Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஜொன்சன் February 11, 2016 இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் மீது மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் பிரெட்போர்ட் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த வழக்கு மீதான விசாரணைகளின் போது 15 வயது சிறுமி ஒருவருடன் தான் பாலியல்; ரீதியான உறவினை பேணி வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. …

    • 1 reply
    • 542 views
  2. வீரர்கள் தவறுகள் செய்யவும் வாய்ப்பு வழங்க வேண்டும்: அண்டர் 19 அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பேட்டி இந்திய அண்டர் 19 கேப்டன் இஷான் கிஷன் (இடது), பயிற்சியாளர் ராகுல் திராவிட். | படம்: விவேக் பெந்த்ரே. பயிற்சியாளர் ராகுல் திராவிடின் வழிகாட்டுதலுடன் இந்திய அண்டர் 19 அணி வங்கதேசத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிக்குள் பிரவேசித்துள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட் வீரர்களுடனான தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார். ஐசிசி கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் கூறியிருப்பதாவது: நான் இளம் வீர்ர்களுடன் பணியாற்றுவதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன், இளம் வீரர்களுடன் உரையாடி வருகிறேன். எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்…

  3. U19 சிங்கம் ரிசாப் பண்ட் தான் அடுத்த விராத் கோலியா? 2008ம் ஆண்டு ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பலரும் ஜொலித்திருந்தனர். அந்தப் பல நட்சத்திரங்களுள் இன்று துருவ நட்சத்திரமாய் ஜொலிப்பது என்னவோ விராத் கோலி மட்டும் தான். அதற்கடுத்தது இந்திய அணிக்குள் வந்தவர்களெல்லாம் ஐ.பி.எல் செயல்பாட்டால் ஜொலித்தவர்களே ஒழிய, ஜூனியர் உலகக்கோப்பை யாருக்கும் பெரிய அளவில் அங்கீகாராம் பெற்றுத் தரவில்லை. ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடந்துவரும் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிசாப் பன்ட். கோலியைப் போலவே இந்திய அணியின் வருங்காலமாய் இவர் உருவெடுக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஒரே ஒரு ஊருக்குள்…

  4. தேசிய கீதத்தின் போது அநாகரீகமாக நடந்த அவுஸ்திரேலிய வீரர் February 11, 2016 அவுஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கும் போது அந்நாட்டு வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது தேசிய கீதம் பாட அவுஸ்திரேலிய வீரர்கள் வட்டமிட்டு நின்றனர். அப்போது சக வீரர் ஆடம் சம்பாவின் இடுப்பில் கை வைத்திருந்த அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டார். இது அங்கிருந்த கமெராவில் பதிவானது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்த காவாஜா, ”ஹா..ஹா.. எனது பின் பக்கம் க…

  5. மெத்யூ 7 தங்கங்களை வென்று சாதனை (குவா­ஹாட்­டி­யி­லி­ருந்து எஸ். ஜே. பிரசாத்) தெற்­கா­சிய விளை­யாட்டு விழா அத்­தி­யா­ய­மொன்றில் 7 தங்கப் பதக்­கங்­களை வென்ற நீச்சல் வீரர் மெத்யு அபே­சிங்க இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்டினார். இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தின் குவா­ஹாட்டி மற்றும் மேகா­லயா மாநி­லத்தின் ஷில்­லொங்கில் நடை­பெற்று வரும் 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் ஆறாம் நாளான நேற்று துப்­பாக்­கி­சுடுதல், ஸ்கொஷ், மேசைப்­பந்­தாட்டம், டென்னிஸ், பூப்­பந்­தாட்டம் (பட்­மின்டன்) ஆகிய போட்­டிகளும் நடை­பெற்­றன. நீச்சல் போட்டி சரு­சாஜாய், டாக்டர் ஸக்கிர் ஹுசெய்ன் ந…

  6. நியூஸி. கிரிக்கெட் நேரலையை 'மறந்த' இந்திய டிவி சேனல்கள்! நியூஸிலாந்தில் நடைபெறும் சர்வதேச இருதரப்பு ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இந்தியத் தொலைக்காட்சியில் எதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதில்லை. ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. உலகக்கோப்பை ஒரு ஐசிசி நிகழ்வு, அதனால் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச போட்டிகள் நேரடி ஒளிபரப்புக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலவரம். கடைசியாக நியூஸிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது டெஸ்ட், ஒருநாள் தொடர்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன, ஆனால் அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வத…

