Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐ.பி.எல். அணியை வாங்கும் முயற்சியில் செட்டிநாடு சிமெண்ட்! சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அந்த அணிகள் 2 சீசன்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனுக்கு மேலும் 2 ஐ.பி.எல். அணிகளை உருவாக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த அணிகள் எந்த நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட வேண்டுமென்பதில் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே புதிய அணிகளை வாங்குவதற்கு 21 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில் சென்னையை சேர்ந்த செட்டிநாடு சிமெண்ட் நிறுவனமும் ஒன்று. 50 வருடங்கள் பழமையான இந்த நிறுவனம், அனேகமாக சென்னையை வைத்து அணி உருவாக்கப்பட்டால், புதிய அணியை வாங்கி விடவேண்டுமென்பதில் உறுதியாக…

  2. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் December 06, 2015 தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தற்போது நடைப்பெற்று வருகின்ற நிலையில், இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த அஜின்கியா ரஹானே, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 127 ஓட்டங்களுடனும், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள் வருமாறு 1. விஜய் ஹசாரே (1948, அவுஸ்திரேலியாவுக்கெதிராக) – 116 மற்றும் 145 ஓட்டங்கள் 2. கவாஸ்கர் (1971, மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக) – 1…

  3. சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக விளையாடும் புதிய அணிகள்: செவ்வாய்க்கிழமை தெரியும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட இரண்டாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பதிலாக இரு புதிய அணிகளை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுப்பதற்காக கடும்போட்டி நிலவியது. இந்நிலையில், டெண்டர் படிவங்களை பெறும் கடைசி திகதி கடந்த 30-ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த இரு புதிய அணிகளுக்கு யார் உரிமையாளர்களாக போகின்றார்கள்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் இரசிகர்களிடையே மேலோங்கி வருகின்றது. அதிகமான விலைப்புள்ளி கோரி, இந்த டெண்டரை பெறும் அணிகள் அதன்பின்னர் ஏலம் முறையில் தத்தமது அணிக…

  4. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்: அஸ்வின், விஜய் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம் என்று இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் தெரிவித்தனர். பிசிசிஐ.டிவி இணையதளத்தில் இது குறித்த செய்திப் பதிவில் அஸ்வின் கூறியிருப்பதாவது: இந்த பேரிடரிலும் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருப்பது குறித்து பெருமையாக உள்ளது. மக்களில் பலர் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருப்பது நல்ல விஷயம். களப்பணியில் ஈடுபட்ட எனது நண்பர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு எனது நன்றி. அவர்கள் மக்களுக்கு உதவ களமிறங்கியுள்ளனர். சென்னையின…

  5. ஆசிய எறிபந்தாட்டத் தொடர் இலங்கைக்குத் தங்கப்பதக்கம் ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஆண்களுக்கான எறிபந்து தொடரில் இலங்கை சார்பில் தமிழ் வீரர்கள் கலந்து கொண்ட அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய நாடுகளிற்கிடையிலான ஆண்களிற்கான எறிபந்து தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து கலிலியா கிறசன் கழகம் சென்றது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச் சேர்ந்த என்.திவ்வியநாத், எஸ்.தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்திருந்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற மலேசியா அணிக்கும் இலங்கை அணிக்கும் (கலிலியா கிறசன் கழகம்) இடையிலான 5 செற்களைக் கொண்ட இறுதியாட்டத்தில் 3:0 என்ற நேர் செற் கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற…

  6. 2016 பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயத்தில் 21 சுற்றுகள் 2016ம் ஆண்டுக்கான பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயம் பல்வேறு நாடுகளில் 21 சுற்றுகளாக கொண்டதாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம் உலகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பந்தயத்தில் மெர்சிடெஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 381 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவர் மொத்தம் 10 பந்தயங்களில் முதலிடம் பிடித்திருந்தார். இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயத்தின் போட்டி அட்டவணை வெளி யிடப்பட்டுள்ளது. வழக்கமாக 19 சுற்றுகளாக நடத்தப்படும் இந்த பந்தயத்தில் இம்முறை 21 சுற்றுக்களாக நடத்த தீர்…

  7. பிசிசிஐ பாராட்டு விழாவில் தோனி பெயரை மறந்த சேவாக் டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சேவாக்கிற்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர். அருகில் ஷேவாக்கின் தாய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பிசிசிஐ சார்பில் சேவாக்கிற்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய சேவாக் தனது கேப்டன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேவேளையில் தோனியின் பெயரை அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கடந்த அக்டோபர் 20ம் தேதி சேவாக் ஓய்வு பெற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக…

