Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐ.பி.எல். போட்டிகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது! இந்தியன் பிரிமீயர் கிரிக்கெட் போட்டிகளானது ஒத்தி வைக்கப்பட மாட்டாது என இந்திய கிரிக்கெட் நிறுவன தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 13 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் மராட்டிய மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் டோப் அளித்த ஒரு பேட்டியில், ‘மக்கள் ஒரு இடத்தில் அதிக அளவில் கூடும் போது அங்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் அது வேகமாக மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறிது காலத்துக்கு மக்…

  2. தோனி, சச்சின் குறித்த கருத்து: சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் கடும் கண்டனம் படம்.| கே.முரளிகுமார். தோனி, சச்சின் உள்ளிட்ட அணித் தேர்வு விவகாரங்களை வெளிப்படையாக பேசிய சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் சமீபத்தில் தோனியை கேப்டன்சியிலிருந்து அகற்றுவது பற்றியும், சச்சின் டெண்டுல்கர் பற்றியும் கூறிய கருத்துகளுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது 2015 உலகக்கோப்பைக்கு முன்னதாக ‘தோனியின் பினிஷிங்’ பற்றியும் தோனியின் கேப்டன்சியைப் பறிப்பது பற்றியும் விவாதித்தோம் என்றும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் …

  3. கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான கெவின் பீட்டர்சனை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியை வெளியிட்டு ஊடகம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்வீரோ பீட்டர்சன், உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில் பங்களாதேஷை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று அல்வீரோ பீட்டர்சனுக்குப் பதிலாக,இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் படத்தை பிரசுரித்து ச…

  4. தோனி - யுவராஜ்: நண்பர்களின் இணையத்தளக் குறும்பு (காணொளி இணைப்பு) தோனி-யுவராஜ் இருவரும் பரம வைரிகளாகவே சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், யுவராஜ் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ அந்த எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது. தோனியின் தோளில் கைபோட்டு இறுக்கிக்கொண்டே யுவராஜ் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு புன்னகை மாறாத முகத்துடன் தோனி பதிலளிக்கும் வீடியோவை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருக்கிறார். இங்கிலாந்து ஏ அணிக்கெதிரான போட்டி முடிந்த சற்று நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள தோனியிடம் யுவராஜ் ஓரிரு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ‘கிரிக்கெட் வீரராக…

  5. 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத துரதிஷ்டம் : பிரபல வீரருக்கு ஏற்பட்ட சோகம் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர் மொஹமதுல்ல விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் கலீட் முஹமது தெரிவித்துள்ளார். இவர் இறுதியாக இடம்பெற்ற காலி டெஸ்ட் போட்டியில் 8 மற்றும் 0 என்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் இரண்டு ஓவர்களை மாத்திரமே வீசியிருந்தார். இந்நிலையில் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், மொஹமதுல்ல நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி கொழும்பி…

  6. கோலியின் விக்கெட் மலிங்கவுக்கு மைல்கல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை லசித் மலிங்க கடந்துள்ளார். கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதையடுத்து லசித் மாலிங்க 300 ஆவது விக்கெட் என்ற மைல்கல்லைக் கடந்தார். 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 300 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளைக் கடந்த இலங்கையர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை மலிங்க பிடித்துக்கொண்டார். இதேவேளை, 30 டெஸ்ட் போட்டிகளலில் விளையாடியுள்ள லசித்…

  7. கோலி 100... தோனி 100... இலங்கை 1... சாதனைத் தொடரின் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics http://www.vikatan.com/news/sports/101311-india-whitewashed-srilanka-here-are-the-stats.html

  8. இரு பிரிவுகளிலும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் சம்பியன் கொழும்பு சென். ஜோசப் கல்லூரி நாடு பூராகவும் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தி 5 பேர் கொண்ட “வுட்செல்” (Futsal) கால்ப்பந்தாட்டப் போட்டியில் 17 வயதுப் பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் வெற்றிபெற்று 2017 ஆம் ஆண்டுக்கான கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டன. இப் போட்டித் தொடர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி கைதானத்தில் இடம்பெற்றது. 17 வயதுப் பிரிவு போட்டியின் அரையிறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தேசிய சம்பியனான மருதானை ஸாகிரா கல்லூரி அணியைவெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. …

