Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வீரர்களின் போர் கிரிக்கெட் போட்டி தெல்லிப்பழையில் இன்று ஆரம்பம் 2016-02-19 10:58:10 (ஹம்­சப்­பி­ரியா) “வீரர்­களின் போர்” என வர்­ணிக்­கப்­படும், தெல்­லிப்­பழை மகா­ஜனக் கல்­லூ­ரிக்கும் சுன்­னாகம் ஸ்கந்­த­வ­ரோ­தயாக் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான மாபெரும் கிரிக்கெட் போட்டி தெல்­லிப்­பழை மகா­ஜனாக் கல்­லூரி மைதா­னத்தில் இன்று வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. ஸ்கந்­த­வ­ரோ­தயாக் கல்­லூரி அணி­யினர் கே.பிரசாந் தலை­மை­யிலும் மகா­ஜனாக் கல்­லூரி அணி­யினர் கே.பிர­ணவன் தலை­மை­யிலும் கள­மி­றங்­கு­கின்­றனர். 16 ஆவது தட­வை­யாக இப்­போட்டி நடை­பெ­ற­வுள்­ள…

  2. ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன் முறையாக T 20 போட்டிகள் வங்கதேசத்தில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் விரைவில் களைகட்டவுள்ளது. ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக டி20 போட்டிகளாக நடக்கும் இந்த தொடர் எதிர்வரும் 24ம் திகதி முதல் மார்ச் 6ம் திகதி முடிய நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய அணிகளில் ஒன்று தகுதிப் போட்டியின் மூலம் தெரிவு செய்யப்படும். தகுதிப் போட்டிகள் பெப்ரவரி 19 முதல் 22ம் திகதி வரை நடக்கிறது. இதில் இலங்கை அணி நடப்பு சாம்பியனாக இருக்கிறது. கடந்த தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்க…

  3. இலங்கை அணியின் T 20 பாடல் February 18, 2016 இந்தியாவில் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வீரர்களை வைத்து டி20 உலகக்கிண்ணப் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிங்கள பாடலில் சந்திமால், கபுகெடரா, சிறிவர்த்தனே, துஷ்மந்த சமீரா, சனாய்க, டிக்வெல்ல உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் நடித்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=9475

  4. ஸ்பானிய கால்பந்து லீகில் 300 கோல்கள்: மெஸ்ஸி சாதனை லயோனல் மெஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். ஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை அர்ஜெண்டீன நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். இதனை தனது 334-வது லா லீகா போட்டியில் நிகழ்த்தினார் மெஸ்ஸி. ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி பெற்ற 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் லயோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை திணித்தார். இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி தற்போது 24 போட்டிகளில் 60 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் அத்லெடிகோ மேட்ரிட் அணியும் 3-வது இடத்தில் ரியால் மேட்ரிட் அணியும் உள்ளன. மெஸ்ஸியின் 300-வது கோல்: ஆட்டத்தின் …

  5. மெஸ்சியை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் : நேரத்தின் அருமையை பற்றி இந்த சிறுமியிடம் கேளுங்கள்! ஓரிரு வாரங்களுக்கு முன்பு, கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயர் எழுதப்பட்ட ஒரு உடையை அணிந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு சிறுவன் கால்பந்து விளையாடினான். அதைத் தொடர்ந்து, மெஸ்ஸியின் ரசிகனான அச்சிறுவனுக்கு, அவரது பெயர் பதித்த உண்மையான பார்சிலோனா அணியின் உடையும், அவ்வணியிடமிருந்தும், மெஸ்ஸியிடமிருந்தும் இ-மெயில்களும் பறந்தன. அதுமட்டுமின்றி அச்சிறுவனை நேரில் காணப்போவதாக மெஸ்ஸி தெரிவிக்க உலகமே அவரை மெச்சியது. ஆனால் சமீபத்தில், ஒரு 11 வயது ரசிகையை, மெஸ்ஸியை சந்திக்க வைக்க ஒப்புதல் அளித்து, பின்னர் மறுத்து மனமுடைய வைத்துள்ளது பார்சிலோனா கால்பந்து அணி. இங்கிலாந்தின் ஸ்…