  8. தற்போதைய துடுப்புகள் ஆபத்தை விளைவிக்கலாம் : தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் எச்சரிக்கை சம­கால சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் எத்­த­னையோ மாற்­றங்கள் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் துடுப்­பு­களின் அள­வு­களும் நாளுக்கு நாள் மாறு­பட்­ட­வண்ணம் இருக்­கின்­றன. 138 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளை­யா­டப்­பட்­டது முதல் இற்­றை­வரை துடுப்­பு­களின் அளவு பெரும் மாற்றம் பெற்­றுள்­ளதை அவ­தா­னிக்­கலாம். தற்­போதைய துடுப்­பு­களின் அளவை குறிப்­பாக டேவிட் வோர்னர் பயன்­ப­டுத்தும் துடுப்பின் அளவு தன்னைப் பிர­மிக்க வைப்­ப­தாக தென் ஆபி­ரிக்­காவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பெற…

  9. பீபாவுக்கு இவ்வாண்டில் $ 187 மில். நட்டம் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் (பீபா), இவ்வாண்டில் மாத்திரம் 187 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (87 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்) அதிகமான நட்டம் ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது. பல்வேறுபட்ட ஊழல், மோசடி, முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பீபா, அனுசரணையாளர்களிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. பல அனுசரணையாளர்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்தனர். முதல்நிலை அனுசரணையாளர்களான எமிரேட்ஸ், சொனி இரண்டும், இரண்டாம் நிலை அனுசரணையாளர்களான கஸ்ட்ரோல், கொன்டினென்டல், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்ததோடு, அவர்கள…

  10.  டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய மாற்றங்கள்? அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்ததையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து பல தரப்பாலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மேலும் போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றவும், இரசிகர்களை கவரவும் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. அவற்றிலே முக்கியமாக, போட்டிக்கு முன்னதான நாணயச் சுழற்சியை நிறுத்துவதற்கான ஆலோசனை பற்றி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஒரு நாட…

  11. பல்லான் டி ஆர் விருது : இறுதி பட்டியலில் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் இந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் ( தங்கபந்து ) விருதுக்கான இறுதி பட்டியலில் பார்சிலோனாவின் மெஸ்சி, நெய்மர் மற்றும் ரியர்மாட்ரிட்டின் ரொனால்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இறுதி 3 பேர் பட்டியலில் இருந்து விருதுக்குரிய வீரர், கால்பந்து பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள் வாக்கெடுக்கின் மூலம் தேர்வு செய்வார்கள். ஜனவரி 11ஆம் தேதி இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய வீரர் அறிவிக்கப்படுவார். சிறந்த பயிற்சியாளருக்கான பல்லான் டி ஆர் விருதுக்கு பேயர்ன் மியூனிச்சின் பெப் கார்டியாலாவும் பார்சிலோனாவின் லுயீஸ் என்ரிச்சும் அர்ஜென்டினாவின் ஜோர்ஜ் சம்போலியும் முதல் 3 பட்டியலில் இடம் பெற்றுள…

  12. பீபா அதிகாரிகள் கைது மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உயர்மட்ட பீபா அதிகாரிகள் சுவிஸ் ஹொட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் சில பீபா அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த சொகுசு போர் உ லக் ஹொட்டலிலேயே பொலிஸார், திடீரெனப் புகுந்து கைது செய்திருந்தனர். பீபாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பாக வாக்கெடுப்புக்கு செல்வதற்கான பீபாவினது நிறைவேற்றுச் சபையின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சூரிச்சில் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படிக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனமெடுப்பதாக தெரிவி…

  13. வெளியானது கடிதம்: சிக்கலில் ரெய்னா 2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகமிக்க நடவடிக்கைகள் தொடர்பான இரகசியக் கடிதமொன்று வெளியாகியுள்ளது. இதில், சுரேஷ் ரெய்னாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணமாக, அவருக்குச் சிக்கல்கள் ஏற்படக்கூடுமெனக் கருதப்படுகிறது. தம்புள்ளையில் இடம்பெற்ற இத்தொடரில், இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால், அந்தத் தொடரில், சுரேஷ் ரெய்னாவின் அறையில் பெண்ணொருவர் தங்கியிருந்ததாக, நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன. இது தொடர்பான உத்தியோகபூர்வ கருத்தெதுவும், சர்வதேச கிரிக்கெட் சபையாலோ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையாலோ, அல்லது இ…