  7. ஏலத்தில் என்ன நடந்தது?- ஐ.பி.எல் 'லக்கிமேன்' முருகன் அஸ்வின் பேட்டி வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முருகன் அஸ்வின் புனே அணிக்காக ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம்தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐ.பி.எல். என்ட்ரி குறித்து அவர் அளித்த பேட்டி இங்கே... ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடந்தது? பிப்ரவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கே டி.வி. முன்னாள் உட்கார்ந்துட்டேன். லஞ்சுக்கு மட்டும்தான் எழுந்துருச்சேன். மாலை 4 மணிக்குதான் எனது பெயர் ஸ்கிரீன்ல தெரிஞ்சது. ரொம்ப நெர்வசா இருந்தது. எனக்கு ஐ.பி.எல்.ல விளையாடனும்னுதான் ஆசை…

  8. ரூ.1600 கோடியை இழப்பை சந்திக்கும்: பி.சி.சி.ஐ பல்லை பிடுங்கியது லோதா கமிட்டி! லோதா கமிட்டி பரிந்துரை அமல் செய்யப்பட்டால், இந்த ஆண்டு பி.சி.சி.ஐ ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பபான பி.சி.சி.ஐ. யின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும். இதில் பெரும் பகுதி தொலைகாட்சி உரிமத்ததால் கிடைப்பது. த கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்கள், சீர்கேடுகளை களைய உச்சநீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, கிரிக்கெட் அமைப்புகளை சீரமைக்க, பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் முக்கியமானது, ஒவ்வொரு ஓவர் இடைவேளை, விக்கெட் அவுட் ஆகும் சமயங்களில் தொலைகாட்சி விளம்பரங்கள் ஒளிபரப்ப அனுமதிக்க கூடா…

  9. மேட்ச் பிக்சிங் : ரூ. 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட சன் ஸ்டார் ஹிந்தி பத்திரிகை மீது ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக , இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஹிந்தி பத்திரிகையான 'சன் ஸ்டார்' அண்மையில், இந்திய அணியின் முன்னாள் மேலாளரும் டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் , கடந்த 2014-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து தோனி அந்த பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '' இந்த செய்தியில் துளியளவும்…

  10. ”பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு திரும்ப முடியாது” மோர்கன் February 10, 2016 இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக அந்த அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான பீட்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்ப போராடி வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார். ஆனால் பீட்டர்சனை அணியில் இணைத்துக் கொள்ள முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பீட்டர்சன் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.…

  11. இந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள் இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி புனேயில் இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்தே தமது வெற்றியை கொண்டாடுமுகமாக இலங்கை அணி வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். …

  12. 6 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தி சிறுவன் சாதனை February 10, 2016 நியூசிலாந்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் லூக் மார்ஷ் என்ற 8 வயது சிறுவன் ஒரு ஓவரில் 6 விக்கெட் வீழ்த்தி அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்தில் Montecillo என்ற இடத்தில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. இதில் கைகோரை மற்றும் டையேரி அணிகள் மோதின. இதில் கைகோரை அணிக்காக விளையாடிய லூக் மார்ஷ் என்ற 8 வயது பொடியன் 6 பந்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அனைத்துமே பவுல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. Dunedinல் வசித்து வரும் இந்த சிறுவன் தனது 5 வயதில் இருந்தே தீவிரமாக பந்துவீச்சு பயிற்சி பெற்று வருகிறார். துல்லியமாக பந்து வீசிவதில் மட்டுமே…

  13. இந்தியாவை பின் தள்ளியது இலங்கை புனேயில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபது 20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதை தொடர்ந்து இருபது20 போட்டித் தொடர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் 118 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. http://www.virakesari.lk/article/2992

  14. தெற்காசியாவின் வேகமானோர் இலங்கையர்கள் தெற்காசியாவின் வேகமான நபர்களாக, இலங்கையைச் சேர்ந்த ஹிமாஷ இஷான், றுமேஷிகா புத்திக்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றே, இவர்களிருவரும் இப்பெருமையைப் பெற்றுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர், 10.28 செக்கன்களில் ஓடி முடித்து, தங்கப் பதக்கம் வென்றார். இது, கடந்த ஏழு தசாப்தங்களில், இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட சிறந்த பெறுபேறாகும். இறுதிப் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற தகுதிகாண் சுற்றில், 10.26 செக்கன்களில் அவர் ஓடி முடித்த போதிலும், தொழில்நுட்பத் தவறு காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. …

