விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிரிக்கெட் வளர்ச்சிக்கு நிலையான கட்டமைப்பு அவசியம் - மஹேல ‘‘இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு உயரிய நிலையை அடைவதற்கு நிலையானதும் காத்திரமானதுமான கட்டமைப்பு ஒன்று அவசியம். நிருவாகம் மாறும்போது கிரிக்கெட் விளையாட்டின் கட்டமைப்பு மாறக்கூடாது. அவ்வாறு மாறும்போது அது வீழ்ச்சியை நோக்கி செல்லும்’’ என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இடைக்கால கிரிக்கட் நிருவாகசபையின் கௌரவ ஆலோசகருமான மஹேல ஜயவர்தன தெரிவித்தார். சிதத் வெத்தமுனி தலைமையிலான லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக சபை அதன் திட்டங்கள் குறித்து கிரிக்கட் தலைமையக கேட்போர் கூடத்தில் ஊடகங்களுக்கு நேற்று விளக்கியபோது மஹேல ஜயவர்தன மேற்கண்டவாறு கூறி…
-
- 0 replies
- 401 views
-
-
நான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்: டானிஷ் கனேரியா வேண்டுகோள்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்குப் பிறகு இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் டானிஷ் கனேரியா. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில், ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இவருக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வாழ்நாள் தடை விதித்தது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முழுமையாக ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் கனேரியா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த விவகாரத்தில் தனக்கு உதவி செய்யும்படி டானிஷ், பி.சி.சி.ஐ.யிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில…
-
- 0 replies
- 400 views
-
-
அடுத்தாண்டு ஒலிம்பிக்கிலும் ரஷ்யா இல்லை தென்கொரியாவின் பியொங்சங்கில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்குபற்றுவதற்கு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், தாம் குற்றமில்லாதவர்கள் என நிரூபிக்கும் ரஷ்ய தடகள வீரர்கள் சுயாதீனக் கொடியொன்றின் கீழ் பியொங்சங்கில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறித்த தடகள வீரர்கள் ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் தடகள வீரர்கள் என்றவாறு பங்குபற்றமுடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவால் 2014ஆம் ஆண்டு சோச்சியில் நடத்தப்பட்ட குளிர்கால ஒலிம்பின்போது அரச ஆதர…
-
- 0 replies
- 400 views
-
-
ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக் கோப்பை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களில் ஒன்று 2011ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி. அதன் இறுதிப் பந்தில் நடந்த அதிரடியின் உணர்வுகளை, நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் உண்டாக்கியது. பேட்ஸ்மேனின் கோட்டை தாண்டி, லாங் ஆனில் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்த சிக்சரை அடித்துவிட்டு தோனி நின்றிருந்தார். அதேபோல், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி…
-
- 1 reply
- 400 views
- 1 follower
-
-
‘எனக்கும் குடும்பம் இருக்கிறது’ - நிறவெறி வசைக்கு ஆளான இம்ரான் தாஹிர் YouTube தெ.ஆ. வீரர் இம்ரான் தாஹிர். - படம். | கெட்டி இமேஜஸ். இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் மீது முகம் தெரியாத பார்வையாளர் ஒருவர் நிறவெறி வசையை எய்தியது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறியதாவது: இம்ரான் தாஹிர் சொல்லாலும் நிறத்தாலும் வசைமொழியை எதிர்கொண்டுள்ளார். பார்வையாளர் ஒருவர் இச்செய்கையை செய்துள்ளார். இதனை மைதான பாதுகாப்பு அதிகாரியிடம் தாஹிர் புகார் கூற, அவரை…
-
- 0 replies
- 400 views
-
-
உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ரொனால்டோ அசத்தலில் போர்ச்சுக்கல் வெற்றி அன்டோரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த மகிழ்ச்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ | படம்: ராய்ட்டர்ஸ். உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல் -அன்டோரா அணிகள் பாரிஸ் நகரில் மோதின. இதில் போர்ச்சுக்கல் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனல்டோ 4 கோல்கள் அடித்து அசத்தினார். ஆட்டம் தொடங்கிய முதல் நான்கு நிமிடங்களுக்குள் அவர் இரு கோல்கள் அடித்து அன்டோரா அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார். யுரோ உலகக் கோப்பை இறுதி ப்போட்டியில் காயம் அடைந்த ரொனால்டோ அதன் பின்னர் 3 மாதங்களுக்கு ப…
-
- 0 replies
- 400 views
-
-
மும்பை: ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சூதாட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இதன் கிங்பின் இருப்பது துபாயில் என்பதும், ஒரு சில வீரர்களை வளைத்துவிட்டால், மொத்த போட்டியையும் மாற்றிவிடலாம் என்பதும் இந்த சூதாட்டத்தின் சூத்திரங்கள். ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மவுசு கூடக்கூட, அதன்மீதான சூதாட்ட மதிப்பும் கூடிக்கொண்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ஐபிஎல் தொடர்பான சூதாட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் புழங்கியுள்ளதாக கூறுகின்றனர் அமலக்கப்பிரிவு அதிகாரிகள். பெயர் வெளியிடப்பட விரும்பாத சூதாட்டக்காரர் ஒருவர் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், ஆண்டுக்கு ஆண்டு, சூதாட்டத்துக்கான பணம் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. கிரிக்கெட் இருக்கும்வரை பெட்டிங்கும் இ…
