Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தலையால் முட்டி தந்தை பெயரை காப்பாற்றிய தனயன்! கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பெர்லின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியுடன் இத்தாலி மோதிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து, 90 நிமிட நேர ஆட்டத்தை சமனில் முடித்தன. கூடுதல் நேரத்தில் 110வது நிமிடத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் உலகையே அதிர வைத்தது. பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கும், இத்தாலி மிட்பீல்டர் மார்கோ மெட்ரசிக்கும் ( தற்போது சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் ) மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில், ஜிடேனின் குடும்பத்தார் குறித்து மெட்ரசி ஏதோ கூறியதாகத்…

  2. முரளி முதலிடத்தில் November 30, 2015 டெஸ்ட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் பட்டியலை விஸ்டன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மன் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். ஓய்வுபெறாதவர்கள் என்ற கோணத்தில் பார்க்கும் பொழுது துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளார். அதேபோல் யுனிஸ்கான் 6ஆவது இடத்தில் உள்ளார். இந்திய, இலங்கை வீரர்களில் யாரும் இடம் பெறவில்லை. ஸ்ரெயின் ஒருவரே பந்துவீச்சுப் பட்டியலில் இடம்பெற்ற ஓய்வு பெறாத வீரர். இவர் 7ஆவது இடத்தில் உள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=4175&cat=2

  3. தலைவராக அசத்துகிறார் மத்தியூஸ்- அரவிந்த டி சில்வா November 30, 2015 மத்தியூஸ் மூன்று வகையிலான கிரிக்கெட் தொடர்களையும் வழிநடத்த தகுதியானவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம் இளம் வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக செயற்பட்டுவரும் சில்வா, தற்போது துபாயிலும் கிரிக்கெட் அக்கடமியை ஆரம்பித்திருக்கிறார். மத்தியூஸ் தொடர்பாக சில்வா தெரிவிக்கையில் – ‘மலிங்கவின் ஓய்வுக்கு பிறகு ரி-20 தலைவராகவும் மத்தியூஸ் செயல்பட வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். அவர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக இளம் வீரராக அனைத்தையும் அற்புதமாக கையாள்கிறார். அனுபவம் கைகொடுக்க மத்தியூஸ் இன்றும் சிறப்ப…

  4. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து கும்ளே விலகல் ஜனவரி 2013-லிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பொறுப்பு வகித்தார் கும்ளே. | படம்: பிடிஐ. மும்பை இந்தியன்ஸ் ஐபிஅல் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ளே விலகியுள்ளார். கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை எதிர்நோக்கி கும்ளே இந்த முடிவை எடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. "டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் சாதனைக்குரியவரான அனில் கும்ளேவுக்கு மும்பை இந்தியன்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவர் அறிவுரையாளராக பொறுப்பேற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், சாம்பியன…

  5. படுமோசமான பேட்டிங்: ஷான் மார்ஷை கிளென் மெக்ராவுடன் ஒப்பிட்ட இயன் சாப்பல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஷான் மார்ஷ். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருவதையடுத்து அவரது பேட்டிங்கை கிளென் மெக்ராவுடனும், டேனி மாரிசனுடனும் ஒப்பிட்டார் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல். நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷான் மார்ஷ் ரன் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் கடுமையாகப் போராடி முக்கியப் பங்களிப்பாக 49 ரன்களைச் சேர்த்தார் ஷான் மார்ஷ். ஆனால், இதுவும் கூட இயன் சாப்பலை வசீகரிக்கவில்லை. அவர் அணியில் நீடிப்பது பற…

  6. டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் 2-வது இடம்; முதலிடத்தை இழந்த டிவில்லியர்ஸ் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறிய அஸ்வின். | கோப்புப் படம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அருமையாக வீசி விக்கெட்டுகளை அள்ளி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆனால், பேட்டிங் தரவரிசையில் முதலிடம் வகித்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தை இழந்தார். முதலிடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா…

  7. நரைனின் பந்தில் மீண்டும் சந்தேகம் November 10, 2015 இலங்கைக்கு எதிரான இறுதி ஒரு நாள் ஆட்டத்தில் நரைனின் பந்து வீச்சில் தவறு இருப்பதாக மீண்டும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 14 நாள்களுக்குள் அவர் தனது பந்து வீச்சில் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருட ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக நரைன் கலந்துகொண்டார். அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பந்து வீச தடை விதிக்கப்பட்டது. ஆனால், கொல்கத்தாவின் மிரட்டலால் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். ஆனால், நரைன் தனது கையை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு மேல் வளைப்பதாக பரவலான கருத்துக்கள் வெளிவந்தன. இதனால் நடப்பு வருட உலகக்கிண்ணத் தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்…