  6. உலகின் அதிவேக யுவதி 17 வயதுடைய கண்டேஸ் 2016-02-18 11:22:08 அமெ­ரிக்கப் பாட­சாலை ஒன்றில் கடந்த வருடம் நடை­பெற்ற மெய்­வல்­லுநர் போட்­டியில் அப்­போது 16 வய­தாக இருந்த கண்டேஸ் ஹில் என்ற யுவதி 100 ஓட்டப் போட்­டியை 10.98 செக்­கன்­களில் ஓடி கனிஷ்ட மட்ட சாத­னையை நிலை­நாட்­டினார். 16 வயது யுவதி ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்­டியை 11 செக்­கன்­க­ளுக்குள் ஓடி முடிப்­ப­தென்­பது பெரிய விட­ய­மாகும். அத்­துடன் உலகின் அப்­போ­தைய அதி­வேக யுவதி (கனிஷ்ட பிரிவு) என்ற உத்­தி­யோ­க­பூர்வ பெரு­மை­யையும் கண்டேஸ் பெற்­றுக்­கொண்டார். இதனையடுத்து இவ்வருடம் தொழில்சார் மெய்­வல்­லுநர் என்ற அந்­தஸ்­துக்கு உயர்ந்­துள…

    • 1 reply
    • 448 views
  7. பிரபல கிரிக்கெட் வீரருக்குத் தடை சிம்பாபே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் பங்களாதேஷூக்கு எதிரான 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதிக்கப்பட்டது. இதில் விதிமுறைக்கு புறம்பாக, பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடோரி, தனது பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்த …

  8. சிவப்பு அட்டை காட்டிய நடுவர் சுட்டுக்கொலை அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டி ஒன்றில் சிவப்பு அட்டை காட்டியதால் நடுவரை கால்பந்து வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வீரர், தனது காரில் இருந்த பையில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மைதானத்தில் இருந்த நடுவரை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் நடுவரின் தலை, கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. மேலும்…

  9. ’’முரளிதரன் போல் ஹேரத் ஊக்குவிக்கப்படவில்லை’’ சங்கா February 17, 2016 சுழற்பந்து வீச்சாளராக முரளிதரனுக்கு கிடைத்த அங்கீகாரம் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவில்லை என்று சங்கக்காரா வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் எதிரணியை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் திணறடித்தவர். இதே போன்ற திறமையை தற்போது அணியில் இருக்கும் ரங்கன ஹேரத் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஹேரத்துக்கு கிடைக்கவில்லையே என்று சங்கக்காரா கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு 15 வயது இருக்கும் போதில் இருந்தே ஹேரத்தை தெரியும். ஆனால் திறமை இருந்தும் அவரது கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே இருந்தது. 2009ம் ஆண்டு கா…

  10. 19 வயதின்கீழ் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இளவாளை ஹென்றியரசர், கொழும்பு ஸாஹிரா (நெவில் அன்தனி) பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுதற்கு யாழ். இளவாழை புனித ஹென்றியரசர் அணியும் கொழும்பு ஸாஹிரா அணியும் தகுதிபெற்றுள்ளன. இந்த இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டி ஒன்றில் களுத்துறை, திருச்சிலுவை அணியை சந்தித்த யாழ். ஹென்றியரசர் 8 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. போட்டியின் முதலாவது பகுதியில் மிகுந்த சாதுரியத்துடன் வ…

  11. ஏலியன் டிவில்லியர்ஸை ஏன் நமக்கு பிடிக்கிறது ? ரசிகர்களால் செல்லமாக, கிரிக்கெட் உலகக் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சச்சின் டெண்டுகருக்கு பிறகு தற்போது உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்வீரர் பெயர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம்தான். சச்சின், ஷேவாக், தோனியின் பெயர்களை மட்டுமே அரங்கம் அதிர கேட்டுவந்த ஸ்டேடியங்கள், முதல் முறையாக 'ஏ.பி.டி ... ஏ.பி.டி...' என ஒவ்வொரு முறை டிவில்லியர்ஸ் களமிறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கூக்குரலிட்டதை கேட்டன. இந்தியாவில் அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு எக்கச்சக்க வர…

  12. தெற்காசிய விளையாட்டு கோலாகலமாக நிறைவு: இலங்கைக்கு 186 பதக்கங்கள் குஹாத்­தி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத் 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு போட்­டிகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிறை­வ­டைந்­துள்­ளன. அத்­தோடு13ஆவது தெற்­கா­சியப் போட்­டி­களை நடத்தும் வாய்ப்பை நேபாளம் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் பங்­கேற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் கடந்த 5ஆம் திகதி ஆரம்­ப­மாகி 12 நாட்­க­ளாக நடை­பெற்­றி­ருந்­தது. இதில் எட்டு நாடு­க­ளையும் சேர்ந்த மொத்தம் 3500இற்கும் அதி­க­மான வீர வீராங்­க­னைகள் கலந்­து­கொண்­டனர். 23 போட்டி வகை­களைக் கொண்ட இவ்­வி­ளை­யாட்டு விழா…