  9. 1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்! பட்ட காலிலே படும் என்பது நெய்மருக்குப் பக்காவாகப் பொருந்தும். கடந்த ஞாயிற்றுக்கிழமை Ligue 1 தொடரில் மார்சிலிக்கு எதிரான போட்டியின்போது நெய்மர் காயமடைந்தார். அனல் பறக்கும் ஆட்டம் இல்லை; ஆக்ரோஷமான டேக்கிள் இல்லை; ஆனாலும், அவர் கீழே விழுந்தார். வலது காலின் முன்பாதப் பகுதியை எசகுபிசகாக தரையில் ஊன்றி விட, வலியால் துடித்தார். களத்துக்குள் பிசியோ வந்தார். பெயின் கில்லர் பயனளிக்கவில்லை. ஸ்ட்ரெச்சர் வந்தது. நிலைமை சீரியஸ். ஆம், நெய்மரின் முன்பாதத்தில் எலும்புமுறிவு (Metatarsal fracture), போதாக்குறைக்குக் கணுக்காலில் தசைப்பிடிப்பு. களத்திலிருந்து ந…

  10. மைக்கேல் கிளார்க்கை என்னால் ஒரு போதும் மன்னிக்க முடியாது: டேல் ஸ்டெய்ன் காட்டம் கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது தன்னை நோக்கி ஆஸ்திரேலிய கேப்டன் வசைச்சொல்லை ஏவியதை மறக்கப்போவதில்லை என்றும் இதற்காக மைக்கேல் கிளார்க்கை ஒரு போதும் தான் மன்னிக்க மாட்டேன் என்றும் தென் ஆப்பிரிக்க வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் காட்டமாகக் கூறியுள்ளார். கிரிக்கெட் ஆட்டக்களத்தில் தன்னை மிகவும் காயப்படுத்திய வசைச்சொல் ஒன்று உண்டென்றால் அது அன்று மைக்கேல் கிளார்க் கூறியதே என்று ஸ்டெய்ன் இப்போது கூறியுள்ளார். ஆட்டத்தை தோல்வியிலிருந்து காப்பாற்ற டேல் ஸ்டெய்ன் பேட்டிங்கில் போராடிக் கொண்டிருந்த போது, ஜேம்ஸ் பேட்டின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னை நோக்கி ஓரிரு வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள, …

  11. ஸ்மித், வார்னர் இல்லாததால் நல்ல வாய்ப்பு; ஆஸி.யை அதன் மண்ணில் இந்தியா வீழ்த்தும்: இயன் சாப்பல் உறுதி மும்பை நிகழ்ச்சியில் இயன் சாப்பல். - படம். | பிடிஐ மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இந்நாள் வர்ணனையாளர் இயன் சாப்பல், ஸ்மித், வார்னருக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை முதன் முறையாக டெஸ்ட் தொடரில் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் கோலி படை அங்கு நவம்பர் மாதம் கடைசி வாரம் தொடங்கும் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. …

  12. ஆஸி.தொடருக்கு ஜடேஜாவுக்கு பதில் கரன் சர்மா, லோகேஷ் ராகுலுக்கும் ஆதரவு: திராவிட் ஆலோசனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் லோகேஷ் ராகுலையும் கரன் சர்மாவையும் சேர்க்க வேண்டும் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கரன் சர்மா ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர், ஆஸ்திரேலியாவில் இத்தகைய ஸ்பின்னர்களுக்கு விக்கெட் விழ அதிக வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் வேகமாகவும், கூக்ளி வீசவும் முடிந்தால் ஆஸ்திரேலியாவில் சாதிக்கலாம். ஜடேஜா அவரால் முடிந்ததைச் செய்வதில் நன்றாகவே திகழ்ந்தார். விக்கெட் டு விக்கெட் வீசுவார். பின்னால் இறங்கி பயனுள்ள ரன்களை எடுப்பார். ஆனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டுமெனில் தரமான ரிஸ்ட் ஸ்பின்னர் தேவை. க…

  13. சேனநாயக்கவிற்கு பந்து வீச ஐ.சி.சி. அனுமதி இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளது. சச்சித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சுப் பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் அதிருப்தியேற்பட்டதையடுத்து சோதனைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் சேனநாயக்க மீள்பரிசோதனை க்குட்படுத்தப்பட்டார். இதன்போது பந்துவீச்சுப் பணி விதிமுறைகளுக்குட்பட்டிருந்ததையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/12/09/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%A…