    • 5 replies
    • 476 views
  8. பிரீமியர் லீக்கில் 12 ஆண்டு கால நிஸ்டில்ராயின் சாதனை தகர்ப்பு : பார்சிலோனா தொடர்ந்து அசத்தல் ! ஸ்பெயினின் ஒவ்வொரு அணியையும் தூக்கி சாப்பிடும் நெய்மர்,சுவாரஸ்,மெஸ்ஸி கூட்டணி , ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், ஒரு போட்டியில் கூட தோற்காமல் வீரநடை போடும் பேயர்ன் மூனிச், இந்தியன் சூப்பர் லீக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்த கோவா அணி என இவ்வார கால்பந்து சுவாரசியங்கள் ஏராளம். கேரளாவை நசுக்கிய கோவா இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் கேரள அணியை கோவா அணி 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. அவ்வணியின் ரீனால்டோ ஹாட்ட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 2வது நி…

  9. இலங்கையில் விளையாடலாம் : பாகிஸ்தான் பிரதமர் அனுமதி இலங்கையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி, இடம்பெற்றால் அதில் பாகிஸ்தான் அணி விளையடுவதற்கு அந்நாட்டுப் பிரதமர் நவாஷ் செரிப் அனுமதியளித்துள்ளார். இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸ் அல்­லது இலங்­கை­யில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோ­சித்து வந்த நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு அனுமதியளித்துள்ளார். இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட்…

  10. மஹேலவின் அபார துடுப்பாட்டத்தால் 'சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ்' வெற்றி நியூ­ஸி­லாந்தில் நடை­பெற்­று­வரும் ஜோர்ஜி ஸ்பை சுப்பர் ஸ்மேஷ் கிரிக்கெட் போட்­டியில் நொதர்ன் டிஸ்ட்­ரிக்ட்­ஸுக்கு எதி­ரான போட்­டியில் இலங்­கையின் ஓய்வு பெற்ற வீரர் மஹேல ஜய­வர்­தன குவித்த அதி­ரடி அரைச் சதம் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்கு 8 விக்கெட் வெற்­றியை ஈட்­டிக்­கொ­டுத்­தது. நொதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­களை இழந்து பெற்ற 152 ஓட்­டங்­க­ளுக்கு பதி­ல­ளித்து துடுப்­பெ­டுத்­தா­டிய சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணி 17.1 ஓவர்­களில் 2 விக்­கெட்ளை மாத்­திரம் இழந்து 158 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது. மஹேல ஜய­வர்­தன 59…

  11. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை வென்றது பிரிட்டன் உலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது. வெற்றிக் களிப்பில் பிரிட்டிஷ் அணியினர் இறுதிப் போட்டியில் பிரிட்டன் அணி பெல்ஜியத்தை வென்றது. மிகவும் பெருமை வாய்ந்த இந்தக் கோப்பையை பிரிட்டன் அணி 1936ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. தனி நபர்களுக்கு இடையேயான கடைசிப் போட்டியில் ஆண்டி மர்ரி பெல்ஜியத்தின் டேவி கோஃபினை வென்றதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டி நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என, போட்டிக்கு பிறகு அவை இடம்பெற்ற ஹெண்ட் நகரில் பேசு…

  12. அதிபார குத்துச்சண்டையில் விளாடிமிர் கிளிட்ஷ்கோவை வீழ்த்தி புதிய உலக சம்பியனானார் டைசன் ஃபியூரி அதி­பாரப் பிரிவு குத்­துச்­சண்டை போட்­டிக்­கான புதிய உலக சம்­பியன் பட்­டங்­களை பிரித்­தா­னிய டைசன் ஃபியூரி சுவீ­க­ரித்­துக்­கொண்டார். டஸ்ல்டோர்வ் எஸ்ப்ரிட் அரங்கில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற அதி­பாரப் பிரி­வுக்­கான உலக சம்­பயின் பட்­டத்­திற்­கான குத்­துச்­சண்டைப் போட்­டியில் நடப்பு உலக சம்­பி­ய­னான யுக்­ரை­னிய வீரர் விளா­டிமிர் கிளிட்ஷ்­கோவை 115–112, 115–112, 116–111 என்ற மூன்று மத்­தி­யஸ்­த­ர்­களின் புள்­ளி­களின் அடிப்­ப­டையில் 27 வய­தான டைசன் ஃபியூரி வெற்­றி­கொண்டார். பொப் ஃபிட்­சிமன்ஸ்…