  13. இலங்கை- இந்தியா 20-20 தொடர் மீள் பார்வை -ச.விமல் இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேச தொடரை இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பமும், இந்திய அணிக்கு மோசமான ஆரம்பமாகவும் ஆரம்பித்த தொடர் இந்திய அணிக்கு மிக அபாரமான தொடராகவும், இலங்கை அணிக்கு மிக மோசமான தொடராகவும் மாறிப்போனது. உலகக்கிண்ண தொடருக்கான முன்னோடித் தொடராக இந்தத் தொடர் அமைந்து இருந்தது. இலங்கை அணி ஆரம்பித்த விதம் மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி அவர்களை வென்று நாடு திரும்பிய பின் ஆரம்பித்த தொடர் இது. இந்திய அணி மிகப் பெரிய பலமான அணியாக திடீர் என ஒரு மாயை ஏற்பட்டது போல இருந்தது. இலங…

  14. தோல்வியடையாத முதல் 10 டெஸ்ட் போட்டிகள்: ஆஸி. கேப்டன் ஸ்மித்தின் சாதனைத் துளிகள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். | கெட்டி இமேஜஸ். நியூஸிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் கேப்டன்சியில் 10 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகளைப் பெற்றதோடு 4 டிராக்களை செய்துள்ளது. இதன் மூலம் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித் 2-ம் இடத்தில் உள்ளார். 95 ஆண்டுகளுக்கு முன்பாக வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தன் கேப்டன்சியில் 8 வெற்றிகளையும…

  15. கொழும்பு இந்துவுக்கு சாமர சில்வா, பிரசன்ன பயிற்சி இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட் வீரர்களுக்கு, இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களான சாமர சில்வா, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் பயிற்சியளிக்கவுள்ளனர். இந்துக் கல்லூரி, கொழும்பு 04க்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டே, இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (17) இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிகள், அரை நாள் இடம்பெறத்தக்கதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய அணியில் விளையாடிய அனுபவமுள்ளவர்களான இவ்விருவரும், தங்களது அனுபவங்களையும் கிரிக்கெட் நுணுக்கங்களையும் இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட…

  16. வரி ஏய்ப்பு விவகாரம்: பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்கள் முடக்கம் ஸ்பெயின், மேட்ரிட் கோர்ட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி விசாரணைக்காக வந்த நெய்மர். | படம்: கெட்டி இமேஜஸ். வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களை பிரேசில் கோர்ட் முடக்கி உத்தரவிட்டது. அதாவது 2011-2013-ம் ஆண்டிற்கிடையே நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த வர்த்தகம் தொடர்பாக 63 மில்லியன் ரியால்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பிரேசில் கோர்ட் ரூ.192 மில்லியன் ரியால்கள் அதாவது சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ள…

  17. பாகிஸ்தான் சூப்பர் லீக் T 20 மைதானத்தில் மோதிய வீரர் February 15, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட் மைதானத்தில் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தொடக்க வீரரான அகமது ஷேஷாட் 21 ஓட்டங்களில், வஹாப் ரியாஸின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது வஹாப் ரியாஸ், ஷேஷாட்டை நோக்கி ஏதோ பேசிக் கொண்டே வந்தார். இதனால் ஷேஷாட் கோபமடைந்த நிலையில், வஹாப் ரியாஸ் அவரை தள்ளிவிட்டார். இதனையடுத…

  18. முதலிடத்தில் இந்தியா: ஐந்தாமிடத்தில் இலங்கை இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தரவரிசையின் முதலிடத்தையும், அவ்வணி உறுதிசெய்தது. இத்தொடரின் முதலாவது போட்டியை வென்று, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஐந்தாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. 2ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், அடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து எனக் காணப்படும் இவ்வரிசையில், 6ஆவது இடத்திலிருந்து தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, …

  19. U19 உலகக் கோப்பை: இந்திய சீனியர் அணிக்கு துருப்புசீட்டுகளா இவர்கள்? 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான தேர்வுதான் நேற்று முடிந்த U19 உலகக் கோப்பை என்று கூறலாம். பந்துகளை சிக்சருக்கு விரட்டும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பேட்ஸ்மேன், புயல் வேகத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர், தெறிக்க விடும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என துருப்புசீட்டுகளை கண்டுபிடித்து தந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், U19 பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட். பெரிய பேட்டிங் வரிசை...விளம்பரத்தில் வரும் வீரர்கள்... இப்படியெல்லாம் இல்லாமல், வழி நடத்தும் பயிற்சியாளர் மட்டுமே பிரபலமானவர் என்ற தகுதியுடன் களமிறங்கி…