-
- 0 replies
- 400 views
-
-
லாலிகா கால்பந்து: 33-வது முறையாக பட்டம் வென்றது ரியல்மாட்ரிட் லாலிகா கால்பந்து போட்டியின் புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருந்த நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய ரியல்மாட்ரிட் அணி தனது கடைசி லீக்கில் மலாகாவுடன் மோதியது. இதில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலாகாவை வீழ்த்தியது. வெற்றி கொண்டாட்டத்தில் ரியல்மாட்ரிட் கிளப் வீரர்கள். ரோசாலிடா : லா லிகா, ஸ்பெயின் நாட்டில் புகழ்பெற்ற கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டியாகும். இந்த சீசனில் (2016-17) மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும்…
-
- 0 replies
- 400 views
-
-
மேற்கிந்திய தீவுகளுடனான முச்சதத்ததோடு அசார் அலி படைத்த சாதனைகள். மேற்கிந்திய தீவுகளுடனான முச்சதத்ததோடு அசார் அலி படைத்த சாதனைகள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அசார் அலியின் அபார முச்சதத்தின் துணையுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையில் காணப்படுகின்றது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் அசார் அலியின் ஆட்டமிழக்காத முச்சதத்தின் துணையுடன் (302*) மிகப்பலமான நிலையில் பாகிஸ்தான் காணப்பட்டது.3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 579 …
-
- 0 replies
- 400 views
-
-
லிவர்பூல் அணிக்கு வெற்றி மேல் வெற்றி By Mohamed Shibly ப்ரீமியர் லீக் கிண்ணத்தை நோக்கி தொடர்ச்சியாக முன்னேறி வரும் லிவர்பூல் அணி வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகள் முன்னிலையுடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தனது சொந்த மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (24) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வொன்டரர்ஸ் எதிரணிக்கு கடைசி வரை சவால் கொடுத்தபோதும் லிவர்பூல் இறுதி நேரத்தில் பெற்ற கோல் மூலமே போட்டியில் வெற்றியீட்டியது. …
-
- 0 replies
- 400 views
-
-
யுவராஜ், கம்பீர், ஹர்பஜன்.... ஐ.பி.எல் ஏலத்துக்கு வரும் 1,122 வீரர்கள்! Chennai: 11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல் ஏலம் வருகிற 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1,122 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏலத்திற்கு வரும் வீரர்கள் பட்டியல் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கும் என்று …
-
- 1 reply
- 400 views
-
-
ஆஷஸ்: இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 275 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 473 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. …
-
- 0 replies
- 400 views
-
-
ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு புது கேப்டன்? இதை யாரும் எதிர்பார்க்கலயே.. ரவி சாஸ்திரி பரபர தகவல்.. இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பது குறித்து ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி சமீபத்தில் விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. …
-
- 0 replies
- 400 views
-
-
-
- 0 replies
- 400 views
-
-
ஸபார் அன்ஸாரி வெளியே : சமித் பட்டேல் உள்ளே பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்துக் குழாமில், சகலதுறை வீரரான சமித் பட்டேல் இணைக்கப்பட்டுள்ளார். குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்த இளம் வீரர் ஸபார் அன்ஸாரி காயமடைந்து விளையாடமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே, சமித் பட்டேலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீசும் சகலதுறை வீரரான சமித் பட்டேல், ஏற்கெனவே காணப்படும் மொய்ன் அலி, அடில் ரஷீத் ஆகிய இரு சுழல்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்களுடன் போட்டியிட வேண்டியிருப்பதால், விளையாடும் பதினொருபேரில் இடம்பிடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைப்பது சந்தேகமே. அண்மைய உள்ளூர் கிரிக்கெட் பருவகாலத்தின்போது துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காவிட்டாலும், சுழல் பந்துவீச்ச…
-
- 0 replies
- 400 views
-
-
துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் தோல்விக்குக் காரணம் சங்கக்கார வெளிப்படை 0 SHARES ShareTweet பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்கக்கார. இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து இலக்குகளை இழந்ததை அடுத்து ஐந்தாவது வீரராக களமிறங்கும் சந்திமல் மூன்றாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். மூன்றாவது வீரராகக் களமிறங்கும் குசல் மென்டிஸ் ஐந்தாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஆனால் இவர்கள் இருவருமே பெரிய…
-
- 0 replies
- 400 views
-
-
தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி By A.Pradhap இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டு தொடரை கைப்பற்றியது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் …
-
- 0 replies
- 400 views
-
-