  15. தென்னாபிரிக்காவுக்குச் சிறப்பான வெற்றி தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது. செஞ்சூரியனில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 125 (113), அலெக்ஸ் ஹேல்ஸ் 65 (73), பென் ஸ்டோக்ஸ் 53 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், கஜிஸ்கோ றபடா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். …

  16. பாகிஸ்தானின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள்,இலங்கை அல்லது ஐ.அ.இராச்சியத்தில் நடைபெறும் வாய்ப்பு? தமது அணி பங்­கு­பற்றும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ சி. சி.) உலக இரு­பது கிரிக்கெட் போட்­டி­களை நடு­நி­லை­யான மைதா­னங்­களில் நடத்­து­வ­தற்­கான பிரே­ர­ணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹா­ரியார் கான் முன்­வைத்­துள்ளார். தமது அணி இந்­தி­யா­வுக்கு பயணம் செய்­வ­தற்கு பாகிஸ் தான் அர­சாங்கம் அனு­ம­திக்­காத பட்­சத்தில் தமது நாட்டு அணி சம்­பந்­தப்­பட்ட போட்­டி­களை நடு­நி­லை­யான மைதா­னங்களில் நடத்­து­வ­தற்­கான பிரே­ரணை ஒன்றை சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யிடம் சமர்ப்­பித்­துள்­ள­தாக ஷஹா­ரியார் கூறினார். ‘‘இந்­தி…

  17. கிமிக்கோ ரஹீமுக்கு 4 ஆவது தங்கப்பதக்கம்: ஜீவனுக்கு 2 ஆவது தங்கம்; 800 மீற்றர் ஓட்டத்தில் நிமாலிக்கு தங்கம், கயன்திகாவுக்கு வெள்ளி (குவா­ஹாட்­டி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத்) 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீராங்கனை கிமிக்கோ ரஹீம் 4 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார். மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளிலும் இலங்கை அணி தனது தங்­க­வேட்­டையை ஆரம்­பித்­தது. மக­ளி­ருக்­கான 800 மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் இலங்­கையின் நிமாலி தங்கப் பதக்­கத்­தையும் கயன்­திகா வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும் வென்­றனர். இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தின் குவா­ஹாட்டி மற்றும் மேகாலய…

  18. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் நியமனம் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கேப்டனாக நியமிக்கப்பட்ட டேவிட் மில்லர். | கோப்புப் படம். 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் டேவிட் மில்லரை கேப்டனாக நியமித்துள்ளது. இது குறித்து கிங்ஸ் லெவன் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும்போது, “டேவிட் மில்லர் ஒரு வீரராக வளர்ச்சியடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் ஆகச்சிறந்த பேட்டிங் திறமைகளும், நெருக்கடி சூழ்நிலைகளிலும் அனாயசமாகக் கவலைப்படாமல் எதிர்கொள்ளும் திறமைகளும் அவரிடம் உள்ளதை நான் பார்த்திருக்கிறேன். எனவே கிங்ஸ் லெவன் அணியை வழிநடத்த அவரிடம் திறமை உள்ளது” என்றார். …

  19. நான் விளையாடியவர்களில் ஸ்டீவ் வோவே சுயநலவாதி தான் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வோ, மிகவும் சுயநலவாதியான கிரிக்கெட் வீரர் என, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோண் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டே, இக்கருத்துகளை ஷேன் வோண் வெளியிட்டார். 'ஸ்டீவ் வோவை நான் விரும்பாமைக்கு, பல காரணங்கள் இருக்கின்றன. பல காரணங்கள். ஏனெனனில், நான் இணைந்து விளையாடிய வீரர்களில், அதிக சுயநலவாதியான வீரர், அவரே" என, வோண் தெரிவித்தார். ஸ்டீவ் வோ மீதான அவரது வெறுப்புக்கு, 1999ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டி…

  20. மெஸ்ஸிக்கு சிறுநீரக சோதனை பார்சிலோனா அணியின் வீரர் லியனல் மெஸ்ஸிக்கு, சிறுநீரகக் கல் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், நாளை இடம்பெறவுள்ள கிங்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில், வலென்சியா அணிக்கெதிராக அவர் விளையாடுவார் என, பார்சிலோனா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு டிசெம்பரில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகம் தொடர்பாக பிரச்சினைகளை ஆராய்வதற்கான சோதனைகள், நேற்றும் இடம்பெற்றதோடு, நேற்று இடம்பெற்ற பயிற்சிகளிலும், மெஸ்ஸி பங்கேற்றிருக்கவில்லை. எனினும் கருத்துத் தெரிவித்த பார்சிலோனா, 'முதலணிக்கான வழக்கமான பணிகளுக்கு, புதன்கிழமையன்று மெஸ்ஸி திரும்புவார்" எனத் தெரிவித்தது. ஆர்ஜென்டின அணியின் தலைவரான மெஸ்ஸி, கடந்தாண்டு இடம்பெற்ற …