  14. அயல்நாடுகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கு இல்லை: ஹெய்டன் அயல்நாட்டு மைதானங்களில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்கிறார் முன்னாள் ஆஸி. தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன். தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: “தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியில் வந்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்பதே அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். ஒன்று டெஸ்ட் போட்டியின் முதல் நாளை மோசமாகத் தொடங்குகின்றனர், அல்லது முடிவுத் தருணங்களில் கோட்டை விடுகின்றனர். ஆட்டத்தின் முக்கியத் தருணங்களை அவர்கள் இழக்கின்றனர். மேலும், அந்த அணி எழுப்பும் புகார் சத்தங்களும் நன்றா…

  15.  துணை அங்கத்துவ நாடுகளின் கையில் அவமானப்படும் ஐசிசி அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகியன சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவமுடைய நாடுகளாகக் காணப்படுகின்றன. இவை டெஸ்ற் விளையாடும் தகுதியையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக 38 நாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபையானது துணை அங்கத்துவ நாடுகளாக அங்கீகரித்துள்ளது. இந்த 38 நாடுகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஹொங் கொங், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தினைக் கொண்ட துணை அங்கத்துவ நாடுகளாகக் காணப்படுகின்றன. இரண்டாயிரத்துப் பதினொராம் ஆண்டு இட…

  16. 9 டக்கு.. ஒரே ஒரு டன்.... பிளைட்டை எடுத்துக் கொண்டு வந்த வெட்டிமுனி! மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்றாலே சுவாரஸ்யமானதுதான். பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் நிறைய காமெடிகளும், சோகங்களும், திருப்பங்களும் அரங்கேறும். அந்த வகையில் 1979ல் நடந்த இறுதிப் போட்டி மறக்க முடியாதது. 1979ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இங்கிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் மொத்தம் 9 வீரர்கள் டக் அவுட் ஆகினர். இது ஒரு சாதனையாக இன்றளவும் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் கொடி கட்டிப் பறந்த காலம் அது. விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன் அதகளப்படுத்திய சமயம் அது. கிளைவ் லாயிட் என்ற பிரமாதமான கேப்டன் தலைமையில் மிகப் பயங்கரமான அதி வேகப் பந்துவீ…

  17. நேபா­ளத்தில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டுச்­சம்­மே­ள­னத்தின் 14 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான பிராந்­திய கால்­பந்­தாட்டப் போட்­டியில் மாலை­தீ­வுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்­துள்­ளது. காத்­மண்டு இரா­ணுவ உடற்­கலை நிலைய மைதா­னத்தில் நடை­பெற்ற இப் போட்­டியில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியைச் சேர்ந்த சுரேந்­திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவ­னேஸ்­வரன் தர்­மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்­களைப் போட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.14 வய­துக்­குட்­பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலை­வி­யாக கௌரி விளை­யா­டு­கின்­றமை மற்­றொரு விசேட அம்­ச­மாகும். வலைப்­பந்­தாட்­டத்தை விட இலங்கை விளை­யாட்டு அணியில் யாழ். பாட­சாலை மாணவி ஒருவ…

    • 0 replies
    • 458 views
  18. 12 DEC, 2023 | 03:28 PM (நெவில் அன்தனி) 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுநர்களாக நோவா லைல்ஸ், மொண்டோ டுப்லான்டிஸ், கெல்வின் கிப்டம், டிகிஸ்ட் அசேஃபா, ஃபெய்த் கிப்பிகோன், யூலிமா ரோஜாஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொனாக்கோவில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விழாவின்போது உலக சாம்பியன்கள் மற்றும் உலக சாதனை படைத்தவர்கள் இறுதி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த வருடத்தின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர்களாக இம்மானுவேல் வன்யோன்யி, ஃபெய்த் செரோட்டிச் ஆகியோர் தெரிவாகினர். வாக்களிக்கும் முறையின்போது பெறப்பட்ட கருத்துக்களைப் பின்பற்றி இந்த வருடத்துக்கான உலக மெய்வல்லுநர் விருதுகள் வழங்கப்பட்ட…

  19. அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்குள் நுழைந்தனர் நடால், சிட்சிபாஸ் ஆண்டின் முதலாவது கிராட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப்போட்டிகளினுள் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் நுழைந்துள்ளனர். இதேவேளை, மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டானியல் கொலின்ஸ் மற்றும் சென் குடியரசின் கிவிட்டோவா ஆகியோர் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த 7 ஆம் திகதி முதல் அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று இடம்பெற்ற காலிறுதிப்போட்டியொன்றில், ரபேல் நடால் அமெரிக்க இளம் வீரர் பிரான்செஸ் ரைபோவை எதிர்கொண்டார். மிகவும…