  13. 'கச்சோரி' விற்கும் கிரிக்கெட் அணி கேப்டன் வதோதரா: வாய் பேசாதவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெல்ல உதவிய கிரிக்கெட் வீரர், சாலையோர கடையில், உணவுப் பண்டம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். குஜராத் மாநிலம், வதோதராவை சேர்ந்தவர் இம்ரான் ஷேக், 30. பத்து ஆண்டுக்கு முன் நடந்த, வாய் பேசாதோர் மற்றும் காது கேளாதோருக்கான, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற இவர், பல அரை சதங்களை அடித்து, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவரது அபார திறமை காரணமாக, மூன்று ஆண்டுக்கு முன், வாய் பேசாதோருக்கான இந்திய கிரிக்கெட் அணி…

  14. சுனில் நரேனுக்கு மீண்டும் சிக்கல்: சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதித்தது ஐசிசி ! துபாய்: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் சுனில் நரைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று உத்தரவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். மாயா ஜால வித்தைக்காரர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை படைத்தவர். ஆப் - ஸ்பின், லெக்-ஸ்பின், கேரம் பால், சிலேடர் என விதவிதமான ஸ்டைலில் பந்து வீசுபவர். ஆனால், அண்மைக்காலமாக அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. …

  15. பகல்- இரவு டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 202 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் இன்றைய நாள் மிக முக்கியமானதாகும். இன்றுதான் இளஞ்சிகப்பு பந்தில் விளையாடும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியது. இதில், அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி குப்…

  16. கலக்க காத்திருக்கும் கோல்கீப்பர் : வயசு 16....மதிப்பு 12ஆயிரம் கோடி? பதினாறு வயசுல நாம என்ன செஞ்சிட்டு இருந்திருப்போம்? மாங்கு மாங்குனு பத்தாம் கிளாஸ் தேர்வுக்கு படிச்சிட்டு இருப்போம். இல்ல தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்துருப்போம். கொடி நாளுக்கு 5 ரூபாய் கொடுங்கனு ஸ்கூல்ல கேட்டா, அதுக்கே அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் போய் நிப்போம். ஆனால் இத்தாலியைச் சார்ந்த கோல்கீப்பரான 16 வயதே நிரம்பிய கியான்லூகி டொன்னருமாவுடைய மதிப்பு இப்பொழுது 170 மில்லியன் யூராக்களாம் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 12ஆயிரம் கோடி). இவரை இத்தாலி அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களுள் ஒருவருமான பஃப்னோடு ஒப்பிட்டுக் கொண்டாடுகின்றனர் இத்தாலி ரசிகர்கள். யாரு …

  17. இந்தியா-தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்: உள்ளூர் சாதகம் என்னும் பொன் முட்டையிடும் வாத்து நாக்பூரில் வெற்றி நடைபோட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இந்திய மண்ணில் இந்தியாவுக்கு அதிக சவால்களை ஏற்படுத்திவரும் அணி தென்னாப்பிரிக்காதான். உலகின் எல்லா அணிகளையும் மிரட்டிவந்த 1990களின் ஆஸ்திரேலிய அணிகூட இந்தியாவில் திணறியது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் ஸ்டீவ் வா தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகிலேயே சிறந்த அணியாகக் கருதப்பட்டது. அந்த அணிகூட இந்தியாவில் தோற்றுத்தான்போனது. ஆனால் கிட்டத்தட்ட அதே சமயத்தில் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க அணி அனாயாசமாகத் தொடரை வென்றது. அதன் பிறகும் ஒரு முறைகூட இந்தியாவில் தென்னாப்பிரிக்கா தொடரை இழந்ததில்லை…

  18. 5 நாட்கள் ஆட்டம் 3 நாட்களில் முடிவதால், ஸ்டார் இந்தியாவுக்கு ரூ. 80 கோடி இழப்பு கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த இந்தியாவில் அதுவும் உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பி, ஸ்டார் இந்தியா தொலைகாட்சி ரூ.80 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொகாலி டெஸ்ட் 3 நாட்களில் இந்தியா வெற்றி பெற்று விட, பெங்களுர் டெஸ்ட் மழையால் 4 நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டு சமனில் முடிந்தது. நாக்பூர் ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட, தென்ஆப்ரிக்க அணி சுருண்டு விழுந்தது. இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்து விட, இந்தியா மீண்டும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்க அணியி…

  19. நியூசிலாந்தை இலகுவாக வீழ்த்துவோம்- மத்தியூஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் ஆட்டம் அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம் என்று இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நியூசிலாந்தில் நிலைமை வேறு வி…