  20. பெனால்டியை பாஸ் செய்த மெஸ்ஸி: சக வீரருக்கு உதவிய பெருந்தன்மை! தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், பந்தை கோல் நோக்கி அடிக்காமல், சுவாரஸ் கோல் அடிப்பதற்காக பாஸ் செய்து அப்ளாஸ் அள்ளியுள்ளார் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. தனது 300-வது கோலைப் பொருட்படுத்தாமல், சுவாரசின் சாதனைக்கு உதவிய அவரது இந்தப் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டியுள்ளனர். நேற்று நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி, செல்டா டி விகோ அணிக்கெதிராக விளையாடியது. முதல் பாதியில் மெஸ்ஸியும், செல்டா அணியின் குடேட்டியும் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய சுவாரஸ், 59 வது மற்றும் 75 வது நிமிடங்களில் கோலடித்தார். இந்நிலையில்தான் அந…

  21. சிஎஸ்கே-வை எப்படி மறக்க முடியும்? - தோனி உணர்ச்சிகரம் ஆர்.பி. சஞ்சய் கோயெங்கா குழும தலைவர் சஞ்ஜீவ் கோயெங்கா, ரைசிங் புனே ஜெயண்ட் கேப்டன் தோனி. புதிய சீருடை அறிமுக விழாவில். | படம்: சந்தீப் சக்சேனா. எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் பேசும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டவுடன் சற்றே உணர்ச்சிவயப்பட்டார். புதுடெல்லியில் புதிதாக தலைமை தாங்கவுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஐபிஎல் சீருடை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி கேட்டவுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். “நான் (சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து) நகர்ந்து சென்று விட்டேன் என்று நான் கூறினால் அது பொய்யாகவே இரு…

  22. டெஸ்ட் கிரிக்கெட்டே முக்கியம்: உலகக் கோப்பை டி20-யை உதறிய டேரன் பிராவோ டேரன் பிராவோ. | படம்: பிடிஐ. பணமழை பொழியும் டி20 கிரிக்கெட் உலகில் நுழையும் வாய்ப்பை உதறிய அதிசய வீரரானார் மே.இ.தீவுகளின் இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணியிலிருந்து இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், சுனில் நரைன் ஆகியோர் விலகியுள்ளனர். இதில் கெய்ரன் பொலார்ட் காயத்திற்குப் பிறகான சிகிச்சை முழுமை பெறாததைக் காரணம் காட்டி விலகியுள்ளார். சுனில் நரைன் பந்து வீச்சு முறை இன்னமும் சீராகவில்லை என்ற காரணத்தினால் விலகியுள்ளார். இதில் பொலார்ட், நரைனுக்குப் பதிலாக கார்லோஸ் பிராத்வெய்ட் மற்றும…

  23. பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து வொற்சன் வெளியேற்றம் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொற்சன், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த ஷேன் வொற்சன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற போட்டியொன்றில் பந்துவீசிக் கொண்டிருந்த போது, காயமடைந்தார். அவரது அடிவயிற்றுப் பகுதியில் அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்குபெற மாட்டார் எனவும், உடனடியாக அவுஸ்திரேலியா திரும்புவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 த…

  24. இப்போலாம் எங்கப்பா ஹெலிகாப்டர் ஷாட் ஆட விடுறாங்க... தோனியின் ஜாலி பதில்! இந்திய கேப்டன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அகில உலகமும் பேமஸ். தலைக்கு மேலே பேட்டை சுற்றி அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டில் மைதானமே விக்கித்து போகும். ராஞ்சியில் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டியின் போது, தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது, 'இப்போதெல்லாம் ஏன் நீங்கள் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில்லையே ' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, ஹெலிகாப்டர் எல்லா இடத்துலயும் பறக்க விட முடியுமா? ஹெலிகாப்டர் பறக்க வேண்டுமென்றால் அதற்கென்று இடம் தேவைப்படும். கடலுக்கடியில் ஹெலிகாப்டரை பறக்க வைக்க முடியுமா? பவுன்சர்…

  25.  சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக ஞானரூபன் தெரிவு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான தெரிவுக்கான இடம்பெறும் இணைய வாக்கெடுப்பில் யாழ்ப்;பாணப் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் முதலிடம் பெற்றுள்ளார். ஞானரூபனுக்காக 5481 பேர் வாக்களித்தனர். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக hவவி:ஃஃளிழசவள.அழசயளிசைவை.உழஅஃஎழவந.pரி?சநகஸ்ரீ2சூ_ஸ்ரீ_என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இணைய வாக்கெடுப்பின் கடைசி திகதி 10 திகதி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.