  14. இந்தியாவுக்கு அபராதம் தென் ஆப்பிரிக்காவுடனான 3 வது டெஸ்ட் போட்டி நடைப்பெற்ற நாக்பூர் மைதானம் உரிய தரத்தில் பேணப்படாததால் இந்தியாவுக்கு £ 9950 பவுன் அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விளக்கம் அளிக்க விரும்பினால் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கலாம் என அந்த சபை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/sports/121219/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

  15. ஐ.சி.சி அணிகள் அறிவிப்பு: ஒரு நாள் அணியில் சங்கா, டில்ஷான் Comments சர்வதேச கிரிக்கெட் சபையின், 2015ஆம் ஆண்டுக்கான உலக பதினொருவர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன.செப்டெம்பர் 18, 2014 முதல் செப்டெம்பர் 13, 2015 வரையிலான காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளின் அடிப்படையிலேயே, இவ்வணிகள் தெரிவாகியுள்ளன. டெஸ்ட் அணியில் இலங்கையர்கள் எவரும் இடம்பெறாத அதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் திலகரட்ண டில்ஷானும் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட்: டேவிட் வோணர், அலஸ்டெயர் குக் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், யுனிஸ் …

  16. லையன் ஆட்டமிழப்புச் சர்ச்சை ஐ.சி.சியிடம் நியூசி விளக்கம் December 02, 2015 கிரிக்கெட் வரலாற்றின் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த முதல் ஆட்டத்திலேயே லையன் ஆட்டமிழப்புச் சர்ச்சை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக ஆகியிருக்கிறது என்றால் மிகையாகாது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 202 ஓட்டங்களில் சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 110 ஓட்டங்களைக் கடப்பதற்குள் 8 இலக்குகளை இழந்து தத்தளித்தது. 9ஆவது இலக்குக்கு நாதன் லையன் களம் இறங்கினார். இவர் ஓட்டங்கள் ஏதும் எடுக்காத நிலையில், கிரைக்கின் பந்தில் வில்லியம்சனிடம் பிடி கொடுத்தார். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த மைதான நடுவர் ரவி ஆட்டமிழப்பை கொடுக்க மறுத்த…

  17. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா வேதனை இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மொத்தம் 50 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் அஸ்வின் 24, ஜடேஜா 16, அமித் மிஸ்ரா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை பாராட்டாமல், ஆடுகளத்தின் தன்மை குறித்தே அதிகம் பேசப்படு வதாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வேதனையடைந் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: எங்களுக்கு போதிய கவுரவம் அளிக்காமல் ஆடுகளத்தை பற்றியே பேசு கிறார்க…

  18. ரஞ்சி கிரிக்கெட் போட்டி... திண்டுக்கல் மைதானத்தில் பந்து தாக்கியதால் மயங்கி விழுந்த ஆஸி. நடுவர் திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நாடு முழுவதும் பல மைதானங்களில் நடைபெறுகின்றன. இதில் தமிழகம்- பஞ்சாப் இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் பல்விந…

  19. ஆசியாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஹ்மத் கலீல் ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ள­னத்தின் வரு­டாந்த விருது விழாவில் ஐக்­கிய அரபு இராச்­சிய வீரர் அஹ்மத் கலீல், 2015இன் அதி­சி­றந்த ஆசிய கால்­பந்­தாட்ட வீரர் விருதை வென்­றெ­டுத்தார். ஆசி­யாவின் அதி சிறந்த, கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கால்­பந்­தாட்ட வீரர் என்ற இரண்டு விரு­து­க­ளையும் வென்ற மூன்­றா­வது வீரர் இவ­ராவார். ஆசி­யாவின் அதிசிறந்த கனிஷ்ட கால்­பந்­தாட்ட வீரர் விருதை 2008 இல் கலீல் வென்­றி­ருந்தார். இவ்வரு­டத்தின் அதி சிறந்த வீர­ருக்­கான குறும்­பட்­டி­யலில் இடம்­பெற்ற சக நாட்டு வீரர் ஓமர் அப்­துல்­ரஹ்ம…