  20. டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி அப்ரிதி புதிய சாதனை l டெல்லி: பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் கண்டெடுத்த அபாரமான கிரிக்கெட் வீரர்களில் அப்திரிக்கு முக்கியத்துவம் உண்டு. எதிரணியினரும் மதிக்கக் கூடிய திறமையாளர் அப்ரிதி. தற்போது தனது 86வது டுவென்டி 20 போட்டியில் அவர் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் டுவன்டி 20 போட்டிகளில் 86 விக்கெட்களைச் சாய்த்து டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள வீரராக உருவெடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி துபாயில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியில்தான் இந்த …

  21. பிராட்மேனுக்கு எதிரான 'பாடி-லைன்' உத்தியுடன் கோலியின் உத்தியை ஒப்பிட்டு பேடி காட்டம் நாக்பூர் பிட்ச் விவாதம் இன்னும் முடிந்துவிடவில்லை, ஏற்கெனவே எரியும் நெருப்பில் முன்னாள் கேப்டன், சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பேடி எண்ணெய் வார்த்துள்ளார். மும்பை, மிட் டே பத்திரிகைக்கு அவர் கூறும்போது, “வெள்ளைச் சீருடையைக் கழற்றி விட்டு மல்யுத்த உடைகளை அணிந்து கொண்டு ஆடுங்கள் இந்தக் குழியில். உள்நாட்டில் விளையாடுவதன் அனுகூலம் இதுதான் என்று என்னை நம்பச் சொல்கிறீர்களா? முதல் நாளே திரும்புவதற்கானதல்ல ஆடுகளம் என்பது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான கடினமான, பவுன்ஸ் பிட்ச் அமைக்க குறிப்பிட்ட மண் தன்மை பற்றிய அறிதல் அவசியம். ஆனால் இங்கு எதுவுமே தே…

  22. அதே இரத்தம் அப்படித்தான் இருக்கும் November 27, 2015 மும்பையில் நடைபெற்ற 16வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் டில் சச்சினின் மகன் அர்யுன் சதம் விளாசியுள்ளார். கவாஸ்கர் லெவனுக்கு எதிராக விளையாடிய அவர், ரோகித் சர்மா லெவனுக்கு எதிராக 106 ஓட்டங்களை எடுத்தார். அர்யுன் இடது கைப் பழக்கமுடைய துடுப்பாட்ட வீரரும் வேகப்பந்து வீச்சாளருமாவார். அர்யுன் இந்திய அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான பொண்டிங், டொனி, ரோகித் சர்மா, குக் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=4053&cat=2

  23. மன்னாரில் ஆரம்பமாகியது 41 ஆவது தேசிய விளையாட்டு விழா மன்னாரிலுள்ள வட மாகாண சபை உள்ளரங்க விளையாட்டு அரங்கில் 41 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இவ் தேசிய விளையாட்டு ஆரம்ப விழாவுக்கு மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய பிரதம அதிதியாகவும் தேசிய விளையாட்டுத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ரி.எம்.எஸ்.பி.பண்டார, மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ஸ்ரணி டீ மெல், வட மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் எஸ்.எம்.ராஜா ரணசிங்க, மன்னார் பிரதேச செயலாளர் வசந்தகுமார், முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் …

  24. பங்களாதேஷ் பிரீமியர் லீக் : டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான நிலையில், முதல் நாளில் நடைப்பெற்ற கொம்மிலா விக்டொரியன்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில், டாக்கா டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியானது, நேற்று மிர்பூர் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக மஸ்ரபீ மோடார்ஸா 26 பந்தில் இரு சிக்சருடன்…

  25. வெற்றிக்கு வழிவகுக்காமல் 55 ரன்கள் சராசரி வைத்திருந்து என்ன பயன்?: விராட்(கோலி) விளாசல் விராட் கோலி. | படம்: அகிலேஷ் குமார். நாக்பூர், மொஹாலி பிட்ச்கள் பற்றிய விமர்சனங்கள் பெரிய அளவில் எழுந்ததையடுத்து விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். பிட்ச்கள் பற்றி நாங்கள் முன்னாள் புகார் எழுப்பியதில்லை, எதிர்காலத்திலும் புகார் எழுப்ப மாட்டோம் என்று கூறினார் கோலி. 9 ஆண்டுகளாக அயல்நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காமல் சாதித்து வந்த தென் ஆப்பிரிக்கா இந்திய ‘குழி பிட்ச்களில்’ சிக்கி சுழலில் சின்னாபின்னமாகி தொடரை இழந்தது. இதனையடுத்து நாக்பூர் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது: …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.