  21. நீச்சலில் கிமிக்கோவுக்கு இரண்டு தங்கங்கள், மெத்யூவுக்கு மேலும் ஒரு தங்கம் 2016-02-09 10:54:14 (குவா­ஹாத்­தி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத்) இந்­தி­யாவின் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் நடை­பெற்­று­வரும் 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் நான்காம் நாளான நேற்­றைய தினம் மாலை 6.00 மணி­வரை இலங்­கைக்கு மேலும் 3 தங்கப் பதக்­கங்­களும் 4 வெள்ளிப் பதக்­கங்­களும் 8 வெண்­கலப் பதக்­கங்­களும் கிடைத்­தன. நீச்சல் வீராங்­கனை கிமிக்கோ ரஹீம் பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் மார்­தட்டு நீச்சல் போட்­டியை ஒரு நிமிடம் 03 செக்­கன்­களில் நிறைவு செய்தி தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான புதிய சாத­னை­யுடன் தங்கப் பதக்­கத்தை சு…

  22. இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகளில் தங்கராஜாவுக்கு முதலாவது சம்பியன் பட்டம் (நெவில் அன்­தனி) றோயல் கலம்போ கோல்வ் கழ­கத்­தினால் நடத்­தப்­பட்ட பெலிஸ் இலங்கை பகி­ரங்க கோல்வ் போட்­டி­களில் நட­ராஜா தங்­க­ராஜா மூன்று நகர்­வுகள் வித்­தி­யா­சத்தில் சம்­பி­ய­னானார். 43 கோல்வ் வீரர்கள் பங்­கு­பற்­றிய இலங்கை பகி­ரங்க கோல்வ் போட்­டிகள் கடந்த வாரம் றோயல் கோல்வ் கழக புல் தரையில் நடை­பெற்­றது. இந்த நான்கு நாள் போட்­டியில் முதல் இரண்டு தினங்­களும் குறைந்த நகர்­வு­க­ளுடன் தங்­க­ராஜா முன்­னி­லையில் இருந்தார். ஆனால், மூன்றாம் நாளன்று 2015 சம்­பியன் கந்­த­சாமி பிர­பா­கரன் முன்­னிலை அடை…

  23. தலைசிறந்த கேப்டனை இழந்தது நியூசி : ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மெக்குல்லம்! முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மிக அரிதான வீரர்களில் ஒருவர். 360 டிகிரி கோணத்தில் பந்துகளை துவம்சம் செய்பவர். இவரது பேட்டில் பட்ட பந்துகள் புல்லட் ரயில்களின் வேகத்துக்கு நிகரானவை என வர்ணிக்கப்படுபவர் மெக்கல்லம் . அவரை இனிமேல் ஒருநாள் போட்டிகளில் பார்க்க முடியாது ஆம் இன்று நடைபெற்ற போட்டிதான் அவரது கடைசி போட்டி. முதலில் பெற செய்த நியூஸிலாந்தின் துவக்க வீரராக களமிறங்கிய மெக்கல்லம். பட்டாசை வெடிக்க துவங்கினார் 27 பந்துகளில் 47 ரன்களை குவித்து தெறி மாஸ் காட்டினார். அதிரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். உண்மையிலேயே கா…

  24. தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டு ! இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி யில் இந்திய அணியின் கேப்டன் தோனி, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இந்திய அணியின் மேலாளரும் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சன்ஸ்டார் பத்திரிகைக்கு அளித்துள்ள வீடியோ பேட்டியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில், இது 100 சதவீதம் உண்மை என்றும் அவர் குறிப்…

  25. விடைபெறும் வேளையில் எதிரணியை களங்கடித்த மெக்கல்லம் (வீடியோ) February 8, 2016 12:09 pm நியூஸிலாந்து - அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இது நியூஸிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மெக்கல்லம் விளையாடும் கடைசி சர்வதேச ஒரு நாள் தொடராகும். இதன்பிறகு நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். எனவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றி மெக்கல்லத்துக்கு சிறப்பான முறையில் பிரியா விடைகொடுக்க நியூஸிலாந்து அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.