  20. செய்தித் துளிகள் அடிலெய்டில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியானுக்கு அவுட் கொடுக்காமல் தீர்ப்பு வழங்கி 3வது நடுவர் நைஜெல் லாங் தவறிழைத்தார். இதனால் ஆட்டத்தின் திசையே மாறியது. இதுதொடர்பாக நியூஸிலாந்து அணி நிர்வாகம் ஐசிசியிடம் விளக்கம் கேட்டது. இந்நிலையில் நைஜெல் லாங் வழங்கிய தீர்ப்பு தவறானது தான் என ஐசிசி பதில் அளித்துள்ளது. ---------------------------------------------------- இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் மூன்று நாட்களில் முடிவடைந்தது. 40 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். இந்நிலையில் நாக்பூர் ஆடுகளம் மிகவும் மோசமான ஆடுகளம் என ஐசிசி த…

  21. மின்னல் வேகத்தில் 5 கோல்கள் : கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது லெவோண்டஸ்கி சாதனை! கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், பேயர்ன்மியூனிச்- வுல்ஸ்பர்க் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய பேயர்ன்மியூனிச் அணியின் போலந்து ஸ்டிரைக்கர் ராபர்ட் லெவோண்டஸ்கி களமிறங்கிய 9 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அதாவது 3.22 வினாடிகளுக்குள் ஹாட்ரிக் கோல் அடித்தும், 5 நிமிடம் 42 வினாடிகளுக்குள் 4 கோல்கள் அடித்தும் 8 நிமிடம் 59 வினாடிகளில் 5 கோல்கள் அடித்தும் புதிய சாதனை படைத்தார். அதோடு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 5 கோல்கள் அடித்ததும் புதிய சாதனை ஆகும். இந்த சாதனைகள் அனைத்தும் க…

  22. சர்வதேச கிரிக்கெட் சம்மேளம் புதிய தரப்படுத்தல் சர்வதேச கிரிக்கெட் சம்மேளம் நேற்று புதிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, டெஸ்ட் போட்டிகளின் துடுப்பாட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் இருவர் முதலாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் , மற்றும் அவுஸ்ரேலியாவின் ஸ்டிவன் சுமித் ஆகியோர் 886 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்காவின் ஏ.பி.டி விலியர்ஸ் நூறாவது போட்டியில் பங்குகொள்ளும் போது முதலிடத்தில் இருந்த போதிலும், தற்போது அவர் அந்த முதலிடத்தை இழந்துள்ளார். புதிய பட்டியலின் படி, டி விலியர்ஸ…

  23. டி 20 தொடரை வென்றது இங்கிலாந்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இரண்டாவது டி 20 ஆட்டத்தில் துபையில் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. வின்ஸ் 38, ஜோஸ் பட்லர் 33, ரன் எடுத்தனர். 173 ரன்கள் இலக்குடன் ஆடிய பாக். அணி 17 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வோக்ஸ் வீசிய 18வது ஓவரில் அப்ரீடி 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 5 பந்தில் 21 ரன் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் அப்ரீடி ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் 24 ரன் எடுத்தார். வில்லி வீசிய அடுத்த ஓவரில் பாக். அணி 14 ரன்கள் சேர்த்தது. கடைசி 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வோக…

  24. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இங்கே நிலைத்திருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து நிலைத்திருக்குமென, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்தே அவர், இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். மென் சிவப்புப் பந்தால் விளையாடப்பட்ட இப்போட்டி, மூன்று நாட்கள் மாத்திரமே நீடித்திருந்த போதிலும், 123,736 இரசிகர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். தொலைக்காட்சி தரப்படுத்தலிலும், மிக உயர்ந்த எண்ணிக்கையானோர் பார்வையிட்டதாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கலம், 'இதுவொ…

  25. கெய்ன்ஸ் குற்றமற்றவர் என கண்டுபிடிப்பு இலண்டனில் இடம்பெற்ற சௌத்வோர்க் கிரவுண் நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது வாரமாக இடம்பெற்ற விசாரணையின் முடிவில், பொய் வாக்குமூலம் வழங்கிய, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர் என நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையோர் இணங்கியுள்ளனர். பத்து மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் ஆழமாக ஆராய்ந்து நேற்றுக் காலை 10.40 அளவில் இணக்கத்துக்கு வந்த நீதிபதிகள், தீர்ப்பை அளித்திருந்தனர். மேற்படி இந்த முடிவானது, கெய்ன்‌ஸுக்கு பாரிய நிம்மதியை அளித்துள்ளது. தீர்ப்புகளின் படி, எந்தவொரு ஆட்டநிர்ணய பங்கேற்புகளில் இருந்தும் கெய்ன்‌ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின்போது பிரண்டன் மக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.