செய்தித்துளிகள் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிரேஸிலின் மார்செல்லோ, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியிடம் தோல்வியடைந்தது. ----------------------------------- இம் மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எம்சிஎல் டி 20 தொடரின் ஜெமினி அரேபியன்ஸ் அணிக்கு சேவாக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் இயக்குநராகவும் அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ----------------------------------- ஐபிஎல் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் பயிற்சியாளராக தோனியுடன் செயல்பட்ட அவ…
-
- 0 replies
- 400 views
-
-
வங்கதேசத்தில் ஆளில்லாத விமானத்தை பறக்க விட்ட தென்ஆப்ரிக்க வீரர்கள்! வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டாக்காவில் முகாமிட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டு வரும் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு மேலே 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டு, கேமரா மூலம், பயிற்சிமுறைகளை படம் பிடித்தனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் வங்க தேசத்தில் அனுமதியில்லாமல் இது போன்று ட்ரோன் பறக்க விட தடையிருக்கும் நிலையில், இதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் போனது. உடனடியாக அவர்கள் ட்ரோனை தரையிறக்க உத்தரவிட்டனர். இதையடுத்து ட்ரோன் இறக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம், தென் ஆப்ப…
-
- 0 replies
- 399 views
-
-
சோதனை செய்தால் 90 சதவீத ஸ்பின்னர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்: ஐ.சி.சி. மீது அஜ்மல் கடும் தாக்கு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் ஐ.சி.சி. மீது கடுமையாக தாக்கியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சயீத் அஜ்மல். 40 வயதாகும் இவர் 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டில் இருந்து மிஸ்பா-உல்-ஹக் கேப்டன் பதவியின் கீழ் முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். …
-
- 0 replies
- 399 views
-
-
துபாயில் மனைவி, குழந்தைகள் தவிப்பு: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீது தவான் குற்றச்சாட்டு தவானின் மனைவி மற்றும் குழந்தைகளை தென்ஆப்பிரிக்கா செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன் மறுத்துவிட்டது. மனைவி, குழந்தைகள் துபாயில் தவிப்பதால் தவான் குற்றம்சாட்டியுள்ளார். #INDvSA #EmiratesAirline இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் (27-12-2017) நள்ளிரவு மும்பையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன் மூலமாக துபாய் சென்றது.…
-
- 1 reply
- 399 views
-
-
இங்கிலாந்தில் சங்கா சதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக நேற்று களமிறங்கிய குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுள்ளார். சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிவரும் சங்கா, கிளமோர்கன் அணிக்கெதிரான போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். இதே அணிக்காகவே கெவின் பீட்டர்சன் தன் மீள் வருகைக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சரே அணி, முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள ஸ்டீவன் டேவிஸ் மற்றும் குமார் சங்ககார ஆகியோர் இணைந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/144318#sthash.O5…
-
- 1 reply
- 399 views
-
-
'நியூசிலாந்து அணிக்கு நஞ்சூட்டப்பட்டது' 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களுக்கு நஞ்சூட்டப்பட்டதாக, நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மெய்ப்பாதுகாவலரொருவர் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தப் போட்டி தொடர்பாக, இது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இறுதிப் போட்டியில், ஜோனா லொமு தலைமையிலான நியூசிலாந்து அணி, அதிக வெற்றிவாய்ப்புகளைக் கொண்ட அணியாகக் களமிறங்கியிருந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் வைத்து தென்னாபிரிக்காவிடம் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இறுதிப் போட்டிக்கு 48 மணிநேரங்கள் முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களில் பலர், உணவு நஞ்சானதன் காரணம…
-
- 0 replies
- 399 views
-
-
டோனியின் உபாதை புதன்கிழமை, 12 நவம்பர் 2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைர் மகேந்திர சிங் டோனியின் வலது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதையே அவர் இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடாமைக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனது விருப்பத்தின் பெயரில் அவர் தனக்கு ஓய்வு தேவை என்ற நிலையில் ஓய்வினை எடுத்துக்கொண்டார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதற்ப் போட்டியில் உபாதை காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. உபாதை குணமடையும் வாய்ப்புக்கள் உள்ள போதும் உலகக்கிண்ணத்தை குறி வைத்து அவரை மேலும் உபாதையடையாமல் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய கிர…
-
- 0 replies
- 399 views
-
-
ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம் கிறிஸ் வாலன்ஸ் தொழில்நுட்ப நிருபர் 25 ஜூலை 2022 பட மூலாதாரம்,FORTEM TECHNOLOGIES ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க 'ட்ரோன்'கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அச்சு…
-
- 0 replies
- 399 views
- 1 follower
-