  20. பார்முலா 1 : கிண்ணத்தை வென்றார் ஹமில்டன் பார்முலா 1 கார்பந்தய போட்டியில் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார். கார்பந்தயத்தில் முதலிடத்தில் இருக்கும் பார்முலா 1 போட்டியின் 9ஆவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பரி சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடந்தது. பந்தய தூரமான 306 கிலோ மீட்டர் இலக்கை மெர்சிடஸ் அணியின் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் 1 மணி 31 நிமிடம் 27.729 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து கிண்ணம் வென்றார். ஜேர்மனி வீரர்கள் ரோஸ்பெர்க் 2ஆவது இடத்தையும் செபஸ்டியன் வெட்டல் 3ஆவது இடத்தையும் பெற்றனர். 19 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இதுவரை நடந்துள்ள 9 சுற்று முடிவில் ஹமில்டன் 194 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஸ்பெர்க் 177 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்…

  21. Cherry blossom பின்னணியிலான 2020 ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான தீபம் இன்று (புதன்கிழமை) டோக்கியோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னதாக ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்திலிருந்து ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு தங்க நிறத்திலான குறித்த தீபம் சகுரா அல்லது செர்ரி மலரின் பின்னணியை கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு வசந்த காலத்திலும் மிகுந்த ஆரவாரத்துடன் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதும் இந்த முறை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தங…

  22. ஐரோப்பிய லீக் கிண்ண தொடர்: இரண்டாவது முறையாக சம்பியன் கிண்ணமேந்தியது செல்சியா அணி! யு.இ.எப்.ஏ. ஐரோப்பிய லீக் கிண்ண தொடரில் செல்சியா அணி, 4-1 என்ற கோல்கள் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், செல்சியா அணி 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய லீக்கை வென்ற பின் ஐரோப்பிய பட்டம் ஒன்றை வெல்வது இது முதல் முறையாகும். செல்சியா அணியின் ஐந்தாவது ஐரோப்பிய கிண்ணம் இதுவாகும். செல்சியா அணியை விடவும் இங்கிலாந்து கழகங்களில் லிவர்பூல் அணி அதிகமாக 8 முறை ஐரோப்பிய கிண்ணங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசர்பைஜான் தலைநகர் பகுவில் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடின. எனினும் இர…

  23. செய்தித்துளிகள் 2013ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் குழு அறிக்கையில், ஐபிஎல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ராமன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும் கடந்த இரண்டாண்டுகளாக சுந்தர் ராமன் பதவியில் நீடித்து வந்தார். இதற்கிடையே பிசிசிஐ தலைவராக சஷாங் மனோகர் சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில் சுந்தர் ராமன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். ---------------------------- தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் …

  24. சொந்த மைதானத்தில் பார்சிலோனாவிடம் 4 கோல்கள் வாங்கி ரியல்மாட்ரிட் படுதோல்வி ஸ்பானீஷ் லீக் கால்பந்து தொடரில் நேற்று இரவு நடைபெற்ற எல்கிளாசிகோ மோதலில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட் நகரில் ரியல்மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் 85 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ரியல்மாட்ரிட் அணியின் கரீம் பென்ஜமா,ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். பார்சிலோனா அணியின் காயம் காரணமாக லயனல் மெஸ்சி இடம் பெறவில்லை. சவுரஸ் தலைமையில் பார்சிலோனாவின் முன்களம் ஆடியது. முதல் பாதியில் 11வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த பாசை பயன்படுத்தி சவுரஸ் முதல் கோலை அடித்தார். அடு…

  25. ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 சிக்சர்கள்: கோரி ஆண்டர்சன் சாதனை கோரி ஆண்டர்சன் விரைவில் 50 சிக்சர்கள் சாதனை. | படம்: ஏ.எப்.பி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சிக்சர்களை குறைந்த இன்னிங்சில் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார் நியூஸிலாந்தின் அதிரடி வீர்ர் கோரி ஆண்டர்சன். இன்று ஆக்லாந்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 3 சிக்சர்களை அடித்தார். இதன் மூலம் 33 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கோரி ஆண்டர்சன் 51 சிக்சர்களை அடித்து மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசலின் சாதனையை முறியடித்தார். ஆந்த்ரே ரசல் 42 இன்னிங்ஸ்களில் 50 சிக்சர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் அதிரடி அரைசதம் கண்ட மார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.