையும் வெளிப்படுத்தாது, நாங்கள் பதவி விலக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டமை தொடர்பில் நாம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம்" என அவர் தெரிவித்தார். திங்கட்கிழ…
-
- 0 replies
- 390 views
-
-
நிர்மூலமாக்க நியூசிலாந்து தயாரா? - சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 3) சிறந்த வீரர்கள், அமைதியான வீரர்கள், வசை சொற்கள் வீசாத ஜென்டில்மேன்கள், அதிரடியும் ஆக்ரோஷமும் கொண்டவர்கள், சிக்ஸர் பிரியர்கள், ஆவேச வேகப்பந்து வீச்சாளர்கள் என உலகின் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஓர் அணி, நியூசிலாந்து. கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் நியூசிலாந்துக்கு ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு முறை கூட ஐ.சி.சி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை நியூசிலாந்து வென்றதே இல்லை. பிரண்டன் மெக்குல்லம், ஷேன் பாண்ட், டேனியல் வெட்டோரி என கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னரா…
-
- 0 replies
- 587 views
-
-
றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை March 09, 2016 கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான 137ஆவது வருடாந்த வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. மூன்று நாள் தொடராக நடைபெறவுள்ள இப் போட்டியை முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து கொழும்பு கொள்ளுப்பிட்டி பிளவர் வீதி ஊடாக ஆரம்பித்த சைக்கிள் மற்றும் நடை பவனி, டுப்ளிகேஷன் வீதி ஊடாக பம்பலப்பிட்டியை கடந்து பின்னர், பாடசாலையை சென்றடைந்தது. குறித்த பவனியின்போது, மாணவர்களின் பாண்ட் வாத்திய கச்சேரி உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன், கார் பவனியுடன் இணைந்து அலங்கார யானைகளின்…
-
- 5 replies
- 533 views
-
-
சாம்பியன்ஸ் லீக் : ரியல்மாட்ரிட்டிடம் ரோமா வீழ்ந்தது! சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் ரோமா அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோம் நகரில் நடந்த 2வது லெக் ஆட்டத்தில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 64வது நிமிடத்தில் ரெனால்டோவும் 68வது நிமிடத்தில் ரோட்ரிகசும் இரு கோல்கள் அடித்தனர். ஏற்கனவே நடந்த முதல் லெக் ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால், 4-0 என்ற ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதிக்குள் நுழைந்தது. பார்சிலோனா புதிய மைதானம் இதற்கிடையே பார்சிலோனா அணி தனது நியூகேம்ப் மைதானத்தை புதியதாக பொலிவுற கட்ட முடிவு செய்துள்ளது. தற்போது உலகின…
-
- 0 replies
- 308 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் இரவோடிரவாக நடந்த மாற்றங்கள் 2016-03-09 09:35:53 இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் முதல் சுற்று ஆரம்ப மாவதற்கு சுமார் 15 மணித்தியாலங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டில் இரவோடிரவாக மாற்றங்கள் செய்யப்பட்டன. திங்களன்று இரவு அவசரமாகக் கூடிய ஸ்ரீலங்கா கிரிக் கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினர் அரவிந்த டி சில்வா தலைமையில் ஐவரடங்கிய புதிய தெரிவுக் குழுவை நியமித்தது. அத்துடன் தெரிவுக் குழுவுடன் இணைந்து இலங்கையின் சர்வதேச இருபது 20 அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸை நியமித்…
-
- 0 replies
- 491 views
-
-
T20 ல் இலங்கையின் நிலை என்ன? March 08, 2016 இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலத்தில் நம்ப முடியாத அளவு சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து வந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியிடம் (2-0) ஒயிட் வாஷ், இந்தியாவிடம் 2-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக இலங்கை தொடரை இழந்தது. தற்போது நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியிலும் விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் கத்துக்குட்டி அணியான எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இதனால் நடப்பு சாம்பியனான இலங்கை அணி முதலிடத்தில் இருந்து 8வது இடத்திற்கு தள்ளப்பட்டு…
-
- 0 replies
- 563 views
-